Jump to content

பதினொராவது நாளாகவும் தொடரும் முன்னாள் படைவீரர்களின் போராட்டம்


Recommended Posts

(ஆர்.விதுஷா)

கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக     பாதுகாப்பு படையினரின் உரிமைகளைபாதுகாப்பதற்கான தேசிய  அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகம் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமையுடன் பதினொராவது நாளாகவும்  தொடர்ந்தது.

DSC_0574.jpg

இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இன்று காலை      கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ அந்த  பகுதிக்கு  விஜயம்  செய்திருந்தார். 

சம்பளப் பிரச்சினைக்கான தீர்வினை கூடிய விரைவில்  பெற்றுத்தருமாறுவலியுறுத்தி கடந்த 11 ஆம் திகதியிலிருந்து இந்த முன்னாள்  படை வீரர்கள்  சத்தியாக்கிரகப்போராட்த்தை முன்னெடுத்து வருகின்றனர். 

DSC_0581.jpg

இந்த போராட்டத்திற்கு  இராணுவ வீரர்களின் உரிமைகளை  பாதுகாப்பதற்கான  தேசிய  இயக்கம், சிவில் சங்கங்கள்  உள்ளடங்கலாக 11  இற்கும்  அதிகமான அமைப்புக்கள் ஆதரவினை வழங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/65232

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.