Jump to content

Aamhi Doghi - The both of us


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

38-B7-EB81-B37-E-493-A-8-B01-5-A843-A45-

Aahmi Doghi - The both us

2018  ஆண்டு  வெளிவந்த  ஒரு  மாரத்திய  மொழிப்படம்.  கெளரி தேஷ்பாண்டேயின்  “ பாஸ் அலா  மேத்தா” என்ற  நாவலை  மையமாக  கொண்டு உருவாகிய படம். இதன்  கதாசிரியர்கள்: Pratima Joshi & Bhagyashree Jadhav , தயாரிப்பு: Puja Chhabria, நெறியாள்கை: Pratima Joshi என இந்தபடத்தின் பெரும்பகுதி பெண்களால்  உருவாக்கப்பட்டது.

சாவித்திரியின்  flashback  கதையாகவே இந்தப்படம்  ஆரம்பிக்கிறது.

படத்தில்  மட்டுமே  தாயைப்  பார்த்து வேலையாட்களின்  கவனிப்பில்  வளரும்  கதாநாயகி  சாவித்திரி, 

“ We aren’t emotional fools, we are practical” எனக்கூறியே  மகளை வளர்க்கும்  ஊரில்  மிகவும் பிரபல்யமான வக்கீல்  தந்தை,  சாவித்திரியின் பதினைந்தாவதுவயதில்,  தந்தை மறுமணம்  செய்து  அழைத்து  வரும் ஆம்லா.  இவர்களின்  வாழ்கையில்  வரும் மாற்றங்களின்  கதையே  இந்தப்படம்..

உணர்வுகளை  வெளிக்காட்டாத, அட்டவனைப்படி  வாழும்  தந்தைக்கும் மகளுக்கும்  இடையிலான வாக்குவாதங்கள், அவர்கள் இருவருக்குமிடையிலான  உறவின்தன்மை.  

அதிப்புத்திசாலியும் பிடிவாதமும்  உடைய சாவித்திரிக்கும்,  அமைதியான, படிப்பறிவில்லாத கைநாட்டு  சித்திக்கும் படிப்படியாக  உருவாகும் பிணைப்பு. மென்மையான உள்ளம்கொண்ட ராமுக்கும் முற்போக்குசிந்தனை உடைய சாவித்திரிக்கும் உள்ள காதல் என கதை நகர்கிறது.

ஆரவாரம் இல்லாத இசை, இரண்டே பாடல்கள் மட்டும், அதிக மேக்கப் இல்லாத சாதாரனமனிதர்களாகவே இருக்கும கதாபாத்திரங்கள், கதாபாத்திரம் அறிந்த நடிப்பு, கற்பனை கலக்காத வாழ்விடங்கள், முற்போக்குசிந்தனைகள், யோசிக்க வைக்கும் தற்போதைய சமூக விடயங்கள் என இந்தப்படத்தின் கதை அமைந்துள்ளது.

அரவனைப்பும், பாசமும் தேவைப்படும் நேரத்தில் அதை காட்டாமல் தள்ளியே இருந்தால், அது எந்தஉறவாக இருந்தாலும்சரி, அங்கே இயல்பானபிணைப்பு இருக்கமாட்டாது. பின்பு அதை உணரும்போது காலமும் உறவுமும் எங்களுக்காக நிற்காது ஓடிவிடும்.

இன்று சாவித்திரியைபோல வாழும் பெண்கள் எங்களிடையே அதிகம் உள்ளனர்.

வேற்று  மொழிப்படம் பார்க்க விரும்புவோர், மசாலாப்படங்களை பார்க்க விருப்பமில்லாதவர்கள் இந்தப்படத்தை பார்க்க விரும்பினால் பார்க்கலாம்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.