Jump to content

ஆண்ட்ராய்டு 10


Recommended Posts

பல ஸ்மார்ட்போன்களின் நெஞ்சங்களில் குடியிருக்கும் 'வெறித்தன' ஆண்ட்ராய்டின் அடுத்த வெர்ஷன் ரெடி. இம்முறை பெயர் தொடங்கி அனைத்திலும் மாற்றங்கள் பளிச்சிடுகின்றன.

மார்ஷ்மெல்லோ, ஐஸ்கிரீம் சாண்ட்விச், பை என உணவு பெயர்கள் ஆண்ட்ராய்டுக்கு வைக்கப்படுவது வழக்கம். அப்படி இம்முறை Q-வில் தொடங்கும் எந்த உணவுப் பொருளின் பெயரை வைக்கப்போகின்றனர் என்ற ஆர்வத்துடன் மக்கள் காத்துக்கொண்டிருக்க, சிம்பிளாக 'ஆண்ட்ராய்டு 10'தான் இந்த வெர்ஷனின் பெயர்அறிவித்தது கூகுள்.

Android 10

முதல்கட்டமாக கூகுள் பிக்ஸல் மொபைல்களுக்குஇந்த மாதத் தொடக்கத்திலிருந்து இந்த ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைக்கத்தொடங்கியது. அப்படியான ஒரு பிக்ஸல் மொபைலில் ஆண்ட்ராய்டு 10 பயன்படுத்திப் பார்த்ததில், எங்களைக் கவர்ந்த சில வசதிகளை இங்கே விரிவாகக் காண்போம்.

 

டார்க் தீம்

மாற்றங்கள் பல இருந்தாலும் முதலில் நம் கண்களுக்குத் தெரிவது டார்க் தீம்தான். மக்கள் வெகுகாலமாகக் கேட்டுவரும் இந்த வசதி, நேட்டிவாக ஆண்ட்ராய்டு 10-ல் இருக்கும். இதனால், ஒரு க்ளிக் மொத்த மொபைல் இன்டர்ஃபேஸையும் கறுப்பு அதிகம் இருக்கும் டார்க் தீமிற்குக் கொண்டுசெல்லும்.

OLED ஸ்கிரீன்களில் கறுப்பு பிக்ஸல்களை டிஸ்ப்ளே செய்ய, கூடுதல் ஒளி(backlight) தேவையில்லை என்பதால் இந்த தீம் வைப்பதன்மூலம் பேட்டரியை சேமிக்கும். பேட்டரி சேவர் ஆன் செய்தால் தானாக டார்க் தீமும் ஆன் ஆகிவிடும். பார்க்க, டார்க் மோடு பார்க்கவும் ஸ்டைலிஷாகவே இருக்கிறது. இது ஆண்ட்ராய்டு 10-ல் வந்திருக்கும் ஒரு முக்கிய அப்டேட் என சொல்லலாம்.

Dark Theme

 

 

ஸ்மார்ட் ரிப்ளை

ஜிமெயில் ஆப்பில் மட்டும் இருந்த இந்த வசதி இனி அனைத்து மெசேஜிங் ஆப்களுக்கும் கிடைக்கும். இந்த வசதி வரும் குறுஞ்செய்திகளை வாசித்து, அதற்குப் பொருத்தமான ரிப்ளை மற்றும் எமோஜிகளை நோட்டிஃபிகேஷன் பாரிலேயே பரிந்துரைக்கும்.

இத்துடன் வரும் மெசேஜ்களில் வெப் லிங்க், அட்ரஸ் போன்ற விஷயங்கள் இருந்தால், அதை ஓப்பன் செய்யும் ஆப்களையும் நோட்டிஃபிகேஷனிலேயே பரிந்துரைக்கும். இந்த வசதி பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நிச்சயம் சொல்லலாம்.

Smart Reply

 

ஜெஸ்சர் நேவிகேஷன்

வீடியோ மற்றும் கேமிங்கிற்காக டிஸ்ப்ளே முடிந்த அளவுக்கு பெரிதாக இருக்க வேண்டும் என இன்றைய வாடிக்கையாளர்கள்(மில்லெனியல்ஸ் என கூறலாம்!) எதிர்பார்க்கின்றனர்.

இதனால் ஒரு ஆப்பில் முன், பின் வருவதற்கு பட்டன் வைப்பதெல்லாம் இன்று மிகவும் ஓல்டு ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக ஒவ்வொரு ஸ்மார்ட்போன் நிறுவனமும் தங்கள் ஓ.எஸ்ஸில் விதவிதமான ஜேஸ்சர் வசதிகள் வைத்திருக்கின்றன. இதை ஒழுங்குபடுத்தும் நோக்கில் ஆண்ட்ராய்டே இன்பில்ட்டாக இந்த ஜேஸ்சர் நேவிகேஷன் வசதியை ஆண்ட்ராய்டு பை-யில் கொடுத்தது. ஆனால், அதில் முன், பின் செல்வது சிக்கலாகவே இருப்பதாகப் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இவற்றுக்கு காதுகொடுத்திருக்கும் ஆண்ட்ராய்டு வடிவமைப்புக் குழு, இம்முறை ஐபோன்களில் இருப்பதுபோன்ற ஜெஸ்சர் நேவிகேஷனுடன் களம் கண்டுள்ளது.

பீட்டா வெர்ஷன் தொடங்கி அதிகாரபூர்வ வெளியீடு வரை இதில்தான் சிறு சிறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு மெருகேற்றும் பணி நடந்துகொண்டே இருந்தது.

இறுதியாக, இப்போது இருக்கும் ஜெஸ்சர் நேவிகேஷன், எங்கள் பயன்பாட்டில் மிகவும் எளிதாகவும் எந்த ஒரு பிரச்னையுமின்றி இருப்பதாகவே தெரிகிறது. பின் செல்ல, வலது அல்லது இடது பக்கத்திலிருந்து ஸ்வைப் செய்ய வேண்டும். இது, சில நேரங்களில் குழப்பம் ஏற்படுத்தலாம் என்பதால், இதன் சென்சிடிவிட்டியை மாற்றிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.

Gesture Navigation

 

பிரைவசி கன்ட்ரோல்ஸ்

டெக் நிறுவனங்களுக்கு இப்போது இருக்கும் மிகப்பெரிய தலைவலி, பிரைவசி சர்ச்சைகள்தான்.

பயனாளர்களின் தகவல்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவில்லை என்று பல நிறுவனங்கள் பெரும் எதிர்ப்பை சந்தித்தன, சில நிறுவனங்கள் நீதிமன்றங்களும் ஏறி இறங்கியிருக்கின்றன. இதனால், இம்முறை ஆண்ட்ராய்டில் பிரைவசி பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறது கூகுள்.

ஆப்களுக்கு தரப்படும் அனுமதிகள் தொடங்கி, அனைத்து பிரைவசி தொடர்பான தகவல் மற்றும் வசதிகளும் இனி செட்டிங்ஸில் Privacy என்ற ஒரே பிரிவின்கீழ் இருக்கும். இதனால் பாமர மக்களுக்கும் பிரைவசி சார்ந்த விஷயங்களை கட்டுக்குள் வைத்துக்கொள்வது எளிதான விஷயமாக இருக்கும்.

Privacy Controls

 

லொக்கேஷன் செட்டிங்ஸ்

லொக்கேஷன் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதுதான் பிரைவசி பிரச்னைகளில் தலையாய பிரச்னையாக இருக்கிறது. இதற்கும் ஆண்ட்ராய்டு 10-ல் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

செட்டிங்ஸில் location எனத் தனிப் பிரிவு தற்போது கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆப்களுக்கு லொக்கேஷன் டேட்டா கொடுப்பதில் இனி கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க முடியும். அதாவது, இனி மூன்று வகைகளில் ஆப்களுக்கு உங்களால் லொக்கேஷன் டேட்டாவை கொடுக்க முடியும்.

  1. "Allow all the time" என்று கொடுத்துவிட்டால், உங்களது லொக்கேஷன் தகவலை எப்போது வேண்டுமானாலும் குறிப்பிட்ட அந்த ஆப்பால் பெற்றுக்கொள்ளமுடியும்.
  2. "Allow only while using the app" என்று கொடுத்துவிட்டால், அந்த ஆப்பை பயன்படுத்தும்போது மட்டுமே உங்களது லொக்கேஷன் தகவலைப் பெறமுடியும்.
  3. "Deny" என்று கொடுத்துவிட்டால், லொக்கேஷன் தகவலைப் பெறவே முடியாது.

 

மேலும், லொக்கேஷன் ஹிஸ்டரி போன்றவற்றை எளிதாக செட்டிங்ஸில் இருக்கும் இந்தப் பிரிவிற்குச் சென்று பார்க்கவும் நீக்கவும் முடியும்.

Location Settings

Link to comment
Share on other sites

 

ஃபோகஸ் மோடு

தற்போது பிரைவசிக்கு அடுத்தபடியாக டெக் நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்தும் ஏரியா, 'டிஜிட்டல் வெல்பீயிங்'.

ஆரோக்கியமான முறையில் மொபைல் பயன்படுத்த உதவும் இது சார்ந்த வசதிகளின் சின்னச் சின்ன மேம்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. புதிதாக ஃபோகஸ் மோடு என்ற வசதியும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

ஒன்ப்ளஸில் வரும் ஜென் மோடு வசதியைப் போல இருக்கும் இந்த வசதியைக்கொண்டு கவனம் சிதறவைக்கும் ஆப்களைக் கட்டுப்படுத்த முடியும்.

ஒரு முக்கிய விஷயத்தில் கவனம் செலுத்தவேண்டியதிருக்கும்போதுதான் நம் கவனத்தை சிதறடிக்கும் நோட்டிஃபிகேஷன்கள் ஏதேனும் வரும். இல்லை, நாமே சோஷியல் மீடியா பக்கம் சென்று நேரத்தை வீணடிப்போம். இப்படி நடக்காமல் இருக்க உதவுகிறது இந்த வசதி. இதில் குறிப்பிட்ட ஆப்களை தேர்வு செய்துகொண்டால் அவற்றிலிருந்து நோட்டிஃபிகேஷன்கள் வராது, அவற்றை ஓப்பன் செய்யவும் இயலாது. மீறி செய்யவேண்டுமென்றால், எச்சரிக்கைச் செய்தி உங்களுக்கு காட்டப்படுகிறது. டிஜிட்டல் வெல்பீயிங் பீட்டா டெஸ்டராக இருப்பதால், இதை எங்களால் சோதித்துப்பார்க்க முடிந்தது. விரைவில் ஆண்ட்ராய்டு 10 பயன்பாட்டாளர்கள் அனைவருக்கும் இந்த வசதி வந்துசேரும்.

Focus Mode

 

லைவ் கேப்ஷன்

வீடியோ, ஆடியோ என மொபைலில் ப்ளே ஆகும் அனைத்திற்கும் ஒரே க்ளிக்கில் சப்டைட்டில் கொண்டுவரும் வசதி இது.

இணைய சேவை இல்லாமலேயே இது ஆண்ட்ராய்டு 10-ல் வேலை செய்யுமாம். இதனால் முக்கிய நேரங்களில் ஆடியோ இல்லாமல் வீடியோக்கள் பார்ப்பது, கேட்கும் திறனில் சவால்கள் இருப்பவர்களும் சோஷியல் மீடியா தொடங்கி அனைத்து வீடியோக்களையும் எளிதாக பார்க்க முடிவது என இதில் பலன்கள் ஏராளம். இப்போதைய அப்டேட்டில் இல்லையென்றாலும் அடுத்த அப்டேட்டில் இந்த வசதி ஆண்ட்ராய்டு 10-க்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோக, மொபைல் பயன்படுத்தும் குழந்தைகளைப் பெற்றோர்கள் எளிதாகக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் Parental கன்ட்ரோல்ஸ் வசதி, அப்டேட்டான கூகுள் லென்ஸ் போன்ற மற்ற வசதிகளும் ஆண்ட்ராய்டு-10-ல் இருக்கிறது.

Innovation, Privacy, Digital Wellbeing என மூன்றையும் முதன்மையாகக்கொண்டு இம்முறை களமிறங்கியிருக்கிறது, கூகுள்.ஆண்ட்ராய்டு 10, மக்களிடம் டெனுக்கு டென் வாங்குமா என்பதை விரைவில் பார்த்துவிடலாம்.

https://www.vikatan.com/technology/gadgets/whats-special-about-android-10-handson

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.