Jump to content

கவிழ்ந்தது பிரிட்டனின் 178 வருட தோமஸ்குக் நிறுவனம்-இரண்டு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் இக்கட்டான நிலையில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கவிழ்ந்தது பிரிட்டனின் 178 வருட தோமஸ்குக் நிறுவனம்-இரண்டு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் இக்கட்டான நிலையில்

பிரிட்டனை சேர்ந்த பிரபல சுற்றுலா போக்குவரத்து குழுமமான தோமஸ் குக் வீழ்ச்சியடைந்து தனது வர்த்தக நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

178 வருடகால நிறுவனத்தை காப்பாற்றுவதற்கான இறுதிக்கட்டப்பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடனில் சிக்கியிருந்த நிறுவனத்தை காப்பாற்றுவதற்கான இறுதிக்கட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.

தோமஸ் குக் நிறுவனம் உடனடியாக தனது சேவைகளை நிறுத்திவிட்டது என பிரிட்டனின் சிவில் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.

தோமஸ்குக் தனது நடவடிக்கைகளை இடைநிறுத்தியதன் காரணமாக உலகின் பல நாடுகளில் இடைநடுவில் சிக்குண்டுள்ள  பிரிட்டிஸ் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பிரிட்டனின் சிவில் விமானப்போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

18796166-7492231-image-a-9_1569186434957

உலகின் பல நாடுகளில் இடைநடுவில் விடப்பட்டுள்ள 150.000 பயணிகளை பிரிட்டனிற்கு அழைத்து வருவதற்கான ஒப்பரேசன் மட்டர்ஹோர்ன் என்ற நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை உலகநாடுகளை சேர்ந்த ஆறு இலட்சம் பேர் வெளிநாடுகளில் சிக்குண்டிருக்கலாம் என  டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

தனது நிறுவனம் கவிழ்ந்தமை மிகவும் கவலைக்குரிய விடயம் என தோமஸ் குக்கின் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

தோமஸ் குக் நிறுவனம் மூடப்பட்டதால் சர்வதேச அளவில் 22,000 பேரும்  பிரிட்டனில்  9000 பேரும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தோமஸ்குக் நிறுவனம் வீழ்ச்சியடைந்தமை பணியாட்களிற்கும் சுற்றுலாப்பயணிகளிற்கும் மிகவும் கவலையளிக்கின்ற விடயம் என தெரிவித்துள்ள பிரிட்டனின் போக்குவரத்து துறை அமைச்சர் வெளிநாடுகளில் உள்ள சுற்றுலாப்பயணிகள் அவர்களை நாட்டிற்கு மீண்டும் அழைத்துவரும் மிகவும் சவாலான பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதை புரிந்துகொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

தோமஸ்குக்கின் வாடிக்கையாளர்கள் இலவசமாக பயணம் செய்வதற்காக பிரிட்டன் பல விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

thomas-cook-manchester-airport-2.jpg

தோமஸ் குக் நிறுவனத்தினால் விமானநிலைய கட்டணம் செலுத்தப்படாததை தொடர்ந்து நிறுவனத்தின் விமானங்களை கைப்பற்றும் நடவடிக்கைகளை  பிரிட்டன் விமானநிலையங்கள் ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

https://www.virakesari.lk/article/65344

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாமஸ் குக் சுற்றுலா நிறுவனம் முடங்கியது: 178 வயது கம்பெனியின் 22,000 ஊழியர்களுக்கு நிச்சயமற்ற நிலை

 
தாமஸ் குக்படத்தின் காப்புரிமை Getty Images Image caption மான்செஸ்டர் விமான நிலையத்தில் தாமஸ் குக் பயணிகளுக்கான அறிவிப்பு துண்டறிக்கைகளுடன் விமான நிலையப் பணியாளர்.

உலகின் மிகப் பழமையான சுற்றுலா சேவை நிறுவனமான 'தாமஸ் குக்'கின் சேவையை தொடரச் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட கடைசிநேர முயற்சிகள் பலனளிக்காததால் அதன் செயல்பாடு முடங்கியுள்ளது.

178 ஆண்டுகள் பழமையான தாமஸ் குக் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகள் உடனடியாக முடிவுக்கு வருவதாக பிரிட்டன் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக உலகம் முழுவதும் இந்நிறுவனத்தின் வாயிலாக சுற்றுலாவுக்கு சென்றுள்ள சுமார் ஆறு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, இந்த நிறுவனத்தின் உதவியோடு வெளிநாடுகளுக்கு சென்றுள்ள பிரிட்டனை சேர்ந்த ஒன்றரை லட்சம் சுற்றுலாப் பயணிகளை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரும் மிகப் பெரிய பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

தற்போது நேர்ந்துள்ள அசாதாரணமான சூழ்நிலை 'ஆழ்ந்த வருத்தத்தை' தருவதாக தாமஸ் குக் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான பீட்டர் ஃபாங்க்ஹௌசர் தெரிவித்துள்ளார்.

178 ஆண்டுகள் பழமையான தாமஸ் குக் நிறுவனத்தின் வர்த்தகம் முடங்கியதுபடத்தின் காப்புரிமை Reuters

தனது நிறுவனத்தின் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள், ஆயிரக்கணக்கான ஊழியர்களிடம் அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

பிரபல சுற்றுலா சேவை நிறுவனத்தின் முடக்கத்தால் உலகம் முழுவதுமுள்ள அதன் 22,000 ஊழியர்களின் பணிப்பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது.

பிரிட்டனின் லீஸ்செஸ்டெர்ஷைர் பகுதியில் 1841ஆம் ஆண்டு இந்த நிறுவனம் தாமஸ் குக் என்பவரால் தொடங்கப்பட்டது.

சுற்றுலாப் பயணிகளுக்கு உதவ சிறப்பு சேவைகள்

178 ஆண்டுகள் பழமையான தாமஸ் குக் நிறுவனத்தின் வர்த்தகம் முடங்கியதுபடத்தின் காப்புரிமை AFP

திட்டமிட்டபடி தாமஸ் குக் நிறுவனத்தின் வாயிலாக சுற்றுலா சென்றுள்ள 16,000 பயணிகள் இன்று பிரிட்டனுக்கு திரும்ப வேண்டும். அவர்களது பயணத் திட்டத்தில் இந்த சேவை முடக்கம் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் மாற்று ஏற்பாடுகளை செய்யும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக பிபிசியின் செய்தியாளர் டாம் புரிட்ஜ் கூறுகிறார்.

64 வழித்தடங்களில் சிக்குண்டுள்ள சுமார் 14,000 பயணிகளை மீட்பதற்கு 45 விமானங்களை இயக்குவதற்கு பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஈஸிஜெட், விர்ஜின் ஆகிய விமான சேவை நிறுவனங்களின் விமானங்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தாமஸ் குக்கின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?

தாமஸ் குக் நிறுவனம் தங்களது வீழ்ச்சியை தடுப்பதற்கு பிரிட்டன் அரசிடம் 250 மில்லியன் பவுண்டுகள் நிதியை கேட்டதாகவும், அதற்கு அரசு மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் தெரிகிறது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பிரிட்டனின் போக்குவரத்து செயலாளர் க்ராண்ட் ஷாப்ஸ் பிபிசி நிகழ்ச்சி ஒன்றில் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஒருவேளை தாமஸ் குக் நிறுவனத்திற்கு இந்த நிதி தரப்பட்டிருந்தாலும், அதனால் மிகவும் குறுகிய காலத்திற்கு மட்டுமே தாக்குபிடித்திருக்க முடியும் என்றும், அதன் பிறகு தற்போது ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே வந்திருக்கும் என்றும் தான் அஞ்சுவதாக அவர் கூறினார்.

மிகப் பெரிய அளவிலான கடன்களும், தவறான வணிக கொள்கைகளுமே தாமஸ் குக் நிறுவனத்தின் முடக்க நிலைக்கான காரணமாக உள்ளதாக க்ராண்ட் கூறினார்.

இந்திய சேவை பாதிக்கப்பட்டுள்ளதா?

178 ஆண்டுகள் பழமையான தாமஸ் குக் நிறுவனத்தின் வர்த்தகம் முடங்கியதுபடத்தின் காப்புரிமை Reuters

தாமஸ் குக் நிறுவனத்தின் இந்திய, சீன, ஜெர்மானிய மற்றும் நார்டிக் துணை நிறுவனங்களின் வர்த்தகம் வழக்கம் போல தொடரும்.

மேற்குறிப்பிட்டுள்ள துணை நிறுவனங்களுக்கும் பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் அதன் தாய் நிறுவனத்திற்கும் சட்டரீதியாக நேரடி தொடர்பு இல்லை என்பதால் அவற்றின் வர்த்தக செயல்பாடு உடனடியக பாதிக்கப்படவில்லை.

இருப்பினும், இந்தியா உள்ளிட்ட நாடுகளிலுள்ள தாமஸ் குக்கின் துணை நிறுவனங்கள் தங்களது விமான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகளுக்கு தாய் நிறுவனத்தையே சார்ந்துள்ளதால், அவற்றின் வர்த்தக நடவடிக்கை பாதிப்படையாமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

ஒருவேளை அந்த முயற்சி பலனளிக்காதபட்சத்தில் கூடுதலாக மூன்றரை முதல் நான்கரை லட்சம் பேர் பாதிக்கப்படும் சூழல் உருவாகக் கூடும்.

https://www.bbc.com/tamil/global-49797083

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.