Jump to content

புலம்பெயர் வாழ்வும் திருமணங்களும் 


Recommended Posts

புலம்பெயர் வாழ்வும் திருமணங்களும் 

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயமாகின்றது என்று கேட்டு வளர்ந்தவர்கள் பலர். இனப்படுகொலையில் இருந்து தம்மை பாதுகாக்க புலம்பெயர்ந்து மேற்குலகில் வாழுகபவர்கள் எம்மில் ஐந்து இலட்ச்சத்திற்கும் மேல். அதிலும் கனடா நாட்டில் வாழுபவர்கள் அதிகம்.  

புதிய தேசம், புதிய மொழிகள், புதிய அனுபவங்கள். இருந்தாலும் எம்மில் பலருக்கும் சில பழமைவாத முறைகளை புலம்பெயர் நாடுகளிலும் தொடர ஆசை. முதலில் மொழியை, பின்னர் கல்வியை மற்றும் தொழில்வாய்ப்புக்களை கற்று முன்னேற அதிகம் எண்ணுவோம். அதில் கணிசமான வெற்றியும் கொண்ட சமூகம் எமது சமூகம். 

வெற்றியை அளவிடும் ஒரு சமூக அளவுகோலாக அந்தந்த சமூக குற்றச்செயல்களும் பார்க்கப்படுகின்றன. அதில் திருமணம் சார்ந்த குற்றங்களும் உண்டு. வந்த நாட்டில் மொழியை கற்கின்றோம், அதற்காக இலவச வகுப்புக்களும் உள்ளன. பலரும் திருமணம் சார்ந்த சட்டங்களை படிக்க தவறுகிறார்கள். 

கனடா போன்ற நாட்டில் திருமணம் என்பது ஒரு உறவு சம்பந்தப்பட்ட இரு மனங்களில் ஒன்றுகூடல் அல்ல. அது ஒரு வியாபார நிறுவனமும் கூட. அதாவது பன்னிரண்டு மாதங்கள் ஒன்றாக வாழ்ந்தால், திருமணம் செய்யவில்லை என்றாலும் கூட, இணைந்த ஒரு பாலார்களும் ஒரு நிதி மற்றும் சமூக நிறுவனத்தை ஆரம்பித்து அது சட்ட வரையறைக்குள் வந்து விட்டது என பார்க்கலாம். 

உதாரணத்திற்கு, நபர் அ மற்றும் நபர் ஆ ஒன்றாக வாழ்ந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இப்பொழுது பிரிய முடிவெடுத்து விட்டார்கள். 
1)  நபர் அ, வாழ்வை ஆரம்பிக்கும் பொழுது கொண்டுவந்த செல்வம் 0. நபர் ஆ கொண்டுவந்தது 10000. இப்பொழுது அவர்கள் சொத்து 20000. சட்டப்படி ஆளுக்கு அரைவாசி, 10000

2) நபர் அ சொந்த வீட்டில் இருக்கின்றார். அப்பொழுது அந்த வீட்டின் சொத்து 10000. இப்பொழுது வீட்டின் சொத்து 20000. வீடு பிரிக்கப்படும்பொழுது நபர் அ அரைவாசி 10000 கட்டி வீட்டை முழுமையாக்கலாம் இல்லை வீடு விற்க்கப்படலாம்.

3) நபர் ஆ ஏற்கனவே 20வருடம் வேலைசெய்து உள்ளார். அவரின் ஓய்வூதீய தொகை இந்த இரண்டு ஆண்டில் 2000. நபர் அ அதில் 1000க்கு உரிமை கோரலாம். 

4) நபர் ஆ அதிகம் உழைப்பவர். நபர் அ வுடன் அவர்களின்  ஒரு பிள்ளை வாழ்கின்றது. நபர் ஆ மாதம் அவரின் வருமானத்தில், வரிகள் போக, ஒரு நாற்பது வீதம் அளவில் செலுத்தவேண்டும். அதை விட பிரத்தியேக தேவைகளுக்கு பணம் செலுத்தவேண்டும். உதாரணம் நீச்சல் வகுப்பு. 

இன்றைய உலகில், கனடா போன்ற நாடுகளில் பலரும் திருமணம் செய்வதில்லை. சிலர், இந்த பன்னிரண்டு மாத காலம் தொடராமல் இடையில் ஒரு முறிவை ஏற்படுத்துவார்கள். இன்றும் சிலர், ஒரு வர்த்தக உடன்படிக்கைக்கு வந்தே திருமணம் செய்வார்கள். 

தொடரலாம்.       
 

Link to comment
Share on other sites

புதிதாய் நாட்டிற்கு வருபவர்கள் மொழி கற்கும்பொழுது, அங்கே காவல்துறை அதிகாரியையும் காணும் சந்தர்ப்பம் கிடைக்கலாம். அப்படி ஒரு நிகழ்வு நடக்கும் பொழுது பலரும் அதிக கவனத்தை  அந்த நிகழ்வில் செலுத்துவதில்லை. தேவை வரும்பொழுது மட்டுமே தேடிப்போவதும் அப்பொழுது தவறுகளை செய்வதும் பொதுவாக திட்டாமிடாதவர்கள் செய்யும் தவறு. 

சில இடங்களில் பொதுவாக தென் கிழக்கு நாடுகளில் பெண்கள் ஆண்களுக்கு சம உரிமை இல்லாதவர்கள் என்ற கருத்து உள்ளது. அதனால். பெண்கள் உரிமை பற்றியும், அவர்கள் ஆண்கள் துணை இன்றி வாழ முடியும் என்ற ஆலோசனையும் வழங்கப்படலாம். ஆனாலும், பலருக்கும் இந்த சிந்தனை பற்றிய தேவை அப்பொழுது பெரிதாக இருக்காது. காரணம் ஆசை அறுபது நாளும் மோகம் முப்பது நாளும் கடந்து சென்று இருக்காது. 

பொருளாதார தேவைகள் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளரும். ஆசைகளும் தேவைகளும் ; அவசியம் இல்லாத வாங்கலும் நடக்கும். நாளடைவில் கடன் சுமை கூடி அது கல்லானும் துணை புல்லானாலும் துணை என்பதில் இருந்து தடம் புரள ஆரம்பிக்கும். ஒருவர் மட்டும் சிக்கனம் என்ற பொருளாதார கொள்கையை அமுல்படுத்த முடியாத நிலை உருவாகும்.   

புதிய பழைய நண்பர்கள் மதீப்பீட்டுக்களை செய்ய ஆரம்பிப்பார்கள். வீடு இன்றும் வாங்கவில்லையா?  மகிழூந்து புதிதாக வாங்கவில்லையா?  விடுமுறைக்கு போர போராவிற்கு போகவில்லையா என கேட்ப்பார்கள். இதுவும் ஒரு வித 'ஆலோசனை ' தான். 

இந்த பிரச்சனைகளுக்குள் மூன்றாம் தரப்பினர் புகுந்து விட்டால் நிலைமை கை மீறி போகும்  நிலைமை இலகுவில் உருவாகிவிடும். ஆரம்பத்தில் இலவச ஆலோசனைகள் தரப்படும். பின்னர் அது பிரிவு, விவாகரத்து என வந்துவிட்டால், சட்டத்தரணிகள்,  இரவுபகலாய் உழைத்தது எல்லாவற்றையும் சுரண்ட ஆரம்பித்துவிடுவார்கள். அந்த நிலைக்குள் சென்றுவிட்ட பலராலும் மீள முடிவதில்லை. மன நோயாளிகாக மாறுபவர்களும் உண்டு. வேலைகளை இழந்து போதைக்கு அடிமைபடுபவர்களும் உண்டு, தற்கொலை செய்ப்பவர்களும் உண்டு 😞 

நாம் எதற்ககாக புலம்பெயர்ந்தோம், எதற்காக ஓன்றிணைந்தோம், எதை சாதிக்க விரும்பினோம் என்ற குறிக்கோளை நாளும் மறக்காமல் இருந்தால் வாழ்க்கை மகிச்சியாக இருக்கும்.   விட்டுக்கொடுத்து வாழுதல் என்பது ஒரு தாரக மந்திரம். 

மேற்குலக  நாட்டில் பிறந்து வாழ்பவர்கள் இந்த சிக்கல்களுக்குள் மாட்டுப்படுவது ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கலாம். காரணம், அவர்கள் இதில் நன்றாகவே பட்டு கொஞ்சம் தெளிந்தவர்களாக இருப்பார்கள். சூடு கண்டால்  பூனை அடுப்பங்கரையை நாடாது தானே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ampanai said:

-----

இன்றைய உலகில், கனடா போன்ற நாடுகளில் பலரும் திருமணம் செய்வதில்லை. சிலர், இந்த பன்னிரண்டு மாத காலம் தொடராமல் இடையில் ஒரு முறிவை ஏற்படுத்துவார்கள். இன்றும் சிலர், ஒரு வர்த்தக உடன்படிக்கைக்கு வந்தே திருமணம் செய்வார்கள். 

தொடரலாம்.       

அம்பனை.... வர்த்தக திருமண முறையை...
இந்தியா, பாகிஸ்தான், ஆபிரிக்க நாட்டவர்கள் தான் மேற் கொள்வார்கள்.
அதில்..... 
எங்களுடைய 
நாடும்?
இருக்கா?
இருந்தது  என்றால், ஓம். என்று மட்டும் சொல்லி விடாதீர்கள். 

Link to comment
Share on other sites

துன்புறுத்தல் : ஆங்கிலத்தில் ' அபியூஷ் ' (abuse) என்ற வார்த்தை. 

பல்வேறு கலாச்சாரங்களை கொண்டவர்கள் கனடா போன்ற நாட்டில் குடிபுகுந்து தம்மையும் இந்த நாட்டையும் வளமாக்க வருபவர்கள் சில மூட்டை முடிச்சுக்களுடன் வருபவர்கள். பலராலும் அதை உரிய இடத்தில் இறக்கி வைக்க முடிவதில்லை. 

உதாரணத்திற்கு, பொதுவாக பல கலாச்சாரங்களில் குரலை உயர்த்தி கதைப்பது வழமை. இதை இந்த நாட்டில் பல தலைமுறையாக வாழ்பவர்கள் இதை ஒரு துன்புறுத்தலாக பார்க்க கூடும். அத்துடன் மட்டுமல்லாது, காவல் துறைக்கும் ஒரு அழைப்பை போட்டு இந்த வீட்டிற்குள் ஒரு வெடிப்பை ஏற்படுத்திக்கூட விடலாம். வரும் காவல் துறையும் இருவரையும் பிரித்து கேள்விகளை கேட்டு, 'இலவச ஆலோசனைகளையும்'  தந்து வைப்பார்கள். 

வங்கி கணக்குகள் கூட புதிதாய் புலம்பெயர்ந்து வந்து வாழ்க்கை நடத்துபவர்கள் ஒற்றை கணக்கை வைத்திருப்பார்கள். நாளடைவில், ஆளுக்கு தனி கணக்கு ஆகிவிடும். ஆனால், அதுவே சிறப்பு என்பது பலரின், கணக்கும். காரணம், என்னதான் குடும்பம் என்னறாலும் கொஞ்சம் சுய தேவைகளுக்கு மதிப்பும் கொடுக்கவேண்டும்.    

பொதுவாக ஒருவர் இன்னொருவருக்கு 'அடிப்பது' குற்றம். கையை இல்லை காலை தூக்கினாலும் குற்றம். இதை " பூச்சிய பொறுமை " என ஆங்கிலத்தில் ஜீரோ டொலரன்ஸ்' (zero tolerance) என்பார்கள். இவைபோன்றவற்றை அறிந்தும் மற்றும் நடைமுறையில் கையாள்வதும் நவீன வாழ்வின் வெற்றிக்கு அத்தியாவசியம். 

நான் பெரிது நீ பெரிது என எண்ணாமல் நாம் என்ற எண்ணம் வேண்டும். திருமண வாழ்க்கை என்பதும் ஒரு போர் தான். சின்ன சின்ன  சண்டைகளில்   தோல்விகளை காணலாம். ஆனால், இறுதியில் போரில் வெல்ல வேண்டும் என்ற நினைப்பு இருந்தால் மங்களம், சுபம். 

Link to comment
Share on other sites

பிரிந்து வாழுதலும் விவாகரத்தும் 

திருமணம் செய்யும் பொழுது வாழும் நகரத்தில் திருமணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அப்பொழுது அதை உறுதிப்படுத்தும் ஒரு பத்திரமும் தரப்படுகின்றது. சேர்ந்து வாழும்பொழுது, இரு மனங்களும் இணைந்து வாழ்வில்  மகிழ்ச்சியையும், முன்னேற்றத்தையும் கனவுகளை நனவாக்கும் பாதையில் பயணிப்பார்கள். 

இவர்கள் ஒன்றாக வாழ்வதை அரசும் வருடாந்த வருமான வரி பத்திர தாக்கலில் அரசு  உறுதிப்படுத்துகின்றது. சேர்ந்து வாழுவதால் அவர்களும் வரி சலுகையையும் பெறுகிறார்கள்.   

சேர்ப்பித்து இரு மனங்கள் பிரிந்து வாழ முடிவெடுக்கும் பொழுது, இதே வரித்தாக்கல் அதை உறுதிப்படுத்தும் ஒரு மூலமாக இருக்கின்றது. ஒரு வருடத்திற்கு மேலாக பிரிந்து வாழும்பொழுது எந்த கேள்வியும் இல்லாமல் பிரியலாம். ஆனால், அதற்கு இரு நபர்களும் கை ஒப்பம் இட்டு மீண்டும் பதிந்த நகராட்சியில் பதியவேண்டும். இல்லாவிட்டால் சட்டப்படி விவாகரத்து என அமையாது. 

சட்டப்படி விவாகரத்து இல்லாமால் நபர் ஆ முதலில் இறந்துவிட்டால் அவரது சொத்துக்கள் நபர் அ விற்கு செல்லும். ஆனால், நபர் ஆ ஒரு உயிலை எழுதி இருந்தால், அதன் படி அவரின் சொத்து பிரிக்கப்படும். 

ஆனால், பலரும் உயிலை எழுதுவதும் இல்லை நிலைமைக்கு ஏற்ப அதனை மாற்றி எழுதுவதும் இல்லை. 

சிலர் சட்டப்படி விவாகரத்து எடுத்து மீண்டும் திருமணம் செய்வார்கள். நபர் அ அவ்வாறானவர். அவருக்கு பிள்ளைகள் நபர் ஆ ஊடாக உள்ளன. நபர் அ மறுமணம் செய்த நபர் இ விற்கும் ஏற்கனவே பிள்ளைகள் உள்ளன. நபர் அ மரணம் அடைந்து விட்டார், உயிலும் இல்லை. அவரின் சொத்துக்கள் நபர் இ விற்கு செல்லும். நபர் இ அதை நபர் அ  வின் பிள்ளைகளுக்கு கொடுக்காமல் விடும் உரிமையும் உண்டு.   ஆகவே உயில் எழுதுவது பொதுவாக வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சம். 

Link to comment
Share on other sites

குற்றவியல் வழக்கு 

நபர் அ நபர் ஆ மீது குற்றவியல் வழக்கை ஆரம்பித்தால் அந்த வாழ்க்கை ஒரு மிகவும் சிக்கலை சந்தித்திவிட்டதாகி விடும். வழக்கை திருப்பி வாங்க நபர் அ மீது வற்புத்தல்கள் வரலாம். ஆனால், இலவச சட்டஆலோசனை, சட்டத்தரணி மற்றும் இலவசங்கள் தரப்படும். இந்த குற்றவியல் வழக்கை வெல்ல வேண்டிய ஒரு அவசியம் அரச சட்டத்தரணிக்கு இருக்கலாம். அவர், வழக்கையும் அந்த சமூகத்தையும் பார்த்து நபர் அ  வின் பாதுகாப்பு பற்றியும் ஒரு அறிக்கை சமர்பிற்க்கலாம். அதன் அடிப்படையில் நபர் அ விற்கு ஒரு பாதுகாப்பான இடம் காவல்துறையால் தரப்படலாம். நபர் ஆ கைது செய்யப்படலாம் அவரை யாராவது ஒருவர் பிணை எடுக்கும் தேவை வரலாம். அத்துடன் நபர் அ வுடன் எந்த நேரடி மற்றும் மறைமுக தொடர்புகளை ஏற்படுத்த கூடாது என காவல்துறை கூறும். 

நபர் அ பெண்ணாகவும் பிள்ளைகளுடன் இருந்தால் நபர் ஆ வினை வீட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படலாம். மனைவிற்கும் பிள்ளைகளுக்கும்   தொடர்ந்து வருமானத்திற்கு ஏற்ப வாழ்வாதார கொடுப்பனவுகளை செலுத்த நிர்ப்பந்திப்படுவார். 

குற்றவியல் வழக்கில் 'அடித்தார் ' மற்றும் 'பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் ' என்ற கூற்றை தெரிவித்தால் குற்றங்கள் பாரதூரமானதாக இருக்கும். பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்ற குற்றத்தின் அடிப்படையில் அவர் ஒரு குற்றவியல் கோப்பில் பெயர் இடப்படும். குற்றம் நிரூபிக்கப்படாமலேயே அவர் மேற்கொண்டு ஒரு வேலையை எடுப்பதில் இது  பெரிய சிக்கலை ஏற்படுத்தும். இதைவிட பாதிக்கப்பட்டவர்  ' மன ரீதியான உளைச்சல்களை தந்தார்' ; 'பண  ரீதியான உளைச்சல்களை தந்தார்' எனவும் கூறலாம், அதற்கான ஆலேசனைகளும் தரப்படலாம். 

வழக்கு இரு ஆண்டுகள் சென்று நீதிமன்றம் செல்லலாம். வழக்கிற்கு பெரிய தொகையை குற்றவியல்  சட்டத்தரணிகள் கேட்பதுண்டு. குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், சிறைத்தண்டனை என தீர்க்கப்பட்டால் அதை நீதியாக ஏற்கவே வேண்டும். நிரப்பராதி என தீர்க்கப்பட்டால் மீண்டும் வாழ்க்கையை ஆரம்பிக்கும் ஒரு சந்தர்ப்பம் தரப்பட்டாதாக பார்த்து வாழலாம்.  

Link to comment
Share on other sites

On 9/21/2019 at 4:51 AM, தமிழ் சிறி said:

அம்பனை.... வர்த்தக திருமண முறையை...
இந்தியா, பாகிஸ்தான், ஆபிரிக்க நாட்டவர்கள் தான் மேற் கொள்வார்கள்.
அதில்..... 
எங்களுடைய 
நாடும்?
இருக்கா?
இருந்தது  என்றால், ஓம். என்று மட்டும் சொல்லி விடாதீர்கள். 

தமிழ்சிறி திருமண மேடைக்கு வந்து சீதன பணக்கொடுப்பனவு பிரச்சனையால் நிறுத்தப்பட்ட   திருமணங்கள் எமது நாட்டில் உண்டு. ஆகவே வர்த்தக திருமண உடன்படிக்கைகள் நமது நாட்டிலும் உண்டு என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். 

Link to comment
Share on other sites

உயிலும் நன்கொடையும் 

பொதுவாக நன்கொடையாக கிடைக்கும் சொத்துக்கள் ஒரு குடும்பம் புலம்பெயர் தேசத்தில் பிரியும் பொழுது அது நூறு வீதம் அதற்கு உரித்தானவர்க்கே கிடைக்கும். 

நபர் அ ஒரு வீட்டை நன்கொடையாக பெறுகிறார். பத்து வருடங்கள் அந்த வீட்டில் வசித்து பின்னர் பிரிக்கிறார். இந்த பத்து வருடத்தில் எவ்வளவு பணம் அதிகரித்ததோ அதில் ஐம்பது வீதம் நபர் ஆக்கு செல்லும். நபர் அ  ஒரு குடியிருந்த, ஆனால் சொந்தமில்லாத வீட்டிக்கும் இது பொருந்தும். 

அதுபோன்று வீடல்லதா சொத்துக்களையும் நன்கொடையாக பெறலாம். நகைகள், கோடைகால வீடுகள் மற்றும் வேறு பெறுமதிமிக்க பொருட்கள்.   

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
    • பிறந்த குழந்தை தாயின் அருகாமையை உணர்வதைப் போன்று ஜேக்கப்பின் அருகிலே பலகாலம் கிடந்த உணர்வில் தெரிந்திருப்பார்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.