Jump to content

ஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள்

இங்கிலாந்தின் சன் செய்தித்தாளில் இங்கிலாந்தின் சகலதுறைவீரரும் 2019 ஆசஸ் கதாநாயகனுமான பென்ஸ்டோக்சின் இதுவரை மறைக்கப்பட்ட குடும்பம் ரகசியம் வெளியாகியுள்ளது. 

பென்ஸ்டோக்சின் தாயின் முதல் கணவரிற்கு பிறந்த இரு பிள்ளைகள் அவரது தாயின் முன்னாள் கணவனாலேயே  சுட்டுக்கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ள சன் பென்ஸ்டோக்ஸ் பிறப்பதற்கு முன்னர் இது இடம்பெற்றது என தெரிவி;த்துள்ளது.

டிரேசி என்ற எட்டு வயது சகோதரியும் அன்றூ என்ற நான்குவயது சகோதரனும் தாயின் முன்னாள் கணவரான ரிச்சட் டன் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என சன் தெரிவித்துள்ளது.

ben_4.jpg

இதன் பின்னர் பென்ஸ்டோக்ஸ் பிறந்தது தாய்க்கு வாழ்வின் மீதான பிடிப்பை வழங்கியது என உறவினர்களை மேற்கோள் காட்டி சன் செய்தி வெளியிட்டுள்ளது.

பேன்ஸ்டோக்சின் தாயார் டெப்பும் முதல் கணவர் ரிச்சட் டன்னும் பிரிந்தனர், கடும் கருத்துவேறுபாட்டில் காணப்பட்டனர் என தெரிவித்துள்ள சன் 1988ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இருபிள்ளைகளையும் தன்னுடன் அழைத்து சென்ற டன் அவர்கள் இருவரையும் சுட்டுக்கொன்றார் எனவும் தெரிவித்துள்ளது.

அவ்வேளை பென்ஸ்டோக்சின் தாயார் ரக்பி பயிற்றுவிப்பாளா ஜெராட் ஸ்டோக்சுடன் உறவில் இருந்தார், இந்த சம்பவம் இடம்பெற்று மூன்று வருடங்களின் பின்னர் பென்ஸ்டோக்ஸ் பிறந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளது.

ben_sun2.jpg

பென் அவரது தாயார் கடும் மன நெருக்கடியை எதிர்கொண்டிருந்த நேரத்தில் பிறந்தார்,பென் பிறந்தது அவரின் வாழ்க்கைக்கு அர்த்தத்தை கொடுத்தது எனவும் சன் உறவினர்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு கிரிக்கெட்டராக இவ்வளவு விடயத்தை அவர் சாதித்து தாயை பெருமைப்படுத்தியுள்ளமை மிகவும் பெரிய விடயம் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பென்ஸ்டோக்சின் தாயாரே ஒரு சிறந்த கிரிக்கெட் வீராங்கனை ஆனால் அவர் வாழ்க்கையில் இனி மகிழ்ச்சியில்லை என கருதினோம் ஆனால் பென்ஸ்டோக்சின் பிறப்பு அவரை மாற்றியது என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ben-gave-his-mum-something-to-live-for-h

பென்ஸ்டோக்சிற்கு 12 வயதாகும்போது அவர்கள் இங்கிலாந்திற்கு வந்தனர் என தெரிவித்துள்ள சன் அவரது தாயார் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் மிகப்பெரும் பங்களிப்பை செய்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது.

 

https://www.virakesari.lk/article/65006

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.