Jump to content

காலநிலை மாற்­றத்­துக்­காக சர்வதேச ரீதியில் இலட்சக்கணக்கில் அணிதிரண்ட பாடசாலை மாண­வர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காலநிலை மாற்­றத்­துக்­காக சர்வதேச ரீதியில் இலட்சக்கணக்கில் அணிதிரண்ட பாடசாலை மாண­வர்கள்

பல்­வேறு நாடு­களைச் சேர்ந்த பல ஆயி­ரக்­க­ணக்­கான பாடசாலை மாண­வர்கள் கால­நிலை மாற்­றத்தைத் தடுக்க அர­சுகள் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று வலி­யு­றுத்தி முன்­னெ­டுத்த போராட்டம் நேற்று  உல­கெங்கும் தொடங்­கி­யது.

அமெ­ரிக்கா, அவுஸ்­தி­ரே­லியா, தென்­கொ­ரியா, இந்­தியா உள்­ளிட்ட நாடு­களில் பல மாண­வர்கள் இந்தப் புறக்­க­ணிப்பு போராட்­டத்தில் கலந்து கொள்­கின்­றனர்.

5568.jpg

நியூ­யோர்க்கில் நடை­பெறும் புவி வெப்­ப­ம­ய­மா­த­லுக்கு எதிர் நட­வ­டிக்­கைகள் தொடர்­பான பேர­ணியில் கலந்­து­கொள்ள கிட்­டத்­தட்ட 10 இலட்சம் பாடசாலை மாண­வர்கள் தங்கள் வகுப்­பு­களை புறக்­க­ணிக்க உள்­ள­தாக செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

உல­கெங்­கிலும் நடை­பெறும் இந்தப் பாடசாலை புறக்­க­ணிப்பு போராட்­டத்தில் பல மில்­லியன் மாண­வர்கள் கலந்து கொள்வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

சுவீடனைச் சேர்ந்த 16 வயது பாடசாலை மாணவி கிரேட்டா தன்பர்க், உலக வெப்­ப­ம­ய­மா­த­லுக்கு எதி­ராக அர­சுகள் நட­வ­டிக்­கை எடுக்கக் கோரி தங்கள் நாட்டின் பாரா­ளு­மன்றம் முன் வாரம்தோறும் இதற்­காக போராட்டம் நடத்தி வந்தார்.

3500__1_.jpg

சமூக வலைத்­த­ளங்கள் மூலம் கடந்த சில மாதங்­க­ளா­கவே இந்தப் போராட்டம் ஒருங்­கி­ணைக்­கப்­பட்­டது. மேலும், இந்த ஆண்­டுக்­கான நோபல் அமைதிப் பரி­சுக்கு கிரேட்டா தன்பர்க் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்ளார்.

முன்­ன­தாக, 2017இல் கையெ­ழுத்­தி­டப்­பட்ட பரிஸ் கால­நிலை ஒப்­பந்­தத்தில், தொழில் வளர்ச்சி தொடங்­கிய கால­கட்­டத்தில் நில­விய வெப்­ப­நி­லை­யை­விட இரண்டு பாகை செல்­ஸியஸ் (2.0C) வெப்­பத்­துக்கு மிகாமல், புவி வெப்­ப­ம­ய­மா­தலைக் கட்டுப்படுத்த 200இற்கும் மேலான உலக நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த இலக்கை அடைய கடுமையான முயற்சிகள் தேவை என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

 

https://www.virakesari.lk/article/65248

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/21/2019 at 10:04 AM, கிருபன் said:

சுவீடனைச் சேர்ந்த 16 வயது பாடசாலை மாணவி கிரேட்டா தன்பர்க், உலக வெப்­ப­ம­ய­மா­த­லுக்கு எதி­ராக அர­சுகள் நட­வ­டிக்­கை எடுக்கக் கோரி தங்கள் நாட்டின் பாரா­ளு­மன்றம் முன் வாரம்தோறும் இதற்­காக போராட்டம் நடத்தி வந்தார்.

3500__1_.jpg

சமூக வலைத்­த­ளங்கள் மூலம் கடந்த சில மாதங்­க­ளா­கவே இந்தப் போராட்டம் ஒருங்­கி­ணைக்­கப்­பட்­டது. மேலும், இந்த ஆண்­டுக்­கான நோபல் அமைதிப் பரி­சுக்கு கிரேட்டா தன்பர்க் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்ளார்.

 பள்ளிப்படிப்பை விட்டு  சிறுவர்கள் போராட்டம் செய்ய தகுதியானவர்களா?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பருவநிலை மாற்றம் குறித்து கிரேட்டா தன்பெர்க்: “உங்களுக்கு எவ்வளவு தைரியம்?” அரசியல்வாதிகளை அதிர வைத்த மாணவி

 
கிரேடா தன்பெர்க்படத்தின் காப்புரிமை Getty Images Image caption கிரேட்டா தன்பெர்க்

ஐ.நா சபையில் பருவநிலை மாற்றம் தொடர்பாக உணர்ச்சிகரமாக உரை ஆற்றினார் இளம் சூழலியல் செயற்பாட்டாளரான கிரேட்டா தன்பெர்க்.

 

பருவநிலை மாற்றம் தொடர்பாக சரியான கொள்கை வகுக்காத அரசியல்வாதிகளை நோக்கி சரமாரியாக கேள்வி கேட்டார்.

நீங்கள் எங்களை வஞ்சித்துவிட்டீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம்? என சரமாரியாக கேள்வி கேட்டார் கிரேட்டா.

 

சரி யார் இந்த கிரேட்டா?

கிரேட்டா தன்பெர்க் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடும் இயக்கத்தின் பிரதிநிதி.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த இவர் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு வெளியே காலநிலை மாற்றம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி 'பள்ளிகள் புறக்கணிப்பு' எனும் கோஷத்துடன் போராடி வருகிறார்.

ஆவேச கேள்விகளால் உலகத் தலைவர்களை அதிர வைத்த பெண்: யார் இவர்?படத்தின் காப்புரிமை Getty Images

இவருடைய செயலால் ஈர்க்கப்பட்டு உலகம் முழுவதும் மாணவர்கள் போராட தொடங்கிவிட்டனர். திசையெங்கும் பரவிய இந்த பள்ளிகள் புறக்கணிப்பு போராட்டம் அண்மையில் சென்னையில்கூட நடந்தது.

விமானத்தில் பறப்பதையே அறம் சார்ந்த விஷயமாக மாற்றியதில் க்ரேட்டாவுக்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது. அதாவது விமானங்கள் அதிகளவில் பசுமைக்குடில் வாயுவை வெளிப்படுத்துகிறது. அதனால் தேவையற்ற விமான பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று 'பறத்தல் அவமானம்' என இவர் பிரசாரம் செய்து வருகிறார்.

ஐ.நா உரை

பருவநிலை மாற்றம்: "உங்களுக்கு எவ்வளவு தைரியம்?" அரசியல்வாதிகளை நோக்கி தைரியமாக கேள்விக் கேட்ட கிரேட்டா தன்பெர்க்படத்தின் காப்புரிமை Getty Images

அவர் ஆற்றிய உரை,

“இவை அனைத்தும் தவறு.

நான் இங்கே இருந்திருக்கக் கூடாது.

இந்த பெருங்கடலின் மறுமுனையில் இருக்கும் பள்ளியில் நான் இருந்திருக்க வேண்டும்.

ஆனாலும் நீங்கள் அனைவரும் நம்பிக்கையோடு எங்களிடம் வருகிறீர்கள்.

உங்களுக்கு எவ்வளவு தைரியம்?

உங்களது வெற்று வார்த்தைகளால் எனது கனவுகளை, எனது குழந்தைப் பருவத்தைக் களவாடிவிட்டீர்கள்.

ஆனாலும், நான் பாக்கியசாலிகளில் ஒருத்திதான்.

மக்கள் துன்பப்படுகிறார்கள், செத்து மடிகிறார்கள்.

மொத்த சூழலியலும் உருக்குலைந்துவிட்டது.

அழிவின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம்.

ஆனால், பணம் குறித்து... நித்தியமான பொருளாதார வளர்ச்சி குறித்த கற்பனை கதைகளைப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

உங்களுக்கு எவ்வளவு தைரியம்?

நீங்கள் எங்களை வஞ்சித்துவிட்டீர்கள்

உங்களது துரோகத்தை இளைஞர்கள் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.

எதிர்கால தலைமுறையினரின் விழிகள் உங்கள் மீதுதான் உள்ளன.

எங்களுக்குத் துரோகம் செய்ய நினைத்தால்,

நான் இப்போது சொல்கிறேன், "நாங்கள் உங்களை மன்னிக்க மாட்டோம்"

உரையை காண:

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

https://www.bbc.com/tamil/global-49806427

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 பள்ளிப்படிப்பை விட்டு  சிறுவர்கள் போராட்டம் செய்ய தகுதியானவர்களா?
 

இவர்களை மாணவர்களாக பார்க்காமல் நாளைய தலைவர்களாக பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

இவர்களை மாணவர்களாக பார்க்காமல் நாளைய தலைவர்களாக பாருங்கள்.

அப்ப இவிங்களையும் நாளைய நாட்டு தலைவர்களாக பார்க்கலாமா சார்?

Bildergebnis für சிறுவர் வேலை

Bildergebnis für சிறுவர் வேலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

அப்ப இவிங்களையும் நாளைய நாட்டு தலைவர்களாக பார்க்கலாமா சார்?

சரி
எம் ஜி ஆரை எப்படி பார்த்தோம்.

ஒரு காலத்தில் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தூங்க இடமில்லாமல் கடைத்தெருவில் வாழ்ந்தார்.

அதே மனிதன் மாபெரும் தலைராகி இறந்தும் வாழ்கிறார்.

அமெரிக்காவில் செருப்பு தைத்த குடும்பம் ஜனாதிபதி ஆகலையா?

இப்படி எதுவும் நடக்கலாம்.

ரீகடை வைத்திருந்த பன்னீர்.

Link to comment
Share on other sites

கிரேட்டா தன்பெர்க் நம்ம ஊரிலும் இருக்கிறார்: ’குளத்தை சுத்தம் செய்தால் நான் உங்களிடம் பேசுவேன்’

திருவாரூர் மாவட்ட திருத்துறைப்பூண்டியை சேர்ந்த நதியா என்னும் 7ஆம் வகுப்பு மாணவி தனது தந்தையிடம் 8 மாதம் பேசாமல் இருந்துள்ளார்.

அவரை பேச வைக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட அவரின் தந்தைக்கு தனது பள்ளிக்கு அருகாமையில் உள்ள குளத்தை சுத்தம் செய்து தருமாறு அன்பு கட்டளையிட்டுள்ளார் நதியா.

நதியாவின் தந்தை சிவக்குமார் இதனால் தனி ஒரு ஆளாக அந்த குளத்தை சுத்தம் செய்துள்ளார்.

https://www.bbc.com/tamil/india-49832376

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கெல்லாம் சுட்டுபோட்டாலும் இந்தமாதிரி எண்ணமெல்லாம் தோன்றாது. அந்தப்பிள்ளை நதியா  நதிபோல ஊருக்கு உபகாரமாய் இருக்கு. தந்தையும் பாராட்டுக்கு உரியவரே.   நீடுழி வாழவேண்டும்.....!   🌻

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
    • சில நாட்களுக்கு முன் கொத்து ஒன்றுக்கு இல‌ங்கையர் ஒருவர் 1900 என விலை கூறியதற்கு, தலையங்கம் "சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்"  இப்ப இதுக்கு என்ன தலையங்கம் கொடுக்கலாம்? இதற்கு அதிரடி தலையங்கம் கொடுக்கும் உறவுக்கு பரிசில் வழங்கப்படும்.
    • இஸ்ரேல் ஈரான் மீது ஏவுகணைகள மூலம், தமக்கெதிரான தாக்குதலுக்கு பதிலளிக்கும் முகமாக, தாக்குதல்களை ஆரம்பித்து இருப்பதாக அல் ஜசீரா மற்றும் மேற்குலக ஊடகங்கள் செய்திகளை சற்று முன் வெளியிட்டுள்ளன. https://www.aljazeera.com/news/liveblog/2024/4/19/live-israel-launches-missile-attack-in-response-to-iran-assault     https://www.bbc.com/news/live/world-middle-east-68830092?src_origin=BBCS_BBC  
    • திரும்பவும் வாண வேடிக்கை ஆரம்பமாகிவிட்டது. ☹️
    • இது நன்கு திட்டமிடப்பட்,  வன்முறை, அச்சுறுத்தல் எதுவும் பாவிக்கப்படாத  கொள்ளை Heist.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.