Jump to content

எந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்!

Shyamsundar IPublished:September 22 2019, 12:16 [IST]

மதுரையில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியில் வரிசையாக பெரும் திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மதுரைக்கு அருகே உள்ள கீழடியில் தொல்பொருள் ஆராய்ச்சி நடந்து வருகிறது.

எங்கு இருக்கிறது

மதுரை மாவட்டத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது கீழடி கிராமம். இங்கு செய்யப்பட ஆய்வுகள் மூலம் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் அங்கு அகழ்வாராய்ச்சி நிறுத்தப்பட்டது. பின் தற்போது மீண்டும் அங்கு ஆராய்ச்சி தொடங்கி நடந்து வருகிறது.

எத்தனை வருடம்

இந்த நிலையில் தற்போது அங்கு கிடைத்திருக்கும் பொருட்கள்தான் இந்திய வரலாற்றில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆம் கீழடியில் கிடைத்த பொருட்களில் செய்யப்பட்ட கார்பன் ஆராய்ச்சியில் அதன் வயது 2600 வருடங்களுக்கு முந்தையது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 600 வருடங்களுக்கும் முன்பு.

என்ன எல்லாம் கிடைத்தது

இதற்கு முன் உலகில் எங்கும் இவ்வளவு பழமையான பொருட்கள் கிடைக்கவில்லை. ஏற்கனவே இங்கு மணி, பொத்தான், தோடு, தகடு, தொங்கட்டான் ஆகிய பொருட்கள் கிடைத்தது. தற்போது கழிவு நீர் குழாய்கள். செப்பு பாத்திரங்கள். மண் பானைகள் ஆகியவை கிடைத்து உள்ளது. இதன் மூலம் 2600 வருடங்களுக்கு முன்பே தமிழ் நாகரீகம் முன்னேறி சிறப்பாக இருந்தது நிரூபணம் ஆகி உள்ளது.

குறிப்பு என்ன

இந்த ஆதாரங்களில் சில விலங்குகள் பொம்மைகள் இருந்துள்ளது. ஆனால் வழிப்பாடு நடந்ததற்கான அடையாளங்கள் இல்லை. மிக மிக முக்கியமாக இந்த ஆராய்ச்சியில் இதுவரை இந்து மத அடையாளங்கள் கிடைக்கவில்லை. அதாவது ஆதி தமிழர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறும் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன அறிக்கை

இது தொடர்பாக தொல்லையில் துறை வெளியிட்டு இருக்கும் ஆய்வு அறிக்கையில், எங்கள் ஆய்வில் சில விலங்குகளின் சின்னங்கள் கிடைத்தது. ஆனால் எங்கும் மதம் மற்றும் வழிபாடு தொடர்பான சின்னங்கள் கிடைக்கவில்லை, என்று கூறியுள்ளது. இதன் மூலம் தமிழர்கள் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், புத்தம், சைவம், வைணவம் என்று எதையாவது பின்பற்றினார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இயற்கையை வழிபாடு

அதே சமயம் சில வரலாற்று ஆய்வாளர்கள், தமிழர்கள் இயற்கை வழிபாடு நடத்தி இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்த முடிவுகள் மூலம் இந்தியாவின் மொத்த முகமும் மாற போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திராவிட வரலாறு, தமிழர் வரலாறு, இந்திய வரலாறு, இந்து வரலாறு அனைத்தையும் கீழடி மொத்தமாக மாற்றி எழுதும் நாள் வெகு தொலைவில் இல்லை!

https://tamil.oneindia.com/news/tamilnadu/no-religion-related-foundings-have-been-found-n-keezhadi-civilization-yet/articlecontent-pf401983-363624.html 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையை வழிபடும் மதம் எண்டால் சைவமதம் தானே:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சைவம் ஒன்று இருக்கும் பொழுது பிரச்சினை இல்லை. இரண்டாவது மூன்றாவது என்று வரும்பொழுதுதான் பிரச்சினைகள் துவங்குது.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

இயற்கையை வழிபடும் மதம் எண்டால் சைவமதம் தானே:cool:

இல்லை. சிவனை வழிபடுவதுதான் சைவம். அபொர்ஜினிகள், செவ்விந்தியர்கள், நியூசிலாந்தின் மையோரிகள், அந்தமான் பழங்குடிகள், அமேசன் பழங்குடிகள், பபுவாநியுகினி பழங்குடிகள் இவ்வாறு பலரும் இயற்கை வழிபாட்டாளர்கள். ஆனால் சைவம் இல்லை.

இயற்கை வழிபாடு எந்த சைவ சித்தாந்தம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

இல்லை. சிவனை வழிபடுவதுதான் சைவம். அபொர்ஜினிகள், செவ்விந்தியர்கள், நியூசிலாந்தின் மையோரிகள், அந்தமான் பழங்குடிகள், அமேசன் பழங்குடிகள், பபுவாநியுகினி பழங்குடிகள் இவ்வாறு பலரும் இயற்கை வழிபாட்டாளர்கள். ஆனால் சைவம் இல்லை.

இயற்கை வழிபாடு எந்த சைவ சித்தாந்தம்?

எது எப்படியோ பாப்பனியமும் பெரியாரிஸ்டும் இல்லாமல் தமிழ் என்று கீழடியில் இருப்பதையிட்டு பெரிய சந்தோசம்..😎
நிற்க.....
 என்னை கனக்க கேள்வி கேட்டால் விட்டுட்டு ஓடுவது என்ரை நடைமுறையில் ஒன்று.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

எது எப்படியோ பாப்பனியமும் பெரியாரிஸ்டும் இல்லாமல் தமிழ் என்று கீழடியில் இருப்பதையிட்டு பெரிய சந்தோசம்..😎
நிற்க.....
 என்னை கனக்க கேள்வி கேட்டால் விட்டுட்டு ஓடுவது என்ரை நடைமுறையில் ஒன்று.:cool:

இதில் எனக்கும் சந்தோசமே. நாம் இறையியல் என்ற தத்துவத்தை கொண்டிருந்தோம் என்பதில் எனக்கு ஒரு எதிர்கருத்தும் இல்லை. அது இந்து, சைவ சமயம் என்று சொல்வதில்தான் எனக்கு உடன்பாடில்லை. பெளத்தத்திற்கும் பின் அல்லது அதே காலத்தில் அல்லது சற்று முன்பாக எம்மிடம் பரவிய சமயமே சைவம்.

பெரியாரிசம் என்று ஏதுமில்லை. பகுத்தறிவு (ரேசனலிசம்) என்பது பெரியார் உருவாக்கியதல்ல. மனிதன் முதலில் சிந்திக்க தொடங்கிய போதே பகுத்தறியும் மனமும் வேலை செய்ய தொடங்கி விட்டது. பெரியார் அதை எம்மத்தியில் பிரபலப்படுத்தினார். அவ்வளவே.

எம்மை சுற்றி நடப்பவற்றிக்கு இறை எனும் ஒரு பெரும்சக்தி காரணமா என ஆராய்வதும் கூட ஒருவகையில் பகுத்தறிவே.

ஆதி குடிகள் பல இந்த ஆராய்சியில் ஈடுபட்டதை வரலாறு காட்டுகிறது. நாமும் அதற்கு விலக்கல்ல.

நாம் நிறுவனமயபட்டு, பொய்யாண புராண இதிகாச கட்டுகதைகளை, சிலைகளை நம்பாமல், இயற்கையை வழிபட்டு (வழிபாடு என்பதை விட, இயற்கையை மதித்து, போசித்து, காத்து) வளர்ந்த ஒரு மக்கட்கூட்டம் எனும் வகையில், நாம் அப்போதே பகுத்தறிவாளர்களாய் இருந்துள்ளோம் என்பதில் எனக்கும் மட்டில்லா பெருமிதம்தான்.

இருக்க (நெடுக நிண்டா கால் நோக்கும்).

நீங்கள் கேள்விகளை கண்டு மெல்ல நழுவும் ரகமில்லை. ஆனால் மலையளவு மறுக்க முடியாத ஆதாரங்களை வைத்த பின்பும், உங்கள் கொள்கையை சீர்தூக்கி பார்த்து, முன்னர் எடுத்த முடிவை மாற்றுவதில் நீங்கள் பின்னடிக்கிறீர்கள். அப்படி செய்வது அவமானம், இவர் சொல்லி நான் என்ன என் கருத்தை மாற்றுவது என நினைக்கிறீர்களோ தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்லாவை தவிர ஒருவரும் கடவுளில்லை என முஸ்லீம்கள் கூறுகின்றார்கள்

“There is not God but Allah”, in Arabic, “La ilaha ill-Allah”,

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, colomban said:

அல்லாவை தவிர ஒருவரும் கடவுளில்லை என முஸ்லீம்கள் கூறுகின்றார்கள்

“There is not God but Allah”, in Arabic, “La ilaha ill-Allah”,

 

 

அது மட்டுமா? முகமதூர் ரசூலல்லாஹ் எனவும் சொல்கிறாரகள். அதாவது அல்லாஹ்வின் கடைசி தூதர் நபி (ஸல்) மட்டுமாம்!

அளவற்ற ஆற்றல் உள்ளவர் ஏன் நேரடியாக கதைக்காமல் தூதர் வைக்கிறார்? 😂

Link to comment
Share on other sites

3 hours ago, குமாரசாமி said:

எது எப்படியோ பாப்பனியமும் பெரியாரிஸ்டும் இல்லாமல் தமிழ் என்று கீழடியில் இருப்பதையிட்டு பெரிய சந்தோசம்..😎
நிற்க.....
 என்னை கனக்க கேள்வி கேட்டால் விட்டுட்டு ஓடுவது என்ரை நடைமுறையில் ஒன்று.:cool:

கீழடி தொல்பொருட்கள் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்க 19/20 நூற்றாண்டில் வாழ்ந்த பெரியார் அதில் இல்லை என்று சந்தோசம் என்று கூறுமளவுக்கு உங்கள் நிலமை  இருக்கும் போது  கேள்விகளை கண்டு பயந்து ஓடுவது சகஜம் தானே. 

நான் நினைக்கிறேன் மதங்கள் அற்று வாழ் என்ற தமிழர் தொன்மையை தான் பெரியாரும் வலியுறுத்தி உள்ளாரோ. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

இதில் எனக்கும் சந்தோசமே. நாம் இறையியல் என்ற தத்துவத்தை கொண்டிருந்தோம் என்பதில் எனக்கு ஒரு எதிர்கருத்தும் இல்லை. அது இந்து, சைவ சமயம் என்று சொல்வதில்தான் எனக்கு உடன்பாடில்லை. பெளத்தத்திற்கும் பின் அல்லது அதே காலத்தில் அல்லது சற்று முன்பாக எம்மிடம் பரவிய சமயமே சைவம்.

பெரியாரிசம் என்று ஏதுமில்லை. பகுத்தறிவு (ரேசனலிசம்) என்பது பெரியார் உருவாக்கியதல்ல. மனிதன் முதலில் சிந்திக்க தொடங்கிய போதே பகுத்தறியும் மனமும் வேலை செய்ய தொடங்கி விட்டது. பெரியார் அதை எம்மத்தியில் பிரபலப்படுத்தினார். அவ்வளவே.

எம்மை சுற்றி நடப்பவற்றிக்கு இறை எனும் ஒரு பெரும்சக்தி காரணமா என ஆராய்வதும் கூட ஒருவகையில் பகுத்தறிவே.

ஆதி குடிகள் பல இந்த ஆராய்சியில் ஈடுபட்டதை வரலாறு காட்டுகிறது. நாமும் அதற்கு விலக்கல்ல.

நாம் நிறுவனமயபட்டு, பொய்யாண புராண இதிகாச கட்டுகதைகளை, சிலைகளை நம்பாமல், இயற்கையை வழிபட்டு (வழிபாடு என்பதை விட, இயற்கையை மதித்து, போசித்து, காத்து) வளர்ந்த ஒரு மக்கட்கூட்டம் எனும் வகையில், நாம் அப்போதே பகுத்தறிவாளர்களாய் இருந்துள்ளோம் என்பதில் எனக்கும் மட்டில்லா பெருமிதம்தான்.

இருக்க (நெடுக நிண்டா கால் நோக்கும்).

நீங்கள் கேள்விகளை கண்டு மெல்ல நழுவும் ரகமில்லை. ஆனால் மலையளவு மறுக்க முடியாத ஆதாரங்களை வைத்த பின்பும், உங்கள் கொள்கையை சீர்தூக்கி பார்த்து, முன்னர் எடுத்த முடிவை மாற்றுவதில் நீங்கள் பின்னடிக்கிறீர்கள். அப்படி செய்வது அவமானம், இவர் சொல்லி நான் என்ன என் கருத்தை மாற்றுவது என நினைக்கிறீர்களோ தெரியாது.

எனக்கு தெரிஞ்ச ஆள் ஒருவர் இப்பிடிச்சொல்லுறார். :cool:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

கீழடி தொல்பொருட்கள் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்க 19/20 நூற்றாண்டில் வாழ்ந்த பெரியார் அதில் இல்லை என்று சந்தோசம் என்று கூறுமளவுக்கு உங்கள் நிலமை  இருக்கும் போது  கேள்விகளை கண்டு பயந்து ஓடுவது சகஜம் தானே. 

நான் நினைக்கிறேன் மதங்கள் அற்று வாழ் என்ற தமிழர் தொன்மையை தான் பெரியாரும் வலியுறுத்தி உள்ளாரோ. 

நான் அங்கை கீழடியிலை ஐயர்மார்ரை மந்திர தந்திரங்களும் பெரியாரை போலை ஆக்களின்ரை காட்டுமிராண்டி கொள்கைகளும்  இல்லையெண்டு சொல்ல வந்தனான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

எனக்கு தெரிஞ்ச ஆள் ஒருவர் இப்பிடிச்சொல்லுறார். :cool:

 

பலதடவை சொன்னதுதான். மீளவும் சுருக்கமாக. இந்த பதிவாளர் திருவிளையாடல், கந்தன்கருணை போன்ற படங்களை தமிழ் வரலாற்று ஆவணங்கள் என ஊண்டி படித்திருப்பார் போலும் 😂.

1. நக்கீரனை மட்டுமில்லை - இன்னும் பல தமிழ் அறிஞர்களை, தமிழ் குறுநில மரபுகளை,  மூதாதைகளை, கண்ணகியை, ஓளவையை கபளீகரம் செய்து எம்மை சிறுக சிறுக ஆக்கிரமித்ததே இந்து சமயம் (சைவம், வைஸ்ணவம் எக்செட்றா). இதை பற்றி முன்னைய திரியில் விளக்கமாக எழுதினேன். நீங்கள் பிறகு வரவே இல்லை.

2. வள்ளுவனுக்கும் இந்து சமயதுக்கும் என்ன தொடர்பு? 

3. பக்தி இலக்கியம் இந்த ஆக்கிரமிப்பின் பின், ஆக்கிரமிப்புக்கு வலுச்சேர்க எழுந்த ஆக்கிரமிப்பாளரின் பிரச்சார இலக்கியம். மூவர் தமிழும், நாலாயிரதிவ்ய பிரபந்தமும் இவ்வகையே. இவற்றை ரசிக்கலாம். ஆனால் இவை எம்மினத்தின் வரலாற்றை சொல்லும் ஆவணங்கள் அல்ல.

4. கம்பராமாயணம் வால்மீகி ராமாயணம் என்ற வடமொழிக் கதையின், தமிழ் ரீமேக். இதை கம்பரே சொல்லித்தான் தொடங்குகிறார். ஆகவே இதிலும் எம் வரலாறு இல்லை.

5. இது உங்களிடம் நான் முன்பே கேட்ட விடை வராத கேள்விகளில் ஒன்று. தமிழ் இலக்கியத்தில் அல்லது அகழ்வாராச்சி சான்றில் “சிவன்” என்ற பதம் முதலில் எங்கே தோன்றிற்று? உங்கள் முகப்புத்தக நண்பரிடம் கேட்டும் சொல்லலாம்.

பிகு: அவரின் நேரத்தை மிச்சம் பிடிப்பதற்காக இப்போதே சொல்லிவிடுகிரேன், கேள்விக்கான பதில் தமிழ்த் கடவுள் படங்கள் எதிலும் இல்லை 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

product-250x250.jpeg

எடுபுடி ஆட்சியில்..  அவையள் JCB  வைத்து மண்ணள்ளி போட வேண்டியது .. ஆரண்ட புண்ணியமோ தப்பி போட்டுது..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.