Jump to content

கி. மு. 6-வது நூற்றாண்டிலே தமிழ் உயரிய எழுத்து வடிவம் கொண்டிருந்ததைக் காட்டும் கீழடி அகழாய்வுகளின் தொல்காப்பியத் தொடர்புகள்!


Recommended Posts

கி. மு. 6-வது நூற்றாண்டிலே தமிழ் உயரிய எழுத்து வடிவம் கொண்டிருந்ததைக் காட்டும் கீழடி அகழாய்வுகளின் தொல்காப்பியத் தொடர்புகள்!

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
- பாவேந்தர் பாரதிதாசன்

கிமு ஆறாவது நூற்றாண்டிலேயே தமிழ் உயரிய எழுத்துவடிவம் கொண்டிருந்தது என்பதை கீழடி அகழ்வாய்வுகள் உறுதிசெய்கின்றன! கீழடி தரும் புதிய ஆதாரங்களின் பின்புலத்தில், நம் தொன்மையான  இலக்கியங்களில் காணப்படும் இலக்கியச் சான்றுகளில்  சிலவற்றை மீள்வாசிப்பு செய்வோம்!

1.கீழடி அகழாய்வுகள் காட்டும் முதல் இலக்கியப் பொருள் தொல்காப்பிய காலம்!

தொல்காப்பியத்தின் காலம் (கீழ் எல்லை) கி.மு. ஏழாம் நூற்றாண்டு என்பது மொழியியல் ஆய்வாளர்கள் கண்ட முடிவு! குறைந்தபட்சக் கீழ் எல்லையை எடுத்துக்கொண்டாலும், கி.மு.ஏழாம் நூற்றாண்டு. தாங்கள் குறிப்பிட்ட காலத்துக்கும் ஒரு நூற்றாண்டு முன்பு தொல்காப்பியத்தின் கீழ் எல்லை முடிகிறது!

2. கீழடி அகழாய்வுகள் காட்டும் இரண்டாவது இலக்கியப் பொருள் - தமிழ் எழுத்துக்களின் தோற்ற காலம்!

ஆகவே, தமிழ் எழுத்துக்களின் தோற்ற காலம், மொழியியல் நூல்முறைப்படி, குறைந்த அளவு, கி.மு.12ம் நூற்றாண்டு என்பதை அறிவோம்!

3. ஐந்திலக்கணம் கொண்ட ஒரே உலகமொழி தமிழ்!

மொழி இலக்கணத்தின் ஐந்து கூறுகளாக எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்து இலக்கணம் கொண்ட ஒரே உலகமொழி தமிழ் மட்டுமே!

4. மொழிக்கும், பொருளுக்கும் இலக்கணம் படைத்த ஒரே உலக மொழி தமிழ்!

தொல்காப்பியம் தமிழ் மொழியியலுக்கும்(எழுத்து, சொல். யாப்பு, அணி இலக்கணங்கள்), தமிழ் பொருளியலுக்கும் (தமிழ் மரபுகள், ஐந்து வகைத் தமிழ் நிலங்கள், நிலம் சார்ந்த காலங்கள், ஒவ்வொரு நிலம் சார்ந்த தமிழர்களின் பண்பாட்டு அசைவுகள், ஐவகை தமிழ்நிலத் தாவர, விலங்கினங்களின் பண்புகள் உள்ளிட்ட பொருளியல் இலக்கணங்கள்) ஒருங்கே எழுதப்பட்ட முழுமையான இலக்கண நூல்.

உலகின் கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் உள்ளிட்ட உலகின் அனைத்துமொழிகளின் இலக்கணத்துக்கும் சொல் இலக்கணம், பொருள் இலக்கணம் என்னும் இரண்டு கூறுகள் மட்டுமே உண்டு! யாப்பு, அணி போன்ற செய்யுள் இலக்கணங்கள் மொழி இலக்கணத்தின் பகுதியாக எம்மொழிக்கும் இல்லை. பொருள் இலக்கணமும் எம்மொழிக்கும் இல்லை.

5. பொறாமையாளர்களின் பொருமல்!

பெயர் சொல்லவிரும்பாத பொறாமையாளர்கள், 'நாம் அனைவரும் உலகின் தலைசிறந்த கற்பனைவாதிகள் என மற்ற மொழிக்காரர்களுக்குப் பறை சாட்டுவதை சுட்டிக் காட்டுகிறது.' என்று பொருமுவதை நம்மால் புரிந்துகொள்ள இயலும்.

எழுத்தும், எண்ணும் அறியாமல் நாடோடிகளாக வந்த கூட்டத்தின், நிறத்தைப் பார்த்து ஏமார்ந்த தமிழர்களை ஏய்க்கப் பார்த்த இனத்தின் தொல்லெச்சங்களின் வயிற்றெரிச்சல் இப்படித்தான் இருக்கும்.

கிடக்கட்டும்! பரவாயில்லை! விடுங்கள்!

உங்கள் கேள்விக்கு வருவோம். கி .மு .6 வது நூற்றாண்டிலே தமிழ் உயரிய எழுத்து வடிவம் கொண்டிருந்தது என்பது எதைக் காட்டுகிறது? என்பதை இப்போது காண்போம்!

உலகின் பிற மொழிகளுக்கு யாப்பு, அணி உள்ளிட்ட பொருள் இலக்கணம் ஏன் உருவாகவில்லை?

உலகின் பிற மொழிகளுக்கு யாப்பு, அணி உள்ளிட்ட பொருள் இலக்கணம் இல்லாததற்குக் காரணம் தெளிவாகச் சொல்கிறேன்!

இலக்கியம் அமைந்து பல ஆண்டுகள் ஆன பிறகுதான், இலக்கியத்தின் அமைப்பை உற்று நோக்கி யாப்பு, அணி போன்ற உயர் பொருள் இலக்கணம் அமைவது இயல்பு.

7. உலகமொழிகளுக்கு பிற மொழித் தொடர்பினாலேயே இலக்கணம்!

உலகின் ஏனைய மொழிகளுக்கெல்லாம் பிற மொழித் தொடர்பினாலேயே இலக்கணம் ஏற்பட்டது; அதாவது, பிற மொழி பேசுபவர்கள், ஒரு மொழியினத்துடன் வாணிகம் உள்ளிட்ட தொடர்புகள் கொள்ளச்செய்த முயற்சிகளின் விளைவாகவே அம்மொழிக்கு இலக்கணம் அமைந்தது.

8. எழுத்துக்கும், சொல்லுக்கும் மட்டுமே இலக்கணங்கள் எழுதப்பட்டதன் காரணம்!

வேற்றுமொழிக்காரர்களுக்கு மொழி கற்பிப்பதற்காகவே உலக மொழி இலக்கணங்கள் உருவாயின! 'மொழி இலக்கணம் என்பது அம்மொழியைக் கற்றுக்கொள்பவருக்கு கருவி மட்டுமே' என்ற முறையில் உருவானதால், எழுத்துக்கும், சொல்லுக்கும் மட்டுமே இலக்கணங்கள் எழுதப்பட்டன.

மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், கிரேக்கம், இலத்தீன், அரபு, எபிரேயம், சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளின் இலக்கணங்கள், இம்மொழிகளைத் தெரியாதவர்களுக்கு, இம்மொழிகளைக் கற்றுக்கொடுக்கவே உருவாயின.

9. சமஸ்கிருதம் - யாருக்கும் தாய்மொழி அல்லாத முற்றிலுமான ஏட்டுச் சுரைக்காய்!

சமஸ்கிருதத்தின் கதையோ இன்னும் மோசம்! அது யாருக்கும் தாய்மொழி அல்லாத முற்றிலுமான ஒரு ஏட்டுச் சுரைக்காய் மட்டுமே! தாய்மொழி பேசுபவனுக்குக்கு மட்டுமே, எழுத்துக்கும், சொல்லுக்கும் இலக்கணம் படிக்காமலேயே எழுத்தையும், சொல்லையும், சொற்றொடரையும் உச்சரிக்கவும் பேசவும் இயலும்!

சமஸ்கிருத மொழி கற்பவனுக்கும், பேசுபவனுக்கும் சமஸ்கிருத இலக்கணம்தான் உயிர்நாடி. சமஸ்கிருத இலக்கணம் படிக்காமல், எவரும்  ஒரு எழுத்தோ, சொல்லோ உச்சரிக்க முடியாது.

எனவே, சமஸ்கிருத இலக்கணம் என்பது எழுத்துக்கும், சொல்லுக்கும் மட்டுமே ஆனது. பாணினியின் இலக்கண நூல் இவ்விரண்டை மட்டுமே பேசும். ஏனென்றால் தேவையும் இவை இரண்டு மட்டுமே!

10. பாணினி இலக்கணம் 'பாஷா'வுக்கே!

பாணினியின் இலக்கணத்தைப் பின்பற்றியே இன்றைய சமஸ்கிருதம் இருந்தாலும், பாணினி இலக்கணம் எழுதியது சமஸ்கிருத்ததிலும் அல்ல! சமஸ்கிருதத்துக்கும் அல்ல! 'கீர்வாணம்' என்னும் வேதமொழிக்குப் பிற்பட்ட, சமஸ்கிருதத்துக்கு முற்பட்ட 'பாஷா' என்ற மொழிக்கே பாணினி இலக்கணம் எழுதினார்.

11. எழுதப்படாத இன, சமுதாய இலக்கியங்களே பாணினி கால ஆரிய இலக்கியங்கள்!

'பாஷா'வுக்கு இலக்கணம் எழுதிய பாணினி காலத்தில், ஆரியர்களிடம் இருந்தவை எழுதப்படாத இன இலக்கியமான வேத-உபநிஷத்துக்களும், எழுதப்படாத சமுதாய இலக்கியமான இதிகாசங்களும் மட்டுமே! இவை 'பாஷா'வில் பாடப்பட்டு வந்தன. பாணினி காலத்தில், இவை தவிர, சொல்லிக்கொள்கிற அளவில் வேறு இலக்கியமில்லாத காரணத்தால், யாப்பியலோ, அணியியலோ 'பாஷா'-வுக்கு (சமஸ்கிருதத்துக்கு) உருவாகவில்லை.

13. பொருளிலக்கணம் உருவாகத் தகுதிபெறாத ஆரியர்கள்!

ஆரியர்களுக்கென்று மரபியல், நிலம், காலம், சிறுபொழுது, பெரும்பொழுது, பண்பாட்டு அசைவுகள், ஆரியர் நிலத் தாவர, விலங்கினங்களின் பண்புகள் உள்ளிட்ட பொருளியல் இலக்கணம் எழுதத் தேவையற்ற நாடோடிகளாகவே ஆரியர்கள் இருந்தனர்.

14. மிகச்சிறந்த சமஸ்கிருத அலங்கார நூல்கள் தந்தது தமிழர்களே!

சமஸ்கிருதம் கற்ற பிற்காலத் தமிழர்கள், குறிப்பாகக் கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த தமிழரிஞரும், சமஸ்கிருதப் புலமை பெற்ற அறிஞருமான 'தண்டி' என்பவர் தந்த  'தண்டியலங்காரம்' என்ற நூல்தான் சம்ஸ்கிருத மொழிக்குக் கிடைத்த முதல் யாப்பு, அணி இலக்கண நூல். 'தண்டியலங்காரம்' தண்டி என்ற தமிழரிஞர் சம்ஸ்கிருதமொழிக்கிட்ட கொடை! சமஸ்கிருதத்தில் மிகச்சிறந்த அலங்கார நூல்கள் தமிழர்களாலேயே எழுதப்பட்டன.

15.சமஸ்கிருத யாப்பணி நூல் 'அலங்கார சாஸ்திரம்' தொல்காப்பியத்தில் கொடையே!

தொல்காப்பியமும், தமிழும், தமிழரும், சமஸ்கிருதத்துக்குப் போட்ட தானக்கொடையே சமஸ்கிருத யாப்பணி நூலான 'அலங்கார சாஸ்திரம்' என்பதை தமிழர்களும், ஆரியர்களும், ஆரியப் பற்றாளர்களும் இப்போதாவது நன்றாக அறியட்டும். காலத்தால் சமஸ்கிருதம் எத்துணை பிற்பட்ட மொழி என்பதைக் கண்டு நம்மவர் பார்வை தெளியட்டும்!

16. மொழிக்கும், இலக்கியத்துக்கும் ஒருங்கே இலக்கணம் கொண்டது தமிழ் மட்டுமே!

தமிழ்மொழி ஒன்றில் மட்டுமே தொடக்க காலத்திலிருந்தே மொழிக்கும், இலக்கியத்துக்கும் ஒருங்கே இலக்கணம் அமைந்திருந்தது. தமிழில் இலக்கணம் என்றால் 'தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் உரிய இலக்கணம்' என்று பொருள்.

கிரேக்கம், லத்தீன், அரபு, சமஸ்கிருதம் உள்ளிட்ட அனைத்து உலகமொழிகளுக்கும் 'இலக்கணம்' என்பதற்கு, 'மொழியின் இலக்கணம்/மொழியில் இயல்பு' என்பது மட்டுமே பொருள்.

17. சம்ஸ்கிருத இலக்கியங்கள் தமிழ் இலக்கியங்களைப் பின்பற்றியே எழுந்தவை!

சம்ஸ்கிருத இலக்கியங்கள் தமிழ்ச்சங்க இலக்கியங்களுக்கு மிகவும் பிற்பட்ட பல்லவர்களின் காலத்திலேயே உருவாயின. வடக்கே குப்தர்கள் சம்ஸ்கிருத இலக்கியங்களை வளர்த்தனர். தமிழகத்தில் தமிழ் இலக்கியங்களின் மொழிபெயர்ப்பு இலக்கியங்களாகவே சம்ஸ்கிருத இலக்கியங்கள் பெருகின. சங்ககாலத்துக்குப் பிற்பட்ட சம்ஸ்கிருத இலக்கியத்திலும், தமிழிலக்கியத்திலும் நாம் ஒரே வகையான பண்பாட்டிலக்கியங்களைக் காணலாம்!

18. 'உலக வழக்கும், செய்யுள் வழக்கும்' என்று இலக்கணத்துக்கே இலக்கியமாகக் குறித்த ஒரே உலக மொழிமரபு தமிழ் இலக்கணமரபு மட்டுமே என்பது தமிழர்கள் பெற்ற பேறு!

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்!  அன்னார்

உள்ளத்தால் ஒருவரே! மற் றுடலினால் பலராய்க் காண்பார்!

கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு

துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.