Jump to content

எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழில் கதவடைப்பு போராட்டம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna-1-720x450.jpg

எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழில் கதவடைப்பு போராட்டம்!

எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் முக்கிய ஆறு கோரிக்கைகளை முன்வைத்து எழுக தமிழ் பேரணி இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தில் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதன் காரணமாக கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். எனினும் பாடசாலைகள் வழமை போன்று இயங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து வடக்கில் கதவடைப்பு போராட்டத்திற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்திருந்தது.

எனினும் வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்கள் வழமைபோன்று இயங்குவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

Jaffna-3-384x288.jpg

http://athavannews.com/எழுக-தமிழ்-பேரணிக்கு-ஆதர-2/

Link to comment
Share on other sites

எழுக தமிழ் பேரணி - வவுனியா, மன்னாரில் இயல்பு நிலை

ழுக தமிழ் நிகழ்வு தமிழ் மக்கள் பேரவையால் யாழ்ப்பாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட நிலையில் கதவடைப்பு போராட்டத்திற்கும் பேரவையால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

DSC00269.JPG

இந்நிலையில் வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் அனைத்து பிரதேசங்களிலும் வர்த்தக நிலையங்கள் வழமைபோன்று திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன

இதன்போது, வவுனியா வர்த்தக நலன்புரிச்சங்கம் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவிக்க முடியாது என தெரிவித்த நிலையில் இன்று வழமைபோன்று கடைகள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

DSC00274.JPG

இதேவேளை பாடசாலைகள் மற்றும் அரச திணைக்களங்களும் வழங்மைபோன்று இடம்பெற்று வருகின்றது.

போக்குவரத்து சேவைகள் தங்கு தடையின்று இடம்பெறுகின்ற நிலையிலும் வவுனியாவிலிருந்து விசேட பேரூந்துகள் எழுக தமிழ் நிகழ்வுக்கு மக்களை அழைத்து சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

DSC00274.JPG

இதேவேளை வவுனியா நகர்ப்பகுதியில் மக்கள் நடமாட்டம் வழமைக்கு மாறாக குறைந்தே காணப்படுகின்றது.

இதையடுத்து மன்னாரின் இயல்பு நிலைமையும் வழமை போல் காணப்பட்டது.

DSC00276.JPG

.மன்னார் பஸார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் வழமை போல் இயங்கியது.தனியார் போக்குவரத்துச் சேவைகள் வழமை போல் இடம் பெற்று வருகின்றது.

DSC00278.JPG

பாடசாலைகள்,அரச,தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகள் வழமை போல் இடம் பெற்று வருகின்றது.ஒரு சில வர்த்தக நிலையங்கள் மாத்திரமே மூடப்பட்டுள்ளது.

மன்னார்

இதே வேளை  எழுக தமிழ் நிகழ்விற்கு ஆதரவு வழங்கும் வகையில்  மன்னார் மாவட்டத்தில் உள்ள  அரசியல் சிவில் சமூக பிரதிநிதிகள் பலர் நேரடியாக கண்டன போரட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

DSC_0218.JPG

இதே வேளை இலங்கை அரச போக்குவரத்துச் ஊழியர்களுக்கு சம்பள சுற்றறிக்கையின் படி புதிய சம்பள முறை துரிதமாக நடைமுறைப்படுத்த கட்டாயப்படுத்தி இலங்கை அரச போக்குவரத்துச் சபை ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை (16) தொடக்கம் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

DSC_0225.JPG

குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி இலங்கை அரச போக்குவரத்துச் சபையின் மன்னார் சாலை ஊழியர்களும் இன்றைய தினம் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

DSC_0234.JPG

இதனால் இன்றைய தினம் மன்னாரில் இருந்து உள்ளக மற்றும் வெளி மாவட்டங்களுக்கான அரச போக்குவரத்து சேவைகள் இடம் பெறவில்லை.

DSC_0237.JPG

எனினும் மக்கள் எவ்வித அசௌகரியங்களும் இன்றி தனியார் போக்குவரத்துச் சேவையூடாக தமது பயணங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

DSC_0247.JPG

 

https://www.virakesari.lk/article/64862

 

எழுக தமிழ் பேரணியால் அம்பாறையில் கடையடைப்பு

எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவாக அம்பாறை மாவட்டத்தில் கடையடைப்புடன்  ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டதனால்    அம்பாறையில் சில இடங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

b__10_.jpeg

தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு நீதி கோரி தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் பேரணி யாழில் இன்று திங்கட்கிழமை(16) ஆரம்பமானது.

இந்நிகழ்விற்கு கிழக்கிலிருந்து ஆதரவாக தமிழ் மக்கள் செறிந்து வாழும் அம்பாறை மாவட்டத்தின் சேனைக்குடியிருப்பு நற்பிட்டிமுனை பெரிய நீலாவணை பாண்டிருப்பு காரைதீவு திருக்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டிருந்தது.

pc__9_.jpeg

மேலும் இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள  நிலையில் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டதுடன்  பஸ் சேவைகள் எவையும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/64872

எழுக தமிழுக்காக முடங்கியது முல்லைத்தீவு

எழுக தமிழுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக, முல்லைத்தீவில், கடைகள் மூடப்பட்டுள்ளதுடன், வீதிகளும் ஆளரவமற்ற நிலையில், வெறிச்சோடிப் போயுள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது.

IMG_0072_resized_9.JPG

குறிப்பாக முல்லைத்தீவு நகரில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், பொதுச்சந்தை வளாகம் என்பனவும் மூடப்பட்டுள்ளன. இதனால் முல்லை நகர்ப் பகுதி ஆளரவமின்றிக் காணப்படுகின்றது.

IMG_0084_resized_4.JPG

இதேபோல் முல்லைத்தீவின் முள்ளியவளை, தண்ணீரூற்று போன்ற பகுதிகளும் இவ்வாறே கடைகள் அடைக்கப்பட்டு, சனநடமாட்டங்கள் இன்றி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG_0087_resized_3.JPG

https://www.virakesari.lk/article/64882

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.