Jump to content

மக்களின் ஆதரவுடன் ஆரம்பமாகியது ‘எழுக தமிழ்’ பேரணி


Recommended Posts

மக்களின் ஆதரவுடன் ஆரம்பமாகியது ‘எழுக தமிழ்’ பேரணி

தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வை வலி­யு­றுத்­தியும், தமிழ் மக்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­களை சர்­வ­தே­சத்­திற்கு வெளிப்­ப­டுத்தும் வகை­யிலும், யாழ்ப்­பா­ணத்தில் இன்று எழுக தமிழ் பேரணி முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.



70043473_533343250541932_887615126414504

தமிழ் மக்களின் பல்வேறு அரசியல் காரணங்களை முன்வைத்து, யாழில் இடம்பெறும் "எழுக தமிழ்" பேரணிக்கு மக்கள் பூரண ஆரவை வழங்கியுள்ளனர்.

இதனால், யாழ் குடாநாட்டின் பிரதான நகரங்கள் அனைத்தும் செயலிழந்துள்ளன. இதனால் பொதுப் போக்குவரத்து இடம்பெறவில்லை.



70992404_2355866351342667_34893698108217

குடா நாட்டின் அனைத்துப் பகுதிகளும் மக்கள் நடமாட்டமற்று வெறிச்சோடிக் காணப்படுவதுடன், பொது சந்தைகள் எதுவும் திறக்கப்படவில்லை.

அத்தோடு, பாடசாலைகள் வழக்கம் போல், கல்வி செயற்பாட்டுக்காக திறக்கப்படடுமென அறிவித்தல் வழங்கப்பட்டிருந்த போதும், மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்கவில்லை. 

வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்கி­னேஸ்­வ­ரனை இணைத் தலை­வ­ராக க்கொண்ட, தமிழ் மக்கள் பேர­வையின் ஏற்­பாட்டில் இந்த எழுக தமிழ் பேரணி நடைபெறுகின்றது.


70964033_2409916045964864_26230082020814

அர­சியல் தீர்வு மற்றும் தாங்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வு­களை விரும்பும் தமிழ் மக்­களின் வலி­மையைக் காண்­பிக்கும் வகையில் இந்தப் பேரணி அமையும் என்று, தமிழ் மக்கள் பேர­வையின் இணைத் தலை­வ­ரான சி.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்திருந்தார்.



70774994_493419901480815_467927367249664

இந்த எழுக தமிழ் பேர­ணியில் 35 இற்கு மேற்­பட்ட, அமைப்­புகள் மற்றும் கட்­சிகள் பங்­கேற்­கவுள்ளன.

 

70685735_937803056570379_280542276029199

யாழ்ப்­பா­ணத்தில் இன்று நடைபெறும் எழுக தமிழ் பேர­ணியில் பங்­கேற்க, வவு­னியா, அம்­பாறை, திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு, மன்னார் ஆகிய இடங்­களில் இருந்து பொது­மக்­களை ஏற்றி வரு­வ­தற்­காக 35 இற்கும் அதி­க­மான பேருந்­துகள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன.

15 ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான மக்கள் இதில் பங்­கேற்­பார்கள் என்று எதிர்­பார்ப்­ப­தா­க, சி.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.



70581887_510281363131746_170793209501738

தமிழர் தாய­கத்தில் சிங்­கள குடி­யேற்­றங்­களை நிறுத்து,  சிறி­லங்கா போர்க்­குற்­ற­வா­ளி­களை அனைத்­து­லக நீதி­மன்­றத்தில் நிறுத்து, எல்லா அர­சியல் கைதி­க­ளையும் விடு­தலை செய், வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்­பாக பக்­க­சார்­பற்ற அனைத்­து­லக விசா­ர­ணையை நடத்து, தமிழ்ப் பகு­தி­களில் இரா­ணுவ மய­மாக்­கலை நிறுத்து, போரினால் இடம்­பெ­யர்ந்த அனை­வ­ரையும் சொந்த இடங்­களில் மீள்­கு­டி­ய­மர்த்து ஆகிய ஆறு பிர­தான கோரிக்­கை­களை முன்­வைத்து இந்த எழுக தமிழ் பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.



70476323_1083216695402496_91170686413412

இன்று காலை நல்லூர் கந்­த­சு­வாமி ஆலய முன்­றிலில் இருந்தும், யாழ். பல்­க­லைக்­க­ழக வாயிலில் இருந்தும், இரண்டு இடங்­களில் இருந்து ஆரம்­பித்த பேரணி யாழ். கோட்டை அரு­கே­யுள்ள முற்­ற­வெளி திடலில் முடி­வ­டையும்.

அங்கு எழுக தமிழ் பிர­க­டனம் வாசிக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­படும். அத்­துடன் பொது­அ­மைப்­பு­களின் பிர­தி­நி­திகள் மற்றும் பிர­மு­கர்கள் உரை­யாற்­ற­வுள்­ளனர்.



70419482_749316642164397_120178648569977

இன்று நடை­பெ­றும் எழுக தமிழ் பேர­ணிக்கு, யாழ்ப்­பாண ஆசி­ரியர் சங்கம், யாழ். பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றியம், கிழக்கு பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றியம், யாழ். பல்­க­லைக்­க­ழக ஊழியர் சங்கம், உள்­ளிட்ட பல்­வேறு அமைப்­பு­களும் இந்தப் பேர­ணிக்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ளன.



70409048_736457760152968_243940444044106

அதே­வேளை, தமிழ் மக்கள் பேர­வை­யுடன் இணைந்து செயற்­படும் தமிழ் மக்கள் கூட்­டணி, ஈ.பி­.ஆ.ர்­எல்.எவ். ஆகிய கட்­சிகள் இந்தப் பேரணி ஒழுங்­க­மைப்பில் ஈடு­பட்­டுள்­ளன.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­களில் ஒன்­றான ரெலோவும் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளது. ஜன­நா­யக போரா­ளிகள் கட்­சியும் எழுக தமிழ் பேர­ணிக்கு ஆத­ரவு அளிப்­ப­தாக கூறி­யுள்­ளது.


70244066_599136503825994_228915250430843

இத­னி­டையே எழுக தமிழ் பேர­ணியில் தமது கட்­சியின் பெயரோ, சின்­னமோ பயன்­ப­டுத்­தப்­ப­டாது என்றும், தமிழ் மக்­களின் நலன்­களை முன்­னி­றுத்­தியே இந்த பேரணி நடத்­தப்­ப­டு­வ­தா­கவும் தெரிவித்துள்ள சி.வி.விக்னேஸ்வரன் அரசியல் சார்பின்றி அனைவரும் இதில் பங்கேற்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.



70185998_2429721097317139_31233027473869

எழுக தமிழ் பேரணியை முன்னிட்டு வடக்கு, கிழக்கில் இன்று முழுமையான ஹர்த்தால் அனுஷ்டித்து போராட்டத்தை நடத்தி, இந்த நிகழ்வை வலுப்படுத்துமாறு தமிழ் மக்கள் பேரவை கோரியிருக்கிறது.



70172698_377773516234558_451262198785979

 

https://www.virakesari.lk/article/64856

Link to comment
Share on other sites

 

யாழில் 'எழுக தமிழ்' பேரணி

image_ba83550390.jpg

-எம்.றொசாந்த், செல்வநாயகம் ரவிசாந்

தமிழ் மக்களுக்கான தீர்வை வலியுறுத்தியும் தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேச சமுகத்துக்கு வெளிப்படுத்தும் வகையிலும் யாழில் இன்று (16) எழுக தமிழ் பேரணி நடைபெற்றது.

தமிழ் மக்கள் பேரவையில் ஏற்பாட்டில், இன்று காலை, நல்லூர், யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பமான பேரணி, யாழ். கோட்டைக்கு அருகில் உள்ள முற்றவெளியை சென்றடைந்தது.

அங்கு எழுக தமிழ் கூட்டம் நடைபெற்று, பிரகடனம் வாசிக்கப்பட்டது. 

image_1143ff1091.jpgimage_2afbe9279b.jpgimage_4316a21176.jpgimage_4910eda94d.jpgimage_71065b043c.jpgimage_eed9423bf6.jpgimage_f786fe5a99.jpgimage_559384b1dd.jpgimage_eae9ca18ba.jpgimage_8bf114891e.jpg

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/யாழில்-எழுக-தமிழ்-பேரணி/46-238584

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

image_4910eda94d.jpg

எழுகவுக்கு.. எழக.. என்று எழுதி இருக்கியளே.

தமிழ் கொலையோடு.. எப்படி ஐயா தமிழ் எழும்..???! 😊

image_f786fe5a99.jpg

Link to comment
Share on other sites

25 minutes ago, nedukkalapoovan said:

எழுகவுக்கு.. எழக.. என்று எழுதி இருக்கியளே.

தமிழ் கொலையோடு.. எப்படி ஐயா தமிழ் எழும்..???! 😊

எழுக என்பதிலுள்ள ழு க்கும் தமிழ் என்பதிலுள்ள ழ் க்கும் சிறு வேறுபாடு உள்ளதை படத்தில் காணலாம்.

எனவே ழு க்கு பதிலாக ழ என எழுதவில்லை.

ஆனாலும் ழ போன்று ஆரம்பித்து ழு ஆக முடியும் இவ் எழுத்துருவை யார் உருவாக்கினார்களோ. 🤔

Link to comment
Share on other sites

நிறையப் பேர் கடைகளை பூட்டி விட்டு வீட்டில் நன்றாக ஓய்வெடுத்து எடுத்துள்ளனர் போலும். 2500 பேர் அளவில் தான் ஊர்வலத்தில் / கூட்டத்தில் கலந்து கொண்டதாக அறிய முடிகின்றது. முன்னர் இடம்பெற்ற எழுக தமிழ் / பொங்கு தமிழ் நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கு பற்றி இருந்தனர்,.

தமிழ் தேசிய மக்கள் முன்னனியினர் (கஜேந்திரகுமாரின் கோஷ்டியில் இருப்பவர்கள்) விக்கினேஸ்வரனின் அரசியல் தோல்வியடைந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் உடனே கொக்கரிக்க ஆரம்பித்து விட்டனர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4580-C5-D9-AE34-4-F77-991-D-B1-A39-E5-E3

நியூயோர்க் ஐக்கிய நாடுகள் சபை முன்பு நடந்த எழுக தமிழ் நிகழ்வில் நுhறு பேர் வரை கலந்து கொண்டனர்.

பழைய பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கமும் கலந்து கொண்டு சிறிய உரையும் ஆற்றியிருந்தார்.

கனடாவிலிருந்து ஒரு பேரூந்தில் வந்திருந்தார்கள்.அவர்களை மிகவும் பாராட்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்.. 💐

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.