Jump to content

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளில் ஆட்ட நிர்ணய சதி - முன்னாள் இந்திய வீரரின் தற்கொலைக்கும் இதுவே காரணம்


Recommended Posts

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாகவும் முன்னாள் இந்திய அணி வீரர் விபி சந்திரசேகர் மறைவிற்கு இதுவும் காரணமாகயிருக்கலாம் எனவும் வெளியாகியுள்ள தகவல்களால் இந்திய கிரிக்கெட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் விளையாடும் அணியொன்றை ஆட்டநிர்ணயசதிக்கும்பல் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததை தொடர்ந்தே விபி சந்திரசேகர் தற்கொலை செய்துகொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபி சந்திரசேகரின் நெருங்கிய நண்பர்களையும் தமிழ்நாடு மாநில கிரிக்கெட் வீரர்களைம் சந்திரசேகரின் மரணம் தொடர்பில் விசாரணை செய்தவேளையே காவல்துறையினருக்கு  ஆட்டநிர்ணய சதி குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

vp_cha.jpg

இவர்களிற்கு இந்த தற்கொலையுடன் நெருங்கிய தொடர்பில்லாத போதிலும் நாங்கள் சில முக்கியமான தகவல்களை பெற்றுள்ளோம் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஆட்டநிர்ணய சதி குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு பல இரகசிய கடிதங்கள் கிடைத்தன ,இதனை தொடர்ந்தே இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபையின் ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வட்ஸ் அப் குழுவில் சில பெயர்கள் காணப்படுகின்றன அது குறித்து விசாரணை செய்கி;ன்றோம் இதுவரை தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் எந்த வீரரையோ அல்லது உரிமையாளரையோ விசாரணை செய்யவில்லை என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபையின் ஊழல் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சிலவீரர்களை ஆட்டநிர்ணய சதிக்கும்பலை சேர்ந்தவர்கள் அணுகியுள்ளனர் வீரர்கள் இது குறித்து எங்களிற்கு தெரியப்படுத்தியுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ள இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபையின் ஊழல் தடுப்பு பிரிவினர் நாங்கள் யார் வீரர்களை அணுகியுள்ளனர் என்பது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம் எனவும் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபையின் ஊழல் தடுப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

bcci-logo.jpg

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் அனேகமாக திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலியில் இடம்பெறுவதால் கண்காணிப்பு குறைவாக உள்ளது இதனால் ஆட்டநிர்ணய சதிக்காரர்கள் வீரர்களை அணுகமுடிகின்றது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளியாட்கள் வீரர்களின் ஓய்வறைக்குள் நுழைவது சகஜமான விடயமாக காணப்பட்டது. சென்னையில் இது இடம்பெறுவதற்கு சாத்தியமில்லை என தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளை நன்கு அவதானித்தவர்கள்  சுட்டிக்காட்டியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/64928

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.