Jump to content

இலங்கை ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழு


Recommended Posts

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைத்துள்ளார்.

ஐவர் அடங்கிய இந்த ஆணைக்குழுவை நியமிக்கும் வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருந்தது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜகத் டி சில்வா இந்த ஆணைக்குழுவின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன, மேன்முறையீட்டு நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஸ, மேல் நீதிமன்ற ஒய்வு பெற்ற நீதிபதி பந்துல குமார அத்தபத்து மற்றும் அமைச்சுக்களில் கடமையாற்றிய ஓய்வு பெற்ற செயலாளர் டபிள்யூ.எம்.எம்.அதிகாரி ஆகியோரே ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நபர்கள், அமைப்புகள் ஆகியவற்றை அடையாளம் கண்டுக் கொள்ளுதல் இந்த ஆணைக்குழுவின் முக்கிய பொறுப்பாக அமைகின்றது.

அத்துடன், இந்த தாக்குதல் சம்பவத்தை தடுத்து நிறுத்த தவறிய அதிகாரிகள், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் ஆகியோரையும் இந்த ஆணைக்குழு அடையாளம் கண்டுக் கொள்ளவுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழுவின் இடைகால அறிக்கை எதிர்வரும் மூன்று மாதங்களில் கையளிக்கப்படவுள்ளதுடன், 6 மாதங்களுக்குள் இறுதி அறிக்கையை சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தமானி அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு கண்டறியப்படும் விடயங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள அதேவேளை, இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாதிருக்க முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளையும் ஆணைக்குழு முன் வைக்கவுள்ளது.

இந்த ஆணைக்குழுவிற்கு தேவையான அனைத்து விடயங்களையும் அனைத்து அரச அலுவலங்கள், முப்படையினர், கூட்டுதாபனங்கள், சபைகள் ஆகியவற்றின் அதிகாரிகள் வழங்க வேண்டும் என ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ஏற்கனவே குழுவொன்றை நியமித்து விசாரணைகளை நடத்தியிருந்தார்.

அத்துடன், நாடாளுமன்றத்தினால் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டு, அந்த குழு தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றது.

நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரகசிய சாட்சியமளித்திருந்ததுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க பகிரங்க சாட்சி வழங்கியிருந்தார்.

அத்துடன், முப்படையினர், அரச அதிகாரிகள். சிவில் அமைப்புக்கள் என பலரும் இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/sri-lanka-49787351

Link to comment
Share on other sites

நாடு இரண்டாகி விட்டது 🙂

 சனாதிபதி ஒரு ஆட்சி. பிரதமர் இன்னொரு ஆட்சி.  

Link to comment
Share on other sites

தெரிவுக்குழு விசாரணை அறிக்கை விரைவில்  பகிரங்கப்படுத்தப்படும் -பிரதமர்

IMAGE-MIX.png
 

(ஆர்.விதுஷா)

கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலை அடுத்து மே தாம் 22 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகள் தொடர்பிலான அறிக்கை கூடிய விரைவில்  பகிரங்கப்படுத்தப்படும் என பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  

இந்த தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து நாட்டின்  பாதுகாப்பு  உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை  சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்  வகையிலான  பல  திட்டங்களையும்  முன்னெடுத்துள்ளதாகவும் பிரதமர்  குறிப்பிட்டார்.  

'சுற்றுலாத்துறையின்  எதிர்காலம்' என்னும்  தொனிப்பொருளில்  இன்று திங்கட்கிழமை சினமன்  கிராண்ட்  ஹோட்டலில்    இடம் பெற்ற   மாநாட்டில் அதிதியாக  கலந்து கொண்டு கருத்து  தெரிவிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு  தெரிவித்தார்.    

இந்நிகழ்வில்  சுற்றுலாத்துறை  அபிவிருத்தி  வனஜீவராசிகள்  மற்றும்   கிறிஸ்தவ சமய  அலுவல்கள்  அமைச்சர் ஜோன்  அமரத்துங்க  உட்பட  சுற்றுலாத்துறையில்  முக்கிய  பங்காற்றும்   சர்வதேச  பிரதிநிதிகள்   பலரும் கலந்து கொண்டதுடன்,  நாட்டின்  சுற்றுலாத்துறை  வளர்ச்சிக்காக  முன்னெடுக்க  வேண்டிய  விடயங்கள்  தொடர்பில்  பல  ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/65387

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா நாட்டிலும் ஓய்வு பெற்று பென்சன் + வரும்படியும் போக கூடுதல் வருமானம் பெற ஓய்வு பெற்ற ஜட்ஜிகள் எல்லாம்  அலையினம் போல.. 👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.