Jump to content

தமிழ் மக்களின் தலைகளில் மண்ணை அள்ளிப்போடும் முடிவுகளை சம்பந்தன் மற்றும் சுமந்திரன் எடுக்கக்கூடாது!


Recommended Posts

ஸ்ரீலங்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சிங்கள கட்சிகளின் வேட்பாளர்களில் எவருக்காவது ஆதரவு வழங்குவது என்றால் முதலில் அவர்களிடம் இருந்து சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் தமிழர் தரப்பு உத்தரவாதங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இதனைவிடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு மீண்டும் ஆதரவு வழங்குமாறு தமிழ் மக்களை கோருவார்களானால் அதுவே மீண்டும் தமிழ் மக்களின் தலைகளில் மண்ணை அள்ளிபோட்டுக்கொள்ளும் முடிவாக அமைந்துவிடும் என்றும் சுரேஷ் பிறேமச்சந்திரன் எச்சரித்திருக்கின்றார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன், ஜனாதிபதி தேர்தல் குறித்த முடிவை எடுப்பதற்கு முன்னர் தமிழர் தரப்பினர் அனைவரையும் இணைத்துக்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பொதுவான முடிவொன்றை எடுத்து சிங்கள தலைமைகளுடன் பேரம் பேச வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறிலங்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறான முடிவை எடுக்க வேண்டும் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களான சம்பந்தனும், சுமந்திரனும் மாத்திரம் தன்னிச்சையாக எடுக்காது, தமிழ் தேசியத்திற்காக உறுதியாக செயற்பட்டுவரும் அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு பொதுவான முடிவொன்றை எடுக்க முன் வர வேண்டும் என்றும் சுரேஷ் பிறேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு மற்றும் ஏனைய பிரதான பிரச்சனைகளுக்கான தீர்வுகள் தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்யப்பட்டுவருகின்ற நிலையில், தமிழர் தரப்பினர் அனைவரும் இணைந்து பலமான அணியாக கோரிக்கைகளை முன்வைக்கும் பட்சத்திலேயே சிங்கள தலைமைகள் கவனம்செலுத்தும் என்றும் சுரேஷ் பிறேமச்சந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளையே நிறைவேற்றாத சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் மக்களுக்கு ஒரு வருடத்திற்குள் எவ்வாறு தீர்வு வழங்கப் போகின்றார் என்றும் கேள்வி எழுப்பினார்.

https://www.ibctamil.com/srilanka/80/128053

Link to comment
Share on other sites

சிங்கள அரசியல்வாதிகளை அரசியலால் வெல்லும் திறமை இல்லாத தலைவர்கள் அரசியலில் இருந்து விலகி வேண்டும் இல்லை விலக்கப்பட வேண்டும். 

 

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: 2 பà¯à®°à¯, à®à¯à®³à¯à®¸à¯ à®à®ªà¯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

தமிழ் மக்களின் தலைகளில் மண்ணை அள்ளிப்போடும் முடிவுகளை சம்பந்தன் மற்றும் சுமந்திரன் எடுக்கக்கூடாது!

எக்யூஸ் மீ..... சம்சும் கோஷ்டிக்கு வேறை வழி தெரியாது. 😎

Link to comment
Share on other sites

17 hours ago, போல் said:

 

சிறிலங்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறான முடிவை எடுக்க வேண்டும் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களான சம்பந்தனும், சுமந்திரனும் மாத்திரம் தன்னிச்சையாக எடுக்காது, தமிழ் தேசியத்திற்காக உறுதியாக செயற்பட்டுவரும் அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு பொதுவான முடிவொன்றை எடுக்க முன் வர வேண்டும் என்றும் சுரேஷ் பிறேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

 

ஆர் சொல்றது?

ஓ.. மண்டையன் குழு தலைவரா.... அப்பச் சரி சரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலம் கடந்து போனாலும் ஞானம் பொறந்திருக்கே. நல்ல விடயம் தான் . இருந்தாலும் தமிழ் தரப்பின் ஒற்றுமை தேர்தலை முன்வைத்து தான் தேடப்படவேண்டும்மென்ற அவசியம் கிடையாது. இதற்கான அடித்தளம் என்றுமே இருந்திருக்க வேண்டியது அவசியம். தமிழ் மக்களின் உரிமை விவகாரங்களில் அக்கறையுள்ள அனைத்து அரசியல்வாதிகளும் தத்தமது செயற்திட்ட பட்டியலில் தமிழ் தலைமைகளின் ஒற்றுமையை தான் முதலாவதாக வைத்து செயற்பட்டிருக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

20 hours ago, போல் said:

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பொதுவான முடிவொன்றை எடுத்து சிங்கள தலைமைகளுடன் பேரம் பேச வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதென்ன பேரம்? அதுல மண்டையனுக்கு எவ்வளவு வெட்டு?

சிங்களவனிட்டை பேரம் பேசி காசை வாங்கி கொண்டுதான் முண்டு கொடுக்கோணும் என்டு மண்டையன் வெளிப்படையாகவே பேசத் தொடங்கியிருக்கார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

ஆர் சொல்றது?

ஓ.. மண்டையன் குழு தலைவரா.... அப்பச் சரி சரி

தம்பி நிழலி  பழையவற்றை மீண்டும் மீண்டும் கையிலெடுக்கத்தான் வேண்டுமா???

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ampanai said:

சிங்கள அரசியல்வாதிகளை அரசியலால் வெல்லும் திறமை இல்லாத தலைவர்கள் அரசியலில் இருந்து விலகி வேண்டும் இல்லை விலக்கப்பட வேண்டும். 

 

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: 2 பà¯à®°à¯, à®à¯à®³à¯à®¸à¯ à®à®ªà¯

ஒருத்தரும் மிச்சம் இருக்க மாட்டினம் 1900-2019 வரை அத்தனை தலைவர்களும், கிளர்ச்சியாளர்களும் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

ஆர் சொல்றது?

ஓ.. மண்டையன் குழு தலைவரா.... அப்பச் சரி சரி

 நாங்கள் பழையதுகளை மீண்டும் மீண்டும் தூக்கிப்பிடித்தால் சிங்களமும் சர்வதேசமும் தூக்கிவைத்திருப்பதை கீழே வைக்காது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.