Jump to content

புலம்பெயர் வாழ்வும் திருமணங்களும் 


Recommended Posts

புலம்பெயர் வாழ்வும் திருமணங்களும் 

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயமாகின்றது என்று கேட்டு வளர்ந்தவர்கள் பலர். இனப்படுகொலையில் இருந்து தம்மை பாதுகாக்க புலம்பெயர்ந்து மேற்குலகில் வாழுகபவர்கள் எம்மில் ஐந்து இலட்ச்சத்திற்கும் மேல். அதிலும் கனடா நாட்டில் வாழுபவர்கள் அதிகம்.  

புதிய தேசம், புதிய மொழிகள், புதிய அனுபவங்கள். இருந்தாலும் எம்மில் பலருக்கும் சில பழமைவாத முறைகளை புலம்பெயர் நாடுகளிலும் தொடர ஆசை. முதலில் மொழியை, பின்னர் கல்வியை மற்றும் தொழில்வாய்ப்புக்களை கற்று முன்னேற அதிகம் எண்ணுவோம். அதில் கணிசமான வெற்றியும் கொண்ட சமூகம் எமது சமூகம். 

வெற்றியை அளவிடும் ஒரு சமூக அளவுகோலாக அந்தந்த சமூக குற்றச்செயல்களும் பார்க்கப்படுகின்றன. அதில் திருமணம் சார்ந்த குற்றங்களும் உண்டு. வந்த நாட்டில் மொழியை கற்கின்றோம், அதற்காக இலவச வகுப்புக்களும் உள்ளன. பலரும் திருமணம் சார்ந்த சட்டங்களை படிக்க தவறுகிறார்கள். 

கனடா போன்ற நாட்டில் திருமணம் என்பது ஒரு உறவு சம்பந்தப்பட்ட இரு மனங்களில் ஒன்றுகூடல் அல்ல. அது ஒரு வியாபார நிறுவனமும் கூட. அதாவது பன்னிரண்டு மாதங்கள் ஒன்றாக வாழ்ந்தால், திருமணம் செய்யவில்லை என்றாலும் கூட, இணைந்த ஒரு பாலார்களும் ஒரு நிதி மற்றும் சமூக நிறுவனத்தை ஆரம்பித்து அது சட்ட வரையறைக்குள் வந்து விட்டது என பார்க்கலாம். 

உதாரணத்திற்கு, நபர் அ மற்றும் நபர் ஆ ஒன்றாக வாழ்ந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இப்பொழுது பிரிய முடிவெடுத்து விட்டார்கள். 
1)  நபர் அ, வாழ்வை ஆரம்பிக்கும் பொழுது கொண்டுவந்த செல்வம் 0. நபர் ஆ கொண்டுவந்தது 10000. இப்பொழுது அவர்கள் சொத்து 20000. சட்டப்படி ஆளுக்கு அரைவாசி, 10000

2) நபர் அ சொந்த வீட்டில் இருக்கின்றார். அப்பொழுது அந்த வீட்டின் சொத்து 10000. இப்பொழுது வீட்டின் சொத்து 20000. வீடு பிரிக்கப்படும்பொழுது நபர் அ அரைவாசி 10000 கட்டி வீட்டை முழுமையாக்கலாம் இல்லை வீடு விற்க்கப்படலாம்.

3) நபர் ஆ ஏற்கனவே 20வருடம் வேலைசெய்து உள்ளார். அவரின் ஓய்வூதீய தொகை இந்த இரண்டு ஆண்டில் 2000. நபர் அ அதில் 1000க்கு உரிமை கோரலாம். 

4) நபர் ஆ அதிகம் உழைப்பவர். நபர் அ வுடன் அவர்களின்  ஒரு பிள்ளை வாழ்கின்றது. நபர் ஆ மாதம் அவரின் வருமானத்தில், வரிகள் போக, ஒரு நாற்பது வீதம் அளவில் செலுத்தவேண்டும். அதை விட பிரத்தியேக தேவைகளுக்கு பணம் செலுத்தவேண்டும். உதாரணம் நீச்சல் வகுப்பு. 

இன்றைய உலகில், கனடா போன்ற நாடுகளில் பலரும் திருமணம் செய்வதில்லை. சிலர், இந்த பன்னிரண்டு மாத காலம் தொடராமல் இடையில் ஒரு முறிவை ஏற்படுத்துவார்கள். இன்றும் சிலர், ஒரு வர்த்தக உடன்படிக்கைக்கு வந்தே திருமணம் செய்வார்கள். 

தொடரலாம்.       
 

Link to comment
Share on other sites

புதிதாய் நாட்டிற்கு வருபவர்கள் மொழி கற்கும்பொழுது, அங்கே காவல்துறை அதிகாரியையும் காணும் சந்தர்ப்பம் கிடைக்கலாம். அப்படி ஒரு நிகழ்வு நடக்கும் பொழுது பலரும் அதிக கவனத்தை  அந்த நிகழ்வில் செலுத்துவதில்லை. தேவை வரும்பொழுது மட்டுமே தேடிப்போவதும் அப்பொழுது தவறுகளை செய்வதும் பொதுவாக திட்டாமிடாதவர்கள் செய்யும் தவறு. 

சில இடங்களில் பொதுவாக தென் கிழக்கு நாடுகளில் பெண்கள் ஆண்களுக்கு சம உரிமை இல்லாதவர்கள் என்ற கருத்து உள்ளது. அதனால். பெண்கள் உரிமை பற்றியும், அவர்கள் ஆண்கள் துணை இன்றி வாழ முடியும் என்ற ஆலோசனையும் வழங்கப்படலாம். ஆனாலும், பலருக்கும் இந்த சிந்தனை பற்றிய தேவை அப்பொழுது பெரிதாக இருக்காது. காரணம் ஆசை அறுபது நாளும் மோகம் முப்பது நாளும் கடந்து சென்று இருக்காது. 

பொருளாதார தேவைகள் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளரும். ஆசைகளும் தேவைகளும் ; அவசியம் இல்லாத வாங்கலும் நடக்கும். நாளடைவில் கடன் சுமை கூடி அது கல்லானும் துணை புல்லானாலும் துணை என்பதில் இருந்து தடம் புரள ஆரம்பிக்கும். ஒருவர் மட்டும் சிக்கனம் என்ற பொருளாதார கொள்கையை அமுல்படுத்த முடியாத நிலை உருவாகும்.   

புதிய பழைய நண்பர்கள் மதீப்பீட்டுக்களை செய்ய ஆரம்பிப்பார்கள். வீடு இன்றும் வாங்கவில்லையா?  மகிழூந்து புதிதாக வாங்கவில்லையா?  விடுமுறைக்கு போர போராவிற்கு போகவில்லையா என கேட்ப்பார்கள். இதுவும் ஒரு வித 'ஆலோசனை ' தான். 

இந்த பிரச்சனைகளுக்குள் மூன்றாம் தரப்பினர் புகுந்து விட்டால் நிலைமை கை மீறி போகும்  நிலைமை இலகுவில் உருவாகிவிடும். ஆரம்பத்தில் இலவச ஆலோசனைகள் தரப்படும். பின்னர் அது பிரிவு, விவாகரத்து என வந்துவிட்டால், சட்டத்தரணிகள்,  இரவுபகலாய் உழைத்தது எல்லாவற்றையும் சுரண்ட ஆரம்பித்துவிடுவார்கள். அந்த நிலைக்குள் சென்றுவிட்ட பலராலும் மீள முடிவதில்லை. மன நோயாளிகாக மாறுபவர்களும் உண்டு. வேலைகளை இழந்து போதைக்கு அடிமைபடுபவர்களும் உண்டு, தற்கொலை செய்ப்பவர்களும் உண்டு 😞 

நாம் எதற்ககாக புலம்பெயர்ந்தோம், எதற்காக ஓன்றிணைந்தோம், எதை சாதிக்க விரும்பினோம் என்ற குறிக்கோளை நாளும் மறக்காமல் இருந்தால் வாழ்க்கை மகிச்சியாக இருக்கும்.   விட்டுக்கொடுத்து வாழுதல் என்பது ஒரு தாரக மந்திரம். 

மேற்குலக  நாட்டில் பிறந்து வாழ்பவர்கள் இந்த சிக்கல்களுக்குள் மாட்டுப்படுவது ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கலாம். காரணம், அவர்கள் இதில் நன்றாகவே பட்டு கொஞ்சம் தெளிந்தவர்களாக இருப்பார்கள். சூடு கண்டால்  பூனை அடுப்பங்கரையை நாடாது தானே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ampanai said:

-----

இன்றைய உலகில், கனடா போன்ற நாடுகளில் பலரும் திருமணம் செய்வதில்லை. சிலர், இந்த பன்னிரண்டு மாத காலம் தொடராமல் இடையில் ஒரு முறிவை ஏற்படுத்துவார்கள். இன்றும் சிலர், ஒரு வர்த்தக உடன்படிக்கைக்கு வந்தே திருமணம் செய்வார்கள். 

தொடரலாம்.       

அம்பனை.... வர்த்தக திருமண முறையை...
இந்தியா, பாகிஸ்தான், ஆபிரிக்க நாட்டவர்கள் தான் மேற் கொள்வார்கள்.
அதில்..... 
எங்களுடைய 
நாடும்?
இருக்கா?
இருந்தது  என்றால், ஓம். என்று மட்டும் சொல்லி விடாதீர்கள். 

Link to comment
Share on other sites

துன்புறுத்தல் : ஆங்கிலத்தில் ' அபியூஷ் ' (abuse) என்ற வார்த்தை. 

பல்வேறு கலாச்சாரங்களை கொண்டவர்கள் கனடா போன்ற நாட்டில் குடிபுகுந்து தம்மையும் இந்த நாட்டையும் வளமாக்க வருபவர்கள் சில மூட்டை முடிச்சுக்களுடன் வருபவர்கள். பலராலும் அதை உரிய இடத்தில் இறக்கி வைக்க முடிவதில்லை. 

உதாரணத்திற்கு, பொதுவாக பல கலாச்சாரங்களில் குரலை உயர்த்தி கதைப்பது வழமை. இதை இந்த நாட்டில் பல தலைமுறையாக வாழ்பவர்கள் இதை ஒரு துன்புறுத்தலாக பார்க்க கூடும். அத்துடன் மட்டுமல்லாது, காவல் துறைக்கும் ஒரு அழைப்பை போட்டு இந்த வீட்டிற்குள் ஒரு வெடிப்பை ஏற்படுத்திக்கூட விடலாம். வரும் காவல் துறையும் இருவரையும் பிரித்து கேள்விகளை கேட்டு, 'இலவச ஆலோசனைகளையும்'  தந்து வைப்பார்கள். 

வங்கி கணக்குகள் கூட புதிதாய் புலம்பெயர்ந்து வந்து வாழ்க்கை நடத்துபவர்கள் ஒற்றை கணக்கை வைத்திருப்பார்கள். நாளடைவில், ஆளுக்கு தனி கணக்கு ஆகிவிடும். ஆனால், அதுவே சிறப்பு என்பது பலரின், கணக்கும். காரணம், என்னதான் குடும்பம் என்னறாலும் கொஞ்சம் சுய தேவைகளுக்கு மதிப்பும் கொடுக்கவேண்டும்.    

பொதுவாக ஒருவர் இன்னொருவருக்கு 'அடிப்பது' குற்றம். கையை இல்லை காலை தூக்கினாலும் குற்றம். இதை " பூச்சிய பொறுமை " என ஆங்கிலத்தில் ஜீரோ டொலரன்ஸ்' (zero tolerance) என்பார்கள். இவைபோன்றவற்றை அறிந்தும் மற்றும் நடைமுறையில் கையாள்வதும் நவீன வாழ்வின் வெற்றிக்கு அத்தியாவசியம். 

நான் பெரிது நீ பெரிது என எண்ணாமல் நாம் என்ற எண்ணம் வேண்டும். திருமண வாழ்க்கை என்பதும் ஒரு போர் தான். சின்ன சின்ன  சண்டைகளில்   தோல்விகளை காணலாம். ஆனால், இறுதியில் போரில் வெல்ல வேண்டும் என்ற நினைப்பு இருந்தால் மங்களம், சுபம். 

Link to comment
Share on other sites

பிரிந்து வாழுதலும் விவாகரத்தும் 

திருமணம் செய்யும் பொழுது வாழும் நகரத்தில் திருமணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அப்பொழுது அதை உறுதிப்படுத்தும் ஒரு பத்திரமும் தரப்படுகின்றது. சேர்ந்து வாழும்பொழுது, இரு மனங்களும் இணைந்து வாழ்வில்  மகிழ்ச்சியையும், முன்னேற்றத்தையும் கனவுகளை நனவாக்கும் பாதையில் பயணிப்பார்கள். 

இவர்கள் ஒன்றாக வாழ்வதை அரசும் வருடாந்த வருமான வரி பத்திர தாக்கலில் அரசு  உறுதிப்படுத்துகின்றது. சேர்ந்து வாழுவதால் அவர்களும் வரி சலுகையையும் பெறுகிறார்கள்.   

சேர்ப்பித்து இரு மனங்கள் பிரிந்து வாழ முடிவெடுக்கும் பொழுது, இதே வரித்தாக்கல் அதை உறுதிப்படுத்தும் ஒரு மூலமாக இருக்கின்றது. ஒரு வருடத்திற்கு மேலாக பிரிந்து வாழும்பொழுது எந்த கேள்வியும் இல்லாமல் பிரியலாம். ஆனால், அதற்கு இரு நபர்களும் கை ஒப்பம் இட்டு மீண்டும் பதிந்த நகராட்சியில் பதியவேண்டும். இல்லாவிட்டால் சட்டப்படி விவாகரத்து என அமையாது. 

சட்டப்படி விவாகரத்து இல்லாமால் நபர் ஆ முதலில் இறந்துவிட்டால் அவரது சொத்துக்கள் நபர் அ விற்கு செல்லும். ஆனால், நபர் ஆ ஒரு உயிலை எழுதி இருந்தால், அதன் படி அவரின் சொத்து பிரிக்கப்படும். 

ஆனால், பலரும் உயிலை எழுதுவதும் இல்லை நிலைமைக்கு ஏற்ப அதனை மாற்றி எழுதுவதும் இல்லை. 

சிலர் சட்டப்படி விவாகரத்து எடுத்து மீண்டும் திருமணம் செய்வார்கள். நபர் அ அவ்வாறானவர். அவருக்கு பிள்ளைகள் நபர் ஆ ஊடாக உள்ளன. நபர் அ மறுமணம் செய்த நபர் இ விற்கும் ஏற்கனவே பிள்ளைகள் உள்ளன. நபர் அ மரணம் அடைந்து விட்டார், உயிலும் இல்லை. அவரின் சொத்துக்கள் நபர் இ விற்கு செல்லும். நபர் இ அதை நபர் அ  வின் பிள்ளைகளுக்கு கொடுக்காமல் விடும் உரிமையும் உண்டு.   ஆகவே உயில் எழுதுவது பொதுவாக வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சம். 

Link to comment
Share on other sites

குற்றவியல் வழக்கு 

நபர் அ நபர் ஆ மீது குற்றவியல் வழக்கை ஆரம்பித்தால் அந்த வாழ்க்கை ஒரு மிகவும் சிக்கலை சந்தித்திவிட்டதாகி விடும். வழக்கை திருப்பி வாங்க நபர் அ மீது வற்புத்தல்கள் வரலாம். ஆனால், இலவச சட்டஆலோசனை, சட்டத்தரணி மற்றும் இலவசங்கள் தரப்படும். இந்த குற்றவியல் வழக்கை வெல்ல வேண்டிய ஒரு அவசியம் அரச சட்டத்தரணிக்கு இருக்கலாம். அவர், வழக்கையும் அந்த சமூகத்தையும் பார்த்து நபர் அ  வின் பாதுகாப்பு பற்றியும் ஒரு அறிக்கை சமர்பிற்க்கலாம். அதன் அடிப்படையில் நபர் அ விற்கு ஒரு பாதுகாப்பான இடம் காவல்துறையால் தரப்படலாம். நபர் ஆ கைது செய்யப்படலாம் அவரை யாராவது ஒருவர் பிணை எடுக்கும் தேவை வரலாம். அத்துடன் நபர் அ வுடன் எந்த நேரடி மற்றும் மறைமுக தொடர்புகளை ஏற்படுத்த கூடாது என காவல்துறை கூறும். 

நபர் அ பெண்ணாகவும் பிள்ளைகளுடன் இருந்தால் நபர் ஆ வினை வீட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படலாம். மனைவிற்கும் பிள்ளைகளுக்கும்   தொடர்ந்து வருமானத்திற்கு ஏற்ப வாழ்வாதார கொடுப்பனவுகளை செலுத்த நிர்ப்பந்திப்படுவார். 

குற்றவியல் வழக்கில் 'அடித்தார் ' மற்றும் 'பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் ' என்ற கூற்றை தெரிவித்தால் குற்றங்கள் பாரதூரமானதாக இருக்கும். பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்ற குற்றத்தின் அடிப்படையில் அவர் ஒரு குற்றவியல் கோப்பில் பெயர் இடப்படும். குற்றம் நிரூபிக்கப்படாமலேயே அவர் மேற்கொண்டு ஒரு வேலையை எடுப்பதில் இது  பெரிய சிக்கலை ஏற்படுத்தும். இதைவிட பாதிக்கப்பட்டவர்  ' மன ரீதியான உளைச்சல்களை தந்தார்' ; 'பண  ரீதியான உளைச்சல்களை தந்தார்' எனவும் கூறலாம், அதற்கான ஆலேசனைகளும் தரப்படலாம். 

வழக்கு இரு ஆண்டுகள் சென்று நீதிமன்றம் செல்லலாம். வழக்கிற்கு பெரிய தொகையை குற்றவியல்  சட்டத்தரணிகள் கேட்பதுண்டு. குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், சிறைத்தண்டனை என தீர்க்கப்பட்டால் அதை நீதியாக ஏற்கவே வேண்டும். நிரப்பராதி என தீர்க்கப்பட்டால் மீண்டும் வாழ்க்கையை ஆரம்பிக்கும் ஒரு சந்தர்ப்பம் தரப்பட்டாதாக பார்த்து வாழலாம்.  

Link to comment
Share on other sites

On 9/21/2019 at 4:51 AM, தமிழ் சிறி said:

அம்பனை.... வர்த்தக திருமண முறையை...
இந்தியா, பாகிஸ்தான், ஆபிரிக்க நாட்டவர்கள் தான் மேற் கொள்வார்கள்.
அதில்..... 
எங்களுடைய 
நாடும்?
இருக்கா?
இருந்தது  என்றால், ஓம். என்று மட்டும் சொல்லி விடாதீர்கள். 

தமிழ்சிறி திருமண மேடைக்கு வந்து சீதன பணக்கொடுப்பனவு பிரச்சனையால் நிறுத்தப்பட்ட   திருமணங்கள் எமது நாட்டில் உண்டு. ஆகவே வர்த்தக திருமண உடன்படிக்கைகள் நமது நாட்டிலும் உண்டு என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். 

Link to comment
Share on other sites

உயிலும் நன்கொடையும் 

பொதுவாக நன்கொடையாக கிடைக்கும் சொத்துக்கள் ஒரு குடும்பம் புலம்பெயர் தேசத்தில் பிரியும் பொழுது அது நூறு வீதம் அதற்கு உரித்தானவர்க்கே கிடைக்கும். 

நபர் அ ஒரு வீட்டை நன்கொடையாக பெறுகிறார். பத்து வருடங்கள் அந்த வீட்டில் வசித்து பின்னர் பிரிக்கிறார். இந்த பத்து வருடத்தில் எவ்வளவு பணம் அதிகரித்ததோ அதில் ஐம்பது வீதம் நபர் ஆக்கு செல்லும். நபர் அ  ஒரு குடியிருந்த, ஆனால் சொந்தமில்லாத வீட்டிக்கும் இது பொருந்தும். 

அதுபோன்று வீடல்லதா சொத்துக்களையும் நன்கொடையாக பெறலாம். நகைகள், கோடைகால வீடுகள் மற்றும் வேறு பெறுமதிமிக்க பொருட்கள்.   

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.