Jump to content

தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரம் கொழும்பில் திறப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

lotus-tower-720x450.jpg

தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரம் கொழும்பில் திறப்பு!

கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரமாகக் கூறப்படும்  தாமரைக் கோபுரம் திறந்துவைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (திங்கட்கிழமை) மாலை இந்த கோபுரத்தை திறந்து வைக்கவுள்ளார்.

356 மீற்றர் உயரமான இந்த கோபுரம் 12 பில்லியன் ரூபாய் முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதில் 80 வீதமான நிதி சீன அரசாங்கத்தின் நன்கொடையாகும்.

இந்த கோபுரத்தின் நிர்மாணப்பணிக்கான அனைத்து ஆலோசனை சேவைகளையும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் வழங்கி இருந்தனர்.

நட்சத்திர விடுதி, ஹோட்டல்கள், கேட்போர் கூடம், மாநாட்டு மண்டபம் உள்ளிட்ட பல வசதிகள் இந்தத் தாமரைக் கோபுரத்தில் காணப்படுகின்றன.

அதேநேரம், இந்த கோபுரத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் மாடிகள், வானொலி மற்றும் தொலைக்காட்சி அலைவரி ஒலிபரப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

அத்தோடு 3ஆம் மற்றும் 4ஆம் மாடிகள் நிகழ்வுகள் மற்றும் விழா மண்டபங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, தாமரைக் கோபுரத்தின் திறப்பு விழாவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரையை வௌியிட இலங்கை தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

45 ரூபாய் பெறுமதியான முத்திரை, நினைவுப் பத்திரம் மற்றும் கடித உறை ஆகியன இன்றைய தினம் வௌியிடப்படவுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/தெற்காசியாவின்-மிக-உயர்ந/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

அதேநேரம், இந்த கோபுரத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் மாடிகள், வானொலி மற்றும் தொலைக்காட்சி அலைவரி ஒலிபரப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

அத்தோடு 3ஆம் மற்றும் 4ஆம் மாடிகள் நிகழ்வுகள் மற்றும் விழா மண்டபங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.

எந்த மாடியில் இந்தியாவுக்கு எதிராக உளவு பார்க்கிற வேலை செய்யப்போயினம் என்று சொல்லவேயில்லை

Link to comment
Share on other sites

23 hours ago, putthan said:

எந்த மாடியில் இந்தியாவுக்கு எதிராக உளவு பார்க்கிற வேலை செய்யப்போயினம் என்று சொல்லவேயில்லை

அதுக்கென்டு குறிப்பிட்ட இடம் இல்லை. மொத்தமாவே அதுக்கு தான்!
சிங்களவனிடை காசை வாங்கி சேவகம் செய்ற இந்தியன்பாடு கஷ்டம் தான்.

Link to comment
Share on other sites

 

தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகத்தை எரித்ததும் இந்த சாதனையில் அடங்கும் !

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: வானமà¯, வà¯à®à¯ மறà¯à®±à¯à®®à¯ வà¯à®³à®¿à®ªà¯à®ªà¯à®±à®®à¯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: sky and outdoor

Link to comment
Share on other sites

உந்த உயர்ந்த கோபுரம் கட்டுறதிலையும் மகிந்த இரண்டு பில்லியன் ரூபாவை சுட்டுட்டார் எண்டு பரவலாக் கதை.  சிங்கன் ஆட்சியில இருக்கிறபொழுது தொடங்கப்பட்ட இந்த கோபுரம் அமைக்கும் பணியில், சீனாவின் பெயர் முகவை இல்லாத ஒரு தனியார் நிறுவனத்திற்கு 2 பில்லியன் ரூபாவை கோபுரத்தைக் கட்டுவித்த நிறுவனம் கொடுத்ததாம். மகிந்தவின் ஆசீருடன் நடைபெற்ற இந்த பணக் கைமாற்றில் , பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு சீனர் தலைமறைவாகிவிட்டார் என்று மகிந்த கைய்யை விரித்துவிட்டார் போலக் கிடக்கு.

Link to comment
Share on other sites

பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் ஊழல் என்ற பெருச்சாளி மக்களின் வாழ்வாதார வளர்ச்சிற்கு தடையாக உள்ளது.

இன்றைய தொழில்நுட்பம் வளர்ந்த காலத்தில் இவ்வாறான ஊழல்களை குறைக்கும் வழிகள் உள்ளன. உதாரணத்திற்கு, இவ்வாறான வரவு செலவுகளை, எல்லாவற்றையும் அல்ல பெரிய செலவுகளை,  பகிரங்கமாக இணைய தளங்களில் அறிவிக்கலாம்.

மற்றும், மின்வலை பண பரிவர்த்தனைகளை செய்து அதன் மூலம் யாருக்கு யாரால் எப்பொழுது பணம் செலுத்தப்பட்டது என அறியத்தரலாம்.

ஆனால், இவர்கள் செய்வதெல்லாம் சட்ட விரோத செயல்பாட்டார்கள் செய்வது போன்று உள்ளது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் ஊழல் என்ற பெருச்சாளி மக்களின் வாழ்வாதார வளர்ச்சிற்கு தடையாக உள்ளது.

இன்றைய தொழில்நுட்பம் வளர்ந்த காலத்தில் இவ்வாறான ஊழல்களை குறைக்கும் வழிகள் உள்ளன. உதாரணத்திற்கு, இவ்வாறான வரவு செலவுகளை, எல்லாவற்றையும் அல்ல பெரிய செலவுகளை,  பகிரங்கமாக இணைய தளங்களில் அறிவிக்கலாம்.

மற்றும், மின்வலை பண பரிவர்த்தனைகளை செய்து அதன் மூலம் யாருக்கு யாரால் எப்பொழுது பணம் செலுத்தப்பட்டது என அறியத்தரலாம்.

ஆனால், இவர்கள் செய்வதெல்லாம் சட்ட விரோத செயல்பாட்டார்கள் செய்வது போன்று உள்ளது. 

அரசியல்வாதிகள்... வெளிப்படையாக இருப்பார்கள் என்று.. நாம், எதிர்பார்க்கவே... கூடாது.
அவர்களை... மீண்டும் தெரிந்து எடுக்கும், நாங்கள் தான்... குற்றவாளிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

அரசியல்வாதிகள்... வெளிப்படையாக இருப்பார்கள் என்று.. நாம், எதிர்பார்க்கவே... கூடாது.
அவர்களை... மீண்டும் தெரிந்து எடுக்கும், நாங்கள் தான்... குற்றவாளிகள்.

ஏன் எங்க‌ட‌ த‌மிழ் நாட்டில் ம‌ட்டும் பெரியா யோக்கிய‌ர்க‌ள் தானே , எல்லாம் ப‌க்கா பிராடுக‌ள் த‌மிழ்சிறி அண்ணா , ஊழ‌ல் செய்து சிறைக்கு சென்று பிற‌க்கு வெளியில் வ‌ந்து , இந்த‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் தூத்துக் குடியில்  க‌னிமொழி போட்டியிட்டு வெல்ல‌ வில்லையா / 

இந்தியா சிறில‌ங்கா அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌லுக்கு பெய‌ர் போன‌வை , 

த‌மிழீழ‌ம் எங்க‌ளுக்கு கிடைச்சு இருக்க‌னும் டென்மார்க்கு அடுத்த‌ இட‌த்தில்  இருந்து இருக்கும் ஊழ‌ல் இல்லா நாட்டு ப‌ட்டிய‌லில் 👏🤞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

ஏன் எங்க‌ட‌ த‌மிழ் நாட்டில் ம‌ட்டும் பெரியா யோக்கிய‌ர்க‌ள் தானே , எல்லாம் ப‌க்கா பிராடுக‌ள் த‌மிழ்சிறி அண்ணா , ஊழ‌ல் செய்து சிறைக்கு சென்று பிற‌க்கு வெளியில் வ‌ந்து , இந்த‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் தூத்துக் குடியில்  க‌னிமொழி போட்டியிட்டு வெல்ல‌ வில்லையா / 

இந்தியா சிறில‌ங்கா அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌லுக்கு பெய‌ர் போன‌வை , 

த‌மிழீழ‌ம் எங்க‌ளுக்கு கிடைச்சு இருக்க‌னும் டென்மார்க்கு அடுத்த‌ இட‌த்தில்  இருந்து இருக்கும் ஊழ‌ல் இல்லா நாட்டு ப‌ட்டிய‌லில் 👏🤞

பையன்... தமிழக  தேர்தல்களில்... வெல்வது யார்? என்று முடிவு எடுப்பது...
பல கோடிக் கணக்கான பணமும்,  மூக்குத்திகளும்,  சாராயமும்... போன்றவை தான்..
வெற்றி பெறுபவரை,  தீர்மானிக்கின்றன.

அப்படி, எக்கச் சக்கமான... பணம் போட்டு, தெரிவு செய்யப் பட்ட  அரசியல்வாதி,
தான்...  செலவழித்த பணத்தைப் போல், பல மடங்கு... திரும்ப பெற மட்டுமே... யோசிப்பார்.

இப்போ... பதவியில், இருக்கும்  ஒரு, அரசியல்வாதியை ஆவது, 
மக்கள் சேவைக்கு.. வந்து, அதனை  செய்து காட்டியவர்கள், இல்லை என்றே... சொல்லலாம்.

இந்தக்  "கிலிசு"  கேட்டுக்குள்ளை....  மாவையின் மகனும், அரசியலில் குதித்து,
மக்களுக்கு... சேவை செய்ய, ஆசைப் படுகின்றாராம். 🤣

ஹம்ம்ம்... எல்லாரும், குடும்பமாக... எங்களுக்கு அரசியல் சேவை செய்ய வந்தால், 
நாங்கள்... திக்கு, முக்காடி... திணறிப் போவோம்...  பையா....... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, தமிழ் சிறி said:

பையன்... தமிழக  தேர்தல்களில்... வெல்வது யார்? என்று முடிவு எடுப்பது...
பல கோடிக் கணக்கான பணமும்,  மூக்குத்திகளும்,  சாராயமும்... போன்றவை தான்..
வெற்றி பெறுபவரை,  தீர்மானிக்கின்றன.

அப்படி, எக்கச் சக்கமான... பணம் போட்டு, தெரிவு செய்யப் பட்ட  அரசியல்வாதி,
தான்...  செலவழித்த பணத்தைப் போல், பல மடங்கு... திரும்ப பெற மட்டுமே... யோசிப்பார்.

இப்போ... பதவியில், இருக்கும்  ஒரு, அரசியல்வாதியை ஆவது, 
மக்கள் சேவைக்கு.. வந்து, அதனை  செய்து காட்டியவர்கள், இல்லை என்றே... சொல்லலாம்.

இந்தக்  "கிலிசு"  கேட்டுக்குள்ளை....  மாவையின் மகனும், அரசியலில் குதித்து,
மக்களுக்கு... சேவை செய்ய, ஆசைப் படுகின்றாராம். 🤣

ஹம்ம்ம்... எல்லாரும், குடும்பமாக... எங்களுக்கு அரசியல் சேவை செய்ய வந்தால், 
நாங்கள்... திக்கு, முக்காடி... திணறிப் போவோம்...  பையா....... :grin:

உண்மை தான் , மக்க‌ளை அந்த‌ நிலைக்கு திராவிட‌ம் வைச்சு இருந்த‌து , 
இப்ப‌ இருக்குர‌ இளைய‌த‌ல‌ முறை பிள்ளைக‌ளை காசு குடுத்து ஏமாத்தி திராவிட‌த்தால் ஓட்டு வாங்க‌ முடியாது , 
பெரியார் ம‌ற்றும் அறிய‌ர் அண்ணாவை தங்க‌ளின் சுய‌ அர‌சிய‌லுக்காக‌ அவ‌ர்க‌ளின் பெய‌ரை ப‌ய‌ன் ப‌டுத்தின‌ம் /

இந்தியா ம‌ற்றும் சொறில‌ங்கா இந்த‌ இர‌ண்டு நாடும் ஒரு போதும் சிறு முன்னோற்ற‌ம் கூட‌ அடைய‌ மாட்டின‌ம் , 

ஜ‌ரோப்பா நாடுக‌ளில் அர‌சிய‌ல் வாதிகள் ஊழ‌ல் செய்தா சிறைக்குள் பிடிச்சு போட்டுட்டு அவ‌ர்க‌ளின் சொத்தை எல்லாம் அர‌சாங்க‌ உட‌மை ஆக்கி விட்டு அவ‌ர்க‌ள் வாழ் நாளில் மீண்டும்  அர‌சிய‌லில் ஈடுப‌ட‌ முடியாத‌ மாதிரி செய்து போடுவின‌ம் , 

இந்தியாவில் எல்லாம் த‌ல‌ கீழா , 
இந்திய‌னாய் வாழுவ‌தில் பெருமை என்று சொல்லும் முட்டாள்க‌ள் இந்தியாவில் இருக்கும் வ‌ர‌ , இந்திய‌ அர‌சிய‌ல் வாதிக‌ளின் ஆத்தில் அடை ம‌ழை தான் 😉😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

பையன்... தமிழக  தேர்தல்களில்... வெல்வது யார்? என்று முடிவு எடுப்பது...
பல கோடிக் கணக்கான பணமும்,  மூக்குத்திகளும்,  சாராயமும்... போன்றவை தான்..
வெற்றி பெறுபவரை,  தீர்மானிக்கின்றன.

அப்படி, எக்கச் சக்கமான... பணம் போட்டு, தெரிவு செய்யப் பட்ட  அரசியல்வாதி,
தான்...  செலவழித்த பணத்தைப் போல், பல மடங்கு... திரும்ப பெற மட்டுமே... யோசிப்பார்.

இப்போ... பதவியில், இருக்கும்  ஒரு, அரசியல்வாதியை ஆவது, 
மக்கள் சேவைக்கு.. வந்து, அதனை  செய்து காட்டியவர்கள், இல்லை என்றே... சொல்லலாம்.

இந்தக்  "கிலிசு"  கேட்டுக்குள்ளை....  மாவையின் மகனும், அரசியலில் குதித்து,
மக்களுக்கு... சேவை செய்ய, ஆசைப் படுகின்றாராம். 🤣

ஹம்ம்ம்... எல்லாரும், குடும்பமாக... எங்களுக்கு அரசியல் சேவை செய்ய வந்தால், 
நாங்கள்... திக்கு, முக்காடி... திணறிப் போவோம்...  பையா....... :grin:

த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ப‌ணி மிக‌வும் க‌ஸ்ர‌ம் த‌மிழ் சிறி அண்ணா , கூலிக்கு திராவிட‌ கொடியை பிடிக்கும் முட்டாள்க‌ள் , 
ஜாதி வெறிய‌ர்க‌ள் , இவ‌ர்க‌ளை எல்லாம் தாண்டி தேர்த‌ல் ப‌ணி செய்ய‌னும் என்றால் துனிவு இருக்க‌னும் , தேர்த‌ல் நேர‌ம் குடி போதையில் தேவை இல்லாம‌ ச‌ண்டைக்கு வ‌ருவாங்க‌ள் , 

அண்ண‌ன் சீமானின் துனிவை பார்த்து அவ‌ரின் த‌ம்பிக‌ள் அதே துனிவோடு ஒவ்வொரு தொகுதியிலும் த‌ங்க‌ளின் ப‌ணியை ச‌ரியாய் செய்வார்க‌ள் , 
போன‌ தேர்த‌லில் திருட்டு திராவிட‌ கும்ம‌ல‌ சேர்ந்த‌ ஒருத‌ருக்கு போட்டு கும்பி இருப்போம் , பின் விலைவுக‌ளை நினைத்து அந்த‌ இட‌த்தில் பொறுமையை க‌டை பிடித்தோம் , அவ‌ள‌வ‌த்துக்கு அந்த‌ கிழ‌டு எங்க‌ளை குடி போதையில் நின்ற‌ ப‌டியே க‌டுப்பு ஏத்தின‌வ‌ன் கெட்ட‌ வார்த்தைக‌ளால் 😉😁 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, பையன்26 said:

உண்மை தான் , மக்க‌ளை அந்த‌ நிலைக்கு திராவிட‌ம் வைச்சு இருந்த‌து , 
இப்ப‌ இருக்குர‌ இளைய‌த‌ல‌ முறை பிள்ளைக‌ளை காசு குடுத்து ஏமாத்தி திராவிட‌த்தால் ஓட்டு வாங்க‌ முடியாது , 
பெரியார் ம‌ற்றும் அறிய‌ர் அண்ணாவை தங்க‌ளின் சுய‌ அர‌சிய‌லுக்காக‌ அவ‌ர்க‌ளின் பெய‌ரை ப‌ய‌ன் ப‌டுத்தின‌ம் /

இந்தியா ம‌ற்றும் சொறில‌ங்கா இந்த‌ இர‌ண்டு நாடும் ஒரு போதும் சிறு முன்னோற்ற‌ம் கூட‌ அடைய‌ மாட்டின‌ம் , 

ஜ‌ரோப்பா நாடுக‌ளில் அர‌சிய‌ல் வாதிகள் ஊழ‌ல் செய்தா சிறைக்குள் பிடிச்சு போட்டுட்டு அவ‌ர்க‌ளின் சொத்தை எல்லாம் அர‌சாங்க‌ உட‌மை ஆக்கி விட்டு அவ‌ர்க‌ள் வாழ் நாளில் மீண்டும்  அர‌சிய‌லில் ஈடுப‌ட‌ முடியாத‌ மாதிரி செய்து போடுவின‌ம் , 

இந்தியாவில் எல்லாம் த‌ல‌ கீழா , 
இந்திய‌னாய் வாழுவ‌தில் பெருமை என்று சொல்லும் முட்டாள்க‌ள் இந்தியாவில் இருக்கும் வ‌ர‌ , இந்திய‌ அர‌சிய‌ல் வாதிக‌ளின் ஆத்தில் அடை ம‌ழை தான் 😉😁

பையன்.....  ப. சிதம்பரம்  திகார் ஜெயிலில் இருக்கிறார்.
அவர், இந்தியாவின், காங்கிரஸ் கட்சியின்  முன்னாள் நிதி அமைச்சர்.
அவருக்கு... இலங்கைத் தமிழரை மட்டுமல்ல, தமிழகத்து தமிழரையும் பிடிக்காது.
பயணம்  போகும் போது, காரின்.. பூட்டிய   கறுப்புக் கண்ணாடிக்குள் இருந்து கொண்டு,
மக்களை பார்த்து, ரசித்த ஆளாம்.

இவர், முதல் நாள் திகார் ஜெயிலுக்கு போன போது...
இவருக்கு, ஒதுக்கப் பட்ட,    மறியலில்...    படுக்க தலையணையும், 
வெளியில் வந்து இருக்கும் விறாந்தையில்.... கதிரையும் இருந்ததாம்.

இரண்டு மூன்று நாளில்.... அந்தக்  கதிரையையும்,  தலையணையையும்  அகற்றி விட்டதால்,தனக்கு... இடுப்பு வலி வந்திருக்கு என்று,  கண் கலங்கியும்,  கலங்காமலும், சொல்கிறாராம்.

இவர்,  இன்னும் தாங்குவார்... போல இருக்கு.
அதுக்காக.... இவரை, ஆயுள் முழுக்க மறியலில் வைத்திருந்தாலும்,
தமிழ்நாட்டிலோ, தமிழ் ஈழத்திலோ... ஒருவருமே... கவலைப் பட மாட்டார்கள்.

பதவியில்... இருக்கும் போது... சேர்த்த, கொழுப்பை, கரைக்க வேண்டிய நேரம் இது.
எல்லா... அரசியல்வாதிகளுக்கும்  பொருந்தும்.

Link to comment
Share on other sites

ஆசிய கண்டம் முழுவதுமாக சீனாவின் அரசியல், இராணுவ  முக்கியமாக பொருளாதார தாக்கங்கள் பெருகி வருகின்றன. அதன் ஒரு சின்னமே இந்த கோபுரம். 

கேள்வி இங்கே என்னவென்றால், தமிழீழத்தை ஆயுதப்போராட்டம் மூலமாக மலர அனுமதிக்காத மேற்குலம் தொடர்ந்தும் சீன வளர்ச்சியை இலங்கையில் அனுமதிக்க போகின்றதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வளர்ச்சியடைகிறது  ஈழம் வளர்ச்சியடையாது புடுங்கி தின்னும் அரசியல் வாதிகள் இருக்கும் வரைக்கும் 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.