Jump to content

குவாண்டம் கணனியில்  Quantum Computing


Recommended Posts

குவாண்டம் கணனியில் 

முதலில் பிட் பைட் என்பனவற்றை பார்க்கலாம் 

கணினி ஒரு இயத்திரனியல் சாதனம் என்பது நீங்கள் அறிந்ததுதான். ஒரு மின் விளக்குப் போல் கணினியிலுள்ள மின் சுற்றுக்களும் On (1) அல்லது off (0) எனும் இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளன. 
On ஆக இருக்கும் நிலையை 1 (ஒன்று) எனும் இலக்கத்தாலும் off நிலையை 0 (பூச்சியம்) எனும் இலக்கத்தாலும் குறிக்கப்படுகின்றன. தகவல்களைக் கணினி நினைவகத்திலும் சேமிக்கும் போது ஒன்றுகளாலும் பூச்சியத்தாலும் மட்டுமே பதிவு செய்கின்றன. இங்கு ஒன்று அல்லது பூச்சியத்தை ஒரு பிட் என அழைக்கப்படும். பைனரி டிஜிட் (binary digit) எனும் வார்த்தைகளிலிருந்ததே பிட் (bit) எனும் வார்த்தை உருவானது. பிட் என்பது ஒரு தகவலின் மிகச் சிறிய அலகாகும்.

ஒரு பிட்டை மாத்திரம் கொண்டு ஒரு எழுத்தையோ அல்லது குறியீட்டையோ உருவாக்கி விட முடியாது. ஒன்றுக்கு மேற்பட்ட பிட்டுகளை ஒரு அணியாக ஒன்று சேர்க்கும்போதே எதனையும் (ஒரு தகவலை) அர்த்தமுள்ளதாக வெளிப்படுத்த முடிகிறது. இவ்வாறு 8 பிட்டுகள் சேர்ந்ததை ஒரு பைட் (byte) எனப்படும். ஒரு பைட் மூலம் 256 வெவ்வேறான எழுத்துக்களையோ அல்லது குறியீடுகளையோ வெளிப்படுத்தலாம். அதாவது எட்டு பிட்டுகளை மூலம் 256 வெவ்வேறான சேர்மானங்களை உருவாக்கலாம். இதன் மூலம் கீபோர்டிலுள்ள ஆங்கில பெரிய எழுத்துக்கள், சிறிய எழுத்துக்கள் மற்றும் குறியீடுகளையும் உருவாக்க முடிகிறது.

 

தகவல் சேமிப்பு 

உதாரணமாக் “A” எனும் எழுத்தானது கணினியில் 01000001 என பதியப்படுகிற்து. (அதாவது கணினி மின் சுற்றில் 8 Switches / ஆளிகள் இயங்குகின்றன) அதேபோல் ” * ” எனும் குறியீடு 00101010 என பதியப்படுகிறது. Cat எனும் பெயரை பதிய 010000110110000101110100 பிட்டுகள் இவ்வாறு அணி சேர்கின்றன. இவை மூன்று எழுத்துக்களைக் குறிக்கின்றன. எனவே இது மூன்று பைட்டுகளைக் கொண்டிருக்கும்.

பைட் கொண்டு ஒரு சிறு அளவிலான தகவலையே சேமிக்க முடியும் தகவலின் அளவு கிலோ பைட், மெகாபைட், கிகா பைட் போன்றவற்றிலேயே குறிப்பிடப்படுகின்றன. ஒரு Kilobyte (KB) கிலோ பைட் என்பது 1024 பைட்டுகளுக்குச் சமனானது. ஒரு மெகா பைட் Megabyte (MB) என்பது 1024 கிலோ பைட்டுகள் கொண்டது. 1024 மெகா பைட்டுகளை ஒரு கிகாபைட் (Gigabyte) கொண்டிருக்கும்.

கோப்புக்களின்  அளவு பைட்டிலும் கிலோ பைட்டிலும் அளவிடப்படுகின்றன. அதேவேளை ஒரு பாட்டானது  மெகா பைட்டிலும் ஒரு சினிமாவானது கிகா பைட்டிலும் சேகரிக்கப்படுகின்றது. 

குபிட் 

  1. குவாண்டம் கணனி முறையில் அடிப்படை அலகாக உள்ளது குபிட்
  2. பிட் (Bit) 0 அல்லது 1 ஐக் குறிக்கும்
  3. 4 பிட்டுகளின் சேர்க்கையை நிப்பல் (Nibble) என்ப்படும்.
  4. 8 பிட்டுகளின் சேர்க்கையை ஒரு பைட் (Byte) எனப்படும்.
  5. 16 பிட்டுகளின் சேர்க்கையை ஒரு வர்ட் (Word) எனப்படும்.
  6. 1024 பைட்டுகள்(Byte) சேர்ந்தவை ஒரு கிலோபைட் Kilobyte (KB) எனப்படும்.
  7. 1024 கிலோ பைட்டுகள் சேர்ந்தவை ஒரு Megabyte (MB) எனப்படும். ஒரு மெகாபைட் 1200 எழுத்துக்களாலான 873 பக்கங்கள் கொண்ட ஒரு ஆவணத்திற்குச் சமமானது.
  8. 1024 மெகா பைட்டுகள் சேர்ந்தவை ஒரு கிகா பைட் Gigabyte (GB)எனப்படும். இதனுள் 200 பக்கங்கள் கொண்ட 4473 புத்தகங்களை அல்லது 3 MB அளவு கொண்ட 341 படங்களை அல்லது 4 MB அளவு கொண்ட 256 பாடல்களைச் அடக்கிவிட்லாம்.
  9. 1024 கிகா பைட்டுகள் சேர்ந்தவை ஒரு Terabyte (TB) எனப்படும். ஒரு டெராபைட்டில் 200 பக்கங்கள் கொண்ட 4,581,298 புத்தகங்களை அல்லது 3 MB அளவு கொண்ட 349,525 படங்களை அல்லது 4 MB அளவு கொண்ட 262,144 MP3 பாடல்களைச் சேமிக்கலாம். மேலும் இது 650 MB அளவு கொண்ட 1,613 சீடிக்களுக்கு அல்லது 4.38 GB அளவு கொண்ட 233 டிவிடிக்களுக்கு அல்லது 25GB அளவு கொண்ட 40 ப்ளூரே டிஸ்க்குகளுக்குச் சமமானது.
  10. டெரா பைட்டுடன் நின்று விடவில்லை. Petabyte (PB), Exabyte (EB), Zettabyte (ZB), Yottabyte (YB) என எதிர் காலத்தில் தொடர இருக்கிறது

சாதாரண கணினி 0-1 என on-off முறையில் ஒன்றன் பின் ஒன்றாக செயற்படுகிறது. அதாவது ஒருமுறையில் ON அல்லது OFF என வேலை செய்தால், குவாண்டம் கணினியில்  நான்கு வழியில் ஒரே சமயத்தில் அனைத்தையும் செய்கிறது. 

 

Link to comment
Share on other sites

குவாண்டம் என்றால் என்ன ?

முதலில் Quantum mechanism,quantum physics  என்பதை சிறிது நினைவு படுத்திக் கொண்டீர்களானால் விளங்குவது சுலபமாக இருக்கும்.

இருப்பினும் முதலில் quantum என்றால் என்ன ,என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், சக்தி,ஒரு விசயம் (energy/matter ) ஒன்றின் மிகச் சிறிய அளவு முறையாக,Quantum என்பதன் பொருள் amount ,அளவு  எனப்பட்டாலும், இன்று அளவு என்பதற்குப் பதில் packages என்றே சொல்கிறார்கள்.இந்த packages களில் இருந்து energy, photons களாக வெளியிடப்படுகின்றன.அதனால் தான் சாதாரண solid state transistor களை விட குவாண்டம் atomic-nuclear molecules,(photon,electron,...ஏற்படும் magnetic field -spin ) மூலம் அதிக பலனைப் பெற முடிகிறது. அதாவது quantum bits என்பவை photons, atoms, electrons, molecules போன்றவற்றில் ஏற்படும் magnetic field ஐப் பயன்படுத்துகிறது என்று சொல்லலாம்.Nuclear சுழற்சியை நினைவு படுத்திப் பார்க்கவும். வேகம் மட்டுமல்லாது,சுழற்சியும் எல்லாப் பக்கங்களிலும் நடைபெறுகிறது.

பிட் / பைட் 

Chania

தகவல் சேகரிப்பு : சாதாரண கணனி  மற்றும் குவாண்டம் கணணி

Chania

சில சிக்கல்களை தீர்க்க கணணியால் முடிவதில்லை 

Chania

Link to comment
Share on other sites

பிட் ஆனது இரு நிறங்களால் ஆனது எனப்பார்க்கலாம். அது நீலம்  மற்றும் சிவப்பு என பார்க்கலாம். 

ஆனால், குபிட் அவ்வாறானது அல்ல. அது சிவப்பாக இல்லை நீலமாக இல்லை எதுவான நிறமாப்பையும் இருக்கலாம்.   

Chania

பல குபிட்களால் சேர்ந்தது குவாண்ட தகவல் 

இவ்வாறான குவாண்டம் தகவல்கள் குவாண்டம் கணணியில் இருக்கின்றன 

Chania

சாதாரண கணனி எவ்வாறு வேலை  செய்கின்றது  என அறியலாம். 

ஆனால், குவாண்டம் கணனி எவ்வாறு வேலை  செய்கின்றது  என அறியமுடியாது 

Chania

குவாண்டம் கணணி என்ன பதிலை தருகின்றது என்பதை மட்டுமே அறிய முடியும் 

Chania

குவாண்டம் கணணியால் சிக்கலான கேள்விகளுக்கான பதிலை தேட முடியும். 

Chania

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்பனை இதை நீங்களா எழுதுகிறீர்கள்?

அல்லது வெட்டி ஒட்டா?

ஒருதரம் வாசித்துப் பார்த்தேன், கொஞ்சம் விளங்கினமாரியும், கனக்க விளங்காத மாரியும் இருக்கு 😂.

கலைச் சொற்களை தமிழில் கிரகிப்பது கடினமானது. ஆங்கிலத்தில் இதன் பிரதி இருக்கிறதா?

புதிய ஒரு தகவலை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

Link to comment
Share on other sites

குவாண்டம் கணினிகள்

 

 

pl0806001.jpgஅறிவியல் துறைகளுக்குள்ளே இயற்பியலுக்கு ஒரு தனி முக்கியத்துவம் உண்டு. இயற்பியல் முன்னேற்றங்கள்தான் பெரும்பாலும் மற்ற அறிவியல் வளர்ச்சிகளுக்கு அடிகோலுகின்றன என்று சொன்னால் அது மிகையில்லை. இன்று அதிவேகமாக வளர்ந்துவரும் துறைகள் இரண்டு; ஒன்று தகவல் தொழில்நுட்பம் (Information Technology) மற்றது உயிர்த்தொழில் நுட்பம் (Biotechnology). இவ்விரண்டுக்கும் ஆதார முதுகெலும்பாக இருப்பது இயற்பியல். உயிர்த்தொழில் நுட்பத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து ஆய்வுக்கருவிகளும் இயற்பியலாளர்களால் வடிக்கப்பட்டவை. அதேபோல் அதிவேக கணினிகளுக்கும் கருத்துப்பரிமாறல்களுக்கும் தகவல் நுட்பம் இயற்பியல் வளர்ச்சியையே சார்ந்துள்ளது. 

 

கணினிகளின் வேகத்தை ஊகிக்க நுண்செயலி உற்பத்திப் பெருநிறுவனமான இன்டெலின் முன்னாள் தலைவரான மைக்கேல் மூர் என்பவர் ஒரு பெருவிரல் விதியை முன்வைத்தார் அதன்படி கணினிகளின் செயல்வேகம் ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கும் நான்கு மடங்காக உயரும். ஆனால் இன்றைய கணினிகள் அவற்றின் ஆதார அமைப்பான சிலிக்கன் சில்லுகளின் அதிஉச்ச நிலையைக் கிட்டத்தட்ட எட்டிவிட்டன. இன்று செயலில் இருக்கும் கணினிகள் எல்லாம் பல ஆயிரக்கணக்கான சிலிக்கன் டிரான்சிஸ்டர்களின் தொடர்ச்சியான ‘ஆம் ‘, ‘இல்லை ‘ எனும் இரண்டே முடிவுகளால் கணித்தலை சாத்தியமாக்குகின்றன. நாம் எந்தமாதிரி செயலிகளைப் பயன்படுத்தினாலும் இறுதியில் நம் கணினியின் இதயமான நுண்செயலிகளில் ‘ஆம்-இல்லை ‘ விடைகளுக்குக் கட்டுப்படும் கேள்விகளாகப் பகுக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. ஒரு வரிசையில் நிற்கும் மனிதர்களிடம் ஒரு தாளில் ஆம்-இல்லை என அடுத்தடுத்த கேள்விகளுக்கு விடை எழுதி அடுத்த நபரிடம் தாளைத் தரும் அமைப்பைப் போன்றது இது. முதலாமவரின் விடையில் அடுத்தவரின் கேள்வி தொடங்குகின்றது. குழாயில் செல்லும் நீரைப்போன்ற இந்த அமைப்பின் சக்தி எவ்வளவு வேகமாகத் தாளை அடுத்த நபரிடம் செலுத்துவது என்பதில் அடங்கியுள்ளது. இதில் தகவல் ஒரு நேர்க்கோட்டில்தான் செல்லும். இதை விரைவுப்படுத்த கணினி நுட்பவியலார் ஒவ்வொரு முறையும் இயற்பியலாளர்களை நாடுகின்றார்கள், அவர்கள் இதுவரை குறைக்கடத்தி (semiconductor) டிரான்சிஸ்டர்களைச் சிறியதாக்கி அதிக எண்ணிக்கையிலான நிலைமாற்றிகளை ஒரு சிறிய சிலிக்கன் சில்லுக்குள் வடித்து உதவிவந்துள்ளனர். இப்பொழுது இந்தச் சில்லுகள் மிகவும் மெலியதும் சிறியதுமாக ஆகிவிட்டன. இயற்கையில் இத்தகைய நுண்செயலிகளைக் குறுக்கி அடக்கும் எல்லைக்கு வந்துவிட்டனர். இந்நிலையில் வருங்கால கணினிகளுக்கு இத்தகைய குழாயமைப்பை விட்டுவிட்டுப் புதியதாக ஒரு சித்தாந்தத்தை நாட வேண்டியிருக்கின்றது. 

கணிப்பின் அடிப்படை
 
 

புழக்கத்திலிருக்கும் கணினிகள் நாம் முன்பத்தியில் சொன்னதுபோல ஆம்-இல்லை என்னும் இரண்டடிமான ஏரணத்தின் (binary logic) அடிப்படையில் இயங்குகின்றன. இதில் ஆம் என்பது 1ஐ குறிக்கிறது; இல்லை என்பது 0ஐக் குறிக்கிறது. எவ்வளவு பெரிய எண் என்றாலும் அதை இப்படி இரண்டடிமானத்தில் எழுத முடியும் (உதாரணமாக, 0=0, 1=1, 2=10, 3=11, 4=100,….) அதேபோல எப்படிப்பட்ட கணக்கீடு என்றாலும் அதனை அடிப்படையில் கூட்டலாக மாற்றமுடியும். (3×2=6 என்பதை 2+2+2=6 என்று கூட்டலாக்க முடியும்), இதுபோன்ற இரண்டடிமானக் கணித்தலுக்கான விதிகள் நன்கு வரையறுக்கப்பட்டுவிட்டன. இதன் எளிமையை உணரும் அதே சமயத்தில் இதன் அதிநீளமான தன்மையும் புலப்படும். உதாரணமாக, 10806 X 2736 என்பதை ஈரடிமானமாக்கி, கூட்டலாக்குவது எவ்வளவு நேர விரயம் என எளிதில் உணரலாம். ஆனால் இன்றைய கணினிகள் இவ்வாறுதான் செயல்படுகின்றன. அதிவிரைவு கணிப்பு என்பது அடிப்படையில், செய்யும் அதே காரியத்தை இன்னும் விரைவாகச் செயல்படும் சில்லுக்களைக் கொண்டு செய்துமுடிப்பது என்றாகின்றது. இது கிட்டத்தட்ட மனிதர்களை இன்னும் நெருங்கிய வரிசையில் நிறுத்தி, அவர்கள் அதிகம் நகராமல் காகிதங்களை கடத்துவதைப் போன்றது. மனிதர்களை மைதானமொன்றில் நெருக்கமாக நிற்கவைப்பதற்கு ஒரு எல்லை உண்டு, கிட்டத்தட்ட அந்த எல்லையை நாம் இன்று குறைகடத்தித் தொழில்நுட்பத்தில் அடைந்துவிட்டோம். இனி புதிய வழிமுறைகளைத் தேட வேண்டியது கட்டாயமாகிவிட்டது. 

நுண்செயலிகளில் (Microprocessor) உள்ள டிரான்சிஸ்டர்களையும் அவற்றின் இணைப்புக் கம்பிகளையும் எவ்வளவு சிறிதாக்கலாம் ? – ஒரு அணு அளவில் ? அப்படிப்பட்ட நுண்செயலிகளைச் செய்யத் தேவையான தொழிற்சாலைக்கு மூலதனம் கிட்டதட்ட இந்தியாவின் மொத்த வரவு-செலவு திட்டத்தைப் போல இருக்கும். இது தனி நிறுவனங்களால் இயலாத காரியம்.
 
 

அணுக்களின் உலகம்
 
 

நாம் இதுவரை 1, 0 என்று குறிப்பிட்டவை நுண்செயலியின் ஒரு அலகில் செல்லும் மின்னழுத்தைக் குறிக்கும் (1 என்பது 5 வோல்ட் ஆகவும் 0 என்பது 2.2 வோல்ட் ஆகவும் இருக்கலாம்). பாயும் மின்சக்தி இந்த இரண்டு மின்னழுத்த நிலைகளுக்குள் இருப்பதை செயலியை வடிவமைப்பவர்கள் உறுதி செய்வார்கள். இதிலிருந்து தவறினால் கணினி பிழையாகச் செயல்படும். இந்த 1,0 கட்டுப்பாடு நமக்கு அணுக்களின் உலகில் எளிதில் கிடைக்கிறது. உதாரணமாக, எதிரணுக்கள் தம்மைத்தாமே சுழலுபவை, இது ‘மேல் ‘(1) சுழற்சியாகவோ, ‘கீழ் ‘(0) சுழற்சியாகவோ இருக்கும், இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை கிடையாது. அணுக்களின் உலகில் பெரும்பாலான அடிப்படை குணாதிசயங்கள் இதுமாதிரி துல்லியமாக வகுக்கப்பட்ட நிலைகளில் இருக்கின்றன. இவற்றுக்குக் குவாண்டம் (quantum) என்று பெயர். அளக்கப்படும் இயற்பியல் குணங்கள் எல்லாம் ஏதாவது ஒரு குவாண்டத்தின் முழுஎண் மடங்காகவே அமையும். 

நமக்குக் கிடைக்கும் மிகச்சிறிய அளவு எது ? – ஒரு எதிரணு (electron) ? நாம் ஏன் ஒற்றை எதிரணுவையே தகவல் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தக் கூடாது ? தாராளமாக. ஆனால் எதிரணுக்களின் இயற்கைவிதி சற்றுச் சிக்கலானது. இதை 1 அல்லது 0 எனும் இரண்டு நிலைகளுக்குள் அறுதியிட முடியாது. அளக்கும் பொழுது 1 ஆகவோ, 0 ஆகவோ காணப்படும் இவற்றின் நிலைகள் மற்ற நேரங்களில் 1,0 இரண்டும் கலந்த ஒரு நிலையில் இருப்பதாக அறிவியலார் கூறுவார்கள். இதற்கு 0.3 அல்லது 0.5 என்று அர்த்தமல்ல. இவை ஒருபோதும் அரைகுறை நிலைகளில் இருக்க முடியாது. இது 1ஆகவும் 0ஆகவும் இருக்கும் ஒரு ‘அதிகலவை ‘ நிலை (state of superposition). இது என்ன குழப்பம் ?
 
 

அணுக்களின் விந்தை உலகிற்கு நல்வரவு!! இங்கு இயற்கை விதிகள் நீங்கள் தினமும் உணர்ந்தறியும் விதிகளுக்கு மாறுபட்டவை. இதை விளக்க ‘சோடிங்கரின் பூனை ‘ (Schroedinger ‘s Cat) என்று ஒரு கதை சொல்வார்கள் (எர்வின் சோடிங்கர் என்பவர் குவாண்டம் உலகின் விதிகளில் சில முக்கியமானவற்றைக் கண்டுபிடித்தவர்). ஒரு பூனையை ஒரு அறைக்குள் சிறைப்படுத்துவோம், அந்த அறையில் ஒரு கதிர்வீச்சுக் (தன்னிச்சையாக நடக்கும் ஒரு அணு உலகச் செயல்)குழம்பு உள்ளது. அக்கதிரியக்கம் ஒரு குப்பியில் உள்ள அதிசக்தி வாய்ந்த விஷவாயுவைத் திறக்க வல்லது. அதே விஷவாயுவின் திறக்கும் பொறி கதவிலும் உள்ளது. திறந்த அதே நேரத்தில் பூனை காலி. இப்பொழுது பூனை உயிரோடு இருக்கின்றதா (1) அல்லது இறந்துவிட்டதா (0) என்று எப்படிக் கண்டுபிடிப்பீர்கள் ? இதை அணுக்களின் உலகில் ‘காண்பவரின் கைங்கரியம் ‘ (Observer ‘s contribution) என்று கூறுவார்கள். காண்பவர்தான் தீர்மானிக்கிறார். காணாதவரை பூனை சில சமயங்களில் உயிருடனும் சில சமயங்களில் இறந்தும் இருப்பதாக இயற்பியலார் சொல்வார்கள். அணுக்களின் உலகை அறிய முயன்றால் அதை நீங்கள் மாற்றி அமைப்பீர்கள்.
 
 

இன்னொரு விந்தை ‘நிச்சயமின்மை ‘ (uncertainity). ஒரு துகளின் இருப்பிடத்தையும் அதன் திசைவேகத்தையும் ஒரே சமயத்தில் துல்லியமாகச் சொல்லமுடியாது. சற்று மெதுவாகச் செல்வோம். கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூருக்குச் செல்லும் ஒரு பேருந்து பாபநாசம் கடைவீதியில் (இடம்) 60கி.மி. வேகத்தில் தஞ்சாவூரை நோக்கிச் (திசைவேகம்) சென்றுகொண்டிருக்கின்றது என்று நாம் வழக்கமாகச் சொல்வோம். இப்பொழுது கொஞ்சம் நெருங்கி வருவோம் கடைவீதியில் எந்தக் கடை ? துணிக்கடை, இப்பொழுது வேகம் என்ன ? 61.5 கி.மீ/மணிக்கு, அடடா, இதைப்பார்த்து முடிப்பதற்குள் அது துணிக்கடையை விட்டு, கசாப்புக் கடையைத் தாண்டி, மருந்துக் கடைக்கருகில் வந்து விட்டதே!!! அப்படியானால் நான் பார்த்த வேகம் எந்தக் கடைக்கருகில். இந்தக் குழப்பம்தான் அணுக்களின் உலகில் இன்னும் அதிகுழப்பமாக. 

இன்னும் ஒரு விந்தையைப் பார்ப்போம்! ஒரு விளக்கு (அதி உயர்குணமுடையை விளக்கு, லேசர் என்போம்) கக்கும் ஒளி பல ஒளியணுக்களால் (photons) ஆனது. (எப்படி அணுக்கள் எதிரணு (electron), நேரணு (proton), நிலையணு (neutron) இவற்றால் ஆனதோ அதேபோன்ற சக்தித் துகள்). ஒளியணுக்களுக்குத் திசைப்பண்பு ஒன்று உண்டு, அது அத்துகளின் முனைப்பு (polarization) எந்தத் திசையில் இருக்கின்றது என்பது. இந்தக் கணினித் திரைக்குள்ளாகச் செல்லும் ஒளியணு இரண்டு திசைகளில் அதிரலாம் – ஒன்று இந்த வரி அமைந்த திசை (நெடுக்கு) அல்லது இவ்வரிக்குச் செங்குத்தாக (குறுக்கு). சோடிங்கரின் பூனையைப்போல இவற்றையும் நாம் அறியமுடியாது, ஆனால் ஒரு சோதனை வழியாக இதை அறிந்தால் (அறியமுடியும், சில கண்ணாடிகள் குறுக்கு அதிர்வை முழுங்கிவிடும், நெடுக்குதான் வெளிவரும்), அதனுடன் வரும் (அல்லது கண்ணாடி வழியே வராது வேறு வழிச்செல்லும்) இன்னொரு ஒளியணுவின் அதிர்வும் தீர்மானிக்கப்பட்டுவிடும்!!! இதற்குத் ‘தொலைவிருந்து செயற்படுதல் ‘ (Action at a distance) எனப்பெயர். விந்தை! நான் சாப்பிட்டேன் என்று சொன்னால் வேறு ஊரிலிருக்கும் என் சகோதரி சாப்பிட்டாளா இல்லையா என்றும் தெரிந்து கொள்ளலாம். நம்பமுடியவில்லையா ? என்ன செய்வது அணுக்கள் விந்தை உலகைச் சேர்ந்தவை.
 
 

இத்தனைக் குழப்பத்தையும் வைத்துக்கொண்டு எப்படி கணினிகளை உருவாக்குவது. அதை வைத்துக் கொண்டு விண்கலம் விட்டால் போகுமா(1), போகாதா ?(0) (முன்னரே சொன்ன்னபடி போகும், போகாது, போனாலும் போகும்; இல்லாமலும் போகும் (1/0)!! ? ?
 
 

குவாண்டம் கணிப்பின் அடிப்படை – க்யூபிட்டுகள்
 
 

அது எப்படி ? போனாலும் போகும் என்று விடுவது இயற்பியலாளர்களுக்கு அழகல்ல. ஒற்றை எதிரணுவை வேண்டுமானால் அவர்களால் அறியமுடியாது, கட்டுப்படுத்த முடியாது; ஆனால் பல எதிரணுக்களாலான ஒரு குவாண்டம் அமைப்பு எப்படிச் செயல்படும் என அவர்கள் உணர்வார்கள்; ஏன் அதை மாற்றியமைக்கவும் அவர்களுக்குத் தெரியும். 

தற்பொழுதைய கணினியின் ஒரு அலகு, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 1ல் இருக்கிறதா அல்லது 0ல் இருக்கிறதா என உணரமுடியும். ஒரு n-பிட்டு இரண்டடிமான எண்ணை, n சுழிகளாலோஅல்லது ஒன்றுகளாலோ குறிப்பிடலாம். ஒரு குவாண்டம் பிட்டு – க்யூபிட் (qubit) சாதாரண பிட்டைப்போல ஒன்றாகவோ, சுழியாகவோ இருக்கலாம், இதைத் தவிர இது ஒரேசமயத்தில் 1ஆகவும் 0ஆகவும் இருக்கலாம் (நாம் பார்க்கும்வரை, பார்த்தால் இரண்டில் ஒன்றாக ஆகிவிடும் – காண்பவர் கைங்கரியம்).
 
 

இரட்டை பிட்டு பழங்கணினியின் (ஆமாம், இப்பொழுது நடைமுறையில் இருப்பவை எல்லாம் பழங்கணினிகள்தான்!) நிலையைக் குறிக்க இரண்டு எண்கள் தேவை [(1 அல்லது 0), (1 அல்லது 0)] உதாரணமாக [1,0] இரட்டை க்யூபிட்டு குவாண்டம் கணினியைக் குறிக்க நான்கு எண்கள் (2^2) தேவை, இரண்டும் ஒரே சமயத்தில் ஒன்றாக இருக்கலாம் [1,1] அல்லது சுழியாக இருக்கலாம் [0,0] அல்லது முதலாவது 1ம் மற்றது 0ம் [1,0] அல்லது முதலாவது 0ம் மற்றது 1ம் [0,1] இருக்கலாம், அதாவது
 
 

[(1,1)(0,0)(1,0)(0,1)]
 
 

(இது பழங்கணினியில் சாத்தியமில்லை, அது 1 அல்லது 0 தான்). முன்னரே சொன்னதுபோல் இந்த நிலை நாம் பார்க்காத வரைதான்; பார்த்தால், அது பழங்கணியைப் போலாகிவிடும். இன்னும் சொல்லப்போனால் நாம் ஒரு அலகைப் பார்த்தால் மற்றதன் நிலையும் நிச்சயிக்கப்பட்டுவிடும் அதாவது ஒரு அலகைப் பார்த்தால் எல்லாமே ஒருநிலைக்கு வந்து, கணினி செயலிழந்துவிடும். பார்க்காதவரை n அலகுகள் 2^n காரியங்களைச் செய்துகொண்டிருக்கும். அதாவது மாபெரும் இணைச் செயற்பாடு (massive parallelism). இதுதான் குவாண்டம் கணினியை மிகவும் கவர்ச்சிகரமானதாக ஆக்குகின்றது. 

இந்த நூற்றாண்டின் ஈடுஇணையற்ற அறிவியலாளர்களில் ஒருவரான ரிச்சர்ட் ஃபெய்ன்மான் என்பவர் 1981லேயே இதைத் தீவிரமாக முன்வைத்தார். ஆனால் இதற்கு இரண்டு அடிப்படை சிக்கல்கள் தடையாக இருந்தன; ஒன்று க்யூபிட்டுகளை வைத்துக்கொண்டு போடப்படும் கணக்கின் விதிகள் என்ன என்பது. இது முற்றிலும் சித்தாந்த அடிப்படையானது, இதன் அடிப்படை விதிகள் எளிதில் தீர்க்கப்பட்டுவிட்டன, குழப்பமானவைக்கும் விடைகள் தெரியவந்துள்ளன. ஆனால் முக்கியமான நெருக்கடி, சோதனை முறையில் நடத்திக்காட்டுவது. 

காணாதவரை நிச்சயமற்ற உலகில் அலைந்து கொண்டிருக்கும் குவாண்டம் துளியன்கள் கணக்குப் போட்டு முடித்ததும் எப்படி நிச்சயமான விடைக்கு வரமுடியும் ? 1980ல் தொடங்கிய இந்தக் கேள்விக்கு சமீபகாலம் வரை விடை கிடைக்காமலிருந்தது. இதற்குக் காரணம் விடை இருக்கும் திசையை விட்டுவிட்டு வேறு திசையில் தேடிக்கொண்டிருந்ததுதான். குவாண்டம் அமைப்புகள் என்ற உடனே அனைவருக்கும் நினைவில் வந்தது எதிரணுக்களும் ஒளியணுக்களும்தான். இவற்றின் சுழற்சியையோ முனைப்பையோ கணிப்பின் 1ஆகவும் 0ஆகவும் கையாளலாம் என்று தோன்றியது. ஆனால் நடைமுறையில் ஒற்றை எதிரணுவைக் கையாளுவது அத்தனை எளிதான காரியமில்லை. கணித்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொழுது புறக் காரணிகளால் எதிரணுக்கள் பாதிக்கப்பட்டால் உடனே கணித்தல் தடைபட்டு நின்று 1 அல்லது 0 இரண்டில் ஒரு நிலைக்கு வந்துவிடும் (காண்பவர் கைங்கரியம்; புறக் காரணிகளும் ஒரு வகையில் காண்பவர்களே)! 

அணுக்கரு ஒத்திசைவு
 
 

1997ல் நீல் கெர்ஷ்ன்ஃபெல்ட், ஐசக் சுவாங் எனும் இரண்டு அமெரிக்க அறிவியலாளர்கள் புதிய திசையில் கவனத்தைச் செலுத்தினார்கள். அணுக்கருக்களுக்கும் துகள்களைப்போல சுழற்சி (spin) உண்டு. இந்த சுழற்சியைக் கையாளும் வகை முன்னரே தெரிந்ததுதான். அணுக்கரு காந்த ஒத்திசைவு (Nuclear Magnetic Resonance) எனும் விளைவை பலகாலமாக இயற்பியலார் அறிவர்; அந்த நுட்பத்தைத் துல்லியமாக்கி வேதியியலாளர்களுக்கு அவர்கள் கண்டுபிடிக்கும் புதிய மூலக்கூறுகளை அடையாளம் காணும் அலைமாணியாகவும் (spectrometer), மருத்துவர்களுக்கு உடலில் இருக்கும் கட்டிகளை அடையாளம் காணும் என்.எம்.ஆர் அலகிடுகருவியாகவும் (NMR Scanner) பயன்படுத்தக் கற்றுக் கொடுத்தார்கள். 

ஒரு கரைசலில் (solution) இருக்கும் குவாண்டம் துகள்கள் கிட்டத்தட்ட ஒரு காந்தத் துண்டு (bar magnet) போல் செயல்படுகின்றன. வெளியிலிருந்து செலுத்தப்படும் காந்தப்புலத்திற்கு இணையாக இவை தம்மைத்தாமே திசைப்படுத்திக் கொள்கின்றன; அடுத்தடுத்த இரண்டு அமைவுகள் (காந்தத் திசைக்கு இணையாக (parallel) அல்லது எதிரிணையாக (antiparallel)). இவை வெவ்வேறு சக்திகளையுடைய இரண்டு குவாண்டம் நிலைகளாகும். இவைதான் நாம் விவரித்த க்யூபிட்களாகச் செயல்பட வல்லன. இணை நிலையை 1 எனக்கொண்டால் எதிரிணை 0 என ஆகின்றது. இந்த இணை, எதிரிணை நிலைகளுக்கிடையே சக்தியில் வேறுபாடு உண்டு; இது செலுத்தப்படும் காந்தத் திறனைப் பொறுத்தது. பொதுவில் இணைநிலை எதிரிணை நிலையை விடக் குறைந்த சக்தியுடையது. இயல்பான ஒரு திரவக் கரைசலில் இணை – எதிரிணை நிலைகள் சம அளவில் இருக்கும். ஆனால் வெளியிலிருந்து செலுத்தப்படும் காந்தப்புலம் சக்தியில் குறைந்த இணைநிலைக்குச் சாதகமாக இருக்கும், இதனால் சமநிலை பாதிக்கப்படுகின்றது. இது அளவில் மிகக் குறைந்தது, ஒரு மில்லியன் அணுக்கருவில் ஒன்று இவ்வறாக மாறக்கூடும். அணுக்கரு காந்த ஒத்திசைவில் இதைத் தான் அளக்கின்றார்கள்.
 
 

குவாண்டம் வாயில்கள்
 
 

ஒரு சில கரைசல்களில் சுழற்சியுள்ள அணுக்கருக்களும், சுழற்சியற்றவையும் கலந்து இருக்கும். அதிக அதிர்வுகளை உடைய ரேடியோ கதிர்கள், கரைசல்களுக்கேற்ற சரியான அலைநீளத்தில் இருந்தால் இணை-எதிரிணை நிலைகள் பிறழக்கூடும். சொல்லப்போனால் புறத்திலிருந்து செலுத்தப்படும் இந்த காந்த சக்தியையும், ரேடியோ கதிர்களையும் உணருவதுடன், சுழலும் அணுக்கருக்கள் தமக்குள்ளே ஒன்றையொன்று பாதிக்கும். இந்த பாதிக்கும் தன்மைதான் நாம் குவாண்டம் வாயில்களை (Quantum Logic Gates) அமைக்கப் பயன்படுகின்றது. சுழலும் அணுக்கருக்கள் ஒரு பம்பரம் போன்றவை. (படம் 1) இயல்பாக இவை காந்தத் திசைக்கு இணையாக தம்மை அமைத்துக் கொள்ளும் (படத்தின் நடுவில்). தகுந்த அலைநீளமுடைய ரேடியோ அலைகள் இவற்றின் திசையை மாற்ற வல்லன. 180 டிகிரி துடிப்பு இதைத் தலைகீழாக ஆக்கும் (உதாரணமாக, மேல் சுழற்சியை கீழ் சுழற்சியாக, படத்தின் இடப்புறத்தில்). 90 டிகிரி துடிப்பு காந்த திசைக்கு செங்குத்தாக பம்பரத்தை சுழலவைக்கும். (படத்தில் வலப்புறத்தில்). 
not_gate.gif

 காந்தப்புலத்தில் இடப்பட்ட கரைசலில் அணுக்கரு சுழற்சிகள் ஒரே திசையில் அமையும். (படம் 2, மேல் வரிசையில் சுழற்சியுள்ள அணுக்கருக்களைக் காணவும்). பின்னர், செலுத்தப்படும் 90 டிகிரி ரேடியோ அலைகளால் இவை செங்குத்தான திசைக்கு மாற்றப்படும். பிறகு இது அருகிலிருக்கும் இன்னொரு அணுக்கருவிற்கேற்ப வேகமாகவோ, மெதுவாகவோ அமையக்கூடும். சரியான கால இடைவெளியில் செலுத்தப்படும் அடுத்த 90 டிகிரி துடிப்பால் இது நிலை பிறழவோ (வேகமாகச் சுற்றினால்), பிறழாமல் அதே நிலைக்குத் திரும்பவோ (மெதுவாகச் சுற்றினால்) கூடும். படத்தின் அடிவரிசையில் பார்க்கவும்; அருகிலிருக்கும் சுழற்சியற்ற அணுவிற்கு எதிரான நிலையில் அமைவதைக் காணலாம். xor_gate.gif

சுழற்சி பிறழும்பொழுது, அது தன்னிச்சையாக நடைபெறாமல் அருகிலிருக்கும் இன்னொரு அணுக்கருவுக்கு ஒப்ப அமையும். 180டிகிரி துடிப்பால் சுழற்சி மேல்-கீழ் மாற்றப்படுவதை கணினிகளின் ‘இல்லை ‘ வாயிலாகக் (NOT gate) கொண்டால் (இல்லை வாயில் வழிவரும் 1, 0மாகவும் 0, 1ஆகவும் மாற்றப்படும்), இஅருகிலிருக்கும் அணுவிற்கு ஒப்ப சுழற்சிமாறுவதைக் ‘கட்டுப்பாடான இல்லை ‘ வாயில் (Controlled NOT) எனலாம். புழக்கத்திலிருக்கும் நம் கணினிகளில் இது தொடர்ச்சியான இரண்டு வாயில்களைக் கொண்டு நிகழ்த்தப்படுகின்றது. ஆனால் குவாண்டம் கணினியில் ஒரே மூலக்கூறினால் நிகழ்கின்றது.
 
 

குழப்பத்திலிருந்து தெளிவிற்கு
 
 

அணுவுலகின் குழப்ப விதிகள் குவாண்டம் கணிப்பில் எப்படி உதவப்போகின்றன ? 

அளக்கும்பொழுது உறுதியாகத் தெரியவல்ல (1 அல்லது 0) குவாண்டம் நிலைகள் ஈரடிமாண ஏரணத்திற்கு ஏற்றவை.
 
 

அதிகலவை நிலை/நிச்சயமின்மை 1 அல்லது 0 எனத் தீர்மானிக்கப்படாத உள்ளீடுகளையும் வைத்துக் கொண்டு கணக்குப் போட உதவும். 

தொலைவிலிருந்து செயல்படுதல் க்யூபிட்டுகளின் இணைப்புக் கம்பிகளாகச் செயல்படும்.
 
 

இதுதான் குவாண்டம் கணிப்பில் முதல்முறையாக நிகழ்த்திக்காட்டப்பட்ட சோதனை. இதிலிருந்து இன்னும் நிறைய தூரம் போகவேண்டியிருக்கிறது. 

இந்தக் கணிப்பில் முக்கியமான விந்தை, இது தீர்மானமில்லாத (1 அல்லது 0 என நிச்சயிக்கப்படாத), அதிகலவை (1 ஆகவும் 0 ஆகவும்) உள்ளீடுகளையும் வைத்துக்கொண்டு கணக்குப் போடுவது. இத்தகைய குழப்பமான கணக்கீடுகளுக்கு என்று சில இடங்கள் உண்டு. உதாரணத்திற்கு மின் வணிகத்தில் மற்றும், இராணுவ சமிக்ஞைகளில் பயன்படும் பாதுகாப்பு சங்கேதங்களை உருவாக்குவது (encryption), தகர்ப்பது (decryption). மூன்று இலக்க நம்பர் பூட்டுகளைத் திறப்பது சுலபம், நான்கு இலக்க பூட்டு கொஞ்சம் கடினம். நானூறு இலக்க பூட்டுகளைத் திறக்க இப்பொழுது புழக்கத்திலுள்ள கணினிகளுக்கு ஒரு பில்லியன் வருடங்கள் ஆகும். இந்தச் சிக்கலைப் பயன்படுத்திதான் உங்கள் கடன் அட்டை எண்ணை ஒரு பெரிய எண்ணால் பெருக்கி கணினிகளில் பாதுகாப்பாகச் சேமித்து வைத்துள்ளார்கள், இணையம் வழியே அனுப்புகின்றார்கள். அந்த எண்கள் உள்ள கோப்புகள் கிடைத்தாலும் எந்த எண்ணால் பெருக்கப்பட்டிருக்கின்றது எனத் தெரியாமல் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் குவாண்டம் கணிப்பில் தீர்மானமில்லாத உள்ளீடுகளாலும் கணிப்பை நிகழ்த்த முடியும். தற்பொழுதைய கணிப்பின்படி 400 இலக்க எண்ணை குவாண்டம் கணினியால் ஒரு வருடத்தில் தகர்க்கலாம்.
 
 

இப்படிப்பட்ட குவாண்டம் கணினி ஒரு காலத்தில் செயல்முறைக்கு வந்தால் எப்படியிருக்கும் ? உங்கள் தற்பொழுதைய மேசைக்கணினியைப் போலவா ? இல்லை, ஆனால் அதற்கு அருகில் நீங்கள் காப்பி வைக்கும் கோப்பையைப் போல இருக்கலாம்!!! ஒரு குவளையில் திரவம் அதைச் சுற்றி ஒரு காந்தம், ஒரு சின்ன பாக்கெட் ரேடியோ… அப்படியானால் உங்கள் கணினி போய்விடுமா ? அனேகமாக இல்லை; ஆனால் இது உங்கள் கணினிக்கருகில் ஒரு அச்சுப்பொறியைப் போல் வந்து உட்கார்ந்து கொள்ளும். அதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும். ஏனென்றால், இப்பொழுது திரவம் காப்பிக் கோப்பை அளவுதான் இருக்கின்றது, ஆனால் காந்தமும் ரேடியோவும் கிட்டத்தட்ட ஒரு அறையளவிற்கு இருக்கின்றன. (சிரிக்காதீர்கள், உங்கள் இன்றைய மடிக்கணினியின் முப்பாட்டனாரான எனியாக் (ENIAC) அதைவிடப் பெரியதாக இருந்தது). 

பெரியதாக இருக்கும் வரை நல்லது. அரசாங்கத்திலும் இராணுவத்திலும் மாத்திரம்தான் பயன்படும். சிறியதாகிவிட்டால் பள்ளிச்சிறுவர்களும் வாங்கி இணைத்துக்கொண்டு குவாண்டம் கொந்தர்கள் (Quantum Hackers) ஆகிவிடுவார்கள். கடன் அட்டை எண்களெல்லாம் அவர்கள் கையில். ஐயய்யோ! நான் முந்தாநாள் சாயந்திரம்தான் என்னுடைய கடன் அட்டை எண்ணை சிரார்த்தம்.காமில் கொடுத்திருக்கின்றேன், அடுத்த துவாதசியில் என் பாட்டிக்கு மின்-திவசம் செய்வதற்காக!!!!
 

வெங்கடரமணன்.

 தொடர்புள்ள இணையப் பக்கங்கள்
 
 

Quantum Computing with Molecules – Neil Gershenfeld and Isaac L. Chuang
http://www.sciam.com/1998/0698issue/0698gershenfeld.html

The Stanford-Berkeley-MIT-IBM NMR Quantum computation Project 
http://squint.stanford.edu/
 
 

A short introduction to quantum computation – A tutorial 
http://www.qubit.org/intros/comp/comp.html

Quantum computing, M. Mitchell Waldrop, Technology Review, May/June 2000, 
http://www.techreview.com/articles/may00/waldrop.htm

The Hitchhiker ‘s Guide To Quantum Computing By Simon Bone
http://www.openqubit.org
 
 

https://old.thinnai.com/?p=400080612

Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

அம்பனை இதை நீங்களா எழுதுகிறீர்கள்?

அல்லது வெட்டி ஒட்டா?

ஒருதரம் வாசித்துப் பார்த்தேன், கொஞ்சம் விளங்கினமாரியும், கனக்க விளங்காத மாரியும் இருக்கு 😂.

கலைச் சொற்களை தமிழில் கிரகிப்பது கடினமானது. ஆங்கிலத்தில் இதன் பிரதி இருக்கிறதா?

புதிய ஒரு தகவலை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

 

நேற்று புத்தகசாலைக்கு சென்ற பொழுது, பூச்சியத்திற்கும் இரண்டு வயதிற்கும் உட்பட்ட வரியில் கண் தேடலை செய்தது. அப்பொழுது மனம் சொன்னது அப்படி என்ன இருக்கும் இந்த புத்தகங்களில் என, ஆனால் அவற்றை பார்த்தபொழுது அட முகநூலில் 'அப்டேட்' செய்யும் நான் இந்த இரண்டுவயதினருக்கான விடயங்களை தெரிந்து கொண்டுவைக்கவில்லையே என மனம் நொந்தது. 

சரி, தோல்வியை வெற்றியாக்க வேண்டும் என்ற சொன்னவர் நினைவு வந்தது. வேண்டியவர்களுக்கும் பாடம் எடுத்து, பகிர்ந்து மற்றும் கள உறவுகளுடனும் பகிர்ந்தேன்.

மூலம் :  https://www.amazon.com/Quantum-Computing-Babies-Baby-University/dp/1492671185

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ampanai said:

 

நேற்று புத்தகசாலைக்கு சென்ற பொழுது, பூச்சியத்திற்கும் இரண்டு வயதிற்கும் உட்பட்ட வரியில் கண் தேடலை செய்தது. அப்பொழுது மனம் சொன்னது அப்படி என்ன இருக்கும் இந்த புத்தகங்களில் என, ஆனால் அவற்றை பார்த்தபொழுது அட முகநூலில் 'அப்டேட்' செய்யும் நான் இந்த இரண்டுவயதினருக்கான விடயங்களை தெரிந்து கொண்டுவைக்கவில்லையே என மனம் நொந்தது. 

சரி, தோல்வியை வெற்றியாக்க வேண்டும் என்ற சொன்னவர் நினைவு வந்தது. வேண்டியவர்களுக்கும் பாடம் எடுத்து, பகிர்ந்து மற்றும் கள உறவுகளுடனும் பகிர்ந்தேன்.

மூலம் :  https://www.amazon.com/Quantum-Computing-Babies-Baby-University/dp/1492671185

 

 

நன்றி.

சரியாக 22 வருடங்களுக்கு முன் எமது பாடத்திட்டத்தில் உயர்தரத்துக்கு குவாண்டம் பிசிக்சை அறிமுகம் செய்தார்கள்.

அப்போது விழுந்து விழுந்து படித்தேன். அதன்பிறகு எப்போதாவது குவாண்டம் கொள்கை பற்றி விபரணத்தில் பார்பதோடு சரி.

இப்பபார்த்தால் குவாண்டம் கம்யூட்டர் என்று நீங்கள் புதிதாக சொல்கிறீகள்.

போதாக்குறைக்கு 0-2 வரையானோருக்கு என்கிறீகள். இதுவே கண்ணை கட்டுதே 😂.

1010, டிஜிட்டல், பைட்ஸ் இவை யாது என்பது முன்னே தெரிந்ததால்- இரண்டாம் முறை வாசித்த போது கொஞ்சம் பிடிபட்டுவிட்டது.

நுணாவும் நல்ல கட்டுரையும், இணைப்புகளையும் தந்துள்ளார். அவருக்கும் நன்றி. 

இந்த நாள் வீண் அரட்டை மட்டும் இன்றி பலனுள்ளதாயும் கழிந்துளது.

இந்த புத்தகத்தை மகனுக்கு வாங்கி கொடுக்க உள்ளேன். நன்றி.

Link to comment
Share on other sites

  • 6 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.