Jump to content

வாய்ப்பு தவ­றுமா?: உச்­ச­ம­டைந்­தி­ருக்கும் தேர்தல் காய்ச்சல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாய்ப்பு தவ­றுமா?: உச்­ச­ம­டைந்­தி­ருக்கும் தேர்தல் காய்ச்சல்..!

ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு மேற்­கு­லக ஆத­ரவு அதிகம் இருக்­கி­றது, சிறு­பான்­மை­யின கட்­சிகள் மத்­தி­யிலும் ஓர­ள­வுக்கு ஆத­ரவு உள்­ளது, ஆனால் பிர­தான வாக்கு வங்­கி­யாக உள்ள சிங்­கள பௌத்த வாக்­கா­ளர்கள் மத்­தியில் செல்­வாக்கு குறை­வா­னவர். 

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான அறி­விப்பை தேர்தல் ஆணைக்­குழு வெளி­யிட்­டுள்ள நிலையில், தேர்தல் காய்ச்சல் உச்­ச­ம­டைந்­தி­ருக்­கி­றது.

இந்­த­ நி­லையில், கோத்­தா­பய ராஜபக் ஷவை எதிர்த்துப் போட்­டி­யிடப் போகும் பிர­தான வேட்­பாளர் யார் என்­பதே, இப்­போது முதன்­மை­யா­னதும் பிர­தா­ன­மா­ன­து­மான கேள்­வி­யாக இருக்­கி­றது.

ஏனென்றால், ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள், ஜனா­தி­பதி வேட்­பாளர் யார் என்­பது இன்­னமும் தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை. 

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவா, சஜித் பிரேம­தா­ஸவா, கரு ஜய­சூ­ரி­யவா அல்­லது பசில் ராஜபக் ஷ கூறு­வது போல, இவர்கள் மூவரும் அல்­லாத இன்­னொரு சவால்­மிக்க வேட்­பா­ளரா என்ற கேள்­வியே இப்­போது ஊட­கங்­களின் கவ­னிப்­புக்­கு­ரிய விட­ய­மாக இருக்­கி­றது.

இந்தப் பர­ப­ரப்பு நாளுக்கு நாள் அதி­க­ரித்துக் கொண்டே இருந்­தாலும், ஐ.தே.க.வின் தலை­வர்கள்  ஒன்றும் அவ­ச­ரப்­ப­டு­வ­தாக தெரி­ய­வில்லை. 

virakesari.jpg

தமக்­கி­டையில் உள்ள முரண்­பா­டு­களை ஜன­நா­யக ரீதி­யான போட்­டி­யாக காட்டிக் கொள்­கின்­றனர். அதில் ஒரு வகை­யான நியா­யமும் இருக்கத் தான் செய்­கி­றது.

எவ்­வா­றெனின், இலங்கை, இந்­தியா போன்ற நாடு­களின் ஜன­நா­ய­கத்தில் தான், கட்­சி­களின் தலை­வர்கள் ஆயுள் காலம் வரை அல்­லது ஆட்சிக் கவர்ச்சி இழக்கும் வரை, அர­சி­யலில் நீடிப்­பதும் -உயர் பத­விக்குப் போட்­டி­யி­டு­வதும் வழக்­க­மாக இருக்­கி­றது.

ஆனால், மேற்­கு­லக ஜன­நா­ய­கத்தில் நிலைமை அவ்­வா­றில்லை. கட்­சி­களின் தலைமைப் பத­வியை துடிப்­புள்ள தலை­வர்­களும், ஆற்றல் கொண்­ட­வர்­களும் அடிக்­கடி நிரப்­பு­கின்­றனர். தகை­மை­யற்­ற­வர்கள் அர­சியல் அரங்­கி­லி­ருந்து வெளி­யே­று­கின்­றனர்.

பிரித்­தா­னிய அர­சி­யலில் இருந்து டோனி பிளேயர் வெளி­யே­றிய போது அவ­ருக்கு 54 வயது, தான்.

தேர்­தல்­களில் தோல்­வி­ய­டையும் போது, அர­சி­யலை விட்டு அவர்கள் வில­கு­கின்­றனர். மீண்டும் மீண்டும் போட்டிக் களத்­துக்கு வரு­வ­தில்லை. அதை­விட, வாரிசு ரீதி­யாக தலைமைப் பத­வி­களைக் கைப்­பற்­று­வ­து­மில்லை.

அமெ­ரிக்­காவில் ஜனா­தி­பதித் தேர்தல் நடக்க முன்னர், குடி­ய­ரசுக் கட்­சி­யிலும், ஜன­நா­யக கட்­சி­யிலும் யார் வேட்­பாளர் என்­பதை தீர்­மா­னிக்கும் வாக்­கெ­டுப்­புகள் நடக்கும். அதில் யார் வேண்­டு­மா­னாலும் போட்­டி­யி­டலாம். கட்­சிக்குள் பல­மான ஆத­ரவை நிரூ­பிப்­பவர், ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றக்­கப்­ப­டுவார்.

அது­போல பிரித்­தா­னியா போன்ற நாடு­களில் பிர­தமர் பத­விக்­கான போட்­டி­யிலும் உட்­கட்சி தேர்தல், வாக்­கெ­டுப்பு எல்லாம் சகஜம்.

அண்­மையில் பிரித்­தா­னிய பிர­தமர் தெரெசா மே பதவி வில­கிய போது, பிர­தமர் பத­விக்கும் கொன்­சர்­வேட்டிவ் கட்­சிக்குள் 12 பேர் போட்­டி­யிட்­டனர். அவர்­க­ளுடன் போட்­டி­யிட்டே பொறிஸ் ஜோன்சன் பிர­த­ம­ரா­கவும் கட்­சியின் தலை­வ­ரா­கவும் தெரிவு செய்­யப்­பட்டார்.

அவ்­வா­றா­ன­தொரு போட்டிக் களத்­துக்குள் தான், ஐக்­கிய தேசியக் கட்­சியும் நுழை­வ­தற்­கான அறி­கு­றிகள் தென்­ப­டு­கின்­றன.

கடந்த காலங்­க­ளிலும் ஜனா­தி­பதி பத­விக்­காக ஐ.தே.கவுக்குள் முரண்­பா­டுகள் போட்­டிகள் இருந்­தி­ருக்­கின்­றன.

குறிப்­பாக, 1988 ஜனா­தி­பதித் தேர்­தலில், ரண­சிங்க பிரே­ம­தாஸ, காமினி திச­நா­யக்க, லலித் அத்­துலத் முதலி என மூன்று முக்­கிய தலை­வர்கள் ஜனா­தி­பதி பத­வியைக் குறி­வைத்­தி­ருந்­தனர்.

அந்தப் போட்­டியில் ரண­சிங்க பிரேம­தா­ஸவே வெற்றி பெற்று, தேர்­தலில் போட்­டி­யிட்­டி­ருந்தார்.

அதற்குப் பின்னர், ஐ.தே.கவுக்குள் ஜனா­தி­பதி பத­விக்­காக காமினி திச­நா­யக்­க­வு­டனும், ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் யாரும் போட்­டி­யி­ட­வில்லை. 1994இல், காமினி திச­நா­யக்க ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கப்­பட்ட நிலையில், குண்டு­வெ­டிப்பில் கொல்­லப்­பட்டார்.

அதற்குப் பின்னர், ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு பெரும் சவா­லான தலை­வர்கள் யாரும் உரு­வா­க­வில்லை.

எனினும், ஐ.தே.கவின் தலைமைப் பத­விக்­காக சஜித் பிரே­ம­தா­ஸ­வுடன் ரணில் விக்கி­ர­ம­சிங்க அடிக்­கடி மோதிக் கொள்ள வேண்­டி­யி­ருந்­தது, அதனை அவர் வெற்­றி­க­ர­மா­கவே சமா­ளித்து வந்தார்.

இப்­போது ஐ.தே.கவுக்குள் ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்­பாக எழுந்­தி­ருக்­கின்ற முரண்­பா­டு­களை, தீர்ப்­பது கடி­ன­மா­ன­தொரு முயற்­சி­யா­கவே பார்க்­கப்­ப­டு­கி­றது.

வெளியே இருந்து பார்த்துக் கொண்­டி­ருக்கும் ஐ.தே.க ஆத­ர­வா­ளர்­க­ளுக்கும், பங்­காளிக் கட்­சி­க­ளுக்கும், ராஜபக் ஷ எதிர்ப்பு அணி­யி­ன­ருக்கும் இது பதற்றம் நிறைந்த ஒரு விளை­யாட்­டாக இருக்­கி­றது.

இந்த விளை­யாட்டில் யார் வெற்றி பெறப் போகிறார் என்­பதை விட, அவரால் ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்­றியைப் பெற­மு­டி­யுமா என்­பதே பல­ரதும் கவ­லை­யாக உள்­ளது.

தேர்­தலில் வெற்­றி­பெற முடியும் என்ற நிலை இருந்தால் தான், போட்­டி­யி­டுவேன் என்றும் இல்­லையேல் ஒதுங்கி விடுவேன் என்றும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறி­யி­ருக்­கிறார்.

அவர் தனது ஆர்­வத்தை பகி­ரங்­க­மாக கூறவும் முடி­யாமல், அடக்­கவும் முடி­யாமல் தவிக்­கிறார்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு மேற்­கு­லக ஆத­ரவு அதிகம் இருக்­கி­றது, சிறு­பான்­மை­யின கட்­சிகள் மத்­தி­யிலும் ஓர­ள­வுக்கு ஆத­ரவு உள்­ளது, ஆனால் பிர­தான வாக்கு வங்­கி­யாக உள்ள சிங்­கள பௌத்த வாக்­கா­ளர்கள் மத்­தியில் செல்­வாக்கு குறை­வா­னவர். 

சஜித் பிரே­ம­தாஸ, தனது விருப்­பத்தைக் கூறி­விட்டார். கண்­டிப்­பாக போட்­டி­யி­டுவேன் கட்சி அதற்கு அனு­ம­திக்கும் என்­கிறார். 

அவ­ருக்கு அடி­மட்ட மக்­களின் ஆத­ரவு இருந்­தாலும், நகரப் புறங்­க­ளிலும், சிங்­கள பௌத்த உயர்­மட்­டங்­க­ளிலும் ஆத­ரவு குறைவு. சிறு­பான்­மை­யின மக்­களின் கவ­னத்தை கவரக் கூடிய தலை­வ­ராக அவர் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

இப்­போது கரு ஜய­சூ­ரிய தானும் களத்தில் இருக்­கிறேன் என்று கூறி­யி­ருக்­கிறார். அவ­ருக்கு பௌத்த பீடங்­களின் ஆத­ரவு இருப்­ப­தாக தெரி­கி­றது. அத்­துடன் ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­டி­யவர் என்ற வகையில் மக்­களின் ஆத­ரவு பெற்ற ஒரு­வ­ரா­கவும் இருக்­கிறார்.

இவர்கள் மூவரில் இருந்து யாரேனும் ஒருவர் தான் வேட்­பா­ள­ராக கள­மி­றங்க முடியும். இவர்­களில் ஒரு­வரை ஐ.தே.க செயற்­கு­ழுவும் பாரா­ளு­மன்றக் குழுவும் தான், வேட்­பா­ள­ராகத் தெரிவு செய்யப் போகி­றது.

இந்தப் போட்­டியில், சஜித் பிரே­ம­தாஸ முன்­ன­ணியில் இருப்­ப­தாக காட்டிக் கொண்­டாலும், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவோ அல்­லது கரு ஜய­சூ­ரி­யவோ வெற்­றியைப் பெற்­றாலும் ஆச்­ச­ரி­ய­மில்லை.

இர­க­சிய வாக்­கெ­டுப்பில் எதுவும் நடக்­கலாம் என்ற நிலை இருக்­கி­றது, இது பிரச்­சி­னைக்­கு­ரிய விடயம் அல்ல. அதற்கு அப்பால் தான் பிரச்­சி­னையே இருக்கப் போகி­றது.

உட்­கட்சி வாக்­கெ­டுப்பின் மூலம் தெரி­வாகக் கூடிய ஜனா­தி­பதி வேட்­பா­ளரால், கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு முழு அள­வி­லான போட்­டியைக் கொடுக்க முடி­யுமா என்­பதே அந்தக் கேள்வி. முழு அள­வி­லான போட்­டியைக் கொடுப்­பது என்­பது, தனியே அந்த வேட்­பா­ளரின் பின்­னணி, ஆத­ரவுத் தளம், என்­ப­ன­வற்­றினால்  மாத்­திரம் தீர்­மா­னிக்­கப்­படும் விடயம் அல்ல. அவ­ருக்கு கட்­சிக்குள் கிடைக்கக் கூடிய ஒத்­து­ழைப்பும் மிக அவ­சி­ய­மா­னது,

ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டுவேன் என்று அறி­வித்து விட்ட சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு வாய்ப்­ப­ளிக்­கப்­ப­டா­விட்டால், அவர் வேறொரு கட்­சியில் கள­மி­றங்கக் கூடும் என்­றொரு வதந்­தியும் உள்­ளது.

குறிப்­பாக ஐக்­கிய தேசியக் கட்­சியைத் தோற்­க­டிப்­ப­தற்கு, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி  அவரைப் பயன்­ப­டுத்திக் கொள்ளக் கூடும் என்­றொரு கருத்தும் உள்­ளது.

ஐ.தே.கவில் இருந்து வில­கிய போது வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கினால், சஜித்­துக்கு ஆத­ர­வ­ளிப்­பது குறித்து பேசத் தயார் என, தூண்டில் போட்­டி­ருக்­கிறார்  ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பேச்­சாளர் வீர­கு­மார திச­நா­யக்க.

ஆனால், ஐ.தே.கவில் வேட்­பா­ள­ராகப் போட்­டி­யிட வாய்ப்புக் கிடைக்­கா­விட்டால். இன்­னொரு கட்­சியில் சென்று போட்­டி­யி­ட­மாட்டேன் என்று சஜித் பிரே­ம­தாஸ கூறியிருக்கிறார்.

இது கட்சி ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு ஆறு­தலைக் கொடுத்­தி­ருக்­கி­றது.

ஐக்­கிய தேசியக் கட்­சியைப் பொறுத்­த­வ­ரையில், இப்­போது எழுந்­துள்ள நெருக்­க­டியை எவ்­வாறு சமா­ளிக்கப் போகி­றது என்­பது முக்­கி­ய­மான எதிர்­பார்ப்­பாக மாறி­யி­ருக்­கி­றது,

வரும் நாட்­களில் ஐ.தே.க மூன்று துண்­டு­க­ளாக உடையும் என்று மஹிந்த அணி­யினர் கூறி வந்­தாலும், அந்தக் கட்­சிக்குள் காணப்­படும் ஒரு­வித இணக்க மனோ­நிலை, அவ்­வா­றான ஒரு நிலை தவிர்க்­கப்­படும் வாய்ப்­புகள் உள்­ள­தையே வெளிக்­காட்­டு­கி­றது,

ரணில் விக்­கி­ர­ம­சிங்க மிக சோத­னை­யாக கட்­டங்­களைத் தாண்டி தலைமைப் பத­வியைத் தக்­க­வைத்துக் கொண்­டவர். இந்த முறை அவ­ரது பிரச்­சினை தலை­மைத்­துவம் மாத்­திரம் அல்ல. கட்­சி­யையும் பாது­காக்க வேண்­டி­யது.

இந்த வாய்ப்பை அவரோ அவ­ரது கட்­சி­யி­னரோ தவ­ற­விட்டால், இன்னொரு வாய்ப்புக்காக அவர்கள் பல காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். 

-சத்­ரியன் 

 

https://www.virakesari.lk/article/65324

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.