Jump to content

திருக்குறள் பொது நூலா?


Recommended Posts

(ஈ) 'சத்தப்பிரமவாதி' அல்லர்

சத்தப் பிரமவாதிகள் காரணமாகிய கடவுள் (பரப்பிரமம்) இறுதிக் காலத்தில் ஒலி (சத்த) வடிவிற்றா யிருக்கும்; அஃது அறியாமையினால் (அவிச்சையினால்) 'சடமும்' 'சித்துமாய' உலகங்களாய் விரியும்; முடிவில் 'சத்தமாத்திரமே' உள்ளது; இவ்வாறு அறிவதே 'முத்தி' என்பர். தெய்வப்புலவர்,

ரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான். 1062

என்றும் "ஆதி பகவன் முதற்றே உலகு" என்றும் அருளியிருத்தலினாலே 'பிரமத்துக்கு வேறாய் உலகு' உண்டென்றும், அவ்வுலகத்துக்குக் கருத்தா 'ஆதி சத்தி' யோடு கூடிய எண்குணனாகிய 'பகவன்' என்றும்,

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவனடி சேரா தார். 10

என்றும் அருளியிருத்தலினாலே 'அடிசேர் முத்தியே முத்தி' என்றும் உடம்படுகின்றார். அன்றியும் தமது தமிழ் மறையில் ஓரிடத்திலாவது ஒலிவடிவக் கடவுளைப் (சத்த வடிவப் பிரமத்தைப்) பற்றிக் கூறவில்லை. ஆகையால் தெய்வப் புலவர் 'சத்தப்பிரம வாதி' அல்லர்.

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply

(7) 'சாங்கியர்' அல்லர்

சாங்கிய மூலப்பகுதி 24ஆம் தத்துவம்; புருடன் 25 ஆம் தத்துவம்; மூலப் பகுதியின் திரிபு (பரிணாமம்) புத்தி; அதுவே மான் என்றும் அந்தக் கரணம் என்றும் பெயர் பெறும்; மூலப் பகுதியையும் புருடனையும் பகுத்துணர்வதால் 'அவிச்சை' நீங்குவதே முத்தியென்பர்.

உத்தரவேதமுடையார் தமது தெய்வ நூலில் (மண் முதல் நாத மீறாகிய முப்பத்தாறு) தத்துவங்களுக்கு அப்பாற்பட்டவராகிய (அதீதராகிய) 'ஆதி பகவனை' வாழ்த்துதலினாலும்,

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது 7

என்றும்,

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது. 8

என்றும் அருளுதலினால் சாங்கியர் கூறும் 'அவிச்சை' நீங்குவதே முத்தியென்பதை உடம்படாமையினாலும் 'சாங்கியர்' அல்லர்.

Link to comment
Share on other sites

(8) 'யோகமதத்தர்' அல்லர்

யோகமதத்தர், நிலம் முதல் ஆன்மா (புருடன்) ஈறான இருபத்தைந்து தத்துவங்களுக்கு மேல் இருபத்தாறாம் தத்துவம் இறைவன்; அவனே சாத்திரங்களை அருளிப் 'புருட' ருக்கு ஞானத்தை அறிவுறுப்பன் என்பர்.

நம் தமிழ்மறையுடையார், தமது வாயுறைவாழ்த்தில், (நாதாதீத பரசிவனாராகும்) ஆதி பகவனைக்

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை. 9

என்பது முதலிய திருக்குறள்களால் வலியுறுத்தி வாழ்த்தியிருத்தலால் அவர் 'யோகமதத்தர்' அல்லர்.

Link to comment
Share on other sites

(9) 'பாஞ்சராத்திரி' அல்லர்

பாஞ்சராத்திரிகள், 24 ஆம் தத்துவம் குணதத்துவம், 25 ஆம் தத்துவம் 'வாசுதேவ' னாகிய கடவுள் (பரம்பொருள்); அவனிடத்தில் தோன்றிய (கண்ணன், அநிருத்தன், மகரத்துவசன், இரெளகிணேயன் எனும்) நான்கு அணிகளால் (வியூகர்களால்) 'சடமுஞ் சித்துமாகிய' எல்லா உலகங்களும் படைக்கப்பட்டன; ஆகலான் எல்லாம் 'வாசுதேவன்' 'பரிணாமமே' யென்றறிந்து, 'பாஞ்சராத்திர' முறையே தீக்கை பெற்று, 'வாசுதேவனை' வழிபட்டு 'வாசுதேவன்' உருவில் அடங்கி விடுதலே (இலயமாதலே) முத்தியென்பர்.

திருவள்ளுவர் நாயனார், உலக காரணன் தத்துவாதீதனாகிய 'ஆதி பகவன்' என்றும், (அவன் வாசுதேவனிடமில்லாத சிவகுணங்களாகிய தன்வயமாதி 'எண்குணம்' உடையவனென்றும்) அவனடியிற் சார்ந்து இன்புற்று நிற்பதே முத்தியென்றும் அருள்கின்றமையினாலே அவர் 'பாஞ்சராத்திரி' அல்லர்.

Link to comment
Share on other sites

(10) 'பாசுபதர்' அல்லர்

பாசுபதர், ஆன்மாக்கள் பல; ஆணவமல மென்பதொன்றில்லை; மாயை கன்மங்களே உண்டு; இவற்றின் உவர்ப்பால் தீக்கை யுற்றவனை ஈசன் ஞானம் பற்றும்; அப்போது ஈசன் தன் குணங்களை அவன்பாற் பற்றுவித்துத் தான் 'அதிகாரத்தின் ஒழிவு' பெற்றிருப்பன் என்பர். நாயனார்,

*இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5

[ * ஏக னநேக ரிருள்கரும மாயையிரண்

டாகவிவை யாறாதி யில்.

என்ற திருவருட்பயன் திருக்குறள், இருள் என்றது ஆணவமலமென உணர்ந்து தலைக் காண்க.]

என்ற திருக்குறளால் இருளெனப் பெரிய ஆணவமலம் உண்டென்றும்,

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல. 4

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது. 7

எனும் திருக்குறள்களால் (ஈசனுடைய அதிகாரத்தைப் பெறாது) அவனடியிற் சார்ந்தின்புற் றிருப்பதே முத்தியென்றுங் கூறுகின்றார். ஆகையால் நாயனார் 'பாசுபதர்' அல்லர்.

Link to comment
Share on other sites

(11) 'மாவிரதர்' அல்லர்

மாவிரதர் பாசுபதர் கூறிய முறையே ஆன்மாக்களின் இயல்பைக் கூறி, தங்கள் சாத்திர முறையே தீக்கை பெற்று எலும்பு மாலை யணிதல் முதலிய சரியைகளின் வழுவா தொழுகின் முத்தி உண்டென்றும், முத்தருக்குச் சிவனோடு சமமான எல்லாக் குணங்களும் தோன்றும் (உற்பத்தியாம்) என்றுங் கூறுவர். தெய்வப்புலவர்,

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை. 9

என்பது முதலிய திருக்குறள்களால் சிவாகம நெறியே மூர்த்தி வழிபாடும்,

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது. 7

என்பது முதலிய திருக்குறள்களால் அடிசேர் முத்தியும் கூறுகின்றதனால் 'மாவிரதர்' அல்லர்.

Link to comment
Share on other sites

(12) 'காபாலி' அல்லர்

காபாலிகள் ஆன்மாக்கள் இயல்பும் பந்த இயல்பும் மாவிரதரை ஒப்புக்கொண்டு, தங்கள் சாத்திர முறையே தீக்கை பெற்றுப் பச்சைக்கொடி ஒன்றைக் கைக்கொண்டு நாடோறும் மனிதர் தலையோட்டில் ஐயமேற்றுண்டு செயலற்று மோனியராய்(உன்மத்தராய்) நிற்பவரிடத்தே சிவன் புகுந்தியக்குதலால் (சிவனாவேசித்தலால்) எல்லாக் குணங்களும் பெற்றுச் சிவசமமாதல் முத்தியென்பர்.

நாயனார் 'காபாலிகள்' கூறுகின்ற சரியை நெறியை உடம்படாமையானும், அடிசேர் முத்தியையே சிறப்பாகக் கொண்டிருத்தலானும் அவர் 'காபாலி' அல்லர்.

Link to comment
Share on other sites

(13) 'வாமி' அல்லர்

வாமிகள், 'சடமுஞ் சித்து' மாகிய அனைத்துலகும் அம்மையின் திரிபே (சத்தியின் பரிணாமமே) என்றும், வாம நூலில் விதித்த முறையே ஒழுகி அருள் அம்மையின் அடங்குதலே (சத்தியில் இலயித்தலே) முத்தியென்றுங் கூறுவர். நான்முகனார்,

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார். 3

என்றும்,

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது. 7

என்றும், தமது முப்பானூலில் முதல்வனை வாழ்த்தியதனானும்,

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான். 1062

Link to comment
Share on other sites

என்றும்,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு. 1

என்றும் கூறியதனால் 'சத்தியின் பரிணாமம்' உலகென்பதனை உடம்படாமையானும், அடிசேர் முத்தி கூறுதலானும்,

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றுங்

கட்காதல் கொண்டொழுகு வார். 921

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்

எண்ணப் படவேண்டா தார். 922

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண் பவர். 926

என்பன வாகிய திருக்குறள்களால் வாமிகளுக்குடம்பாடான கள்ளுண்ணலையும்,

Link to comment
Share on other sites

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்

பிறவினை எல்லாந் தரும். 321

என்பது முதலிய திருக்குறள்களால் கொலையையும்,

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்

எங்ஙனம் ஆளும் அருள் 251

என்பது முதலிய திருக்குறள்களால் புலாலுண்ணலையும்,

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்

கள்ளாமை காக்கதன் நெஞ்சு. 281

என்பது முதலிய திருக்குறள்களால் களவாடலையும் மறுக்கின்றதனானும் நாயனார் 'வாமி' அல்லர்.

வாமிகளுக்குக் கொலை, களவு முதலியவை உடம்படாடென்பதற்குப் பிரமாணம்,

வாழவே வல்லை வாமி வலக்கைதா என்னு யிர்க்குத்

தோழனீ யுன்னை யொப்பார் சொல்லிடி னில்லை கண்டாய்;

கோழைமா னுடர்தீ தென்னுங் கொலைகள வாதி கொண்டே

சூழும்வார் குழலார் மொய்ப்பச் சுடரெனத் தோன்றி னாயே.

-சித்தியார் பரபக்கம் - 26.

Link to comment
Share on other sites

(14) 'வைரவர்' அல்லர்

வைரவர் பெரும்பாலும் வாம மதத்தோடொத்துச் சிறுபான்மை சீலங்களால் (ஆசாரங்களால்) வேறுபட்டு வயிரவனே பரம்பொருள் எனக் கொண்டு வைரவ பதத்திற் சேர்வதே முத்தியென்பர்.

பெருநாவலர், வைரவர் கூறுகின்ற 'ஆசாரங்களை' மறுக்கின்றமையானும், வைரவர்கு வேறாகிய 'ஆதி பகவனை' வாழ்த்துகின்றதனானும் அவர் 'வைரவர்' அல்லர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா ஊரில வைரவருக்கு நாய் வாய்ச்ச மாதிரி வந்து வாய்ச்சாய் என்று திட்டுவாங்கள் அதற்கு என்ன ஜயா அர்த்தம் அந்த வைரவரை பற்றி தானே நீங்கள் கதைக்கிறீங்க.

:)

Link to comment
Share on other sites

இந்தக் கதையை இப்போது தான் கேட்கிறேன் நண்பரே!

(15) 'ஐக்கவாதசைவர்' அல்லர்

அயிக்கவாத சைவர் ஆணவமலமென்ப தொன்றில்லை; மாயா கன்ம மலங்களே உள்ளன; ஆன்மாக்களின் இருவினைகளுக் கீடான உடல் முதலியவைகளை (சரீராதிகளை) யடைந்து வினைகளை விரும்பி (ஆர்ச்சித்து) வினைப் பயன்களை அருந்தி வருகின்ற காலத்திலே இருவினையொப்பு வந்த ஆன்மா கடவுளருளாலே பந்தமெலாங் கழிந்து தனக்கு முன்புள்ள மாசற்ற நிலையை அடையும் என்பர்.

நாயனார் இருண்மலமாகிய ஆணவ மலத்தை உடம்படலானும், இறைவனடி சேர்ந்தின்புறு முத்தியை உடம்படலானும் 'அயிக்கவாத சைவர்' அல்லர்.

Link to comment
Share on other sites

(16) 'பாடாணவாத சைவர்' அல்லர்

பாடாணவாத சைவர் ஆணவமலம் ஆன்மாவுக்குக் குணம் போல இயல்பாய்த் தொன்மையே (சகசமாயநாதியே) உள்ளது. அதனால் மாயை கன்மங்கள் ஆன்மாவைத் தலைக்கூடும்; பாசஞான மெல்லாந் தன்கீழ் விரவல் என்று (வியாப்பியமென்று) அறிந்து நீங்குதன் மாத்திரையே முத்தி; முத்தி பெற்ற வழியும் 'சகசமலமாகிய' ஆணவமலம் நீங்குதலின்றிச் சுட்டறிவும், இன்ப துன்ப நுகர்வுமற்று (சுகதுக்காநுபவங்களுமற்று). ஆன்மா கல்லைப் (பாடாணம்) போற் கிடக்கும் என்பர். பெருநாவலர்,

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5

என்ற திருக்குறளில் இறைவன் புகழை விரும்பினாரிடத்தே ஆணவமலத்தின் காரணமாகப் பொருந்துகின்ற இருவினைகளும் நீங்குமென்றதனால், காரணம் நீங்காதபோது அதனால் வருகின்ற வேதனைகள் (உபாதிகள்) முற்றிலும் பின் தோன்றுதலின்றி (செனிப்பின்றி) நீங்காவகையாலும், காரணமாகிய ஆணவமல ஆற்றல் (சத்தி) கெட்டாலன்றி அதனாற் சார்ந்து வருகின்ற வினைகள் கெடா வகையாலும், வினைகள் நீங்குமென்றதனானே வினைகளுக்குக் காரணமாயுள்ள ஆணவமல 'சத்தி' நீக்கமும் நாவலருக்கு உடம்பாடென்றும்,

என்ற திருக்குறளால் இறைவனடி சேர்ந்தின்புற்று வாழ்தலாகிய முத்தியே உடம்பாடென்றும் பெறப்படுவதால், நாயனார் 'பாடாணவாத சைவர்' அல்லர்.

Link to comment
Share on other sites

(17) 'பேதவாத சைவர்' அல்லர்

பேதவாத சைவர் மும்மலங்களும் அநாதி; கரணங்களிற் சென்ற தன்னறிவு பக்குவத்தில் தன் மாட்டொன்றி, ஆதரவின்றி (நிராதாரமாய்) நிற்கும்; இறைவனருளால் மும்மலங்களும் நீங்கிய ஆன்மா பெறுவானும் பேறுமாயிருக்கும்; அதன் மேலும் அடிமையாதலில்லையென்பர்.

முதற்பாவலர்,

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5

என்ற திருக்குறளால் மாயா கன்ம மலங்கள் ஆகந்துகம் என்றும்,

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார். 3

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவனடி சேரா தார். 10

என்ற திருக்குறள்களால் இறைவனடியிற் கலந்து அவனருளிய ஆனந்தத்தையுண்டு வாழ்தலே முத்தியென்றுங் கூறுதலால், நாயனார் 'பேதவாத சைவர்' அல்லர்.

Link to comment
Share on other sites

(18) 'சிவசமவாதசைவர்' அல்லர்

சிவ சமவாத சைவர், பதி ஞான, பசு ஞான, பாச ஞானங்கள் அநாதியே உள்ளன; புழு வேட்டுவனை நினைந்து வேட்டுவனாகி அதன் தொழிலையும் இயற்றி நிற்றல்போல, ஆன்மா பதியை நினைந்து அதன் வடிவுற்று அதன் தொழிலை இயற்றி நிற்பதே முத்தியெனக் கூறுவர்.

தேவர் இறைவனடி சார்ந்தின்புற்று வாழ்தலே முத்தியென,

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார். 3

என்ற திருக்குறளால் வலியுறுத்திக் கூறுவதால், அவர் 'சிவசமவாதசைவர்' அல்லர்.

Link to comment
Share on other sites

(19) 'சிவசங்கிராந்தவாதசைவர்' அல்லர்

சிவசங்கிராந்தவாத சைவர் ஆன்மாவின் சந்நிதியிற் காந்தபசாசம் போல உடல் இயங்குழி அதன்கணின்று கருவிகளே விடயங்களை அனுபவிக்கும், மலம் நீங்கும் வழி, கண்ணாடியின் முகவொளி தோற்று மாறு போல முதல்வன் திருவருள் ஆன்மாவின் மாட்டுச் சங்கிரமித்துத் தோன்றும், அவ்வழி உப்பளத்தில் இட்டவையெல்லாம் உப்பாமாறு போல ஆன்மா சிவமேயாய் அவ்வான்மாவின் சந்நிதியில் அறிவனவாகிய பசு கரணங்களுஞ் சிவகரணங்களாய் மாறுஞ் சித்தியுற்றுச் சிவத்தை அறியுமென்பர். இவர் கூறும் முத்தி சித்தி முத்தியாகும். திருவள்ளுவ நாயனார்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி. 25

என்றும்,

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு. 27

என்றுங் கூறுமாற்றால் சடவத்துக்களாகிய இந்திரியங்களுக்கு வேறாய ஆன்மாவே அறியுமென்றும்,

Link to comment
Share on other sites

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்

சார்தரா சார்தரு நோய். 259

என்று கூறுமாற்றால் உயிர்களுக்கு முதல்வன் சார்பில் வழி அறிவு விளங்கப் பெறுவதில்லை என்றும் சிவசங்கிராந்தவாத சைவர் கூறும் சித்தி முத்தியை உடம்படாது.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவனடி சேரா தார். 10

என்று கூறுமாற்றால் அடிசேர் முத்தியே முத்தி என்றும் கூறுவதால் திருவள்ளுவ நாயனார் 'சிவசங்கிராந்தவாத சைவர்' அல்லர்.

Link to comment
Share on other sites

(20) 'ஈசுரவ விகாரவாத சைவர்' அல்லர்

ஈசுரவ விகாரவாத சைவர், பல துளைக்குடத்துத் தீபம் போல நவத்துவார சரீரத்தில் அறிவாய் நிற்கின்ற ஆன்மா, மலபரிபாகஞ் சத்தினிபாதமுற்ற அளவில் முதல்வன் திருவருளால் ஞானத்தைப் பெற்று, வெயிலில் துன்புற்ற ஒருவன் மர நிழலடைந்து ஆறுவது போல அம்முதல்வன் திருவடி நிழலைத் தலைக்கூடிப் பின் முதல்வனது உதவியை (உபகாரத்தை) அவாவாது என்பர். நாயனார்,

* விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்

முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. 1186

[*விளக்கு - சிவஞானம், இருள்-ஆணவம்]

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • 4 weeks later...

(21) 'சிவாத்துவித சைவர்' அல்லர்

சிவாத்துவித சைவர், மரத்தில் விரவிய (வியாப்பியமான) கவடு கோடு முதலியன வெல்லாம் மரமே யாமாறு போலச், 'சத சத்துக்கள்' ஆகிய உயிர்களும் 'அசத்துக்கள்' ஆகிய பாசக் கூட்டங்களும் குண குணிகட்குத் தம்முள் உளதாகிய வேற்றுமையைப் போலச் 'சத்துக்கு' உட்பேதமே யன்றிப், புறப்பேத மின்மையான் அவையனைத்தும் 'சத்து' எனவே படும். படவே, பதித் தன்மையின்வேறாய் உயிருக்கு அறியுந் தன்மை உண்டென்னில் தனித்த முதலெனப்பட்டு வழுவாமாகலின் 'சத்து' ஆகிய பதிப்பொருளே உயிர்களினிடமாக நின்றறியும் என்பர். ஆகவே இவர் கூறுவது 'நிமித்த காரணம்'. நாயனார்,

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார். 3

என்பது முதலிய திருக்குறள்களால் 'கடவுள் வாழ்த்து' என்னும் அதிகாரத்தில், முதல்வனின் வேறாக உயிர்கள் உண்டென்றும்,

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு. 1110

என்று கூறுமாற்றால் உயிர்களுக்கு முறை முறையாக விளங்கப் பெறும் அறியுந் தன்மை உண்டென்றும் கூறுவதனாலும், சிவாத்துவித சைவர் கூறும் 'நிமித்தகாரண பரிணாம வாதம்' யாண்டுங் கூறாமையானும் நாயனார் 'சிவாத்துவித சைவர்' அல்லர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களுக்கும் புரியுற மாதிரி சொல்லுங்கோவன்......... இல்லாட்டி இதுகள ஒட்டி புண்ணியம் அடையலாம் எண்டு ஒட்டுறியளோ............ :mellow:

Link to comment
Share on other sites

(அ) 'சுத்தசைவர்' அல்லர்

சுத்தசைவர் சித்தாந்த சைவரொப்பப்பதி, பசு, பாச இயல்புகளைக் கொண்டாலும் முத்தியில் உயிரானது சிவத்தில் அடங்கி (பரம்பொருளிடத்து அயிக்கமுற்று) ஒரு பயனும் ஓரின்பமும் (ஓரானந்தமும்) இன்றி நிற்குமென்பர். செந்நாப்போதார்

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்

தவாஅப் பிறப்பீனும் வித்து. 361

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

வேண்டாமை வேண்ட வரும். 362

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்

துன்பத்துள் துன்பங் கெடின். 369

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும். 370

Link to comment
Share on other sites

என்றும்

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசறு காட்சி யவர்க்கு. 352

என்றுங் கூறுமுகத்தால் பெத்த நீக்கமும் முத்திப் பேறாகிய இறையின்பப் பேறும் (சிவானந்தப் பிராப்தியும்) உடம்படலால் தெய்வப் புலவர் 'சுத்த சைவர்' அல்லர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிபிசி செய்தி (பொய்யாகத் தான் இருக்கும்😎!) ஒன்றின் படி, நரான்ஸ் அணு ஆராய்ச்சி நிலையத்தைப் பாதுகாக்கும் ஒரு ரேடார் நிலையத்தை நோக்கி 3 விமானத்திலிருந்து ஏவும் கணைகளை இஸ்ரேல் ஏவியதாம். ரேடார் நிலையம் அழிக்கப் பட்டது என்கிறது அமெரிக்கா, சேதமில்லை என்கிறது ஈரான். ஈரான் ஏவிய 300 கணைகளுக்கு பதிலாக 3 ஏவியிருக்கிறார்கள். விளைவு என்னவென்று RT போன்ற உண்மை விளம்பும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் மட்டுமே தெரியவரும்🤣!
    • "பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்களும் மற்றும் சமையல் பலகைகளும் அல்லது செய்முறை புத்தகமும்"    மெசொப்பொத்தேமியாவில் இருந்து ஒரு சில சமையல் செய்முறை மட்டுமே தப்பி பிழைத்துள்ளன. எனினும் இதற்கு விதிவிலக்காக  7 " X 9 .5 " அளவைக் கொண்ட, மூன்று பெரிய பாபிலோனிய களி மண் பலகையில் கியூனிபார்ம் எழுத்துக்களில், அவை ஓரத்தில் சிறிது சிதைவுண்டு இருந்தாலும் கூட, சுமார் 35 உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இப்ப யேல் பலகலைக்கழகத்தில் [Yale university] வைக்கப்பட்டுள்ளன. அவை யேல் பலகலைக்கழக பேராசிரியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதால், யேல் சமையல் பலகைகள் என்றே அழைக்கப்படுகின்றன. இதுவே உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஆகும். இந்த கியூனிபார்ம் எழுத்துக்கள் எல்லோராலும் வாசிக்கக் கூடியவை அல்ல. இவை கியூனிபார்மை பற்றி சிறப்பாக எழுத வாசிக்க ஆண்டு கணக்காக படித்த எழுத்தர்களால் மட்டும் விளங்கிக் கொள்ளக் கூடியவை. ஆகவே இந்த சமையல் குறிப்பு அல்லது புத்தாகம்  சாதாரண சமையல்காரர் அல்லது தலைமைச் சமையற்காரருக்கு எழுதப்பட்டவையாக அதிகமாக இருக்காது. இது அன்று, 4000 ஆண்டுகளுக்கு முன்பு, நடைபெற்ற சமையலைப் பற்றிய ஒரு ஆவணமாக இருக்கலாம். இங்கு சமையல் குறிப்பு விரிவாகவும் ஆனால், அபூர்வமான, அரிதான கூட்டுப் பொருள்களை கொண்டதாகவும் இருக்கிறது. ஆகவே இவை மெசொப்பொத்தேமியாவின் அரண்மனைக்கான சிறப்பு உணவாக, அதாவது மேல் தட்டு வர்க்கத்தினருக்கான அல்லது கோயிலின் மடைப்பள்ளியில் தயாரிக்கும் மத பிரசாதமாக, சிறப்பு [விசேஷ] கால சிறப்பு சமையல்களாக  இருக்கலாம்.  ஆகவே இன்றைய உலகின் மிகப் பழமையான சமையல் குறிப்பு, பாபிலோனிலிருந்து தொல்பொருள் ஆய்வின் மூலம் எமக்கு கிடைத்திருக்கிறது. அதன் வயது சுமார் 4,000 ஆண்டுகள். ஆனால் இதிலுள்ள சமையல் குறிப்புகளை புரிந்து கொள்வதில் மிகவும் சிரமம் உள்ளது. காரணம் இந்த களிமண் பலகை உடைந்த, சிதைந்த நிலையில் உள்ளது. இதிலுள்ள வார்த்தைகள், மொழி நமக்கு புரியாததாக உள்ளது. மேலும் அந்தக் கால மக்கள் சமையல் செய்த பொருட்கள் பற்றி நாம் முழுவதும் அறியவில்லை. அதிலுள்ள சமையல் முறையில் -  சமைக்கும் நேரம், சமையலுக்குத் தேவையான பொருட்களின் அளவு போன்றவை காணப்படவில்லை. ஆனால் அந்தக் குறிப்பைப் படிக்கும் போது, அவை கை தேர்ந்த சமையல்காரருக்காக  தயாரிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.மேலும் உயிரியல்,விஞ்ஞானம் , தொல்பொருள், இலக்கியம் சார்ந்த ஒரு ஊகத்தின் அடிப்படையில் அங்கு குறிக்கப்பட்ட கூட்டு பொருள்கள், இன்று ஓரளவு அடையாளம் காணப்பட்டுள்ளன.  அசிரியன்கள்[Assyrian] பற்றி ஆராயும்  பிரெஞ்சு நாட்டின்  ஜீன் போட்டீரோ (Jean Bottero), என்ற ஆராய்ச்சியாளர், மார்ச் 1985 ல் அருங்காட்சியக பத்திரிகை ஒன்றில் உலக மக்களுக்கு பேட்டி அளிக்கும் போது,இதிலுள்ள தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி மயக்கமடையச் செய்கின்றன. சமையல் குறிப்பில் அவர்களின் செல்வ வளம், துல்லியமாய் சமைத்தல், நெளிவு சுளிவுகள், ஆடம்பரமான நுணுக்கங்கள் போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் அந்த ஆதிகாலத்திலேயே இத்தனை தகவல்கள் சொல்லப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார் முதலாவது, கி மு 1750 ஆண்டை சேர்ந்தது என கருதப் படும், YBC 4644, என அழைக்கப்படும் வில்லையாகும். இது 25 சமையல் செய்முறைகளை கொண்டுள்ளது. இவை 21 புலால் துவட்டலும் [மெதுவாக வேகவைத்த சமையல் / stews] 4 காய்கறி துவட்டலும் ஆகும். இந்த சமையல் குறிப்பு கலக்கும் அல்லது சேர்க்கும் மூலப் பொருட்களின் பட்டியலையும் அது எந்த வரிசையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் தருகிறது. ஆனால் எவ்வளவு, எவ்வளவு நேரம் போன்ற தரவுகள் இல்லை.  இரண்டாவது வில்லை YBC 8958, ஆகும்.இது 7 சமையல் குறிப்பை விரிவாக தருகிறது. வில்லை பல இடங்களில் முறிந்து காணப்படுவதுடன் இரண்டாவது சமையலின் பெயர் காணப்படவில்லை. ஆனால் இது ஒரு சின்ன பறவை ஒன்றில் சமைத்த உணவு. அதிகமாக அந்த பறவை கௌதாரியாக [partridges] இருக்கலாம்?  அதில் ஒரு சமையல் குறிப்பு இப்படி சொல்கிறது: "தலையையும் பாதத்தையும் அகற்று, உடலை விரித்து பறவையை கழுவு, பின் இரைப்பை, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை பிடுங்கி ஒதுக்கி வை,  பின் இரைப்பையை பிரித்து துப்பரவு செய், அடுத்து, அந்த பறவையின் உடலை அலசி [கழுவி] அதை தட்டையாக கிடத்து, ஒரு சட்டி எடுத்து அதற்குள் பறவையின் உடலையும் இறப்பையையும் மற்றும் இதயம், கல்லீரல், நுரையீரலையும் போட்டு பின் அடுப்பில் வைக்கவும்" ஆனால் நீர் அல்லது கொழுப்பு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடவில்லை. இது ஒரு பொதுவான பழக்கப்பட்ட சமையல் என்பதால், அறிவுறுத்தல் ஒன்றும்  தேவையில்லை என அதிகமாக விட்டிருக்கலாம். சமையல் குறிப்பு மீண்டும் இப்படி தொடர்கிறது: "முதலாவது கொதித்தலின் அல்லது கொழுப்பில் பழுப்பாய் வறுத்த பின், மீண்டும் சட்டியை நெருப்பில் வை, புதிய தண்ணீரால் சட்டியை கழுவு, பாலை நன்றாய் அடிச்சு சட்டியில் விட்டு பறவையுடன் நெருப்பில் வை, பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் கொஞ்ச கொளுப்புடனும் இடு, மேலும் இதனுடன் சில ஏற்கனவே கழுவி உரித்து வைக்கப்பட்ட அரூத அல்லது அருவதா என்ற மூலிகையை சேர், அந்த கலவை கொதிக்கத் தொடங்கியதும், அதனுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட லீக்ஸ், உள்ளி, மற்றும் ரவை, மற்றும் தேவைக்கு மட்டும் அளவான வெங்காயம் சேர்த்து கொள்," "Remove the head and feet. Open the body and clean the birds, reserving the gizzards and the pluck [heart, liver, and lungs]. Split the gizzards and clean them. Next rinse the birds and flatten them. Prepare a pot and put birds, gizzards and pluck into it before placing it on the fire" It does not mention whether fat or water is added -- no doubt the method was so familiar that instructions were considered unnecessary- After the initial boiling or braising, the recipe continues  "Put the pot back on the fire. Rinse out a pot with fresh water. Place beaten milk into it and place it on the fire. Take the pot (containing the birds) and drain it. Cut off the inedible parts, then salt the rest, and add them to the vessel with the milk, to which you must add some fat. Also add some rue [aromatic woody herbs or shrubs], which has already been stripped and cleaned. When it has come to a boil, add minced leek, garlic, samidu [Semolina?] and onion (but not too much onion)" இப்படி பறவையை சமைக்கும் அதே தருவாயில், சமைத்த உணவை  பரிமாறுதலுக்கான ஆயுத்தம் செய்யவேண்டும் என்பதால், அதன் அறிவுறுத்தல் இப்ப இப்படி அதன் பின் போகிறது: "நொறுக்கப்பட்ட தானியத்தை கழுவு, பாலில் அதை மென்மையாக்கு, அதை பிசையும் போது, உப்பு, ரவை, லீக்ஸ், உள்ளியும் அத்துடன் தேவையான பாலும் எண்ணெயும் கலந்து மென்மையான கூழாக்கி - மாவு பசையாக்கி -, அதை ஒரு சில நேரம் நெருப்பில் வாட்டு. பின் இரு துண்டுகளாக வெட்டு, பின் பறவையை தாங்கக் கூடிய பெரிய தட்டை எடு, தட்டின் அடியில் முன்னமே மேற்கூறியவாறு தயாரிக்கப்பட்ட பிசைந்த மாவை வை, விளும்புக்கு வெளியே அது பெரிதாக தொங்க்காதவாறு பார்த்துக்கொள், அடுப்பிற்கு மேல் அதை வேக வை, ஏற்கனவே பக்குவபடுத்தப் பட்ட அந்த வெந்த பிசைந்த மாவிற்கு மேல் பறவையின் உடலையும் மற்றும் பிடுங்கி எடுத்த பகுதிகளையும் வை, அதை வேகவைத்த ரொட்டியின் இரண்டாவது வெட்டிய பகுதியால் மூடு, அதை பரிமாறலுக்கு அனுப்பு."  "Rinse crushed grain, then soften it in milk and add to it, as you kneed it, salt, samidu, leeks and garlic along with enough milk and oil so that a soft dough will result which you will expose to the heat of the fire for a moment. Then cut it into two pieces. Take a platter large enough to hold the birds. Place the prepared dough on the bottom of the plate. Be careful that it hangs over the rim of the platter only a little. Place it on top of the oven to cook it. On the dough which has already been seasoned, place the pieces of the birds as well as the gizzards and pluck. Cover it with the bread lid [which has meanwhile been baked] and send it" [to the table.] என்கிறது. மூன்றாவது வில்லை 3 சமையல் குறிப்பை கொண்டுள்ளது. இந்த வில்லை உடைந்து காணப்படுவதுடன் இது ஒரு பானையில் பறவை, அடையாளம் காணப்படாத ஒரு வித தானியம் [butumtu?], இறைச்சி போன்றவையை  சேர்த்து சமைக்கும் ஒரு முறையாகும். என்றாலும் நின்காசியை கௌரவிக்கும், சுமேரியர்களின் பியர் மது தயாரிக்கும் முறையைப்பற்றி, வரிசையில் பாடப்பட்ட  கி மு 1900 ஆண்டு துதி பாடல் ஒன்றே [Sumerian Hymn to Ninkasi] உலகின் முதல் முழுமையான, சமையல் புத்தாகமாக கருதப்படுகிறது. இந்தப்பாடல் அதன் என் மொழிபெயர்ப்பும் என் "மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை" என்ற கட்டுரையில் இங்கு நாவூற வாயூற பகுதியில் 18  / 04 / 2024  தந்துள்ளேன்.   இறுதியாக,  இப்போது, இன்றைய நவீன உலகில், பெண்ணோ ஆணோ பொதுவாக சமையல் புத்தகம் இல்லாமல் சமைப்பதில்லை. ஏராளமான சமையல் புத்தகங்கள், சஞ்சிகைகள் பரந்த அளவில் காணப்படுகின்றன. ஆனால் எமது பாட்டியை, பாட்டனை  கேட்டால், அவர்கள் எள்ளி நகையாடு கிறார்கள்? அப்படி என்றால், உண்மையாகவே, சமையல் புத்தகம், சமையல் குறிப்பு முன்பெல்லாம் எழுதப்படுவதில்லையா? என கேட்பவர்களும் உள்ளார்கள்.  அவர்களுக்கு  அதெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நாளாந்த சமையல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை பழங்கால 'யேல் சமையல் பலகைகள்' இன்று எடுத்துகாட்டு கின்றன.  இந்த சமையல் குறிப்புகளில் ஒன்று மட்டும் தெளிவாகவும், பொதுவானதாகவும் உள்ளது. என்ன தெரியுமா? அதுதான் எல்லா உணவிலும் கோழி, மரக்கறிகள், தானியம் மற்றும் தண்ணீர் என்பவை பயன்படுத்தப் பட்டன. இதற்கு முன்பு பொதுவாக,  நேரடியாய் நெருப்பில் போட்டு அல்லது சுட்டு  அல்லது எதாவது பாத்திரம் மாதிரி ஒன்றில் வதக்கி அல்லது வறுத்து அல்லது தீத் தணலில் புரட்டி புரட்டி வாட்டி தமது உணவுகளை தயாரித்தனர். அதன் வளர்ச்சியாகத் தான், இந்த  நீரில் போட்டு சமைப்பது நாளடைவில் பரிணமித்து இருக்கலாம்? அப்படி என்றால் நீராவிச் சமையல் ?? உங்கள் கேள்வி என் காதில் ஒலிக்கிறது . விரைவில் உங்களுக்கு சமர்ப்பிப்பேன்    நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • போட்டியில் இணைந்துகொண்ட @வாதவூரான் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 4 மணித்தியாலங்களே உள்ளதால் தாமதிக்காமல் விரைவில் கலந்துகொள்ளுங்கள்.   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன்
    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.