Jump to content

இந்தியாவிலிருந்து தாயகம் திரும்ப 11,356 பேர் விண்ணப்பம்


Recommended Posts

இந்தியாவுக்கு அகதிகளாக சென்றவர்கள் தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன், பேச்சுவார்த்தைகள் நடத்தி விரைவில் உரிய தரவுகளை திரட்டி பாராளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கையெடுப்பதாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்தது.

2009 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டுவரை அகதிகளாக இந்தியாவுக்கு சென்றவர்களில் 7,753 பேர் இலங்கைக்கு திரும்பியுள்ளனர். மேலும் 11,356 இலங்கைக்கு திரும்ப விண்ணப்பித்திருந்ததாகவும் அமைச்சு குறிப்பிட்டது. அத்துடன் 1949 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சென்றவர்களின் எண்ணிக்கை 5,10,000 பேர் எனவும் அமைச்சு தெரிவித்தது

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது, இந்தியாவுக்கு சென்றவர்கள் மற்றும் அங்கிருந்து நாடு திரும்பியவர்கள் தொடர்பாக எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கேள்வியெழுப்பினார்.

இக் கேள்விக்கு அமைச்சு சார்பில் அரச தரப்பு பிரதம கொரடாவான அமைச்சர் கயந்த கருணாதிலக பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

1949ஆம் ஆண்டு 2,415 பேர், 1950 இல் 4,717 பேர், 1951இல் 12,000 பேர் , 1953இல் 9,323 பேர் , 1954இல் 13,377 பேர் , 1955இல் 22,871 பேர் , 1956இல் 15,985 பேர் 1963இல் 7,357 பேர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலமாக ஆறு இலட்சம் பேர் இந்தியாவுக்கு அனுப்ப தீர்மானம் எடுக்கப்பட்டது. எனினும் இதில் 94,000 பேர் இந்தியாவுக்கு செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர். ஏனைய 5,06,000 பேரில் 3, 42, 000 பேர் 1983 ஆம் ஆண்டு காலத்துக்குள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். அத்துடன் 1983 ஆம் ஆண்டு உடன்படிக்கையில் மூலமாக 80,000 பேர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். எனினும் அதே ஆண்டில் இந்த நாட்டில் ஏற்பட்ட இனக் கலவரத்தின் மூலமாக இந்தியாவுக்கு செல்லும் கப்பல் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்ட காரணத்தினால் எஞ்சிய மக்கள் தொடர்ந்தும் இலங்கையில் தங்கியிருந்தனர்.

யுத்த காலகட்டத்தில் பல்வேறு வழிகளைக் கையாண்டு அதிகளவிலான மக்கள் இந்தியாவுக்கு சென்றனர். ஆனால் எவ்வளவு எண்ணிக்கை என்ற தொகை உரிய அமைச்சிடம் இல்லை. 1983 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையில் அகதிகளாக பலர் இந்தியாவுக்கு சென்றுள்ளனர். அவர்களின் எண்ணிக்கையும் இல்லை.

2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரையில் அகதிகளாக இந்தியாவுக்கு சென்றவர்களில் மீண்டும் இலங்கைக்கு திரும்ப விரும்புவதாக விண்ணப்பம் செய்தவர்களின் எண்ணிக்கை 11,356 ஆகும். அவற்றில் 7,753 பேர் இலங்கைக்கு அதிகாரபூர்வமாக வருகை தந்துள்ளனர். இதில் 2009-2011 வரையில் இலங்கைக்கு வந்தவர்களின் எண்ணிக்கை எதுவும் பதிவில் இல்லை. அதன் பின்னரான காலங்களில் எண்ணிக்கைகள் உள்ளது என்றார்.

இந்நிலையில் மீண்டும் எழுந்த உதய கம்மன்பில, இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு சென்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? அவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பி வர விரும்பவில்லை என்றால் அது குறித்து அரசாங்கம் இந்திய அரசாங்கத்திடம் கலந்துரையாடியுள்ளதா? அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன எனக் கேட்டார்.

இதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், இந்தியாவுக்கு சென்றவர்களின் எண்ணிக்கை என்ன என்பது இல்லை. இதனையடுத்து மீண்டும் எழுந்த உதய கம்மன்பில எம்.பி. , இங்கு இல்லை என்றாலும் இந்தியாவிடம் இருக்குமே, அவர்களிடம் யுத்த காலகட்டத்தில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிகையை கேட்க முடியும் எனவே அதனைப்பெற்று சபையில் சமர்ப்பியுங்கள் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

https://www.thinakaran.lk/2019/09/20/உள்நாடு/40638/இந்தியாவிலிருந்து-தாயகம்-திரும்ப-11356-பேர்-விண்ணப்பம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.