Jump to content

அரசியலில் சில சலனங்கள் காலத்துக்குக் காலம் ஏற்படும் சமாளித்து மக்களின் விடுதலைக்காக தளராது செயற்படுவோம் சி.வி.கே.சிவஞானம்


Recommended Posts

IMAGE-MIX.png
 

 

 

அரசியலில் சில சலனங்கள் காலத்துக்குக் காலம் ஏற்படுவது இயல்பு ஆனாலும் எல்லாவற்றையும் சமாளித்து துணிவுடன் மக்களுக்கான விடுதலைக்காக தொடர்ந்தும் தளராது செயற்படுவோம் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

DSC_0293.JPG

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோப்பாய் கோமகன் கு.வன்னிய சிங்கத்தின் 60 ஆம் ஆண்டு சிரார்த்த தின நிகழ்வு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அ.பரஞ்சோதி தலைமையில் இன்று  நீர்வேலி வாழைக்குலைச் சங்கத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

தமிழ்த்தேசிய இனம் வாழவேண்டும் என்ற இலட்சியத்துடன் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த ஒரு மகானின் நினைவு நாள் இலங்கை தமிழரசுக் கட்சி ஆரம்ப காலகர்த்தாக்களில் இவரும் ஒருவர் இவரின் தலைமைத்துவத்தில் கீழ் இன்றும் இக் கட்சி சென்றுகொண்டிருக்கின்றது அதே பாதை பின்பற்றுகின்றவர்களில் நானும் ஒருவன் தமிழ்த்தேசியத்தினுடைய விடுதலை என்பது அவருடைய துணிச்சலில் உள்ளது. பாராளுமன்றத்தில் அதன் துணிச்சலை வெளிப்படுத்தியவர் பாராளுமன்றத்தில் துணிந்து எதையும் சொல்லக்கூடிய ஓருவர் பல விடையங்களை செய்தும் உள்ளார்.

தந்தை செல்வநாயகம், வன்னியசிங்கம் ,நாகநாதன் ,இராசவிரோதயம் போன்றோர் விதைத்துவிட்ட அந்த விதை வளர்ந்து விரூட்சமாகிக் கொண்டுதான் இருக்கிறது. சில சலனங்கள் காலத்துக்குக் காலம் ஏற்படுவது இயல்பு ஆனாலும் எல்லாவற்றையும் சமாளித்து துணிவுடன் மக்களுக்கான விடுதலைக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்போம்.

இலங்கை தமிழரசுக் கட்சி என்ற விரூட்சம் அழியாமல் இருப்பதற்கு வித்திட்டவர்களில் தந்தை செல்வாவிற்கும் அமரர் கோப்பாய் வன்னியசிங்கத்திற்கும் உண்டு. அமரர் வன்னியசிங்கம் தமிழ்த்தேசியத்தின் விடுதலைக்காக பொருளாதார ரீதியான முன்னேற்றத்திற்காகவும் கையாண்டவர் இதில் ஒன்றுதான் இந்த வாழைக்குழைச் சங்கமும் அதுமட்டுமன்றி ஒவ்வொரு கிராமத்திலும் பொருளாதார ரீதியான முன்னேற்றம் அடைவதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டவர். 

இன்று இந்த நிகழ்வில் அமரர் வன்னியசிங்கத்தின் பிள்ளைகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டிருக்கின்றார்கள் அவர்களும் தந்தை வழியில் பல முயற்சிகளை தொடரவேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/64962

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.