Jump to content

ஜே.வி.பி. யுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கூட்டணி?


Recommended Posts

ஜே.வி.பி. யுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கூட்டணி?

 

UNP and JVP joins maithri slfp

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் நடைபெறும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மேற்கொள்வதற்கு பல்வேறு மாற்று வழிகள் காணப்படுவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அறிவித்துள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனியாக வேட்பாளரை நியமிப்பதற்கு விண்ணப்பம் கையளித்துள்ளது. பல்வேறு கூட்டணிகள் காணப்படுகின்றன. மக்கள் விடுதலை முன்னணியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கூட்டணி அமைக்கவும் எம்மால் முடியும் எனவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

சுதந்திரக் கட்சியின் கிராமிய மட்டம் முதல் எம்.பிக்கள் வரையில் சகலருடையவும் எதிர்பார்ப்பு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதாயின் பொதுச் சின்னம் ஒன்றில் போட்டியிட வேண்டும் என்பது. இதனை எம்மால் விட்டுக் கொடுக்க முடியாது. அவ்வாறு விட்டுக் கொடுத்துவிட்டு மீண்டும் கட்சி உறுப்பினர்களை சந்திக்க முடியாமல் போகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனது கட்சியின் சின்னத்துக்கு மக்களின் அங்கீகாரம் உள்ளதாகவும், உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இதனை நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்து வருகின்றது. இந்நிலையில், கட்சியின் சின்னத்தை மாற்றினால்தான் கூட்டணி என்றிருக்கும் ஸ்ரீ ல.சு.கட்சிக்கு பேச்சுவார்த்தையில் வெற்றிபெற முடியாது என்பது சாதாரணமாக புரியும் ஒன்றாகும்.

அத்துடன், ஐக்கிய தேசிக் கட்சியின் கொள்கையுடன் உடன்படாததன் விளைவாகவே, நல்லாட்சி அரசாங்கத்தை கலைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்த அனுபவத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதென்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். வேறு வழியின்றி அவ்வாறான ஒரு தீர்மானத்துக்கு கட்சி வந்தாலும், மக்கள் மன்றத்தில் அதற்கு எதிர்ப்பு எழும் என்பது மட்டும் நிச்சயமானது.

இந்த நிலையில் ஸ்ரீ ல.சு.கட்சியின் பொதுச் செயலாளர் சொன்னது போன்று மக்கள் விடுதலை முன்னணியுடன் கூட்டுச் சேர்வதைத் தவிர வேறு வழியில்லை.

இதேவேளை, சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறி கூட்டணி அமைக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இருந்ததாக கூட்டு எதிரணி குற்றம்சாட்டி வந்தது. இதனாலேயே இறுதித் தருவாயிலில், பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில், தனித்துப் போட்டியிடுவதற்கான வேட்பாளர் விண்ணப்பத்தையும் தாக்கல் செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.

பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைக்க முன்னெடுக்கப்பட்டு வரும் பேச்சுவார்த்தையை இழுத்தடிப்புச் செய்வதற்கு காரணம், சஜித்தின் தீர்மானம் வெளிவரும் வரையிலாகும் என்ற குற்றச்சாட்டும் பொதுஜன பெரமுனவுடன் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எம்.பி.க்களினால் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது.

இப்போது, சஜித் பிரேமதாசவும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியே வருவதாக தெரியவில்லை. இதற்கான எந்தவொரு சமிக்ஞையையும் இதுவரை பொது மேடைகளில் அவர் வெளியிடவில்லை. கட்சித் தலைமையின் மீது தனக்கு நம்பிக்கையிருப்பதாகவே அவர் கூறிவருகின்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பொதுஜன பெரமுனவை குற்றம்சாட்டும் விதத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். தாமரைக் கோபுரத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில், கடந்த அரசாங்கத்தில் இக்கோபுர நிர்மாணப் பணியில் 200 கோடி ரூபா மோசடி இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார். இது தற்பொழுது அரசியல் அரங்கில் பேசு பொருளாக மாறியுள்ளது. எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவும் இக்கருத்துக்கு எதிராக நேற்று (18) அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

அத்துடன், பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் அனைவரினதும் எதிர்ப்புக்கும் ஜனாதிபதியின் கருத்து மாறியுள்ளது. தேர்தல் நெருங்கும் போது ஜனாதிபதி பொதுஜன பெரமுனவுக்கு எதிராக கருத்துத் தெரிவிப்பதாகவும் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு அரசியல் மட்டத்தில் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இப்படியான ஒரு சூழ்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இலவு காத்த கிளி போன்ற நிலைமை ஏற்படுமா? என கட்சியின் மீது அக்கரையுள்ள பொது மக்களுக்கு அச்சம் இருக்கின்றது என்பது மட்டும் மறைந்துள்ள உண்மையாகும்.  (மு)

– முஹிடீன் இஸ்லாஹி

http://www.dailyceylon.com/189574/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • @goshan_che கேட்ட கேள்விக்கு... நான் பதில் சொல்லி விட்டேன்.  விசுகர், உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 😂
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]     "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!"   "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"   "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"   "ஈடணம் விரும்பா சாதாரண மகனே ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?"   "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"   "ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல் ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"   "எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து எழுதுகோல் எடுத்து உலகை காட்டி எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?"   "ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல் ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?"   "ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"   "ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!"   "ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"   "ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈடணம் - புகழ் ஈடிகை - எழுதுகோல் ஈமத்தாடி - சிவன் உணக்கம் - உலர்ந்ததன்மை ஊறு - இடையூறு ஊனம் - உடல் குறை, இயலாமை எய்யாமை - அறியாமை ஏகாகாரம் - சீரான முறை ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு ஏகாந்தம் - தனிமை ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன் ஓகை - உவகை, மகிழ்ச்சி ஔவியம் - பொறாமை, அழுக்காறு ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன் ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை. ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்   [my own eulogy / A tribute written by myself to my death]        
    • ஏன் ராசா ஏன்??  ஆனால் கேள்விக்கு பதில் சொல்லாமல் போவது நன்றன்று. இல்லை இல்லை இல்லை 🤣
    • டுபாய் தன்னைப் பற்றி கட்டி வைத்திருந்த பிம்பம் உடைந்து போய்விட்டது இதனால். கடும் புயலும், மழையும் அதனால் வெள்ளமும் வரும் என்பதை ஏற்கனவே வானிலை எதிர்கூறல்கள் எச்சரித்து இருந்தும், அருகே இருக்கும் ஓமானில் இதே நிலை ஏற்பட்டதை கண்டும், எந்தவொரு முன்னேற்பாட்டையும் செய்து இருக்கவில்லை, முக்கியமாக டுபாய் விமான நிலைய நிர்வாகம். ஆயிரக்கணக்கானவர்கள் 30 மணித்தியாலங்களுக்கு மேல் விமான இன்றி தவித்து கிடந்த போதும், தண்ணீர் கூட அவர்களுக்கு விமான நிலைய ஊழியர்களால் வழங்கப்படவில்லை. குழந்தைகளுடன் பயணித்தவர்களுக்கு பால்மா, nappies கூட கொடுக்கப்படவில்லை என்று ஊடகங்கள் கூறுகின்றன. சிலர் 24 மணி நேரத்தும் மேலாக சாப்பாடு இல்லாமல் இருந்துள்ளனர். விமான நிலையத்தில் இருந்த அனைத்து உணவு விடுதிகளும் பூட்டப்பட்டுள்ளதாம். அதே போன்று செக் இன் கவுண்டரிலும் (check in counters), விமான சேவை கவுண்டர்களிலும் ஒரு ஊழியரும் இல்லாமையால், அடுத்தது என்ன என்று தெரியாமல் பலர் பிள்ளைகளுடன், குழந்தைகளுடன் தவித்து போய் விட்டனர்.  பல Mall களில் புயல் வரும் முன் மக்களை உள்ளே அனுமதித்து விட்டு, புயல் தொடங்கிய பின் கடைகளை இழுத்து மூடி, வந்தவர்களை தவிக்க விட்டுள்ளனர். Mall களில் இருந்து தம் தங்குமிடத்திற்கு செல்ல முடியாமல் பல நூறு உல்லாசப் பயணிகள் அல்லாடியிருகின்றனர். இதற்கு எல்லாம் மேலாக, Cloud seeding இனால் தான் இந்த புயல் வந்தது என்று அங்குள்ள சமூக வலைத்தளங்களில் முட்டாள் தனமாக ஒரு கூட்டம் வதந்தியை பரப்பிக் கொண்டு இருக்கு. Cloud seeding இனால், சாதரணமாக சிறு தூறல்களையும், சிறு மழையையும் தான் தருவிக்க முடியும். ஆனால் புயலை அல்ல,
    • ரணில் "தனது  மினி"யை... வழமைபோல் வீட்டின்  பின்பக்கம் தான் பார்க் பண்ணுவார். 😂 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.