Jump to content

படத்தை நீண்டநாள் ஓட்டுவதற்காக விஜய் அரசியல் பேசுகிறார்- வைகை செல்வன்


Recommended Posts

படத்தை நீண்ட நாள் ஓட்டுவதற்காக நடிகர் விஜய் அரசியல் பேசுவதாக அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, 

 

vira.jpg

 

” தற்போதுள்ள சூழலில் திரைப்படங்கள் பத்து நாட்கள், இருபது நாட்கள் ஓடுவதே சிரமமாக இருக்கிறது. இந்த சூழலில் திரைப்படங்களை பரபரப்பிற்குள்ளாக்குவதும், அதே சமயத்தில் அப்படத்தின் பெயரை வெகுஜன மக்களிடையே கொண்டு செல்வதற்கும் பரபரப்பு அரசியல் தேவைப்படுகிறது. சமீப காலத்தில் திரைத்துறைக்கு இதுபோன்ற பரபரப்பு அரசியல் தொற்றிக்கொண்டுள்ளது. 

ஒரு காலத்தில் கதையை நம்பி படமெடுத்தார்கள். அந்தக் கதையின் வலுவான கட்டமைப்பால் அந்த திரைப்படம் நீண்ட நாட்களுக்கு, சற்றேக்குறைய ஓராண்டிற்கு மேல் எல்லாம் திரைப்படம் ஓடியிருக்கிறது. தற்போது கதையே இல்லாமல் திரைப்படத்தை எடுத்து விட்டு, எப்படியாவது ஒரு மாதம், இரண்டு பாதங்களுக்கு ஒட்டி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பரபரப்புக்குள்ளாக் குகின்றனர். 

அதனால் தான் இதுபோன்ற திரைப்பட விழாக்களிலும், இசை வெளியீட்டு விழாவிலும் இத்தகைய அரசியலைப் பேசி, அதன் மூலமாக தன்னுடைய திரைப்படத்தை ஓட்டுவதற்கான அரசியல் செய்து வருகின்றனர். அவற்றில் பல நடிகர்கள் இருக்கின்றனர். அவர்களில் விஜய் குறிப்பிடத்தக்கவர். அவரின் திரைப்படங்கள் அப்படித்தான் ஓடுகின்றன. 

சுபஸ்ரீ விவகாரத்தில் அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறது. யாரை எங்கு வைக்க வேண்டும் என்பதெல்லாம் விஜய் தெரிவித்துள்ளார். யாரை எங்கு வைக்க வேண்டுமோ... அங்கு தான் தமிழக மக்கள் வைத்திருக்கிறார்கள். அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒன்பது தொகுதிகளில் வெற்றியை அளித்து ஆட்சியைத் தொடர அனுமதித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா முதல் இன்று எடப்பாடி பழனிச்சாமி , ஓ. பன்னீர்செல்வம் வரை எங்களுக்கு மக்கள் வெற்றியைத் தந்திருக்கின்றனர். அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து ஆட்சியில் இருக்கிறது.” என்றார்.

 

https://www.virakesari.lk/article/65217

Link to comment
Share on other sites

“அரசியலில் புகுந்து விளையாடுங்கள்” விஜய்யின் பேச்சால் ஆர்ப்பரித்த ரசிகர்கள்!

பிரம்மாண்டமாக நடைபெற்ற பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் அசத்தல் பேச்சு அனைவரையும் கவனிக்க வைத்திருக்கிறது. எதிர்பார்த்தது போலவே சமீபகால அரசியல் நிகழ்வுகளை விலாசி தள்ளியுள்ளார் நடிகர் விஜய், வெகுநாட்களாக பொதுமேடைகளில் அடக்கி வாசித்து வந்த விஜய் சமீப காலங்களில் பொது மேடைகளில் வலுவான அரசியல் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். நேற்று நடந்த இசை வெளியீட்டு விழா பெரும் கொண்டாட்டமாக முடிவடைந்தது.
 
சமீபத்தில் பேனர் விழந்து இறந்த சுபஸ்ரீ விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கை குறித்து பேசிய நடிகர் விஜய், “சுபஸ்ரீ விவகாரத்தில் யார் மீது பழி போட வேண்டுமோ அதை விட்டுவிட்டு லாரி ஓட்டுநர் மீதும், பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுகிறார்கள். யாரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ அவரை அங்கே உட்கார வைத்தால் எல்லாம் நல்லா இருக்கும். என்னோட போட்டோ பேனரை கிழியுங்கள் ஆனால் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள். வாழ்க்கையும் ஒரு கால்பந்து போட்டிதான் சில சமயம் நம் அருகில் இருப்பவர்களே சேம்சைட் கோல் அடித்து விடுவார்கள். அரசியலில் புகுந்து விளையாடுங்கள் விளையாட்டில் புகுந்து அரசியல் செய்யாதீர்கள். சமூக வலைத்தளங்களை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துங்கள்” என்று ரசிகர்களுக்கு அறிவுறித்தினார். சமீப காலமாக பொதுமேடைகளில் அரசியல் கருத்துகளை சூசகமாக உதிர்த்து வரும் நடிகர் விஜய் அரசியல் வருகைக்கு வித்திடுகிறாரா என்கிற கேள்வி வலுவாக எழுந்துள்ளது.
 
தன் ரசிகர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து ரசிகர்கள் மீது கை ரைவக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டுள்ள விஜய் அரசியலில் புகுந்து விளையாடுங்கள் என்று சொன்னது அவர் ரசிகர்களை அரசியலுக்கு வரவைக்கு அழைப்பாகவே பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டைப்போலவே இந்த நிகழ்ச்சியிலும் விஜய்யின் பேச்சு அரசியல் தளத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அட்லி இயக்கி இருக்கும் பிகில் படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  

https://movies.ndtv.com/tamil/kollywood/thalapathy-vijay-speech-in-bigil-audio-launch-fans-happy-2104162?pfrom=home-lateststories

Link to comment
Share on other sites

 

ஒரு அண்ணா, அவர் சொல்லும் குட்டிக் கதை, கேட்கும் ஆயிரக்கணக்கான தம்பிகள் - அவர்கள் இடையே இருக்கும் பாசப் பரிமாற்றங்கள். பொதுவாக நடிகர் விஜய் பங்கேற்கும் இசை வெளியீட்டு விழாக்கள் அல்லது விருது நிகழ்வுகளுக்கு இருக்கும் அடிப்படை டெம்ப்ளேட் இதுதான். ஆனால், 'பிகில்' இசை வெளியீட்டு விழா இதிலிருந்து கொஞ்சம் மாறுபட்டே இருந்தது. இந்த வடிவங்களின் அம்சங்களையெல்லாம் கடந்து அதைத் தாண்டிய ஒரு உணர்வுக்கூடலாக இருந்தது.

'மெர்சல்', 'சர்கார்' எனக் கடந்த இரண்டு படங்களாக அவருடைய இசை வெளியீட்டு விழாக்களை நேரில் பார்த்தபோதும், 'பிகில்' நிகழ்ச்சியைப் பார்க்கும்போதும், கடந்த மூன்றாண்டுகளில் விஜய் மற்றும் அவர் ரசிகர்களுக்கு இடையே இருக்கும் இணக்கம் எப்படிப்பட்ட பரிணாம வளர்ச்சியை அடைந்திருக்கிறது என்பதை உணரமுடிகிறது.

படத்துக்குப் படம் விஜய்க்கான மக்கள் ஆதரவு, ஏதோவொரு புறக்காரணத்தால் கூடிக்கொண்டே போகிறது. மாநில அரசியல் முதல் தேசிய அரசியல் வரை ஒரு சிறிய விவாதத்தையும் அவர் படங்கள் கிளப்பிவிடுகின்றன. இந்த முறை அத்தகைய ஒரு சூழலுக்கான விதையை 'பிகில்' படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே விதைத்துவிட்டார் விஜய். அதற்கான எதிர்வினையைப் படத்தின் வெளியீட்டில் அறுவடை செய்யவும் காத்திருக்கிறார் என்றே, விழாவில் அவருடைய பேச்சின் மூலம் அறியமுடிகிறது.

'சர்கார்' பட இசை வெளியீட்டின்போது, அ.தி.மு.க கட்சிக்காரர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் சில திரையரங்கங்களில் கைகலப்பு ஏற்பட்டது. மேலும், திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த பேனர் கிழிக்கப்பட்டு, காவல் துறையினரால் அடித்து விரட்டப்பட்டனர் விஜய் ரசிகர்கள். அந்த நிகழ்வுகளைப் பற்றி மேடையில் விஜய் பேசியபோது, "நீங்க என் பேனர்ல கைவைங்க கிழிங்க... ஆனா, என் ரசிகர்கள்மேல கை வைக்காதீங்க... அவங்களால" என எச்சரிக்கை விடுத்தார். அதை அவர் சொல்லி முடித்த நொடி, அந்த அரங்கமே அதிர்ந்தபடி தங்கள் பதிலை வெளிப்படுத்தினார்கள் ரசிகர்கள்.

'வெறித்தனம்' பாடலைப் பாடி பேச்சைத் தொடங்கிய விஜய், தன்னுடைய பாணியில் படத்தின் மையக்கருவான மகளிர் கால்பந்தையும், வாழ்க்கையையும் இணைத்து, "லைஃப்கூட ஃபுட்பால் மாதிரிதான். நம்ம கோல்போட ட்ரை பண்ணுவோம். அதைத் தடுக்க ஒரு கூட்டமே வரும்... சில சமயம் நம்மகூட இருக்கிறவனே சேம்சைடு கோல் போடுவான்" எனக் கருத்து கூறினார். மேலும் தொடர்ந்தவர், "அவங்கள மாதிரி வாழணும், இவங்கள மாதிரி வாழணும்னு வாழாதீங்க. அவங்கள மாதிரி வாழத்தான் அவங்க இருக்காங்களே. நீங்க நீங்களாவே இருங்க. புடிச்சிருந்தா எடுத்துக்கோங்க, இல்லைன்னா விட்டுருங்க" என்று 'நண்பன்' பட வசனத்தை நினைவுகூர்ந்தார்.

பொதுவாக, விஜய் திரையில் பேசும் வசனங்களைவிட, பொதுவெளியில் பதிவுசெய்யும் கருத்துகளுக்கு வீரியம் அதிகமாக இருக்கும். சில நாள்களுக்கு முன் பேனர் விழுந்து விபத்தில் இறந்த சுபஶ்ரீக்கு மேடையில் இரங்கல் தெரிவித்தார் விஜய். என்றாலும், ஏற்கெனவே அந்தச் சம்பவம் நிகழ்ந்த அடுத்த சில நாள்களில் 'தன் படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கு பேனர் வைக்கக் கூடாது' என ரசிகர்களுக்குக் கட்டளையிட்டார். அந்தக் கட்டளையை ஏற்கும்விதத்தில் 'பிகில்' இசைவெளியீடு நடைபெற்ற தனியார் பொறியியல் கல்லூரி செல்லும் வழியிலோ, சென்னையின் வேறெந்த பொது இடத்திலோ எந்த பேனரும் இல்லை.

இதை, கடந்த சில இசை வெளியீட்டு விழாக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது. 'சர்கார்' படத்தின் இசைவெளியீடும் இதே கல்லூரி வளாகத்தில்தான் நடைபெற்றது. ஒரு சிறிய காட்டுப்பகுதியில் இந்தக் கல்லூரி இடம்பெற்றுள்ளதால், அதை அடையும் சாலை கொஞ்சம் குறுகலாக இருக்கும். 'சர்கார்' இசை வெளியீடு விழாவின்போது பேனர்களை வைத்து இருபக்கமும் அடர்ந்திருந்த மொத்தக் காட்டையும் மறைத்தேவிட்டனர் விஜய் ரசிகர்கள். தற்போது 'பிகில்' விழாவுக்கு அந்தச் சாலையில் ஒரு பேனர்கூட வைக்கவில்லை.

அப்படியிருந்தும் அந்தச் சாலையில் அவ்வளவு நெரிசல். கடந்தமுறைகூட இவ்வளவு சாலை நெரிசல் ஏற்படவில்லை. நடிகர் விவேக் இதுகுறித்து மேடையில் பேசும்போது, "அத்தி வரதருக்கு அப்புறம் அதிகமான கூட்டம்" எனத் தன் நகைச்சுவை ஸ்டைலில் குறிப்பிட்டார். நீலம், மஞ்சள், ஊதா, பச்சை எனப் பார்க்கிங்கைக்கூட டிக்கெட்டுக்கு ஏற்றவாறு பிரித்து வைத்திருந்தார்கள். என்றாலும், எந்த வண்டியாலும் விழா நடக்கும் கல்லுரியை எளிதில் அடைய முடியவில்லை.

அரங்கின் வாசலில் தொடங்கி, கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டருக்கு வண்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே நுழைந்துகொண்டிருந்தன. அந்தக் கல்லூரியின் பேருந்துகளிலும் ரசிகர்களை ஏற்றிச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், இந்தச் சாலை நெரிசலில் அந்தப் பேருந்துகளும் ஊர்ந்தே வந்தன. அதனால், ரசிகர்கள் ஒரு கட்டத்துக்குமேல் பேருந்துகளைவிட்டு இறங்கி கல்லூரியை நோக்கி நடக்கத்தொடங்கிவிட்டனர். இருபுறமும் நீண்ட வரிசையில் ரசிகர்கள் நடக்க, நடுவில், வண்டிகளின் வரிசை.

அப்போது ஒரு ரசிகரிடம் பேச்சுகொடுத்தேன். "எவ்வளவு தூரம் நடக்குறீங்க" எனக் கேட்டபோது, "அதெல்லாம் தெரியல ப்ரோ... ரொம்ப தூரமா நடக்குறோம்... எல்லாம் தளபதி ஸ்பீச், அப்புறம் அந்தக் குட்டிகதையக் கேட்கத்தான்" என்றார். கிட்டத்தட்ட வந்த பலரின் எதிர்ப்பார்ப்புகள் விஜய்யின் பேச்சும், அதில் இருக்கும் குட்டிக்கதைக்காகவும்தான்.

அந்த எதிர்ப்பார்ப்புகள் அவர்கள் நினைத்ததைவிட அதிகமாகவே நிறைவேறின என்பதை விஜய்யின் பேச்சுக்கு அரங்கம் அதிர்ந்த விதத்தில் அறிய முடிந்தது. தன்னைக் குறித்து பிற நடிகர்களின் ரசிகர்கள் செய்யும் ட்ரோல்களையும், தன் ரசிகர்கள் பிற நடிகர்களைச் செய்யும் கேலிகளையும் குறித்துப் பேசிய விஜய் "எம்.ஜி.ஆர் பிரசாரத்துக்குப் போன சமயத்துல அவரோட அமைச்சர் ஒருத்தர் எம்.ஜி.ஆரைக் குஷிபடுத்த கலைஞரைப் பற்றி தப்புத் தப்பா பேசினாராம். ஆனா, எம்.ஜி.ஆர் உடனே காரை நிறுத்தச் சொல்லி, அந்த அமைச்சரைத் திட்டி வழியில இறக்கிவிட்டுட்டு வந்துட்டாராம். ட்ரோல்ஸ், ஹேட்டர்ஸ்னு அதுல எல்லாம் கவனத்தைத் திருப்பாம, உங்களைச் சுத்தி நடக்கிற பிரச்னைக்கு ரியாக்ட் பண்ணுங்க" என்றார்.

இவற்றையெல்லாம்விட நிகழ்கால அரசியல் குறித்தும் சில கருத்துக்களைத் தெளித்தார் விஜய். சுபஶ்ரீயின் மரணத்தைப் பற்றிப் பேசியபோது, "யாருமேல நடவடிக்கை எடுக்கணுமோ, அவங்களை விட்டுட்டு, லாரி டிரைவர், பேனர் கம்பெனிக்காரர் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்குறாங்க" என நக்கலாகக் கூறினார். அதைப்போலவே, ஸ்போர்ட்ஸ் படம் என்பதால் அதைக் குறித்தும், "அரசியல்ல புகுந்து விளையாடுங்க... ஆனா, விளையாட்டுல அரசியல் பண்ணாதிங்க" என ஒரு அரசியல் பன்ச்சையும் பற்றவைத்தார்.

தன்னுடைய குட்டிக்கதையை, 'இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்' என்ற திருக்குறளோடு தொடங்கினார். "பூக்கடையில் வேலை பார்த்துட்டிருக்கிற ஒரு பையனை, தெரிஞ்ச பையனாச்சேன்னு பட்டாசுக் கடையில வேலைக்குச் சேர்த்தார் ஒருத்தர். அங்கே அவன் வழக்கம்போல ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கும் பட்டாசுமேல தண்ணி தெளிச்சு வித்திருக்கான்." என்ற கதையைக் கூறி, "அண்டு தி மாரல் ஆஃப் தி ஸ்டோரி இஸ்" என ஒரு நக்கலான ஆட்டிட்யூடுடன், "தகுதியானவங்களை மட்டும் தகுதியான இடத்துல வைங்க... சும்மா தெரிஞ்சவங்களையெல்லாம் வைக்காதீங்க" என ஃபைனல் அரசியல் டச் கொடுத்தார்.

 

https://cinema.vikatan.com/tamil-cinema/vijays-story-and-fans-reaction-at-bigil-audio-launch

 

Link to comment
Share on other sites

இரசனியோ இல்லை விசையோ யாரும் அரசியலுக்கு வரலாம். அது சனநாயக பண்பு.
ஆனால், தமிழகத்தில் முதல்வராக வர திரைப்படம் ஒரு படிக்கல்லாக அமைந்து விடுகின்றது. தெரிந்தோ தெரியாமலோ மக்கள் நடை முறை வாழ்விலும் இந்த திரைப்பட சாமானியர்கள் நல்லவர்கள் வல்லவர்கள் என எண்ணுகிறார்கள்.

அடுத்த தலைமுறையிலாவது இந்த அணுகுமுறையில் மாற்றம் வரும் என நம்புவோம்.
 

 

Link to comment
Share on other sites

யாரை எங்கு வைக்க வேண்டும் என நடிகர் விஜய்யை கேட்டு மக்கள் தீர்மானிப்பதில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

minister-kadambur-raju-slams-actor-vijay
 

கோவில்பட்டி

"நடிகர் விஜய்யை கேட்டுதான் யாரை எங்கு வைக்க வேண்டும் என்பதை தமிழக மக்கள் தீர்மானிப்பதில்லை" என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியிருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் நடிகரின் விஜய் பேச்சு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர், "ஒரு திரைப்பட நடிகராக தன்னுடைய படம் ஓட வேண்டும் என்பதற்காக சிலர் பரபரப்பாக பேசுகின்றனர். விஜயும் அப்படித்தான் பேசியிருக்கிறார். அவர் யாருடைய பேச்சைக் கேட்டு பேசினார் எனத் தெரியவில்லை. அவரது பல படங்கள் வெளியாக அரசு நல்ல உதவி செய்துள்ளது.

மெர்சல் படத்துக்காக எங்களிடம் வந்தார். நாங்கள் முதல்வரிடம் அழைத்துச் சென்று பேசவில்லை என்றால் கடந்த தீபாவளிக்கு மெர்சல் படம் வெளியே வந்திருக்காது. இப்படி நாங்கள் வித்தியாசமோ வேறுபாடோ பார்க்கவில்லை. ஆனால் பரபரப்புக்காக அந்தப்படம் ஓடுவதற்காக தன்னையும் அறியாமல் அந்தக் கருத்தை கூறியிருப்பார்.

மக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அதை சரியாகவே வைத்திருக்கிறார்கள். விஜய்யை போன்றவர்களின் பேச்சைக் கேட்டு மக்கள் முடிவு செய்யத் தேவையில்லை. அந்தளவுக்கு தன்னைத்தானே விஜய் நினைத்துக்கொண்டால் அது அவருடைய அறியாமை என்று தான் சொல்வேன்" என்றார்.

 

அப்படியென்றால் கமலும் அரைவேக்காடா?

அரசியல்வாதிகள் பற்றி நடிகர் கமல்ஹாசானின் கருத்து குறித்த கேள்விக்கு, "அரசியல்வாதிகள் எல்லாம் அரைவேக்காடு என்றால் கமலஹாசன் எதற்காக அரசியலுக்கு வந்தார்.

அவர் தன்னைத்தானே அரைவேக்காடு என்று ஒப்புக் கொண்டுள்ளார். அவர் அரசியல்வாதிகளை குறை சொல்லவில்லை சட்டம், காவல்துறை, நீதிமன்றம் ஆகியவற்றை குறை சொல்கிறார் என்றுதான் அர்த்தம்" என்றார்.

-எஸ்.கோமதிவிநாயகம்

https://www.hindutamil.in/news/tamilnadu/516648-minister-kadambur-raju-slams-actor-vijay.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.