Jump to content

மக்கள் மனதை புரிந்து கொள்ள திராணியற்ற அரசியல் தலைமைகள்!


Recommended Posts

Friday, September 20, 2019 - 1:37pm
q5.jpg?itok=qT-sGOmH

நாடு ஜனாதிபதித் தேர்தலொன்றுக்கு முகங்கொடுக்கவிருக்கும் இன்றைய சூழ்நிலையில், நடத்தப்பட்டுள்ள எழுக தமிழ்' நிகழ்வானது குறிப்பிடும்- படியாக எந்தவொரு  செய்தியையும் மக்களுக்கு வழங்காமல், வழமையானதொரு அரசியல் கூட்டம் போல முடிவடைந்துள்ளது.      

வெறுப்பு அரசியல்தானா எக்காலமும் தொடரப் போகின்றது?  அவலத்தில் வீழ்ந்த தமிழினத்தை மீட்டெடுக்கும் சாணக்கியமான வழிவகைகள் குறித்து தமிழ் அரசியல் தரப்புகள் சிந்திக்கும் நாள் எப்போது?

தென்னிலங்கை அரசியல் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தல் முனைப்புகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் இன்றைய நிலையில், தமிழ் மக்கள் பேரவையினர் வடக்கில் மற்றுமொரு 'எழுக தமிழ்' நிகழ்வை நடத்தியுள்ளனர்.  

இதற்கு முன்னரும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 'எழுக தமிழ்' நடத்தப்பட்டிருந்தது. இவற்றுக்கு தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவரும், வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரனே தலைமை தாங்கியிருந்தார்.  

இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் முற்றவெளியில் 'எழுக தமிழ்' நடைபெற்றது. ஜனாதிபதித் தேர்தலொன்றுக்கு நாடு முகங்கொடுக்கவிருக்கும் சூழ்நிலையில், தமிழ் மக்களுக்கு ஒரு செய்தியை வழங்கும் மாநாடாக இது அமையும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், வழமை போன்று அதே குற்றச்சாட்டுக்களை அடுக்கும் ஒன்றாகவே இதுவும் அமைந்திருந்ததைப் பார்க்க முடிந்தது.  

வடக்கு, கிழக்கில் சிங்கள பெரும்பான்மை ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகவும், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சர்வதேசத்தின் தலையீடு அதிகரிக்கப்பட வேண்டுமென்றும் இம்மாநாட்டில் விக்னேஸ்வரன் அதிகம் பிரஸ்தாபித்திருந்தார். 

 சுதந்திரத்துக்குப் பின்னர் நடைமுறைக்கு வந்த ஒற்றையாட்சி முறையில் ஆரம்பித்து தமிழர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருப்பதுடன், தொடர்ந்தும் இந்த நிலைமை நீடித்து வருகிறது.

இதனைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் இன அழிப்புக்களுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.  

குறிப்பாக 2009ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டும் என பல நாடுகள் வலியுறுத்தியுள்ள போதும், இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக காணாமல் போனவர்களின் உறவுகள் 900நாட்களுக்கு மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோன்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் பலவற்றுக்குத் தீர்வுகளை வழங்காது அரசாங்கம் காலங்கடத்தி வருவதாகவும் எழுக தமிழில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. 

அது மாத்திரமன்றி ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பிலும், அவற்றுக்கு உரிய அழுத்தங்களை சர்வதேச நாடுகள் தொடர்ந்தும் வழங்க வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் தனது உரையில் வலியுறுத்தியிருந்தார்.  

'எழுக தமிழ்' மூலம் தமிழ் மக்கள் தொடர்பில் சர்வதேசத்துக்கு வலுவான செய்தியொன்றை கூற முனைவதாகவும் அவருடைய உரையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 

 ஏற்கனவே நடத்தப்பட்ட 'எழுக தமிழ்' மக்கள் பேரணியிலும் இதற்கு சமாந்தரமான தீர்மானங்களும், பேச்சுக்களுமே இடம்பெற்றுள்ளன. இவ்வாறான நிலையில் மற்றுமொரு 'எழுக தமிழ்' நடத்தப்பட்டு ஏற்கனவே முன்வைக்கப்பட்ட விடயங்கள் மீண்டும் முன்வைக்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. 

 நல்லாட்சி எனக் கூறி மத்தியில் அரசாங்கத்தை உருவாக்குவதற்கு பங்களித்தவர்கள் என்ற ரீதியில் தமிழ் மக்களுக்கு அரசாங்கத்திடம் கேள்விகளைக் கேட்பதற்கான உரிமை உண்டென்பதை மறுத்து விட முடியாது. இருந்த போதும் தமிழ் மக்களை தொடர்ந்தும் உசுப்பேற்றித்தான் அரசியல் செய்ய வேண்டுமா என்ற கேள்வியும் இங்கு காணப்படுகிறது.  

எல்.ரி.ரி.ஈயினரின் காலப் பகுதியில் 'பொங்கு தமிழ்' என்ற பெயரில் நடத்தப்பட்ட நிகழ்வுகள் அக்காலத்தில் மக்களை உசுப்பேற்றும் வகையில் அமைந்ததுடன், குறிப்பாக அதில் பங்கேற்ற இளைஞர்கள் பலர் பிற்காலப் பகுதியில் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு உட்படுத்தப்பட்டதும் பதிவுகளில் காணப்படுகின்றன. 

 இவ்வாறான பின்னணியில் வெறுமனே குற்றச்சாட்டுகளை மட்டும் சுமத்தும் மாநாடுகளால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதே இங்கு காணப்படும் கேள்வியாகும். தமிழ் அரசியல்வாதிகள் எப்பொழுதும் எதிர்ப்பு அரசியல்தான் செய்ய வேண்டுமா? மத்திய அரசாங்கத்தை எதிர்ப்பதன் மூலம்தான் எமது உரிமைகளை அடைய முடியுமா? என்ற கேள்விகளும் காணப்படுகின்றன.  

மறுபக்கத்தில் மத்திய அரசாங்கத்துக்கு ஆதரவாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் எதனைச் சாதிக்க முடிந்தது என்ற கேள்விகளும் எழத்தான் செய்கின்றன. எனினும், சாதிப்பதற்கான வாய்ப்புகள் இருந்த போதும் அவற்றை சரியான முறையில் அவர்கள் பயன்படுத்தவில்லை என்பதே பலருடைய கருத்தாகவிருக்கின்றது.

அரசாங்கத்தை பல ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், சரியான நிபந்தனைகளுடன் அந்த ஆதரவுகளை வழங்கியிருந்தால் தமிழ் மக்களின் பல பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கண்டிருக்க முடியும் என்பது மற்றுமொரு விடயம். 

 தமிழ்க் கூட்டமைப்பு மீதான பார்வை அப்படியிருக்க, விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் போன்றவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பார்கள் என்பதே இங்கு நோக்கப்பட வேண்டியுள்ளது.  

வெறுமனே இரத்தத்தைச் சூடாக்கும் குற்றச்சாட்டுகளையும், உசுப்பேற்றும் பேச்சுகளையும் நடத்தி மக்களை தொடர்ந்தும் பரபரப்பு நிலையில்தான் வைத்திருக்கப் போகின்றார்களா? இதனை விடுத்து ஆக்கபூர்வமான வேலைத் திட்டங்களைத் தயாரித்து முடிந்தவரை அவற்றை மத்திய அரசாங்கத்துடன் போராடி நிறைவேற்றப் போகின்றார்களா? என்றகேள்வியே இங்கு காணப்படுகிறது.  

சீ.வி.விக்னேஸ்வரன் வடமாகாண முதலமைச்சராக இருந்த போது தனக்கிருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்தி மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறான தீர்வுகளை வழங்கினார் என்பது வடபகுதி மக்கள் மத்தியில் இன்னமும் குழப்பமான நிலைப்பாட்டிலேயே உள்ளது. வெறுமனே மத்திய அரசாங்கம் எதனையும் செய்ய விடவில்லையெனக் குற்றஞ்சாட்டாமல் தனது அதிகார எல்லையைப் பயன்படுத்தி மக்களின் பிரச்சினைகளை எந்தளவுக்கு நிவர்த்தி செய்தார் என்பதும் இங்கு நோக்கப்பட வேண்டியுள்ளது.  

மத்திய அரசாங்கம் பல்வேறு முட்டுக்கட்டைகளை இட்டிருந்தது என்பது உண்மையாகவிருந்தாலும் முடிந்தளவு போராடி மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய முற்பட்டிருக்க வேண்டும் என்பதே அரசியல் அவதானிகளின் வாதமாகவிருக்கின்றது. 

 நாடு ஜனாதிபதித் தேர்தலொன்றுக்கு முகங்கொடுக்கவிருக்கும் சூழ்நிலையில் நடத்தப்பட்டுள்ள இந்த 'எழுக தமிழ்' நிகழ்வானது குறிப்பிடும்படியாக எந்தவொரு செய்தியையும் மக்களுக்கு வழங்காது வழமையானதொரு அரசியல் கூட்டம் போல முடிவடைந்துள்ளது. 

 மீண்டும் மீண்டும் வெறுப்பு அரசியலை மட்டும்தான் தமிழ் அரசியல் தரப்பு செய்யப் போகின்றதா அல்லது ஆக்கபூர்வமான வேலைத் திட்டங்களைத் தயாரித்து, அவற்றை மத்தியில் போட்டியிடும் தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு வழங்கி பேரம் பேசும் சக்தியொன்றின் ஊடாக தமிழினத்தின் துயர் துடைக்கும் புத்திசாதுரியமான அணுகுமுறைகளை முன்னெடுக்கப் போகின்றதா?  

 இதனை தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகள் தீர்மானிக்க வேண்டும். அவர்கள் எடுக்கும் முடிவுகள் ஆகக் குறைந்தது தமிழ் மக்களின் அன்றாட மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்காவது தீர்வு வழங்குவதாக இருக்க வேண்டும். 

அரசியல் உரிமைகளைப் பேசிப் பேசி தமிழ் அரசியல் தரப்பு பன்னெடும் காலமாக ஏராளமான உரிமைகளை கோட்டை விட்டுள்ளது. தமிழ் அரசியல் தலைமைகளால் தமிழ் இனத்துக்கு கிடைத்த பலன்கள் எதுவுமில்லை. 

தமிழினத்துக்கு அரசியல் உரிமைகள் அவசியம்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால் இவ்வாறு காலம் கடத்துவதால் தமிழர்கள் இழந்த உரிமைகள் ஏராளம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். யுத்தத்தில் வீழ்ந்த இனமொன்று இன்னுமே அவலத்தில் இருந்து மீண்டெழவில்லை.

தமிழர்களை அவலத்தில் இருந்து கைதூக்கி விட வேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல் தரப்புகளுக்கு உண்டு. அவர்களது ஆக்கபூர்வமான செயற்பாடுகளையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

தமிழினத்தை உருவேற்றும் செயற்பாடுகள் பலனைத் தந்து விடப் போவதில்லை. மதிநுட்பமான செயற்பாடுகளே இன்று அவசியம். வீழ்ந்து போன இனத்தை மீண்டெழச் செய்வதற்கு தமிழ் அரசியல் தரப்புகளின் இன்றைய செயற்பாடுகள் பயனைத் தருமென்று நம்ப முடியாதிருக்கிறது. 

சாரங்கன்

https://www.thinakaran.lk/2019/09/20/கட்டுரைகள்/40675/மக்கள்-மனதை-புரிந்து-கொள்ள-திராணியற்ற-அரசியல்-தலைமைகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.