Jump to content

பத்து ஆளில்லா விமானங்களை அனுப்பி சவுதி அரேபியாவில் தாக்குதல்- யேமன் கிளர்ச்சிக்குழுவினர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பத்து ஆளில்லா விமானங்களை அனுப்பி சவுதி அரேபியாவில் தாக்குதல்- யேமன் கிளர்ச்சிக்குழுவினர்

சவுதிஅரேபியாவின் முக்கியமான எண்ணெய் தொழிற்சாலைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக யேமனின் ஹெளதி கிளர்ச்சிக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

யேமனின் ஹெளதி கிளர்ச்சிக்காரர்களின் பேச்சாளர் ஒருவர் தாக்குதலிற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஹெளதி கிளர்ச்சிக்குழுவினர் தமது அல்மசீரா ஊடகத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

aramco.jpg

அப்கேயக் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீதும் குரைஸ் எண்ணெய் வயல்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு 10 ஆளில்லா விமானங்களை அனுப்பியதாக யேமனின் கிளர்ச்சிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

யேமனில் தாக்குதல்கள்  தொடர்ந்தால் சவுதிஅரேபியா மீது தாக்குதல்கள் தீவிரமடையலாம் என ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

houthi.jpg

இதனை தவிர்ப்பதற்கு சவுதி அரேபிய அரசாங்கம் எங்களை தாக்காமலிருப்பதே ஒரே வழி எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அப்கெயக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தாக்கப்பட்டவேளை எடுக்கப்பட்ட வீடியோக்களில் பின்னணியில் துப்பாக்கி சத்தத்தை கேட்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரம்கோவின் மிகப்பெரும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான அப்குவைக்கில் முதல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

ஆளில்லா விமானதாக்குதல்களை தொடர்ந்து தொழிற்சாலையிலிருந்து பாரிய தீப்பிழம்புகளும் கரும் புகை மண்டலமும் வெளியாவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

sauthi_drone_se14.jpg

இந்த தாக்குதல் காரணமாக எவருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக இதுவரை செய்திகள் வெளியாகாத அதேவேளை இந்த தாக்குதல் காரணமாக மத்தியகிழக்கில் பதற்ற நிலை மேலும் தீவிரமடையும் ஆபத்து உருவாகியுள்ளது என கார்டியன் குறிப்பிட்டுள்ளது.

யேமன் கிளர்ச்சியாளர்களிற்கு ஈரான் மறைமுக ஆதரவை வழங்கிவருவதும் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி அவர்களிற்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/64780

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சௌதி அரசின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் 'டிரோன்' தாக்குதல்

 
சௌதிபடத்தின் காப்புரிமை Reuters

சௌதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில் நடத்தப்பட்ட ஆளில்லா விமான (டிரோன்) தாக்குதலால் பெரும் தீ உண்டாகியுள்ளது.

இரான் ஆதரவளிக்கும், ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா சிறிய விமானங்களை ஏவி தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.

எனினும் இந்தத் தாக்குதலின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என சௌதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி இன்று காலை நான்கு மணிக்கு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

அப்கைக் எனும் இடத்தில் அமைந்துள்ள அரம்கோ நிறுவனத்தின் மிகப்பரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குராய்ஸ் எனும் இடத்தில் உள்ள எண்ணெய் வயல் ஆகியவற்றில் தாக்குதல் நடந்துள்ளது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சௌதி அரசு ஊடகம் தெரிவிக்கிறது.

அப்கைக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உலகின் பயன்பாட்டுக்கு தேவையான 7% பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தியை சுத்திகரிக்கும் வசதி உள்ளது. குராய்ஸ் எண்ணெய் வயலில்தான் உலக அளவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில் 1% கிடைக்கிறது.

2006இல் அப்கைக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் அல்-கய்தா நடத்தத் திட்டமிட்ட தற்கொலைத் தாக்குதலை சௌதி காவல் படைகள் முறியடித்திருந்தன.

சௌதி விமானப் படை மற்றும் சௌதி தலைமையிலான கூட்டுப்படை சமீப ஆண்டுகளாக ஏமனில் ஹூதி கிளிர்ச்சியாளர்களுக்கு எதிராக வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

2015இல் இருந்து போர் நடந்து வரும் ஏமனில் அதிபர் அப்த்ராப் மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக சௌதி அரசு உள்ளது.

இன்றைய தாக்குதல்கள் சௌதி அரேபியாவின் ஆதரவைப் பெற்றுள்ள ஏமன் அரசுக்கு எதிராகப் போரிடும் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தந்திரோபாய அச்சுறுத்தலை வெளிக்காட்டும் வகையில் இது அமைந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமாக அரம்கோ இருக்கும் நிலையில் இந்தத் தாக்குதல் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தும் அளவுக்கு வல்லமை பெற்றிருந்தால், அந்த அளவுக்கான வசதிகள் அவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கின்றன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

https://www.bbc.com/tamil/global-49700918

Link to comment
Share on other sites

"அரம்கோவின் மிகப்பெரும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான அப்குவைக்கில் முதல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது" 

ஈரான் வித்தியாசமாக யேமனில் போராட்டத்தை நகர்த்த ஆரம்பித்துள்ளது. சவூதி என்ற நாடு இயற்கை தந்த வளத்தை வைத்து மிகவும் வசதியாக வாழும் நாடு.  அந்த மூல வருமானத்தில் கை  வைக்கும் முயற்சி. இது சவூதியை ஆத்திரத்திற்கு உள்ளாக்கும்.  

மசகு எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்க நாடு முன்னிலை நாடாக இருப்பதாலும் உலகம் பொருளாதார மந்த நிலை நோக்கி செல்வதாலும், சர்வதேச சந்தையில் விலை இதனால் அதிகரிக்காது !

Link to comment
Share on other sites

10 hours ago, ampanai said:

"அரம்கோவின் மிகப்பெரும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான அப்குவைக்கில் முதல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது" 

ஈரான் வித்தியாசமாக யேமனில் போராட்டத்தை நகர்த்த ஆரம்பித்துள்ளது. சவூதி என்ற நாடு இயற்கை தந்த வளத்தை வைத்து மிகவும் வசதியாக வாழும் நாடு.  அந்த மூல வருமானத்தில் கை  வைக்கும் முயற்சி. இது சவூதியை ஆத்திரத்திற்கு உள்ளாக்கும்.  

மசகு எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்க நாடு முன்னிலை நாடாக இருப்பதாலும் உலகம் பொருளாதார மந்த நிலை நோக்கி செல்வதாலும், சர்வதேச சந்தையில் விலை இதனால் அதிகரிக்காது !

இந்த தாக்குதலில் இருந்து தமிழீழ மக்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன?

Link to comment
Share on other sites

ஆளில்லா விமானதாக்குதலைதொடர்ந்து - சவுதியின் எண்ணெய் உற்பத்தி பெருமளவு பாதிப்பு- சர்வதேச விநியோகத்தில் நெருக்கடி- விலை அதிகரிக்கும் அபாயம்-

 

சவுதிஅரேபியாவின் இரு முக்கிய எண்ணெய் உற்பத்திநிலையங்கள் மீது யேமனின் கிளர்ச்சிக்குழுவினர் மேற்கொண்ட ஆளில்லாத விமானதாக்குதல்கள் காரணமாக சவுதி அரேபியா தனது நாளாந்த எண்ணெய் உற்பத்தி பாரிய பாதிப்பை சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஆளில்லா விமானதாக்குதல்கள் காரணமாக நாள் ஒன்றிற்கு நாங்கள் 5.7 மில்லியன் பரல் கச்சா எண்ணெய் மற்றும் வாயு உற்பத்தியை இழக்கவேண்டிய நிலையிலுள்ளோம் என சவுதி அரேபியாவின் எரிசக்தி துறை அமைச்சர் அப்துல்அசீஸ் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

ஒபேக்கின் புள்ளிவிபரங்களின்படி நாள்ஒன்றிற்கு சவுதிஅரேபியா 9.8 மில்லியன் பரல் உற்பத்தி செய்வது குறிப்பிடத்தக்கது.

ஆளில்லா விமானதாக்குதல்கள் காரணமாக இழந்தவற்றை மீளப்பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ள அமைச்சர் இந்த தாக்குதல்கள் சவுதி அரேபியாவிற்கு எதிராக மாத்திரம் மேற்கொள்ளப்படவில்லை,சர்வதேச எண்ணெய் விநியோகத்தினையும் பாதுகாப்பையும் இலக்குவைத்தும் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன  இதனால் உலக பொருளாதாரத்திற்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

அப்கெய்க் எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையம்  சர்வதேச எண்ணெய் விநியோகத்தை பொறுத்தவரையில் மிகவும் முக்கியமான இடம் என குறிப்பிட்டுள்ள அமெரிக்காவின் சர்வதேச சக்தி கொள்கை நிலையத்தின் இயக்குநர் ஜேசன்போர்டொவ் எண்ணெய் விலை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளார்.

இதேவேளை இந்த தாக்குதல்களிற்கு யேமனின் ஹெளதி கிளர்ச்சிக்காரர்களிற்கு அதரவு அளித்து வரும் ஈரான் பொறுப்பேற்கவேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரானிய தலைநகர்கள் இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபடுவதாக பாசாங்கு செய்யும் அதேவேளை ஈரான் சவுதிஅரேபியா  100ற்கும் மேற்பட்ட தாக்குல்களை மேற்கொண்டுள்ளது என மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக ஈரான் சர்வதேச எண்ணெய் விநியோகத்தின் மீது எதிர்பாரத தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ள மைக்பொம்பியோ இந்த தாக்குதல் யேமனிலிருந்து மேற்கொள்ளப்பட்டமைக்கான ஆதாரங்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/64793

Link to comment
Share on other sites

1 hour ago, Jude said:

இந்த தாக்குதலில் இருந்து தமிழீழ மக்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன?

இதுதான் என்பது ஒரு பாடமாக அமையுமா என தெரியவில்லை. காரணம், ஒவ்வொரு போராட்டமும் ஒன்றில் இருந்து வேறுபாடும். 

என்னால் முடிந்த சில குறிப்புக்கள். 

எமது போராட்டம் இனவிடுதலை சார்ந்தது. ஏமனில் நடப்பது கூத்தி என்ற சியா இஸ்லாமிய மதப்பிரிவினர் சுனி மதப்பிரிவினர் இடையே நடக்கும் யுத்தம் என தெரிகின்றது. இரு ஆட்சியாளர்கள் பதவிக்கு போட்டி, மதத்தால் வேறுபட்டவர்கள். 

எம்மைப்போல இரண்டு நாடுகளாக இருந்து ஒருநாடக மாறியது 

இங்கே கூத்தி இனமக்கள் எமது மக்களை விட அதிக அதிகாரம் கொண்ட மாநில சுயாட்சி கொண்டவர்கள். ஏமன் சண்டை கிட்டத்தட்ட ஆறுவருட சண்டை.  ஈரானும் சவூதியும் ஏமனில் மோதிக்கொள்ளும் களம். 

எனவே, எமக்கும் ஏமனுக்கும் பல வித்தியாசங்கள்.  

ஆனால், அப்பாவி மக்கள் இறப்பு, குழந்தை சிறப்புக்கள், போன்ற மனித அவலங்கள் எமது மக்களை போலவே உள்ளது. இவர்களும் எம்மை போலவே வறுமையானவர்கள், எந்த இயற்கை வளமும் இல்லை. 

எம்மை போல ஒரு கேந்திர முக்கியமான புவிசார் பாதையில் அமைந்துள்ளன. இதுவே வல்லரசுகளின் பார்வையில் உள்ளது.   

Link to comment
Share on other sites

2 hours ago, ampanai said:

ஆளில்லா விமானதாக்குதலைதொடர்ந்து - சவுதியின் எண்ணெய் உற்பத்தி பெருமளவு பாதிப்பு- சர்வதேச விநியோகத்தில் நெருக்கடி- விலை அதிகரிக்கும் அபாயம்-

 

3 hours ago, Jude said:

இந்த தாக்குதலில் இருந்து தமிழீழ மக்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன?

 

2 hours ago, ampanai said:

இதுதான் என்பது ஒரு பாடமாக அமையுமா என தெரியவில்லை. காரணம், ஒவ்வொரு போராட்டமும் ஒன்றில் இருந்து வேறுபாடும். 

எதிரி எதிர் பார்க்காத சிறந்த உபகரணமான ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுதும் இதன் மூலம் தமது தரப்புக்கு உயிரிழப்பபை தவிர்த்ததும், எமது மக்களின் கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது இவர்களின் சிறந்த அணுகுமுறைகளாக தெரிகின்றன.

Link to comment
Share on other sites

5 hours ago, Jude said:

எதிரி எதிர் பார்க்காத சிறந்த உபகரணமான ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுதும் இதன் மூலம் தமது தரப்புக்கு உயிரிழப்பபை தவிர்த்ததும், எமது மக்களின் கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது இவர்களின் சிறந்த அணுகுமுறைகளாக தெரிகின்றன.

ஆம் இந்த தொழில்நுட்பம் இலகுவாக தயாரிக்கபப்படவும்  அதிகம் செலவில்லாமலும், இந்த வருடத்தில் செய்து (2019) , போராட்டத்தில் பாவிக்க கூடியமாதிரி உள்ளது. பத்து வருடத்திற்கு முன்னராக (2009) இந்த தொழில்நுட்பம் இவ்வாறு இல்லை. இன்னும் பத்து வருடத்தில் கூட இந்த தொழில்நுட்பம் மேலும் முன்னேற்றகரமாக அமையலாம் இல்லை இதைவிட மலிவாக உயர் தொழில்நுட்பம் வடிவமைக்கப்படலாம்.  

அதேவேளை, ஈரானின் உதவி அதிகமாக ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு கிடைக்கின்றது. ஈரான் ஒரு அணு ஆயுத வல்லரசாக வர முயலும் நாடு. எனவே, அவர்களுக்கு இந்த தொழில்நுட்பத்தை ஒப்பீடடளவில் இலகுவாக செய்யலாம். 

நாளை ஆப்கான் தாலிபான்களும் சோமாலிய கடற்கொள்ளையர்களும் ஆரம்பிக்க இருக்கும் காஸ்மீர் போராட்ட அரங்கிலும் இன்று ட்ரோனை காணவில்லை, ஆனால் விரைவில் இங்கும் வரவும் என்பது வல்லரசு நாடுகளின் உளவுத்துறைக்கும் தெரியும். 

  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் தாக்குதல் செய்த்தது சாதாரணமாக நாங்கள் க்லியான வீடு சாமத்திய வீடுகளில் படமெடுக்க மேல அனுப்பும் ட்ரோண் வகை இல்லை அதைவிட மேலதிக நவீனத்துடன் வடிவமைக்கப்பட்டது. தவிர ஐரோப்பிய நாடுகளில் இவ்வகை ட்ரோண்கள் பறப்பதற்க்குத் தடை செய்யப்பட்ட பகுதிகளையும் அறிவித்திருக்கிறார்கள் அதைவிட அதனை ஜி பி எஸ் நெவிகேசனில் பதிந்துமிருக்கிறார்கள் அவ்விடங்களில் நாங்கள் ட்ரோண்களை அடாத்தாக மேலே ஏத்த முயன்றாலும் முடியாது அப்படியாகின் ஜிபிஎஸ் சை அணேபிள் பண்ண்வேண்டும். 

ட்றோண்களது முழுமையான வருகை முள்ளிவாய்க்காலுக்குப் பின்பே அதிகரித்தது. அதற்குமுன்பும் இருந்தது ஆனால் எமக்குக் கொஞ்சம் கூரவஏ இருந்தது. 

அப்படி இருந்தாலும் தோல்வியைக் கொஞ்சம் தள்ளிப்போட்டிருக்கலாமே தவிர நிற்பாட்டியிருக்கமுடியாது. காரணம் இந்தியாவின் செய்மதிகள் இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்குப்பகுதிக்கு மேலாகத் திருப்பிவிடப்பட்டிருந்தது அதன்மூலமே சனங்களின் மற்றும் போராளிகளது நடமாட்டத்தை மிகவும் துல்லியமாகக் கணிப்பிட்டு சிறீலங்கா இராணுவத்துக்கு அறிவுறுத்தியிருந்தனர். 

இதன்மூலம் இந்தியா தனது தொழில்நுட்பத்தைச் சோதனைசெய்யும் களமாகவும் தமிழர் தலைகளை மாற்றியிருந்தது அதைத்தவிர இலங்கயிலிருந்து சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின்மூலம் வெளியேற்றப்பட்ட இந்திய வம்சாவளித்தமிழர்களது மூன்றாவது சந்ததியினர் தங்களது சொந்தங்களைக்காண வன்னிப்பகிதிக்கு வருகிறோம் எனும்போர்வையிலும் இந்திய புலனாய்வு தனது ஆதளை வன்னி வடக்கு எங்கும் உள்நுளைத்திருந்தது. அதைத்தவிர கருணாவுடன் வன்னியில் யெயசுக்குரு காலத்தில் சேர்ந்து செயற்பட்ட பல ஆயிரக்கணக்கான கிழக்கைச் சேர்ந்த முன்னைய கருணாவும் விசுவாசிகள் விருப்பத்துனணோ அன்றேல் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கியோ இராணுவ ஊடறுப்புகளுக்கு மத்தியில் உள்நுளைக்கப்பட்டனரவர்களே இறுதிகணத்தில் பொதுமக்களுக்கு எதிரான வன்முறையச் செய்தவர்கள் 

இப்படியான பல விடையங்கள் புலிகளது படை இறுதிப்போரில் வென்றாலும் அதன் பின் அவர்கள் நீண்டகாலத்துக்குத் தாக்குப்பிடிக்கமுடியாதவாறு அனைத்துச் செயல்களும் வடக்கில் செய்துமுடிக்கப்பட்டன ஆகவே தான் 

இந்திய தேசம் தமிழர்விரோத தேசம் என எப்போகும் நான் கூறுவதற்குக்காரணம்.

Link to comment
Share on other sites

1 hour ago, Elugnajiru said:

இந்திய தேசம் தமிழர்விரோத தேசம் என எப்போகும் நான் கூறுவதற்குக்காரணம்

இந்திய தேசத்தை தமிழர் ஆதரவு தேசமாக மாற்றவேண்டியதும் அவ்வாறு மாற்றப்பட்டபின்னர் அதனை தந்திரமாக பேணுவதும் அரசியல் தேவை. 

இந்தியாவை எதிர்த்து யாருடன் நாம் உறவை வைக்க முடியும்?, முடியாது  

எமக்குள் உள்ள பலம் பலவீனங்கள் மற்றும் டெல்லியில் (தமிழகம்)  ஆட்சியில் உள்ளவர்களின் பலம் பலவீனங்கள்  மற்றும் நீண்ட கால இந்திய நலன்கள் அவை சார்ந்த கொள்கைகளை அறிந்து ஆராய்ந்து கொள்கைகளை வகுப்பதே இனத்தை காக்கும்.  

Link to comment
Share on other sites

2 hours ago, ampanai said:

இந்திய தேசத்தை தமிழர் ஆதரவு தேசமாக மாற்றவேண்டியதும் அவ்வாறு மாற்றப்பட்டபின்னர் அதனை தந்திரமாக பேணுவதும் அரசியல் தேவை. 

இந்தியாவை எதிர்த்து யாருடன் நாம் உறவை வைக்க முடியும்?, முடியாது  

எமக்குள் உள்ள பலம் பலவீனங்கள் மற்றும் டெல்லியில் (தமிழகம்)  ஆட்சியில் உள்ளவர்களின் பலம் பலவீனங்கள்  மற்றும் நீண்ட கால இந்திய நலன்கள் அவை சார்ந்த கொள்கைகளை அறிந்து ஆராய்ந்து கொள்கைகளை வகுப்பதே இனத்தை காக்கும்.  

இதற்கும் மேலாக, இந்திய நலன்களுக்கு பாதகமாக அமையும் சிறிலங்கா அரசின் திட்டங்களை அடையாளம் கண்டு, அந்த பாதிப்புகளை குறைக்க தமிழ் மக்கள் செய்ய கூடியவற்றை திட்டமிட்டு, இவற்றை இந்திய மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வது முக்கியமான தேவை.

Link to comment
Share on other sites

4 hours ago, Elugnajiru said:

அப்படி இருந்தாலும் தோல்வியைக் கொஞ்சம் தள்ளிப்போட்டிருக்கலாமே தவிர நிற்பாட்டியிருக்கமுடியாது. காரணம் இந்தியாவின் செய்மதிகள் இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்குப்பகுதிக்கு மேலாகத் திருப்பிவிடப்பட்டிருந்தது அதன்மூலமே சனங்களின் மற்றும் போராளிகளது நடமாட்டத்தை மிகவும் துல்லியமாகக் கணிப்பிட்டு சிறீலங்கா இராணுவத்துக்கு அறிவுறுத்தியிருந்தனர். 

இதன்மூலம் இந்தியா தனது தொழில்நுட்பத்தைச் சோதனைசெய்யும் களமாகவும் தமிழர் தலைகளை மாற்றியிருந்தது அதைத்தவிர இலங்கயிலிருந்து சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின்மூலம் வெளியேற்றப்பட்ட இந்திய வம்சாவளித்தமிழர்களது மூன்றாவது சந்ததியினர் தங்களது சொந்தங்களைக்காண வன்னிப்பகிதிக்கு வருகிறோம் எனும்போர்வையிலும் இந்திய புலனாய்வு தனது ஆதளை வன்னி வடக்கு எங்கும் உள்நுளைத்திருந்தது. அதைத்தவிர கருணாவுடன் வன்னியில் யெயசுக்குரு காலத்தில் சேர்ந்து செயற்பட்ட பல ஆயிரக்கணக்கான கிழக்கைச் சேர்ந்த முன்னைய கருணாவும் விசுவாசிகள் விருப்பத்துனணோ அன்றேல் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கியோ இராணுவ ஊடறுப்புகளுக்கு மத்தியில் உள்நுளைக்கப்பட்டனரவர்களே இறுதிகணத்தில் பொதுமக்களுக்கு எதிரான வன்முறையச் செய்தவர்கள் 

இப்படியான பல விடையங்கள் புலிகளது படை இறுதிப்போரில் வென்றாலும் அதன் பின் அவர்கள் நீண்டகாலத்துக்குத் தாக்குப்பிடிக்கமுடியாதவாறு அனைத்துச் செயல்களும் வடக்கில் செய்துமுடிக்கப்பட்டன ஆகவே தான் 

இந்திய தேசம் தமிழர்விரோத தேசம் என எப்போகும் நான் கூறுவதற்குக்காரணம்.

இலங்கை தமிழரின் அடிப்படை பிரச்சினை, பாதுகாப்பும் பொருளாதார வளர்ச்சியும் ஆகும். இவை ஏன் தடைப்பட்டன? என்ற கேள்விக்கான பதிலே, மொழிப்பிரச்சினை, பொலிஸ் உரிமை, காணி உரிமை, சுயநிர்ணய உரிமை என்ற தேவைகள் ஆகும். 

இவை இலங்கை அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான பிணக்கு. இந்த பிணக்கை இந்தியா - இலங்கை தமிழர் யுத்தமாக மாற்றியது மாபெரும் தவறு. அதை நிவர்த்தி செய்ய கடுமையான முயற்சி தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

இந்திய தேசத்தை தமிழர் ஆதரவு தேசமாக மாற்றவேண்டியதும் அவ்வாறு மாற்றப்பட்டபின்னர் அதனை தந்திரமாக பேணுவதும் அரசியல் தேவை. 

இந்தியாவை எதிர்த்து யாருடன் நாம் உறவை வைக்க முடியும்?, முடியாது  

எமக்குள் உள்ள பலம் பலவீனங்கள் மற்றும் டெல்லியில் (தமிழகம்)  ஆட்சியில் உள்ளவர்களின் பலம் பலவீனங்கள்  மற்றும் நீண்ட கால இந்திய நலன்கள் அவை சார்ந்த கொள்கைகளை அறிந்து ஆராய்ந்து கொள்கைகளை வகுப்பதே இனத்தை காக்கும்.  

 

27 minutes ago, Jude said:

இதற்கும் மேலாக, இந்திய நலன்களுக்கு பாதகமாக அமையும் சிறிலங்கா அரசின் திட்டங்களை அடையாளம் கண்டு, அந்த பாதிப்புகளை குறைக்க தமிழ் மக்கள் செய்ய கூடியவற்றை திட்டமிட்டு, இவற்றை இந்திய மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வது முக்கியமான தேவை.

இந்தியா என்பது மிகப்பெரிய அனைத்துச் சக்திகளையும் உள்ளடக்கிய நாடு அதற்கு நாம் மேற்றிய செயற்பாடுகளைச் செய்யமுடியாதுஅது எப்படி இருக்குமெனில் பத்துப்பிளை பெத்தவளுக்கு ஒரு பிள்ளை பெத்தவள் முக்கிக்காட்டியமாதிரி அதைவிட அவர்கள் எமது வழிக்கு வருவது கிழவி சாமத்தியப்படுவதற்குச்சமன்.  

நாம் யாரும் இந்தியாவுக்குச் சொம்பு தூக்கவேண்டிய அவசியம் இல்லை காரணம் இலங்கைத் தீவில் அனைத்து அரசியல் சூழலையும் தீர்மானிப்பதும் ஏற்படுத்துவதும் இந்தியாவே அப்படியும் நாம் சொம்புதூகினால் நாம் காமடிப்பீசாகவே கணிக்கப்படுவோம்.

கிட்டத்தட்ட இந்தியாவை ஐம்பது வருட காலமாக நம்பியும் ஏமாந்தும் வருகிறோம்

ஐம்பதுக்குக் குறைவான புலொட் போராளிகளைவைத்தே மாலைதீவினை இந்தியா தனது கைக்குள் கொண்டுவந்தது

அது அந்தகாலம் எனினும் தற்போது இலங்கைத் தீவின் அனைக்து இடங்களிலிம் இந்தியா அனைத்து வடிவிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றது.

ஈஸ்டர் குண்டுவெடிப்பின்போது நாம் அவதானித்தவையில்  கொச்சிக்கடை அந்தோனியார் கோவிலில் வெடித்த குண்டு  சாதாரணமாக முதுகில் எல்லோரும் சுமக்கும் பையில் கொண்டுபோய் வெடிக்கவைத்து அது பாரிய சேதாரத்தை ஏற்படுத்துமாகவிருந்தால் பஞ்சிகாவத்தையில் கையெறி குண்டுக்காகப் பயன்படும் வெடிபொருள் பாவித்திருக்க முடியாது பிளாஸ்டிக் வகை வெடிமருந்தாக இருக்கவேண்டும் அதை சாதாரணமாக நாம் கையாளமுடியாது தவிர வேறு நாடுகளிலிருந்து தருவிக்க முடியாது அப்படித்தருவிக்க முற்பட்டால உடனடியாக அனைத்துலகத்திலுமுள்ள புலனாய்வுத்துறையினருக்க்கும் செய்தி போய்ச்சேரும் அந்த அளவுக்கு வலையமைப்பு இறுக்கமாக இருக்கு அதன் காரணமாகவே ஐரோப்பிய ஒன்றியத்தினதான வெளியேற்றத்தை பிரிட்டிஸ் ஒரு ஒப்பந்தத்துடன் நடைமுறைப்படுத்த முயல்கிறது இல்லாதுவிட்டால் சர்வதேச மற்றும் பிராந்திய தீவிரவாத அமைப்புகளது செயல்பாடுகள் மற்றும் முனைவுகளைப்பற்றிய தகவல் பரிமாற்றத்துக்கு நிரம்பவே கணிசமான கட்டணத்தை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இங்கிலாந்து கொடுக்கவேண்டிவரும் ஆக புலனாய்வுப்பரிமாற்றம் என்பது உலக அளவில் நாடுகளுக்கு நாடுகள் மாறினாலும் விடையம் ஒன்றாகவே பார்க்கப்படும். ஆக யாரோ ஒரு பிராந்திய வல்லரசு மிகவும் திட்டமிட்ட ரீதியில் ஒழுங்கமைக்கப்பட்டு அதி தமிழருக்குப் பாதிப்பு ஏற்படும்வண்ணம் (காரணம் அவனது குரல்தான் இப்போது சகல வழிகளிலும் அடைக்கபட்டுள்ளது) ஆனால் இலங்கை அரசியலில் தங்களது ஆடு புலி ஆட்டத்தை தமக்குச்சாதகமாக ஆட யாரோ ஒருவரால் திட்டமிட்ட சம்பவம் அச்சம்பவத்துக்கு எப்போது இலங்கையின் குடுமியை எப்போதும் தன்வசம் வைத்திருக்க எண்ணும் இந்தியாவே செய்திருக்க வாய்ப்புள்ளது. அதுவும் முள்ளிவாய்க்கால் அவலத்தின் பத்தாவது வருட நிறவை எதிர்கொள்ளத் தமிழினம் ஆயத்தானவேளையில் மற்றும் சர்வதேச நாடுகள் அதற்கான நீதி இதுவரை கலதாமதகாஇரது ஏன் எனக் கேத முனைகின்றவெளையில் இப்படியான தாக்குதல் நடாத்தப்பட்டது இந்தியாவின் கைங்கரியம் இல்லாது வேறு யாராலும் இருக்கமுடியாது. அமைதிப்படையின் உற்றுகையப்போல பல்மடங்கு வீரியமான முற்றுகையை தமிழினம்மீது இந்தியா இப்போது மேற்கொண்டுள்ளது.

அது எதுபோல் எனில் தமிழ் நாடு அரசை கிரிஜா வைத்திய நாதன் எனும் ஒரு தலைமைச்செயலாளரை வைத்தே இயக்குவதுபோலாகும்.

ஆகவே இந்தியாவை நாம் புறமொதுக்கும் காலம் இப்போது நன்றாக வந்துவிட்டது இதற்கான விவாதக்களம் அனைத்திடங்களிலும் திறக்கப்படுவது காலத்தின் கட்டாயம் இந்தியக்கனவு காண்பவர்கள் பேடிகள் ஒதுங்கி நில்லுங்கள் விருப்பமென்றால் உங்கள் இந்திய எஜமானனுக்குக் கூறுங்கள்.

Link to comment
Share on other sites

29 minutes ago, Elugnajiru said:

இந்தியா என்பது மிகப்பெரிய அனைத்துச் சக்திகளையும் உள்ளடக்கிய நாடு அதற்கு நாம் மேற்றிய செயற்பாடுகளைச் செய்யமுடியாதுஅது எப்படி இருக்குமெனில் பத்துப்பிளை பெத்தவளுக்கு ஒரு பிள்ளை பெத்தவள் முக்கிக்காட்டியமாதிரி அதைவிட அவர்கள் எமது வழிக்கு வருவது கிழவி சாமத்தியப்படுவதற்குச்சமன்.  

நாம் யாரும் இந்தியாவுக்குச் சொம்பு தூக்கவேண்டிய அவசியம் இல்லை காரணம் இலங்கைத் தீவில் அனைத்து அரசியல் சூழலையும் தீர்மானிப்பதும் ஏற்படுத்துவதும் இந்தியாவே

.......

.......

ஆகவே இந்தியாவை நாம் புறமொதுக்கும் காலம் இப்போது நன்றாக வந்துவிட்டது இதற்கான விவாதக்களம் அனைத்திடங்களிலும் திறக்கப்படுவது காலத்தின் கட்டாயம் இந்தியக்கனவு காண்பவர்கள் பேடிகள் ஒதுங்கி நில்லுங்கள் விருப்பமென்றால் உங்கள் இந்திய எஜமானனுக்குக் கூறுங்கள்.

" இந்தியா அனைத்துச் சக்திகளையும் உள்ளடக்கிய நாடு" , "இலங்கைத் தீவில் அனைத்து அரசியல் சூழலையும் தீர்மானிப்பதும் ஏற்படுத்துவதும் இந்தியாவே" என்று எழுதிய கையோடு "ஆகவே இந்தியாவை நாம் புறமொதுக்கும் காலம் இப்போது நன்றாக வந்துவிட்டது" என்றும் எழுதுகிறீர்கள். இது தானே முள்ளிவாய்க்கால் தற்கொலைக்கு காரணமான சிந்தனை? "இந்தியாவை நாம் புறமொதுக்கும் " கொள்கை தானே இந்திய - தமிழீழ யுத்தத்துக்கு வழி கோலியது? இப்போது என்ன மீண்டும் "இந்தியாவை நாம் புறமொதுக்கும் காலம் இப்போது நன்றாக வந்துவிட்டது"?

 

 

Link to comment
Share on other sites

#1 : உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை 13% அதிகரித்துள்ளது ~ கிட்ட்டத்தட்ட 62 அமெரிக்க டாலர்கள் 

https://www.cnbc.com/2019/09/15/us-crude-oil-jumps-15percent-after-drone-strikes-disrupt-saudi-crude-production.html

#2:  திங்கள் அளவில் பாதிக்கப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மூன்றில் ஒரு பகுதி திருத்தப்பட்டு விடும் 

https://www.cnbc.com/2019/09/15/saudi-arabia-aims-to-restore-one-third-of-lost-oil-output-by-monday-wsj-says.html

#3: அமெரிக்க நாடு யுத்தத்திற்கு ஆயத்தம். யார் இதை செய்தார்கள் என்ற தகவல் கிடைத்ததும் நடவடிக்கை - ட்ரம்ப் 

https://www.cnbc.com/2019/09/15/trump-says-us-is-locked-and-loaded-after-attack-on-saudi-oil-supply.html

Link to comment
Share on other sites

 

அமெரிக்க, உலகின் தனிப்பெரும் வல்லரசு என்று ஊடகங்களும் ஆய்வாளர்களும் பொதுவாக முன்வைப்பர். இருந்தும், பல நெருக்கடிக்களுக்குள் உள்ள ஈரான், துணிந்து இந்த 'புரெக்சி' தாக்குதலை, அதாவது ஏமாறும் ஏமன் போராளிகள் ஊடாக செய்துள்ளது. 

அண்மையில் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ரன் பதவியை துறந்தார். ஒரு காரணமாக ட்ரம்ப் ஈரானின் அதிபரிடன் நேரடியாக கதைக்க விரும்பியதாயும் அதை  ஜான் போல்ரன் எதிர்த்தார் என்றும் கூறப்படுகின்றது. 

பெரிய பொருளுத்தார சிக்கலை எதிர்கொள்ளும் இந்தியா, உருசியாவிற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து விலாடிவஸ்த்ரோக் - சென்னை கடல் பயணத்திற்கு உதவி உள்ளது. காரணம்? சீன கடல் ஆதிக்கத்தை தவிர்க்க ? அப்படியானால் சீனா உருசியாவுடன் நல்ல உறவை கொண்டுள்ளதே? அமெரிக்காவுடன் உறவை கொண்ட இந்தியா எவ்வாறு உருசியாவுடன் இதை செய்து கொண்டது.? 

ஈரான் மீது அமெரிக்க பொருளாதார தடை இருந்தும் மசகு எண்ணெயை ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்த இந்தியா அதை அண்மையில் அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க நிறுத்து உள்ளது. இப்பொழுது இந்தியா என்ன செய்யப்போகின்றது? 

இந்தியா - சீன - அமெரிக்க - உருசிய உறவுகள் சொல்லும் செய்து : நமக்குள் நிறைந்த நண்பனும் இல்லை எதிரியும் இல்லை. ஆக, நிறைந்த பொருளாதார - இராணுவ - அரசியல் தேவைகளே உள்ளன.      
 

Link to comment
Share on other sites

சவுதி மீது ஆளில்லா விமானதாக்குதல்- பதிலடி கொடுப்பதற்கான தயார் நிலையில் அமெரிக்கா- டிரம்ப்

சவுதி அரேபியாவிற்கு எதிராக  ஆளில்லா விமானதாக்குதலை மேற்கொண்டவர்களிற்கு எதிராக தாக்குதலை  மேற்கொள்வதற்கான தயார் நிலையில் அமெரிக்க உள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ள அவர் சவுதி அரேபியா மீது யார் தாக்குதலை மேற்கொண்டார்கள் என அமெரிக்க நம்புவதற்கான காரணங்கள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

trump_se13.jpg

சவுதி அரேபியாவின் எண்ணெய் விநியோகம் தாக்கப்பட்டது ,எங்களிற்கு குற்றவாளியை தெரிந்துள்ளது என்பதற்கான காரணங்கள் உள்ளன என குறிப்பிட்டுள்ள டிரம்ப் உறுதிப்படுத்தல்களை அடிப்படையாக வைத்து நாங்கள் தாக்குதலிற்கு தயாராகவுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த தாக்குதலிற்கு யார் காரணம் என சவுதி அரேபிய கருதுகின்றது என்ற அவர்களின் பதிலிற்காகவும் என்ன அடிப்படையில் நாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பிற்காகவும் நாங்கள் காத்திருக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/64843

Link to comment
Share on other sites

செளதி அரேபிய எண்ணெய் ஆலையில் தாக்குதல்: இரானுக்கு எதிராக அமெரிக்கா வெளியிட்ட புகைப்படம்

செளதி அரேபியாபடத்தின் காப்புரிமைREUTERS

செளதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலால் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவு எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

செளதியில் மீண்டும் எண்ணெய் உற்பத்தி தொடங்கும் வரை அமெரிக்காவின் எண்ணெய் சேமிப்பை வெளியிடுவதாக டிரம்ப் உறுதியளித்த பிறகு விலையில் சிறிது மாறுதல்கள் இருந்தன.

உலகளவில் செளதி அரேபியா மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாக உள்ளது. நாள் ஒன்றுக்கு ஏழு மில்லியன் பேரல்களை அந்நாடு ஏற்றுமதி செய்கிறது.

தாக்குதலுக்கு பிறகு அரம்கோ எண்ணெய் நிறுவனத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் தினமும் 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் தயாரிப்பு பாதிக்கப்படும் என செளதியின் ஆற்றல் துறை அமைச்சர் இளவரசர் அப்துலாசிஸ் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

இது செளதி அரேபியாவின் மொத்த உற்பத்தியில் பாதியளவாகும்

அப்கைக் எனும் இடத்தில் அமைந்துள்ள அரம்கோ நிறுவனத்தின் மிகப்பரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குராய்ஸ் எனும் இடத்தில் உள்ள எண்ணெய் வயல் ஆகியவற்றில் தாக்குதல் நடந்துள்ளது.

அப்கைக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உலகின் பயன்பாட்டுக்கு தேவையான 7% பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தியைச் சுத்திகரிக்கும் வசதி உள்ளது. குராய்ஸ் எண்ணெய் வயலில்தான் உலக அளவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய்யில் 1% கிடைக்கிறது.

செளதி அரேபியாவில்தான் உலகிற்குத் தேவையான 10 சதவீத கச்சா எண்ணெய் உற்பத்தி ஆகிறது. எனவே இந்த தாக்குதலால் திங்களன்று எண்ணெய் விலையில் பெரும் தாக்கம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

https://www.bbc.com/tamil/global-49711737

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை கவலை முழுக்க பெற்றோல் விலை கூடப்போகுது எண்டதுதான்.... மற்றும்படி உவங்கள் எப்பிடி குத்துப்பட்டாலும் எனக்கு கவலையில்லை:cool:

13 hours ago, ampanai said:

சவுதி அரேபியாவின் எண்ணெய் விநியோகம் தாக்கப்பட்டது ,எங்களிற்கு குற்றவாளியை தெரிந்துள்ளது என்பதற்கான காரணங்கள் உள்ளன என குறிப்பிட்டுள்ள டிரம்ப் உறுதிப்படுத்தல்களை அடிப்படையாக வைத்து நாங்கள் தாக்குதலிற்கு தயாராகவுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுக்கு அடிக்கிறதுக்கு ஒரு சாட்டு வேணும். அதுக்கு இப்பவே ரெடி பண்ணீனம்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/14/2019 at 9:53 PM, Jude said:

இந்த தாக்குதலில் இருந்து தமிழீழ மக்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன?

பெட்ரோலில் குண்டுபோட்டால் பத்தி எரியும் 

Link to comment
Share on other sites

On 9/14/2019 at 7:53 PM, Jude said:

இந்த தாக்குதலில் இருந்து தமிழீழ மக்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன?

 

10 hours ago, Maruthankerny said:

பெட்ரோலில் குண்டுபோட்டால் பத்தி எரியும் 

தமிழீழத்தில் பெட்ரோல் இல்லாமலே குண்டு போட்ட இடமெல்லாம் பத்தி எரிந்ததாக வந்த கதை எல்லாம் வெறும் வதந்திகள் தானா?

Link to comment
Share on other sites

சேதமடைந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் 2 அல்லது மூன்று வாரங்களில் பணி தொடங்கப்படும்: சவுதி அரசு


சேதமடைந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 2 அல்லது மூன்று வாரங்களில் பணியை தொடங்கும் என சவுதி அரசு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், எண்ணெய் வயல்கள் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலால் பலத்த சேதம் ஏற்பட்டதை தொடர்ந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவை பாதியாக குறைத்து சவுதி அரசு. இந்த நிலையில் சேதங்கள் அனைத்தும் சரி செய்ய 2 அல்லது 3 வாரங்கள் ஆகும் என சவுதி அரசு தெரிவித்துள்ளது.
 
முன்னதாக சவுதி அரேபியாவின் புக்யக் என்ற இடத்தில் செயல்படும் அரசுக்கு சொந்தமான ‘அராம்கோ’ என்ற நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீதும்,  குரைஸ் எண்ணெய் வயல் மீதும்  டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், இங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான இங்கு ஒரு நாளைக்கு 70 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. டிரோன் தாக்குதலில் பயங்கர சேதம் ஏற்பட்டதால், கச்சா எண்ணெய் சப்ளையை சவுதி அரசு பாதியாக குறைத்துள்ளது.

எண்ணெய் சப்ளையை சவுதி அரேபிய அரசு குறைத்து இருப்பதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அல்லது பெட்ரோலியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என கூறப்படுகிறது.  சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது  ஏமனில் போராடி வரும் ஹவுதி அமைப்பினரோ இந்த டிரோன் தாக்குதலை நடத்தியது. இதனை தொடர்ந்து சேதங்கள் அனைத்தும் சீர்செய்யப்பட்டு இன்னும் இரண்டு அல்லது 3 வாரங்களில் அராம்கோ கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பழையபடி செயல்படும் என்று சவுதி அரசு தெரிவித்துள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526760

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.