Jump to content

`கீழடி' பாண்டியர்களின் தலைநகரமா?'


Recommended Posts

'கீழடி' என்கிற ஒற்றைச் சொல், தமிழக மக்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் பலராலும் உச்சரிக்கப்படுகிறது. தமிழ் நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழைமையானது என நான்காம் கட்ட ஆய்வு முடிவில் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகின.

மேலும், வைகை நதி நாகரிகத்துக்கும் சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் நெருங்கிய தொடர்புடையதாகவும் சொல்லப்படுகிறது. சங்ககால வரலாற்றையே மாற்றி அமைக்கும் எனத் தகவல்கள் வெளியாகின்றன.

இவை குறித்து பேராசிரியர் அருணனிடம் பேசினோம். "நான் முதலில் தமிழக அரசைப் பாராட்டுகிறேன். இந்த ஆய்வின் முடிவுகளை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சிகரமானது. ஏனென்றால், இதற்குமுன் ஆய்வுசெய்த முதல்கட்ட முடிவுகளை மத்திய அரசு வெளியிடவில்லை. தமிழனுக்கென்று ஒரு நாகரிகம் இருப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லையா என்று எண்ண வைக்கிறது. மத்திய அரசு முழு முடிவையும் வெளியிட வேண்டும் என விரும்புகிறேன். இப்போது வெளியாகியுள்ள ஆய்வு முடிவு, தமிழர்கள் நாம் எவ்வளவு தொன்மையானவர்கள் என்பதை உணர வைக்கிறது. மேலும், கீழடி ஆய்வில் கிடைத்த மற்றுமொரு முக்கிய அம்சம் 'எழுத்துரு'.

கீழடியில் பானை ஓடுகளில் கிடைத்துள்ள எழுத்துருக்கள், சிந்து சமவெளி நாகரிகத்தில் கிடைத்த எழுத்துருவோடு ஒத்துப்போகிறது. இந்தியத் துணைக்கண்டத்தில் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே சிந்து சமவெளி முதல் வைகை நதி வரை ஒரு நாகரிகத் தொடர்பு இருக்கிறது. இந்த அடிப்படையில் மேலும் பல ஆய்வுகள் தொடர வேண்டும். 'ஹரப்பா', 'மொகஞ்சதாரோ' போல கீழடியையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். கிடைத்த பொருள்களை அங்கே அருங்காட்சியகமாக வைக்க வேண்டும். கீழடி ஆய்வுக்காக மத்திய அரசிடம் மாநில அரசு கூடுதல் நிதி கேட்டிருக்கிறது

அந்த நிதியை மத்திய அரசு தாமதமின்றி வழங்க வேண்டும். மேலும், கீழடி ஆய்வுக்கான முழு உதவியை மத்திய அரசு செய்ய வேண்டும். இன்றைக்கு வரலாற்று அறிஞர்கள் மிக முக்கியமான தகவல்களைக் கொடுத்திருக்கிறார்கள். கீழடி ஆய்வை முழுமையாகத் தொடர்ந்தால் தெற்காசியாவின் வரலாற்றை மாற்றி அமைக்கும்" என உறுதியாகக் கூறினார் பேராசிரியர் அருணன்.

பேராசரியர் பாரதி புத்திரனைத் தொடர்புகொண்டபோது, தமிழ் நாகரிகத்திலிருந்த மேன்மையான தன்மைகள் குறித்துப் பேசிய அவர், " "சங்ககாலம் என்பது தொல்லியல் சார்ந்து நம் ஆய்வாளர்கள் கி.மு 2-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி 3-ம் நூற்றாண்டு வரையிலான 500 ஆண்டுகள் எனக் குறிப்பிடுகிறார்கள். தற்போது கிடைத்துள்ள பொருள்கள் இன்னும் 300, 400 ஆண்டுகள் பழமையானது எனச் சொல்கிறது. அசோகருடைய காலம் கி.மு 3-ம் நூற்றாண்டு என வரையறுத்திருக்கிறார்கள். அப்படிப் பார்க்கையில் அசோகர் காலத்துக்கு முன்பே தமிழில் எழுத்துருக்கள் இருந்திருப்பதாகத் தெரிகிறது.

அகழ்வாய்வில் கிடைத்துள்ள பொருள்களில் இருக்கிற ஒப்புமையைப் பார்க்கிறபோது சிந்து சமவெளி நாகரிகத்துக்கு இணையானது எனக் கருத வைக்கிறது. தமிழர் நாகரிகம், நகர நாகரிகமாக இருக்கிறது. ஆய்வில் கிடைத்த உரைகிணறுகள், சுகாராதப் போக்குகள் ஆகியவற்றைக் காணும்போது 'ஹரப்பா', 'மொகஞ்சதாரோ' போல ஒரு முதிர்ச்சியான நாகரிகமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும், வைகை நதியைப் பயன்படுத்தி ரோமானியர்களுடன் கடல்வழியாகத் தொடர்புகொண்டிருக்கிறார்கள் என, அங்கு கிடைத்துள்ள பொருள்கள் மூலம் தெரிய வருகிறது. 

தமிழர்கள் கப்பல் கட்டுமானத் துறையில் தொழில்நுட்ப அறிவுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள் என இதன் மூலம் அரிய முடிகிறது. கடல் மற்றும் இயற்கை சார்ந்த புரிதல் தமிழர்களுக்கு அதிகம் என்பதையே ஆய்வில் கிடைத்த தானியங்கள், பானை ஓடுகளில் கிடைத்த குறியீடுகள் காட்டுகின்றன. மேலும், இவை பாண்டியர்களின் தலைநகராக இருக்கக்கூடுமோ என்ற தகவல் இதை மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றுகிறது.

ஏனென்றால், பாண்டியனின் தலைநகரான மதுரைக்கு மணலூர், ஆலவாய் உள்ளிட்ட பல பேர்கள் உள்ளன. எனவே, அந்த வகையில் நிரூபிக்கப்பட்டால் தென் பாண்டிய வரலாறு இன்னும் பழைமையாக இருக்கும். தமிழ் எழுத்துரு குறித்த தெளிவான முடிவு கிடைத்திருக்கிறது. புழங்கு பொருள்களின் மீது தம் பெயரை எழுதிவைக்கும் முறையைப் பற்றி ஏற்கெனவே ஐராவதம் மகாதேவன் குறிப்பிடுவார். அந்த வகையில் எளிய மக்களும் எழுத்தறிவுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது பெருமைக்குரிய ஒன்று. இவற்றையெல்லாம் வைத்து பார்க்கிறபோது கீழடி மிகத் தொன்மையான, சிறப்பான நாகரிகம் என்பது தெளிவாகிறது" எனப் பெருமை பொங்க பேசினார் பாரதி புத்திரன்.

https://www.vikatan.com/news/tamilnadu/was-keezhadi-capital-of-pandiya-nadu

 

 

 

Link to comment
Share on other sites

அடுத்தகட்ட ஆய்வுக்குத் தயாராகும் தமிழக அரசு

சிந்து சமவெளி அகழாய்வின்போது கிடைத்த திமில் உடைய காளையின் எலும்புகள் கீழடி அகழாய்விலும் கிடைத்திருப்பதால், இரு நாகரிகங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கீழடியில் கிடைத்த பொருட்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் ஆய்வகங்களுக்கும் சோதனைக்காக அனுப்பப்பட்டது. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள BETA நிறுவனத்தில் கார்பன் டேட்டிங் எனப்படும் கரிமப் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், கீழடியில் கிடைத்த பானை ஓடுகள், இத்தாலியில் உள்ள பைசா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும், அங்கு கிடைத்த எலும்புத் துண்டுகள், புனேவில் உள்ள டெக்கான் கல்லூரிக்கு அனுப்பப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

கீழடி அகழாய்வின்போது கி.மு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட பானைகள் கிடைத்தன. அதேபோல், திமில் உள்ள காளைகள், பசு, எருமை, ஆடு போன்றவைகளை வேளாண் பணிகளுக்கு உதவும் வகையில் கால்நடைகளாக வளர்த்து வந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், களிமண், செங்கல், சுண்ணாம்பு சாந்து மற்றும் இரும்பு ஆணிகள் பயன்படுத்தி வீடுகள் கட்டுமானம் நடைபெற்றதற்கான ஆதாரங்களும் கீழடியில் கிடைத்திருக்கின்றன.

சங்ககால தமிழ்ச் சமூகம் எழுத்தறிவு பெற்ற சமூகம் என்பதற்கு சான்றாக பெயர்கள் பொறிக்கப்பட்ட பானைகள். இருவேறு நிறங்களில் பானைகள், நூல் நூற்கும் தக்கழிகள், கூர்முனை கொண்ட எலும்பால் செய்யப்பட்ட கருவிகள், தங்க அணிகலன்கள், மணிகள், தந்தத்தில் செய்யப்பட்ட சீப்பு, சதுரங்கம் மற்றும் பகடைக் காய்கள் போன்றவையும் கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழடி அகழாய்வு முடிவுகள் வரலாற்றைத் திருத்தி எழுதும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கீழடியில் அடுத்தகட்ட ஆய்வு குறித்து பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ``உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்துடன் இணைந்து அடுத்தகட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு நினைக்கிறது. கேரளாவில் பட்டணம் என்ற ஒரு இடம் கண்டறியப்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் சேர மன்னனின் துறைமுக நகராக விளங்கிய முசிறிப்பட்டணம்தான் அது என்பது கண்டுபிடிக்கப்பட்டு, உலக அளவில் அந்த ஆய்வு குறித்து பேசப்பட்டது. புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து அங்கு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல், நாமும் ஒரு உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்துடன் இணைந்து அடுத்தகட்ட ஆய்வு விரிவாக வீரியத்துடன் செய்ய வேண்டும்'' என்றார்.

மேலும், இந்த அரிய தருணத்தில் கீழடி ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ள தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜனையும் அந்தத் துறையின் முதன்மைச் செயலர் உதயசந்திரனையும் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்

https://www.vikatan.com/news/tamilnadu/tn-government-released-keezhadi-excavation-results

Link to comment
Share on other sites

காசுமேரு - காஸ்மீர்

பாமேரு - பாமீர்

சைலம் - மலை

தச - பத்து தச

சைலம் - பத்துமலை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

காசுமேரு - காஸ்மீர்

பாமேரு - பாமீர்

சைலம் - மலை

தச - பத்து தச

சைலம் - பத்துமலை

 

கீழடி, அகழ்வாரய்சி மூலம் கண்டு பிடிக்க பட்ட, தமிழ் பிராமி எழுத்துக்களை உடைய தமிழர் நாகரீகம். இப்படியான உண்மையான ஆராய்சிகளின் மூலம் எமது வரலாற்றை அறிய முற்பட்டு, ஆதாரபூர்வமா நிறுவும் போதுதாம் எமக்கான, எம் வரலாற்றுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

மாறாக, ஒரு மம்பெட்டியை கூட பிடிக்காமல், கண்டதையும் வாசித்து விட்டு, கந்தபுரிதான் Canterbury, மதுரைதான் Madrid என்று கிளம்புபவர்களால் எமக்கு உலக அளவில் கேலியும் கிண்டலும்தான் மிச்சம்.

ஜேசு சாகும் தறுவாயில் “ஏலேய், ஏலேய் லாமா” என்று அரைமைக்கில் கூறியது தமிழ் என்று இப்படித்தான் முன்பு ஒரு வீடியோ வந்தது.

யாழ் களத்திலும் இப்படியான, தமிழர் நாகரீகம்தான் சுமேரிய நாகரீகம். பெளத்ததை புத்தர் தமிழரிடம் இருந்தே அறிந்தார் என்பது போல சில பதிவுகளும், சீசனுக்கு சீசன் வருவதுண்டு.

இவர்களின் ஒரே நோக்கம் தமது யூடியூப் விடியோக்களுக்கு பார்க்கும் அளவை கூட்டி அதன் மூலம் காசு பார்பதே.

உண்மையான வரலாற்றாய்வாளர்களை பல்கலைகழகங்களில் தேடுவோம். யூடியூப்பிலும் இணையத்திலும் அல்ல

Link to comment
Share on other sites

6 hours ago, goshan_che said:

யாழ் களத்திலும் இப்படியான, தமிழர் நாகரீகம்தான் சுமேரிய நாகரீகம். பெளத்ததை புத்தர் தமிழரிடம் இருந்தே அறிந்தார் என்பது போல சில பதிவுகளும், சீசனுக்கு சீசன் வருவதுண்டு.

இவர்களின் ஒரே நோக்கம் தமது யூடியூப் விடியோக்களுக்கு பார்க்கும் அளவை கூட்டி அதன் மூலம் காசு பார்பதே.

உண்மையான வரலாற்றாய்வாளர்களை பல்கலைகழகங்களில் தேடுவோம். யூடியூப்பிலும் இணையத்திலும் அல்ல

முதலில் இந்த மாதிரி இணைப்புக்கள் பல சிந்தைக்குரிய கேள்விகளை முன்வைக்கின்றன. அதன் மூலம் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் என பலருக்கும் மேற்கொண்டு சிந்திக்க உதவும். 

அடுத்து, இணைப்பில் நீங்களே தேடலில் ஈடுபடுங்கள் என கூறப்படுகின்றது. எதையும் தீர விசாரித்து ஆய்ந்து அறியவேண்டும் என கூறப்படுகின்றது. பல மூல ஆய்வுகளையும் கூறி கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. 

ஆயிரம் பேர் ஒளிப்பதிவு இணைப்புக்களை இணைக்கும் எமது மக்கள் மத்தியில் எமது மறைக்கப்பட முனையும் சக்திகள் மத்தியில் இவ்வாறு இணைப்புக்கள் இணைப்பது எமது இனத்திற்கு அதன் வரலாற்றிற்கு நன்மையே. அதில் அவர்கள் பணம் சம்பாதித்து அதன் மூலம் சிலரை இணைத்து மேலும் தரம் வாய்ந்த ஒளிப்பதிவுகளை தரவேற்றம் செய்வதை ஆதரிப்பதில் தவறு இல்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ampanai said:

முதலில் இந்த மாதிரி இணைப்புக்கள் பல சிந்தைக்குரிய கேள்விகளை முன்வைக்கின்றன. அதன் மூலம் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் என பலருக்கும் மேற்கொண்டு சிந்திக்க உதவும். 

அடுத்து, இணைப்பில் நீங்களே தேடலில் ஈடுபடுங்கள் என கூறப்படுகின்றது. எதையும் தீர விசாரித்து ஆய்ந்து அறியவேண்டும் என கூறப்படுகின்றது. பல மூல ஆய்வுகளையும் கூறி கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. 

ஆயிரம் பேர் ஒளிப்பதிவு இணைப்புக்களை இணைக்கும் எமது மக்கள் மத்தியில் எமது மறைக்கப்பட முனையும் சக்திகள் மத்தியில் இவ்வாறு இணைப்புக்கள் இணைப்பது எமது இனத்திற்கு அதன் வரலாற்றிற்கு நன்மையே. அதில் அவர்கள் பணம் சம்பாதித்து அதன் மூலம் சிலரை இணைத்து மேலும் தரம் வாய்ந்த ஒளிப்பதிவுகளை தரவேற்றம் செய்வதை ஆதரிப்பதில் தவறு இல்லை.  

எனெக்கன்னமோ, உந்த லொஜிக் சரோஜாதேவி புத்தகத்தை மாணவர்களிடம் கொடுங்கள், அதை படிப்பதன் மூலம் அவர்களின் வாசிப்பு பழக்கம் அதிகரிக்கும், அதன் பின் அவர்கள் திருகுறளை தேடிப் படிப்பார்கள் என்பது போல படுகிறது.

நல்லவேளையாக இந்த பதிவுகளில் வருவனவற்றை வைத்து எம் வராலாற்றை ஆராயும் நிலையில் இலங்கையிலும், தமிழகத்திலும் ஆராய்சியாளர்கள் இல்லை என்பது நம்பிக்கையூட்டுகிறது.

இப்படியான அபத்தங்களை பரப்புவதன் மூலம், இவர்களுக்கு கிளிக்ஸ் மட்டும் நாம் எடுத்துக் கொடுக்கவில்லை, பேஸ்புக்கில் வருவதுதான் செய்தி, யுடீப்பில் வருவதுதான் வரலாறு, விக்கிபீடியாதான் உலகப் பொது தகவல்தொரட்டி,  மீம்ஸ்சில் போடுவதுதான் எம் அரசியல் என்று முடிக்ககூடிய பலரை பிழையாக வழிநடத்துகிரோமா என்பதையும் சிந்திக்க வேண்டும்.

நாய் பார்க்கும் வேலையை குதிரை பார்ப்பதில் நாம் வல்லவர்கள்.

வரலாற்றை துறைசார் நிபுணர்களிடம் விடுவதே நல்லது.

போலி வைத்தியர்கள் போல, போலி வரலாற்றாளர்களும் ஆபத்தானவர்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.