Jump to content

எழுக தமிழ் பேரணி பெரும் வெற்றி-வி.விக்னேஸ்வரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எழுக தமிழ் பேரணி பெரும் வெற்றி-வி.விக்னேஸ்வரன்

எழுக தமிழ் பேரணி வெற்றியடைந்ததாக தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் க.வி.விக்னேஸ்வரன்.பேரணி தோல்வியென குறிப்பிடுபவர்கள், பேரணி தோல்வியடைய வேண்டுமென விரும்பியவர்கள்தான். அவர்கள் பேரணிக்கு வந்திருந்தால், கலந்து கொண்ட மக்களை பார்த்திருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் பேரணியில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டிருந்தனர். வவுனியா, கிளிநொச்சி, கிழக்கு போன்ற பகுதிகளில் இருந்து நிறைய மக்கள் வந்திருந்தார்கள். இதுவே பெரிய வெற்றிதான். ஏனெனில், இதற்கு முன்னர் வெளியிடங்களில் இருந்து மக்களை அழைத்து வர முடியவில்லை. இம்முறை வெளி மாவட்டங்களில் இருந்து மக்கள் வந்திருந்தனர்.

உள்ளூரில் ஒரு பிரச்சனையிருந்தது. அன்று பஸ்கள் ஓடவில்லை. இதனால் உள்ளூரிலிருந்து மக்கள் வருவதில் பிரச்சனையிருந்தது. அதைவிட, அதிகாலையிலேயே நல்ல மழை. ஆனால் பேரணியில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். பெரிய தூரத்தை அவர்கள் நடந்து கடந்தார்கள் என தெரிவித்துள்ளார்.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/எழுக-தமிழ்-பேரணி-பெரும்-வ/

Link to comment
Share on other sites

ஒரு அடக்குமுறைக்குள் வாழும் பலதையும் இழந்த மக்களின் ஒன்று பட்ட இந்த சனநாயக நிகழ்வு வெற்றிதான்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.