Jump to content

சரத் பொன்சேகாவுக்கு இணையான பதவி நிலைகளை பெறும் முன்னாள் தளபதிகள்


Recommended Posts

சரத் பொன்சேகாவுக்கு இணையான பதவி நிலைகளை பெறும் முன்னாள் தளபதிகள்

Air-Marshal-Roshan-Gunatilake-Admiral-Wa

சிறிலங்காவின் முன்னாள் விமானப்படை மற்றும் கடற்படைத் தளபதிகளுக்கு உயர் கௌரவ பதவி நிலைகளை அளிக்கும் நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது.

இறுதிக்கட்டப் போர்க்காலத்தில் சிறிலங்கா கடற்படைத் தளபதியாக பணியாற்றிய அட்மிரல் வசந்த கரன்னகொட, அட்மிரல் ஒவ் த பிளீட் ஆகவும், விமானப்படைத் தளபதியாக பணியாற்றிய எயர் சீவ் மார்ஷல் றொஷான் குணதிலக, மார்ஷல் ஒவ் த எயர்போர்ஸ் ஆகவும் உயர் கௌரவ பதவிநிலைகளுக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட பீல்ட் மார்ஷல் பதவிக்கு இணையான பதவி நிலைகளாக இவை உள்ளன.

இதற்கான அரசிதழ் அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த உயர் கௌரவ பதவி நிலைகளை அளிக்கும்  நிகழ்வு நாளை காலை 10 மணிக்கு கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தில் நடைபெறவுள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இரண்டு முன்னாள் படைத் தளபதிகளுக்கும் உயர் பதவிநிலைகளை வழங்குவார்.

http://www.puthinappalakai.net/2019/09/18/news/40080

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.