Jump to content

நல்லாட்சியை நடத்தியவர்களின் செயற்பாடு வருத்தமளிக்கின்றது – சுமந்திரன் அதிருப்தி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

sumanthiran.jpg

நல்லாட்சியை நடத்தியவர்களின் செயற்பாடு வருத்தமளிக்கின்றது – சுமந்திரன் அதிருப்தி

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை ஒழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நல்லாட்சியை நடத்தியவர்களின் செயற்பாடு வருத்தமளிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த விசேட அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது என்ற யோசனைக்கு பெரும்பாலான அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் டுவிட்டரில் கருத்து தெரிவித்த அவர் “நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை தொடர்பாக நல்லாட்சியை நடத்தியவர்களின் செயற்பாடு வருத்தமளிக்கின்றது.

இது சுயநலம் மற்றும் சந்தர்ப்பவாத செயற்பாடாகும். கடந்த கால் நூறாண்டுகாலமாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையையே கண்டுவருகின்றோம்.

எவ்வாறாயினும் கொள்கை அளவில் எந்த நேரத்திலும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் ஆதரவை வழங்கும்” என பதிவிட்டுள்ளார்.

http://athavannews.com/நல்லாட்சியை-நடத்தியவர்க/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

நல்லாட்சியை நடத்தியவர்களின் செயற்பாடு வருத்தமளிக்கின்றது – சுமந்திரன் அதிருப்தி

இதைச் சொல்வதற்கு ஐந்து வருடங்கள் தேவைப்பட்டிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எலக்சென் கிட்ட, கிட்ட வருத்தம் வரும், பின்பு சளிப்பிடிக்கும், நவம்பர் 16ம் திகதி குலைப்பனே அடிக்கும். எலக்சென் முடிய எல்லாம் பறந்திடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

இதைச் சொல்வதற்கு ஐந்து வருடங்கள் தேவைப்பட்டிருக்கு.

 

1 hour ago, goshan_che said:

எலக்சென் கிட்ட, கிட்ட வருத்தம் வரும், பின்பு சளிப்பிடிக்கும், நவம்பர் 16ம் திகதி குலைப்பனே அடிக்கும். எலக்சென் முடிய எல்லாம் பறந்திடும்.

சுமந்திரன் இப்ப வாயை திறந்தது  பயங்கர அரசியல் ராசதந்திரமாம்.ரணில் பிள்ளை நல்லாய் திக்குமுக்காடப்படப்போறாராம்.சர்வதேசத்துக்கு ரணில் பதில் சொல்லியே ஆகோணுமாம்.இந்தியாவும் சிங்களத்தின்ரை கழுத்தை புடிச்சு திருகுமாம்.🤣

# எண்டு ஊர் உலகத்திலை கதைக்கினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, குமாரசாமி said:

 

சுமந்திரன் இப்ப வாயை திறந்தது  பயங்கர அரசியல் ராசதந்திரமாம்.ரணில் பிள்ளை நல்லாய் திக்குமுக்காடப்படப்போறாராம்.சர்வதேசத்துக்கு ரணில் பதில் சொல்லியே ஆகோணுமாம்.இந்தியாவும் சிங்களத்தின்ரை கழுத்தை புடிச்சு திருகுமாம்.🤣

# எண்டு ஊர் உலகத்திலை கதைக்கினம்

😂. அவங்க அப்பவே அப்படிதான், நாந்தான் பெரிசா எதிர்பாத்திட்டன்😂.

ஆனாலும் இன்னமும் நாங்கள் செய்ததுதான் ராசதந்திரம் எண்டு மீசையை வழிச்சு, மண்ணையும் துடைச்சுபோட்டு திரியேல்ல எண்ட மட்டில் சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

😂. அவங்க அப்பவே அப்படிதான், நாந்தான் பெரிசா எதிர்பாத்திட்டன்😂.

ஆனாலும் இன்னமும் நாங்கள் செய்ததுதான் ராசதந்திரம் எண்டு மீசையை வழிச்சு, மண்ணையும் துடைச்சுபோட்டு திரியேல்ல எண்ட மட்டில் சந்தோசம்.

மாவை.. மீண்டும் ஆயுதம் தூக்குவோம்  என்று சொன்னதை, எந்த ரகத்தில  சேர்க்கிறதாம். :grin:

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

மாவை.. மீண்டும் ஆயுதம் தூக்குவோம்  என்று சொன்னதை, எந்த ரகத்தில  சேர்க்கிறதாம். :grin:

செல்வம் அடைக்கலநாதன் தீர்வு தராவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று சொல்லி பல ஆண்டுகள் ஓடிவிட்டத்தையும் மறவாதையுங்கோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

இது சுயநலம் மற்றும் சந்தர்ப்பவாத செயற்பாடாகும். கடந்த கால் நூறாண்டுகாலமாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையையே கண்டுவருகின்றோம்.

பிறகெப்படி நிம்மல்  2015 இலிருந்து ஒவ்வொரு வருடமும் பொங்கல் விட்டால்  தீபாவழி என்று  புதுப்புது தீர்வு படமாக ரிலீஸ் பண்றான் ...நம்மள்  வாயில நல்லா வர்றான்  ஆனால் நிம்மல் திட்டினால் அந்த திட்டிற்கு மரியாதை இல்லை அதனால் நம்மள்  இப்படியே விட்றான்    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

மாவை.. மீண்டும் ஆயுதம் தூக்குவோம்  என்று சொன்னதை, எந்த ரகத்தில  சேர்க்கிறதாம். :grin:

போன பொங்கலுக்கு கலப்பை மம்பெட்டி தூக்கினவர்தானே? அண்ணர் ஒருபோதும் பேச்சு தவறார்.

5 hours ago, puthalvan said:

செல்வம் அடைக்கலநாதன் தீர்வு தராவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று சொல்லி பல ஆண்டுகள் ஓடிவிட்டத்தையும் மறவாதையுங்கோ!

இது ஒரு எழுத்து பிழையால் ஏற்பட்ட மயக்கம். அவர் சொன்னது உண்ணும் விரதம். அதை ஆள் இன்னும் வலு இறுக்கமாக கைக்கொள்வதை அவரின் பருமனை வைத்தே அறியலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

எலக்சென் கிட்ட, கிட்ட வருத்தம் வரும், பின்பு சளிப்பிடிக்கும், நவம்பர் 16ம் திகதி குலைப்பனே அடிக்கும். எலக்சென் முடிய எல்லாம் பறந்திடும்.

இதிலும்  நாம்  ஒரே கருத்துடன்  இருப்பது  மகிழ்வு  தருகிறது

Link to comment
Share on other sites

On ‎9‎/‎19‎/‎2019 at 1:19 PM, தமிழ் சிறி said:

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை ஒழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நல்லாட்சியை நடத்தியவர்களின் செயற்பாடு வருத்தமளிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தேர்தல். எனவே, கூட்டமைப்பினர் மக்கள் முன் செல்லவேண்டிய தேவை.

எதை மக்களை சொல்வது? தங்களுக்கு தேவையானதை கூறி மக்களை நம்ப வைக்க வேண்டிய தேவை உள்ளது.

அதற்கு அவர்கள் தயார்படுத்தும் ஒரு யுக்தியாக 'சனாதிபதி ஆட்சி முறை, நல்லாட்சி' என தவறுகளை மற்றையவர்கள் மீது சுமத்த ஆரம்பித்து விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ampanai said:

தேர்தல். எனவே, கூட்டமைப்பினர் மக்கள் முன் செல்லவேண்டிய தேவை.

எதை மக்களை சொல்வது? தங்களுக்கு தேவையானதை கூறி மக்களை நம்ப வைக்க வேண்டிய தேவை உள்ளது.

அதற்கு அவர்கள் தயார்படுத்தும் ஒரு யுக்தியாக 'சனாதிபதி ஆட்சி முறை, நல்லாட்சி' என தவறுகளை மற்றையவர்கள் மீது சுமத்த ஆரம்பித்து விட்டார்கள்.

roflphotos-dot-com-photo-comments-20190705171814.jpg

அதானே... எலி,  ஏன்.... "யங்கி"   போட்டுக் கொண்டு, ஓடுது என்று, யோதித்தேன். :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறிய வயது பெட்டைகள் இந்தா பார் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுட்டுப் போயிருப்பார்கள். மூட்டை மூட்டையாக தூக்கிக் கொண்டு போறதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை மட்டும் மடக்கி பிடித்திருக்கிறார்கள். கட்டாருடன் கதைத்து 7 பேரை விடுதலை செய்த மாதிரி ஜெய்சங்கர் வந்து கதைத்து இவர்களையும் விடுவிக்க வேண்டும்.
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ந‌ண்பா🙏🥰............................................
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • 0.50 ஈரோ பொருளை 2 ஈரோவுக்கு விற்றது சப்பை மேட்டர்தான்….. இது எழுதாமலே விளங்க வேணும்…. எழுதியிம் விளங்கவில்லை எண்டால் கஸ்டம்தான்🤣. ————— அம்சமான ஹம்சமாலி ரேஞ் ரோவரில் சுத்துறா…. அர்ஜூன் மகேந்திரன் அப்பீட்டு…. இலங்கை கிரிகெட்டில் கொள்ளை ரிப்பீட்டு…. திறைசேரியிலே திருட்டு…. ஷப்டர் தன் கழுத்தை தானே நெரித்தார்……. இதெல்லாம்தான் சப்பை மேட்டர்….80 ரூபா வடை அல்ல🤣. பிகு அது சரி எங்க நம்மட குட்டி சிறிதரன்? ஒரு கேள்வியோடு ஓடினவர்தான் - 2 நாளா தலை கறுப்பை காணோம்🤣 @பையன்26 பாருங்கோ சிறி அண்ணாவும் இது இப்ப நடந்தது என்கிறார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.