Jump to content

தாம் வெற்றி பெறுவதற்காகவன்றி மற்றவர்களை தோற்கடிக்க போட்டியிடுபவர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தாம் வெற்றி பெறுவதற்காகவன்றி மற்றவர்களை தோற்கடிக்க போட்டியிடுபவர்கள்

எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 செப்டெம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 07:14

நாட்டில் எல்லோரது கவனமும் ஜனாதிபதித் தேர்தல் பக்கம் திரும்பியிருக்கும் நிலையில், கடந்த வாரம் அதனோடு தொடர்புடைய இரண்டு முக்கிய செய்திகள் வெளியாகின. கடந்த 5ஆம் திகதி வியாழக்கிழமை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதாக அக்கட்சியின் பொதுச் செய்லாளர் தயாசிறி ஜயசேகர தேர்தல்கள் ஆணையகத்திடம் அறிவித்திருந்தார். அது தான் அவற்றில் முதற்செய்தி.

தாமும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவும் அக்கட்சியின் தலைவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது கூறியதாக, அடுத்த நாளான வெள்ளிக்கிழமை மற்றொரு  செய்தி மூலம் தெரியவந்தது.

இந்த இரண்டு செய்திகளும் அதுவரை நாட்டு மக்களிடையே ஜனாதிபதித் தேர்தல் விடயத்தில் இருந்து வந்த சில அபிப்பிராயங்கள், எதிர்வு கூறல்களில் சில மாற்றங்களை ஏற்படுத்திவிட்டன. ஸ்ரீ ல.சு.க போட்யிடப் போவதாக வந்த செய்தியோடு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி, சற்று அதிர்ச்சியடைந்தது. அதேபோல் ரணில் போட்டியிடப் போவதாக வெளிவந்த செய்தியோடு ஐ.தே.க பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஏற்கெனவே பொதுஜன முன்னணியின் வேட்பாளராக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரும் மஹிந்தவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்‌ஷவும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான “தேசிய மக்கள் சக்தி” என்ற புதிய கூட்டணியின் சார்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவும் போட்டியிடுவதாக அறிவித்திருந்தனர். 

அத்தோடு, ஐ.தே.கவின் உத்தியோகபூர்வமான முடிவொன்றும் இல்லாமலே தாமே அக்கட்சியின் வேட்பாளர் எனக் கூறி, சஜித் பிரேமதாஸ நாட்டில் பல பாகங்களில், பெரும் கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்தக் கூட்டங்களில் ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் பெருமளவில் கலந்துகொள்கின்றனர். அவருக்கு எதிரானவர்கள் ஐ.தே.கவில் இருக்கிறார்களா என்று கேட்குமளவுக்கு அக்கட்சியின் அடி மட்டத்தினர் மத்தியில் அவருக்கு ஆதரவு பெருகி வருவதாகவே தெரிகிறது.

இந்த நிலையில் கோட்டாபயவும் அநுர குமாரவும், சஜித்தும் தேர்தலில் களமிறங்குவார்கள் என்றே பலர் நினைத்திருந்தனர். தேர்தலில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் போட்டியிடலாம் என, அப்போது பலர் ஊகங்களை தெரிவித்திருந்தனர். (இருபது பேருக்கும் மேல் போட்டியிடலாம் என இப்போது தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது) எத்தனைப் பேர் போட்டியிட்டாலும், இந்த மூவருக்கிடையிலேயே பிரதானமாக வாக்குகள் பிரிந்து செல்லும் என்பதே பொதுவான அபிப்பிராயமாக இருந்தது. 

எதிர்வரும் தேர்தல்களில், கூட்டாகப் போட்டியிடுவது தொடர்பாக, பொதுஜன முன்னணிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் சில வாரங்களாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அந்த நிலையிலேயே, பொதுஜன முன்னணி கோட்டாவை தமது கட்சி வேட்பாளராக அறிவித்தது. அதனால் மனமுடைந்த ஸ்ரீ ல.சு.கவின் ஆதரவு எந்தக் கட்சிக்குக் கிடைக்கும் என்ற கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.

ஸ்ரீ ல.சு.க தமது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என பொதுஜன முன்னணி கருதுகிறது. அதேவேளை ஸ்ரீ ல.சு.கவைப் புறக்கணித்து முடிவுகளையும் எடுக்கிறது. தம்மால் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவது ஒரு புறமிருக்க, வெட்கமில்லாமல் வீதியில் இறங்கிப் போகக்கூடிய அளவில் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியுமா என்று ஸ்ரீ ல.சு.க பெரும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டு இருக்கிறது. 

எனவே, பொதுஜன முன்னணியை ஆதரித்து, தமது கௌரவத்தைப் பாதுகாத்துக் கொள்வதைத் தவிர, ஸ்ரீ ல.சு.கவுக்கு வேறு வழியில்லை என்றே தெரியவிருந்தது. 

ஆனால், தாம் பொதுஜன முன்னணியிடம் மண்டியிடவில்லை என்று காட்டிக்கொள்ள ஸ்ரீ ல.சு.க விரும்புகிறது. பொதுஜன முன்னணியின் மொட்டு சின்னத்திலன்றி, வெற்றிலை போன்ற மற்றொரு சின்னத்தின் கீழ் போட்டியிட வேண்டும் என ஸ்ரீ ல.சு.க பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர வாதடிக் கொண்டிருந்தார். ஏதாவது ஒன்றைக் கேட்டு வென்று, அதன் பின்னர் பொதுஜன முன்னணியுடன் இணைவதற்காகவே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறார் என்பது தெளிவாகிறது. அந்தக் கோரிக்கையால் ஸ்ரீ ல.சு.க அடையப் போகும் எந்த நன்மையும் இல்லை.

அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேறு விதமாகச் சிந்திப்பதாகவும் தெரிகிறது. பொதுஜன முன்னணி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட அவர் முயற்சி செய்தார். ஆனால் அது முடியாமல் போய்விட்டது. அக்கட்சி, கோட்டாவைப் போட்டியில் நிறுத்த முடிவு செய்துவிட்டது. எனவே, கோட்டாவோ மற்றொருவரோ பொதுஜன முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறுவதை ஜனாதிபதி விரும்பவில்லைப் போலும். அதேவேளை, ஐ.தே.க சார்பில் ரணில் போட்டியிட்டால், அவர் வெற்றி பெறுவதையும் ஜனாதிபதி விரும்ப மாட்டார். 

ஆனால், வேட்பாளராகக் களமிறுங்கும் சஜித்தின் திட்டம் வெற்றி பெறும் போல் தான் கடந்த வாரம் நிலைமை இருந்தது. அவர் வெற்றி பெறுவதை சிலவேளை, மைத்திரி விரும்பலாம். கடந்த ஒக்டோபர் மாதம் முதல், பிரதமராகப் பதவி ஏற்குமாறு, ஜனாதிபதி தம்மை அறுபது முறைக்கு மேல் கேட்டுள்ளதாக, சஜித் கடந்த சனிக்கிழமை கூறியிருந்தார். அந்த அளவுக்கு இருவருக்கிடையே புரிந்துணர்வு இருக்கிறது. எனவே, சஜித்தே ஐ.தே.கவின் வேட்பாளராக இருப்பார் என நினைத்த ஜனாதிபதி, கோட்டாவின் பக்கம் போகக்கூடிய ஸ்ரீ ல.சு.க வாக்குகளைத் தடுத்து சஜித்தின் வெற்றியை உறுதி செய்வதற்காக தமது கட்சியும் தேர்தலில் குதிக்கும் என அறிவித்திருக்கலாம்.

இதனையிட்டு, பொதுஜன முன்னணி அவரை குறைகூற முடியாது. ஏனெனில், இரு கட்சிகளுக்கிடையே கூட்டணி அமைக்கும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போதே, பொதுஜன முன்னணி தமது வேட்பாளரை அறிவித்தது. அவ்வாறாயின், அதேபோல் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போதே, ஸ்ரீ ல.சு.கவும் தமது வேட்பாளரை அறிவிக்க முடியும்.

ஸ்ரீ ல.சு.க ஆதரவு இல்லாமல் தனித்து போட்யிட்டு, பொதுஜன முன்னணியால் வெற்றிபெற முடியுமா என்ற கேள்வி, பல அரசியல் விமர்சகர்கள் எழுப்புகிறார்கள். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, 340 உள்ளூராட்சி மன்றங்களில் 230 மன்றங்களைக் கைப்பற்றி, முதலாம் இடத்துக்கு அம்முன்னணி வந்தது. 

நாடு முழுவதிலுமிருந்து, மொத்தம் 49 இலட்சம் வாக்குகளையும் பெற்றது. ஆனால், அதன் மூலம் பொதுஜன முன்னணி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் எனக் கூற முடியுமா என்ற கேள்வி இப்போது எழுப்பப்பட்டு வருகிறது. 

ஜனாதிபதித் தேர்தலின் போது, முழு நாடும் ஒரே தேர்தல் தொகுதியைப் போல் கருதப்படும். எனவே, நாட்டின் மொத்த வாக்காளர்களில் 50 சதவீதமானவர்களின் ஆதரவைப் பெறுபவரே, தேர்தலில் வெற்றி பெறுவார். இம்முறை சுமார் 10.3 மில்லியன் வாக்காளர்கள் ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிகக் தகுதி பெறுவர் என ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். அதாவது 65 இலட்சம் வாக்குகளைப் பெறுபவரே வெற்றி பெறுவார். அதாவது, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது பெற்ற வாக்குகளை விட, சுமார் 15 இலட்சம் வாக்குகளைப் பெற்றாலே பொதுஜன முன்னணி வெற்றி பெற முடியும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ ல.சு.க, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சுமார் 15 இலட்சம் வாக்குகளைப் பெற்றது. எனவே, பொதுஜன முன்னணிக்கு ஸ்ரீ ல.சு.கவின் ஆதரவு கிடைத்தால், அக்கட்சி இலகுவாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியும். எனவேதான், சஜித்தை வெற்றி பெறச் செய்வதற்காக ஜனாதிபதி ஸ்ரீ ல.சு.க வேட்பாளர் ஒருவரை நிறுத்த நினைத்தாரோ என்று பலர் கருதுகின்றனர். 

சஜித் வெற்றி பெறுவதை விட, கோட்டா வெற்றி பெறுவதை ரணில் விரும்பலாம். ஏனெனில், சஜித் வெற்றி பெற்றால், அத்தோடு ரணிலின் அரசியல் முடிந்துவிடலாம். மறுபுறத்தில் ரணிலுக்கும் மஹிந்தவுக்கும் இடையே ஒருவித புரிந்துணர்வு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மஹிந்த, முதலாவதாக ரணிலையே அலரி மாளிகைக்கு அழைத்து, தமது பாதுகாப்பு போன்றவற்றைப் பற்றி கலந்துரையாடினார். அதன் பின்னரே, அலரி மாளிகையை விட்டு அவர் வெளியேறினார். 

எனவே, தாம் வெற்றி பெறுவதை விட, குறிப்பிட்ட சிலரை வீழ்த்தவதே சிலரது நோக்கமாகத் தெரிகிறது. 

ஜனாதிபதித் தேர்தலில் விருப்ப வாக்களிக்கும் முறை

இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் போது, எந்தவொரு வேட்பாளரும் செல்லுபடியான வாக்குகளில் 50 சதவீத்துக்கு மேல் பெறமாட்டார் என்றதொரு கருத்து பலர் மத்தியில் நிலவி வருகிறது. இந்தக் கருத்திலுள்ள முக்கியத்துவம் என்வென்றால், ஏனைய தேர்தல்களில் போலன்றி, ஜனாதிபதித் தேர்தலில், ஒரு வேட்பாளர் முதலாவது கணக்கெடுப்பிலேயே வெற்றி பெறுவதற்காகச் செல்லுபடியான வாக்குகளில் 50 வீதத்துக்கு மேல் ஒரு வாக்கையேனும் பெற வேண்டும் என்பதாகும். 

அவ்வாறு பெறாவிட்டால், இரண்டாவது, மூன்றாவது விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் மூலம் வெற்றி பெறுபவர் நிர்ணயிக்கப்படுவார். இதற்கு முன்னர் நடைபெற்ற சகல ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் வெற்றிபெற்றவர்கள் முதலாவது கணக்கெடுப்பிலேயே 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்றிருந்ததால், அந்தத் தேர்தல்களின் போது இரண்டாவது, மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணும் அவசியம் ஏற்படவில்லை. 

1988ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் ரணசிங்க பிரேமதாஸ 50.43 சதவீத வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியானார்.  

ஏனைய தேர்தல்களின் போது, எவரும் இரண்டு கட்சிகளுக்கு வாக்களிக்க முடியாது. ஆனால், ஜனாதிபதித் தேர்தலின் போது ஒருவர் ஒரு கட்சிக்கு தமது வாக்கை வழங்கிவிட்டு விரும்பினால் மற்றொரு கட்சியின் வேட்பாளருக்கு இரண்டாவது விருப்பு வாக்கை வழங்க முடியும். அதேபோல் மற்றொருவருக்கு மூன்றாவது விருப்பு வாக்கையும் வழங்க முடியும்.

வாக்குகளை எண்ணும் போது, எவரேனும் ஒரு வேட்பளர் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்றிருந்தால், இந்த இரண்டாவது, மூன்றாவது விருப்பு வாக்குகளுக்குப் பெறுமதியே இருக்காது. எவரும் 50 சதவீத வாக்குகளைப் பெறாவிட்டால், முதலாம், இரண்டாம் இடத்தைப் பெறுபவர்களைத் தவிர்ந்த ஏனையவர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர். ஆனால், அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளில் முதலாம், இரண்டாம் இடத்தைப் பெற்றவர்களுக்காக இரண்டாவது விருப்பு வாக்குகள் அளிக்கப்பட்டு இருந்தால், அவையும் அந்த இருவரின் வாக்குகளோடு சேர்க்கப்படும். 

போட்டியிலிருந்து நீக்கப்பட்டவர்களின் வாக்குகளில், இந்த இருவரில் எவருக்கும் இரண்டாம் விருப்பு வாக்கு வழங்கப்படாது. மற்றவர்களில் எவருக்காவது அது வழங்கப்பட்டு இருந்தால், அந்த வாக்குச் சீட்டுகள் அந்த இரண்டாம் கணக்கெடுப்பின் பின்னரும் மீதமாக இருக்கும். அவற்றில் முதலாம், இரண்டாம் இடத்தைப் பெற்றவர்களுக்காக மூன்றாவது விருப்பு வாக்கு அளிக்கப்பட்டு இருக்கிறதா என அடுத்து சோதித்துப் பார்க்கப்படும். அவ்வாறு இருந்தால், அவையும் அந்த இருவரின் வாக்குகளோடு சேர்க்கப்படும். 

இந்த மூன்று கணக்கெடுப்பின் பின்னர், ஆரம்பத்தில் முதலாம், இரண்டாம் இடத்தைப் பெற்றவர்களில் எவர் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கிறாரோ அவர் வெற்றி பெற்றவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். 

முதலாவது கணக்கெடுப்பின் போது வெற்றி பெறுவதற்காக, செல்லுபடியான வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற வேண்டும் என்று சட்டம் கூறிய போதிலும், விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டதன் பின்னர் அது அவசியமில்லை. மூன்றாவது கணக்கெடுப்பின் பின்னரும் எவரும் 50 சதவீதத்துக்கு மேல் பெற்றிருக்காவிட்டாலும் கூடுலான வாக்குகளைப் பெற்றவர் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டதாகப் பிரகடனப்படுத்தப்படுவார். 

ஆனால், இலங்கை வாக்காளர்கள் ஜனாதிபதித் தேர்தலின் போது இரண்டாவது, மூன்றாவது விருப்பு வாக்குகளை வாக்குச் சீட்டில் குறிக்க பழக்கப்பட்டவர்கள் அல்லர். இதற்கு முன்னர் எவரும் அதைப் பற்றி பேசியதே இல்லை. எனவே, இம்முறையும் வாக்காளர்கள் தமது அபிமான வேட்பாளருக்கு மட்டும் வாக்கையளித்துவிட்டு வரலாம். அவ்வாறு ஒரு வாக்குச்சீட்டிலும் இரண்டாவது, மூன்றாவது விருப்பு வாக்கு குறிப்பிடப்படாமல் இருக்க, எவரும் 50 சதவீத வாக்குகளைப் பெறாமல் இருந்தால் என்ன செய்வது என்று சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. 

எவரும் 50 சதவீத வாக்குகளைப் பெறாத நிலையில், சில வாக்குச்சீட்டுகளில், முதலாம், இரண்டாம் இடத்தைப் பெற்றவர்களுக்கன்றி ஏனைய வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகள் குறிப்பிடப்பட்டு இருந்தாலும், என்ன செய்வது என்று சட்டம் கூறவில்லை. ஒரு விருப்பு வாக்கேனும் அந்த இருவரில் ஒருவருக்காக வழங்கப்பட்டு இருந்தால், சட்டப் பிரச்சினை எழாது. 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தாம்-வெற்றி-பெறுவதற்காகவன்றி-மற்றவர்களை-தோற்கடிக்க-போட்டியிடுபவர்கள்/91-238561

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.