Jump to content

சிவப்பு மஞ்சள் பச்சையில்..


Recommended Posts

சிவப்பு மஞ்சள் பச்சையில்..

 
தொடர்ச்சியாக, பல வார இறுதிகளில் சென்னைக்கு பயணம் செய்து கதை விவாதத்தில் கலந்து கொண்ட படம் திரைக்கு வந்துவிட்டது. சிவப்பு மஞ்சள் பச்சை.
 
VMBG_120328000000.jpg
 
இயக்குநர் சசியின் இல்லம் கே.கே நகரில் இருந்தது. தமது வீட்டுக்கு மேல் உள்ள தளத்தில் உள்ள ஒரு வீட்டில் அலுவலகம் அமைத்திருந்தார். வெள்ளிக்கிழமை இரவு கிளம்பி வந்து அதிகாலையில் அலுவலகத்தைத் திறந்து அங்கேயே படுத்துக் கொள்வேன். எட்டு மணிக்கு எழுந்து தயாராகி உணவை முடித்த பிறகு ஒன்பது அல்லது பத்து மணிக்கு கலந்துரையாடல் தொடங்கும். மதிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மாலை வரை தொடரும். சில வாரங்களில் ஞாயிற்றுக்கிழமையும் உண்டு. இல்லையெனில் கிளம்பி ஊருக்குச் சென்றுவிடுவேன்.
 
இடையில் தயாரிப்பாளர் மாறிய பிறகு அருகிலேயே இன்னொரு அலுவலகம் அமைத்து கதை விவாதம் நடைபெற்றது. அதன் பிறகு பாஃப்டா அலுவலகத்தில் ஓர் அறையில் சில நாட்கள் நடைபெற்றது. அப்பொழுதும் குளியல், தங்கல் எல்லாம் இயக்குநரின் வீட்டின் மேலிருந்த அலுவலகத்தில்தான். இயக்குநர் பற்றி ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். சேலத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவருடைய அப்பா மளிகைக்கடை நடத்தி வந்தாராம். இயக்குநரிடம் பேசியதைவிடவும் அவரது பெற்றோரிடம் அதிகம் பேசியிருப்பேன் என நினைக்கிறேன். அப்படியான எளிய மனிதர்கள். சசியின் நேர்காணல்கள் இணையத்தில் கிடைக்கின்றன. எந்தவிதமான பூச்சுகளும் இல்லாமல் பேசியிருப்பார். எப்படி பேசுகிறாரோ அப்படியேதான் வாழ்கிறார். இத்தகைய மனிதர்களிடம் எந்தவிதமான பாசாங்குமில்லாமல் மிக தைரியமாக உரையாடலை முன்னெடுக்க முடியும். 
 
இயக்குநரை சில வாரங்களுக்கு முன்பாகவே டிஸ்கவரி புக் பேலஸில்  முதன் முறையாகச் சந்தித்துப் பேசியிருந்தேன்.   ‘மாமா-மச்சான் கதைதான் அடுத்த படம்’ என்றார். அவருக்கும் எனக்கும் அதற்கு முன்பாக எந்தத் தொடர்புமில்லை. மகுடபதி என்ற நண்பர்தான் எங்களுக்கு இணைப்பு பாலம். அதன் பிறகு இயக்குநர் என்னைப் பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். முதல் சந்திப்பிலேயே ‘அடுத்த படம் இதுதான்...யோசிச்சு வைங்க’ என்று நம்பிக்கையாகச் சொல்லிவிட்டார்.  
 
அதன் பிறகு மாமா-மச்சான் உறவுகள் பற்றிய கதைகளை தெரிந்தவர்களிடமெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தேன். புத்தகங்களிலும் தேடல்களை நடத்தினேன். கிழக்குச் சீமையிலே மாதிரியான சில படங்களையும் பார்த்தேன். உள்ளூரின் சுவாரசியமான சீட்டாட்ட சண்டைகள், இணைந்து தொழில் தொடங்கிய மாமன்-மச்சான், மிகச் சாதாரண சச்சரவில் ஆரம்பித்து கடுமையான எதிரிகளாகிக் கொண்டவர்கள் என்று கேள்விப்பட்டவற்றையெல்லாம் யோசித்து ஒரு சிறுகதை வடிவமாக்கி இயக்குநரை அலைபேசியில் அழைத்துச் சொல்வேன். தமக்குப் பிடித்தமானவையெனில் ‘இதை ரெக்கார்ட் செஞ்சு அனுப்புறீங்களா?’ என்று கேட்பார். அப்படி அனுப்பிய ஒரு சம்பவம்தான் படத்தின் இறுதிக்காட்சி என்று முடிவானது. அம்மாவின் கிராம நிர்வாக அலுவலர் பணி அனுபவத்திலிருந்து கேட்ட சம்பவம் அது. 
 
மெல்ல வளரும் கதை, அதனையொட்டிய சம்பவங்கள், அவற்றை இணைத்துக் கோர்வையாக்குவது என்று ஒவ்வொரு படியாக திரைக்கதை முன்னேறிக் கொண்டிருந்தது. விவாதம் நடக்கும் அறையில் வெள்ளைப் பலகை ஒன்றில் கதையின் தொடர்ச்சி எப்பொழுதும் எழுதப்பட்டிருக்கும். மிக நுணுக்கமான சில ஷாட்களை விவாதத்தின் போது அவர் சொல்லியிருந்தார். சிறுமியான அக்காவின் விரலைச் சூப்பியபடியே உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தை, யாராவது மச்சான் என்று அழைக்கும் போது ஜி.வி.பிரகாஷ் கடுப்பாவது என்பதெல்லாம் தொடக்க காலத்திலேயே முடிவு செய்து வைத்திருந்தார். திரைக்கதை உருவான போதே சில வசனங்களையும் இயக்குநர் சொல்வார். அவைதான் படத்தில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
 
கதையைச் சொல்லும் போது பெரிய உணர்ச்சிகளைக் காட்டிக் கொள்ளாமல் சொல்லும் இயக்குநர், சில காட்சிகளைச் சொல்லும் போது தம்மையும் மீறி அழுதார். ‘இதென்ன உண்மையா நடந்த கதையா இருக்குமோ’ என்று குழம்பிக் கொண்டிருந்தேன். கவனிக்கும் போது இயக்குநர் சசி அடிப்படையிலேயே அப்படிப்பட்டவர்தான். உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளாத ஆனால் உள்ளூர உணர்ச்சிகளால் உருவானவர் என்று தோன்றும்.  அவரது முந்தைய படங்களின் ஆக்கங்களிலும் அது தெரியும். ஆனால் தமது முந்தைய படங்களை அவர் விவாதத்தின் போது ரெஃபரன்ஸாக பேசியதாக நினைவில் இல்லை. வேறு சில படங்கள், இயக்குநர்களைத்தான் சுட்டிக் காட்டினார்.
 
கதை முழுமையடையும் வரைக்கும் யார் நாயகர்கள் என்றே தெரியாது. ‘கதைக்கு ஏத்த மாதிரி நடிகர்களைத் தேர்வு செய்து கொள்ளலாம்’ என்று ஆரம்பத்திலேயே எங்களிடம் சொல்லியிருந்தார். கதையின் வடிவம், பெரும்பாலான காட்சிகள் முடிவு செய்யப்பட்ட பிறகு ஜி.வி.பிரகாஷையும், சித்தார்த்தையும் சந்தித்துக் கதை சொன்னார். நடிகர்கள் முடிவு செய்யப்பட்ட பிறகு கதையில் சில மெருகேற்றல்கள் நடைபெற்றிருக்கின்றன. அதன் பிறகு என்னுடைய பங்களிப்பு குறைந்துவிட்டது. 
 
இயக்குநரைச் சந்திக்கும் முன்பாக ‘வசனம் எழுதிப் பார்க்க வேண்டும்’ என்ற ஆர்வத்தில்தான் இருந்தேன். ஆனால் கதை உருவாக்கத்தில்தான் என்னுடைய உதவி இருந்தது. ‘சார், வசனம் எழுதிப் பார்க்கட்டுமா’ என்று கேட்டிருந்தால் அவர் மறுத்திருக்க வாய்ப்புகள் குறைவுதான் என்ற நம்பிக்கையிருக்கிறது. ஆனால் கேட்கத் தோன்றவில்லை. யாரிடம் எந்த வேலையைப் பெற வேண்டும் என்று அனுபவஸ்தர்களுக்குத் தெரியும்.
 
உண்மையில், ஒரு கதை எப்படி திரைக்கதையாகி படமாகிறது என்பதை வெகு அருகிலிருந்து பார்த்த அனுபவம் எனக்கு. கதை உருவாக்கம் வகுப்பறை போலத்தான் நடந்தது. ஒரு சில உதவி இயக்குநர்கள் மிக பயந்தவர்களாக இருப்பார்கள். ஒரு சிலர் துணிச்சலாக இயக்குநரிடம் பேசுவார்கள். நான் சமநிலை குலையாமல் இருந்ததாக நம்புகிறேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிரவும் பயணத்தில்தான் கழிந்தது. ஆனால் சலித்துக் கொள்ளவேயில்லை. சனிக்கிழமை புத்தம் புதியதாக இருக்கும். படமாகப் பார்க்கும் போது என்னுடைய உழைப்பு மிகச் சிறியதுதான் எனத் தோன்றுகிறது. அதற்கேற்ற கிரெடிட்டை வழங்கியிருக்கிறார்.

திரையில் பெயர் தோன்றும் போது நானே விசிலடித்துக் கவனத்தைத் திருப்பலாமா என்று நினைத்தேன். ‘டேய்...இதெல்லாம் உனக்குத் தேவையா?’ என்று பல்லி கத்தியதால் அமைதியாகிக் கொண்டேன்.
 
1.jpg
 
ஒருவேளை இதுவே என்னுடைய கடைசி திரைப்பட உழைப்பாகக் கூட இருக்கலாம். பணம், புகழ் என்றில்லாமல் நம்முடைய அலைவரிசைக்கு ஏற்ற, உழைப்பைச் சுரண்டாத சசி மாதிரியான இயக்குநர்கள் அமைவது அபூர்வம் என்றுதான் நினைக்கிறேன். அப்படியொரு வாய்ப்பு கிடைத்தது. நல்லதொரு அனுபவமாக்கிக் கொண்டிருக்கிறேன்.

படம் தயாரான பிறகும் படத்துக்காக பெரிய விளம்பரங்களைச் செய்யவில்லை. ‘பிச்சைக்காரன்’ இயக்குநரின் அடுத்த படம் என்பதைத் தாண்டி பெரிய ப்ராண்டிங் இல்லை. படம் எப்பொழுது வெளியாகிறது என்பது கூட முந்தைய நாள் வரைக்கும் தெரியவில்லை. தி.நகரில் ஒரு திரையரங்கில் பார்த்துவிட்டு வெளியே வந்த போது திரையரங்கப் பணியாளரிடம் விசாரித்தேன். கடந்த இரண்டு நாட்களாக ‘பிக்கப்’ ஆகிக் கொண்டிருக்கிறது என்றார். சந்தோஷம்.
 
கதையை தமக்குப் பிடித்த வகையில் சமரசமில்லாமல் படமாக்கக் கூடிய இயக்குநர் என்ற பிம்பத்தைச் சிதைக்காமல் எடுத்திருக்கிறார். சிற்சில விமர்சனங்கள் இருந்தது. அதையும் அலைபேசியிலேயே சொன்னேன். எந்தவித மறுப்புமில்லாமல் ஏற்றுக் கொண்டார். எனக்கு உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கிறது. ஒருவகையில் நிறைவாகவும் இருக்கிறது. 
 
படத்தின் கதையில் பணியாற்றிய ஒருவன் கதையை, விமர்சனத்தை எழுதுவது சரியாக இருக்காது. படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் சொல்லுங்கள்.
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
Master.jpg

சிவப்பு மஞ்சள் பச்சை மினி விமர்சனம்

Samayam Tamil, Fri,6 Sep 2019 14:23:08 +05:30
விமர்சகர் மதிப்பீடு 3 / 5
வாசகரின் சராசரி மதிப்பீடு4 / 5
நடிகர்கள்சித்தார்த்,ஜீவி பிரகாஷ்,லிஜோ மோல் ஜோஸ்,காஷ்மிரா.
இயக்கம்சசி
சினிமா வகைAction,Thriller
கால அளவு140
 
 
    கரு - உறவுகளுக்கிடையே ஏற்படும் முன்பகை, மனங்களை காயப்படுத்துவதும் அது மாறுவதும் தான் கரு.

    கதை - ஜீவி, லிஜோ மோல் இருவரும் பெற்றோர் இல்லாமல் வளரும் அக்கா , தம்பி. உலகை எதிர்த்து தங்களின் வாழ்க்கையை சந்தோஷத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். ஜீவிக்கு பைக் ரேஸ் பழக்கம் ஏற்பட, ஒரு பைக் ரேஸின்போது போக்குவரத்து அதிகாரியான சித்தார்த்திடம் மாட்டி அவமானப்படுத்தப்படுகிறார்.

    மனம் முழுக்க வன்மம் நிறைந்திருக்கும் வேளையில் அவர் அக்காவிற்கு மாப்பிள்ளையாக சித்தார்த் வர, இருவருக்கும் பிரச்சனை ஆர்ம்பிக்கிறது. இதில் ஜீவியின் அக்கா பாதிக்கப்பட, மாமன் மச்சான் சண்டை உச்சம் தொடுகிறது. இன்னொரு புறம் ஜிவிக்கு பைக் ரேஸால் பிரச்சினையும், சித்தார்த்துக்கு தன் வேலையில் பிரச்சினையும் வருகின்றன. இந்தப் பிரச்சனைகள் கடந்து இந்த உறவுச் சிக்கல் என்னவாகிறது என்பதே கதை.

    மகாமுனி திரைவிமர்சனம்!

    விமர்சனம்: பிச்சைக்காரன் எனும் மெகா வெற்றிக்குப் பிறகு சசி தன் அடுத்த படைப்புடன் வந்திருக்கிறார். கமர்ஷியல் படமே என்றாலும் ஒவ்வொரு படத்திற்கும் அவர் எடுத்துக்கொள்ளும் காலமும் சிரத்தையும் அவர் படத்தை தனித்துக் காட்டும். இது இன்றைய இளைஞர்களின் பொறுப்பற்ற தன்மையையும் அவசர உலகின் பயணத்தையும் அதில் உறவுகளின் பங்கையும் இணைத்துக் கதை சொல்லியிருக்கிறது.

    ஒரு பக்கம் பைக் ரேஸ் இளைஞன், இன்னொரு புறம் நேர்மையான போக்குவரத்து அதிகாரி, இருவரின் வாழ்க்கையின் வழியே மாமன் மச்சான் உறவை ரசிக்கும் வகையில் சொல்லியிருக்கிறார். சசி படங்களில் மனித உணர்வுகள்தான் மையமாக இருக்கும். அதுதான் காதாபாத்திரங்களின் பிரச்சினையாகவும் இருக்கும் அவர் திரைக்கதையும் எதிர்பார்த்த காட்சிகளின் வழியே உணர்ச்சிவயப்படும்படி இருக்கும்.

    இந்தப் படத்திலும் அது சரியாக அமைந்திருக்கிறது. குடும்பத்துடன் ரசிக்கும்படியான கதைகளே இல்லாத தமிழ் சினிமாவில் சரியான நேரத்தில் வந்திருக்கிறது இப்படம். இக்கால இளைஞனின் அவசர வாழ்வைச் சொல்லும் வழியில் நாம் உணர வேண்டிய உறவின் மதிப்பை அழகாகச் சொல்லியிருக்கிறார். உறவில் ஏற்படும் சின்னச் சின்ன சந்தோஷங்களும் பிரச்சினைகளும் வெகு அழகாகத் திரைக்கதையில் வருகின்றன.

    Virat Kohli: சிவாஜி கொள்ளு பேரனுக்கு விராட் கோலி வாழ்த்து!

    சித்தார்த் போக்குவரத்து அதிகாரியாகத் தன்னைக் கச்சிதமாகப் பொருத்திக் கொண்டிருக்கிறார். நேர்மையில் திமிறுவது, ஜீவியுடன் மல்லுக்கட்டுவது, பின் குடும்பத்திற்காக இறங்கி வருவது என அசத்துகிறார். ஜீவி இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பு. அக்காவுக்காக அழும் இடத்தில் கவர்கிறார். லிஜோ மோல் ஜோஸ் இந்தப் படத்தின் முக்கிய பாத்திரம்.

    இருவருக்குமான பாலமாக இருக்கிறார். அன்பு, பிரிவு,வலி என அனைத்தையும் கண்களின் வழியே கடத்துகிறார். நடிக்கத் தெரிந்த ஒரு நடிகை தமிழுக்கு அறிமுகம் ஆகியிருக்கிறார். காஷ்மிரா இன்னொரு ஹிரோயின் தமிழ் சினிமா ஹீரோயினின் மாறாத பாத்திரப் படைப்பில் வந்து போகிறார்.

    ஆண்கள் ஆடையை அணியப் பெண்கள் சங்கடப்படுவதில்லை, ஆனால் பெண்ணின் ஆடை ஏன் ஆண்களுக்கு அவமானமாக இருக்கிறது, ஒரு நாட்டின் நிலமை தெரிய வீட்டைப் பார்க்க வேண்டாம், ரோட்டை பார்த்தால் போதும் என்பது போன்ற வசனங்கள் படத்திற்கு பெரும் பலம். இசை படத்திற்கு மற்றுமொரு பலம். எடிட்டிங்கில் கிளைமாஸ் நீளத்தை குறைத்திருக்கலாம்.ஒளிப்பதிவு ஓகே.

    Siddharth: போக்குவரத்து காவல்துறைக்கு மரியாதை கொடுக்கும் சித்தார்த்தின் சிவப்பு மஞ்சள் பச்சை!

    பைக் ரேஸ் காட்சிகளில் சிஜி அப்பட்டமாகத் தெரிகிறது. படம் சொல்லிவந்த கதையை க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் வைத்து சொதப்பியிருக்கிறார்கள். அத்தனை நீளமான சண்டைக் காட்சி அவசியம்தானா?. சின்ன சின்ன உறவுச் சண்டைகளும், கூடலும் அழகாய் இருக்கும்போது சினிமாத்தனமான வில்லனும் அந்த மசலாத்தனமும் தேவைதானா?

    சசியின் ஒவ்வொரு படமும் தனித்துத் தெரியும். இப்படம் குடும்ப உறவைச் சொன்னதைத் தவிர சசியின் முத்திரைகள் பெரும்பாலும் படத்தில் மிஸ்ஸிங். இரு சிறுவர்கள் எப்படி ஒரு வீட்டில் வாழ முடியும் என ஆரம்பமே லாஜிக் கேள்வி எழுவது மைனஸ். தம்பிக்குக் கடைசிவரை அக்காவின் கர்ப்பம் தெரியாது எனபது போன்ற லாஜிக் இல்லாத காட்சிகள் சசி படத்தில் இருப்பது ஆச்சரியம்.

    படம் முழுக்க இப்படிச் சிறு சிறு குறைகள் எட்டிப்பார்த்தாலும் குடும்பத்துடன் பார்க்கும் நல்ல கமர்ஷியல் படமாக வந்திருக்கிறது சிவப்பு மஞ்சள் பச்சை.

    பலம்: குடும்ப உறவுகளை மையப்படுத்திய கதை , நடிகர்கள்

    பலவீனம்: லாஜிக், க்ளைமாக்ஸ் நீளம்.

    மொத்தத்தில்: குடும்பத்துடன் பார்க்க ஒரு நல்ல கமர்ஷியல் படம் சிவப்பு மஞ்சள் பச்சை.
     
     
    Link to comment
    Share on other sites

    Archived

    This topic is now archived and is closed to further replies.



    • Tell a friend

      Love கருத்துக்களம்? Tell a friend!
    • Topics

    • Posts

      • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
      • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
      • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
      • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
      • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Our picks

      • மனவலி யாத்திரை.....!

        (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

        அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
        • 1 reply
      • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


        Friday, 16 February 2007

        காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • 20 replies
      • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

        நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
        சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
        நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
        சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


        பொருள்:
        சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • 7 replies
      • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • 46 replies
      • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

        பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

        இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • 5 replies
    ×
    ×
    • Create New...

    Important Information

    By using this site, you agree to our Terms of Use.