Jump to content

தூர்வாரும் பணியில் அரசியல் கட்சிகள்


Recommended Posts

தூர்வாரும் பணியில் உதயநிதியின் திமுக இளைஞரணி!

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குளங்களைத் தூர்வாரும் பணியை கையில் எடுத்துள்ளார்

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குளங்களை தூர் வாரும் பணியை முடுக்கி விட்டுள்ளார். 

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் கூறியுள்ளதாவது,

“தி.மு.க இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட, ‘சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்க நம் அணி அதிக கவனம் செலுத்தும்’ என்ற தீர்மானத்தின் அடிப்படையில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த திருக்குவளையில் உள்ள கே.கே.நகர் குளத்தைத் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. இதுபோன்ற பணிகள் தொடரும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழகத்தில் மக்கள் பணிகளைப் பொறுத்தவரையில் ரஜினி மக்கள் மன்றம் தான் முதலில் களம் இறங்கியது.  அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த வேளையில் மக்களின் குடிநீர் தேவைகளுக்காக களம் இறங்கியவர்கள் ரஜினி மக்கள் மன்றத்தினர் தான். ( தொடர்புடைய செய்தி : குடிநீர் பிரச்சனை.. சத்தமில்லாமல் களத்தில் இறங்கிய ரஜினி மக்கள் மன்றம்! )
 
தொடர்ந்து மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு, குளங்கள் தூர்வாருதல் என தமிழ்நாடு முழுவதும் பணிகளை தொடர்ந்தனர் ரஜினி மக்கள் மன்றம். தேர்தல் முடிந்த பிறகு அரசியல் கட்சிகளும் இதே வழியில் பின் தொடர ஆரம்பித்தனர். 
 
காங்கிரஸ் கட்சி முதல் திமுக, அதிமுக என தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஏதாவது ஒரு குளத்தை தூர்வாருவது, எங்காவது ஒரு ஊருக்கு குடிநீர் வழங்குவது என்று மக்கள் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.
 
தற்போது உதயநிதி ஸ்டாலின்,  சுற்றுச் சூழல் சார்ந்த பிரச்சனைகளுக்கு திமுக இளைஞரணியினர் அதிக கவனம் கொடுத்து செயல்படுவார்கள் என்று அறிவித்துள்ளார். ரஜினி மக்கள் மன்றம் முன்னெடுத்த இந்த மக்கள் பணி முயற்சி, தமிழக அரசியலில் ஒரு நல்ல மாற்றம் தான்.
 
வடமேற்கு பருவமழை பெய்வதற்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏரிகளும், குளங்களும் தூர்வாரப்பட்டால் அதை விட மகிழ்ச்சி தரும் விஷயம் வேறு எதுவும் இல்லை.
 
– வணக்கம் இந்தியா 

https://vanakamindia.com/dmk-youth-wing-desilting-lakes/

 

 

`தாமிரபரணி ஆற்றில் தூய்மைப் பணி!’ -

மண்வெட்டியுடன் களமிறங்கிய நெல்லை ஆட்சியர் ஷில்பா

பொதிகை மலையில் நெல்லை மாவட்டத்துக்குள் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயல் பகுதியில் கடலில் கலக்கிறது. தமிழக எல்லைக்குள்ளேயே உற்பத்தியாகி மாநிலத்துக்குள்ளேயே பயணித்து கடலில் கலப்பதால் தண்ணீர் தாவா எதுவும் இல்லாத நதியாக விளங்குகிறது.

தாமிரபரணி பராமரிபà¯à®ªà¯à®ªà¯ பணி

இந்த ஆற்றின் கரையோரப் பகுதிகளில் முள் செடிகள் புதர்மண்டிக் கிடப்பதால் ஆறு சுகாதாரமற்ற நிலையில் இருக்கிறது. அதனால் தாமிரபரணி நதியைப் பாதுகாக்கும் வகையில் பாபநாசம் பகுதியிலிருந்து நெல்லை மாவட்ட எல்லை வரையிலும் உள்ள 60 கி.மீ தூரத்துக்கு சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள நெல்லை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தப் பணிகளை இன்று தொடங்கி வைத்த நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் அனைத்து தன்னார்வலர்களையும் பாராட்டினார். பராமரிப்பு பணிகளைப் பார்வையிட்ட அவர் மிகுந்த உற்சாகத்துடன் தானே மண் வெட்டியை எடுத்து புதர்களை வெட்டி அகற்றினார். வழக்கமான அதிகாரிகளைப் போல நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து விட்டுச் செல்லாமல், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட நேரம் பணிகளைச் செய்தார்.

https://www.vikatan.com/news/tamilnadu/nellai-collector-took-part-in-the-river-cleaning-project

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.