Jump to content

மாற்றமடையும் பாதுகாப்பு உறவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றமடையும் பாதுகாப்பு உறவுகள்

by in கட்டுரைகள்

US_LANKA-MARRINES-10-300x200.jpg

இலங்கையுடன் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில், கடந்த நான்கரை ஆண்டுகளாக, தீவிரமான முனைப்புக் காட்டி வந்த அமெரிக்கா, வரும் நாட்களில் அவ்வாறான தீவிர முனைப்பைக் காட்டுமா என்ற சந்தேகம் தோன்றியிருக்கிறது.

இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயந்த கொலம்பகே, அண்மையில் ஒரு செவ்வியில், பாதுகாப்பு உறவுகள் ரீதியாக அமெரிக்காவுக்குத் தான் இலங்கை முக்கியமே தவிர, இலங்கைக்கு அமெரிக்கா முக்கியம் அல்ல என்ற தொனியில் கருத்து வெளியிட்டிருந்தார். ஒரு வகையில் இது முற்றிலும் உண்மையான கருத்து தான்.

இப்போது இந்தோ- பசுபிக் பாதுகாப்புக் கொள்கையும், அதற்கான மூலோபாயமும் தான், அமெரிக்காவின் முதன்மையான பாதுகாப்பு வியூகமாக இருக்கிறது. அமெரிக்காவின் பெரும்பகுதி படைகளும், தளங்களும், போர்க்கலங்களும் இங்கேயே தரித்து நிற்கின்றன.

அவ்வாறானதொரு பிராந்தியத்தின் – கேந்திர முனையில் அமைந்திருக்கின்ற இலங்கைத்தீவு அமெரிக்காவுக்கு மிகமிக முக்கியமானது. அதனை உணர்ந்தே 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையுடனான உறவுகளை அமெரிக்கா வலுப்படுத்தி வந்தது.

ஆனால், இப்போது அந்த உறவுகளில் ‘விக்கல்’ நிலை வந்திருக்கிறது.

இலங்கையுடன் அமெரிக்கா கைச்சாத்திட விரும்பிய ‘சோபா’(SOFA) அல்லது ‘விஎவ்ஏ’ (VFA) உடன்பாடு விடயத்தில் இலங்கை அரசாங்கம்- குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன- எடுத்துள்ள முடிவு, அமெரிக்காவுக்கு திருப்தியளிக்கவில்லை. இது முதலாவது விடயம்.

நம்பகமான போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதையும் அமெரிக்காவினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது இரண்டாவது விடயம்.

இந்த இரண்டு விடயங்களும், இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அண்மைக் காலங்களில் நீடித்து வந்த நெருங்கிய இராணுவ உறவுகளுக்கு சவாலாக மாறியிருக்கின்றன.

முதலாவது விடயமான ‘சோபா’ அல்லது ‘விஎவ்ஏ’ உடன்பாடு விடயத்தில் அமெரிக்கா தனது எதிர்ப்பை பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை. ‘விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்பது போலவே கருத்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.

ஏனென்றால், இலங்கையுடன் ஒரு உடன்பாட்டுக்கு அமெரிக்காவினால் ஓரளவுக்கு மேல் அழுத்தம் கொடுக்க முடியாது. அவ்வாறு செய்தால் அது ஒரு நாட்டின் இறைமையை – சுதந்திரத்தை மீறுகின்ற செயல் என்று பார்க்கப்படும்.

அவ்வாறான நிலை ஏற்படுவதை தவிர்க்கவே, “இதுகுறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம், எப்போது என்றில்லை. உடன்பாடு ஏற்படும் போது, இன்றோ நாளையோ, அடுத்த ஆண்டோ கையெழுத்திடுவோம்” என்ற தொனியில் அமெரிக்க அதிகாரிகள் கருத்து வெளியிடுகிறார்கள்.

ஆனால், இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்ட விவகாரத்தில், அமெரிக்காவின் நிலைப்பாடு அவ்வாறானதான இருக்கவில்லை.

இலங்கை அரசாங்கத்தின்- குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அந்த முடிவை அமெரிக்கா ஏற்கவில்லை. அதற்கு கவலையை எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறது.

இராணுவத் தளபதி நியமன விடயத்தில் தலையிடவில்லை என்று அமெரிக்கா கூறுகின்ற அதேவேளை, குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய ஒருவர் உயர் பதவிக்கு நியமிக்கப்படுவதால், இலங்கையுடனான அமெரிக்காவின் பாதுகாப்பு உறவுகள் பாதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்திருக்கிறது.

வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஒருவர் வெளியிட்டிருந்த இந்த எச்சரிக்கையை இலங்கை அரச தரப்பு அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை.

அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் தான், அட்மிரல் கொலம்பகேயிடம் இருந்து, இலங்கைக்கு அமெரிக்கா முக்கியம் இல்லை, அமெரிக்காவுக்கே இலங்கை முக்கியம் என்ற தொனியிலான கருத்து வெளிவந்திருந்தது.

அமெரிக்காவுக்கு பாதுகாப்பு ரீதியாக – பூகோள அரசியல் ரீதியாக, இலங்கை முக்கியமானதாக இருந்தாலும், இலங்கையின் இப்போதைய அணுகுமுறைக்கேற்ப அமெரிக்கா வளைந்து நெகிழ்ந்து கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு தவறான ஒன்றாகவே தெரிகிறது.

இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில், கடந்த மாத இறுதியில் நடத்தப்பட்ட கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கில், அதற்கான அறிகுறிகள் வெளிப்பட்டிருந்தன.

அந்தக் கருத்தரங்கில், அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள், இராஜதந்திரிகள், பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்கவில்லை.

கடந்த ஆண்டு 87 நாடுகள் பங்கேற்ற கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கில், இந்த ஆண்டு 42 நாடுகளே பங்கேற்றன.

2011ஆம் ஆண்டில் இந்தப் பாதுகாப்புக் கருத்தரங்கை இலங்கை இராணுவம் நடத்த ஆரம்பித்தபோது, அதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. குறைந்தளவு நாடுகளே அதில் பங்கேற்றன.

ஆனாலும், அமெரிக்கா 2011ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் பிரதிநிதிகளை அனுப்பியது. அமெரிக்க தூதுவர், பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் பங்கேற்று வந்துள்ளனர்.

இந்த ஆண்டும் அமெரிக்க தூதரகத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் யாரும் பங்கேற்கவில்லை.

“எமக்கு அழைப்பு வந்தது, ஆனால் வேறு கடமைகள் இருந்தன” என்று அமெரிக்க தூதரகப் பேச்சாளர் ஒருவர் மிக அலட்சியமாக கூறியிருக்கிறார்.

கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கை விட, வேறு முக்கியமான பணிகள் இருந்தன- அதனைக் கவனித்தோம் என்று கொழும்பு தூதரக அதிகாரிகள் கூறியது, எதனைக் காட்டுகிறது?

அமெரிக்காவுக்குத் தான் இலங்கை முக்கியம், அதனால் பாதுகாப்பு உறவுகள் பாதிக்கப்படாது என்ற நம்பிக்கைக்கு விழுந்த முதல் அடி இது.

இலங்கையுடன் பாதுகாப்பு உறவுகள் தான் முக்கியமானது, முதன்மையானது என்றால், இந்தக் கருத்தரங்கில் அமெரிக்கா விழுந்தடித்துக் கொண்டு பங்கேற்றிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை.

அதுபோலவே, புதிதாக நியமிக்கப்பட்ட இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை பல்வேறு நாடுகளின் தூதுவர்கள், பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்தித்து வாழ்த்துக் கூறியுள்ள போதும், இதுவரை அமெரிக்க தூதுவரோ பாதுகாப்பு ஆலோசகரோ, அவரைச் சந்திக்கவில்லை.

இந்த இரண்டு விடயங்களில் இருந்தும் ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகள் விடயத்தில், முன்னரைப் போன்ற நெகிழ்வுத்தன்மையை அமெரிக்கா கடைப்பிடிக்காது என்பதே அது.

“இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகள்  முக்கியமானது. அதனை மேலும் வலுப்படுத்துவோம்” என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரிகள் அனைவரும் பகிரங்கமாகவே கூறி வந்திருக்கிறார்கள்.

ஆனாலும், அவ்வாறான ஒரு உறவு தேவையானதாக இருந்தபோதும், தனக்கு உடன்பாடாக இல்லாத விடயத்தில் விட்டுக்கொடுக்க அமெரிக்கா தயாரில்லை என்பதை வெளிப்படுத்தி வருகிறது.

அதற்காக, ஒட்டுமொத்தமாக இலங்கையுடன் பாதுகாப்பு உறவுகளைத் துண்டித்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது. அது நடக்கப் போவதும் இல்லை.

ஆனால், இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகள் விடயத்தில் அமெரிக்கா சில வடிகட்டல்களை மேற்கொள்ளக் கூடும்.

இலங்கை இராணுவத்துடனான உறவுகள் தொடர்புகளை குறிப்பிட்ட காலத்துக்கு இடைநிறுத்தி வைக்கும், அல்லது மட்டுப்படுத்தி வைக்கும் முடிவை அமெரிக்கா எடுக்கலாம்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், நாடுகளின் மனித உரிமைகள் நிலை தொடர்பான ஆண்டு அறிக்கையை வெளியிடுவது வழக்கம். , சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை, அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில், , ‘மனித உரிமை கரிசனைகளால், இலங்கையுடனான இராணுவ உறவுகள் மட்டுப்படுத்தப்பட்டளவில் பேணப்படுகின்றன” என்றொரு வாக்கியம்  இடம்பெற்று வந்தது.

கடந்த ஓரிரு ஆண்டுகளாகத் தான் இந்த வாக்கியம், அந்த அறிக்கையில் இடம்பெறுவதில்லை.

இலங்கையுடனான இராணுவ உறவுகளை அமெரிக்கா மட்டுப்படுத்தியிருந்த போது, பெரும்பாலும் இராணுவத்தினருக்குத் தான், பாதிப்பு ஏற்பட்டது. ஏனென்றால் இராணுவம் மீதே மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் அதிகளவில் இருந்தன.

அதனால் இராணுவத்தை தவிர்த்து, கடற்படைக்கான மனிதாபிமான உதவிகளையும், கண்ணிவெடி அகற்றுவதற்கான உதவிகள் பயிற்சிகளையுமே அப்போது அமெரிக்கா வழங்கி வந்தது.

2015ஆம் ஆண்டுக்குப் பின்னரும் கூட, அமெரிக்கா இலங்கை கடற்படைக்கான உதவிகள், பயிற்சிகளையே அதிகளவில் வழங்கி வந்தது. ஒரு கட்டத்தில் இராணுவத்துக்கும் உதவிகள் பயிற்சி வசதிகளை வழங்கத் தொடங்கியது.

இப்போதைய நிலையில், மீண்டும், இராணுவத்துடனான தொடர்புகள், உறவுகளை மட்டுப்படுத்திக் கொள்ள அமெரிக்கா முடிவு செய்தாலும், கடற்படையுடனான உறவுகள், உதவிகளை அமெரிக்கா நிறுத்திக் கொள்ளுமா என்பது சந்தேகம் தான்.

ஏனென்றால், இலங்கைக் கடற்படையை பலப்படுத்துவதில் அமெரிக்கா மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியிருக்கிறது.

போர்க்கப்பல்களைக் கொடுத்தும், கடற்படையின் மரைன் கொமாண்டோ படைப்பிரிவை உருவாக்குவதற்றகான உதவிகள், பயிற்சிகளை அளித்தும், அமெரிக்கா பெரும் பங்களிப்பை செய்திருந்தது,

அதற்குக் காரணம், இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்புக்கான ஒரு பங்காளியாக இலங்கை கடற்படையை வைத்திருப்பதேயாகும்.

அவ்வாறான நிலையில், இந்தளவுக்கு கட்டியெழுப்பப்பட்ட இலங்கை கடற்படையுடன் உறவுகளை திடீரென முறித்துக் கொள்ள அமெரிக்கா விரும்பாது,

ஆனால் இலங்கை இராணுவத்துடன் அவ்வாறான உறவுகளை முறிப்பது அமெரிக்காவுக்கு பெரிய விடயமாக இருக்காது.

ஏனென்றால், இலங்கை இராணுவத்துக்குத் தான், அமெரிக்காவின் தயவு தேவையே தவிர, அமெரிக்காவுக்கு அல்ல.

-சுபத்ரா
வழிமூலம்- வீரகேசரி வாரவெளியீடு

 

http://www.puthinappalakai.net/2019/09/15/news/40018

 

Link to comment
Share on other sites

3 hours ago, கிருபன் said:

இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயந்த கொலம்பகே, அண்மையில் ஒரு செவ்வியில், பாதுகாப்பு உறவுகள் ரீதியாக அமெரிக்காவுக்குத் தான் இலங்கை முக்கியமே தவிர, இலங்கைக்கு அமெரிக்கா முக்கியம் அல்ல என்ற தொனியில் கருத்து வெளியிட்டிருந்தார். ஒரு வகையில் இது முற்றிலும் உண்மையான கருத்து தான்.

ஆனாலும் தமது பிள்ளைகளை குடும்பத்தை அங்கு அனுப்பி விடுவதால் அமெரிக்க ஒரு முக்கியா நாடு தான் 🙂 

 

இலங்கைக்கு சீனவா இல்லை இந்தியாவா (அமெரிக்க ஆதரவு) முக்கிய நாடு ? இதை வைத்தே இந்த நாட்டின் வெளிவிவகார மற்றும் இராணுவ பொருளாதார நலன்கள் முன்னெடுக்கப்படும். 

இன்றுவரை, இந்த இரண்டிற்கும் சாதகமாக சிங்களம் வெற்றிகரமாக தன்னை முன்னே நகர்த்தி செல்கின்றது. ஆனாலும், சில பிரிவுகளை காண முடிகின்றது : வடக்கு- கிழக்கில் கூடுதலாக இந்தியா சார்ந்த முதலீடுகள்/அபிவிருத்திகள் ஆனால், மேற்கில் மற்றும் தெற்கில் சீன நாடு முதலீடுகள். 

இந்த கொள்கை ஒரு காலத்தின் பின்னர் ஒரு ' கிளை மாக்ஸை ' (tipping point) அடைந்தே தீரும்.   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.