Jump to content

காஸ்மீரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுவர்கள்- பிபிசி அதிர்ச்சி தகவல்- தந்தையை விடுவிப்பதற்காக 14 வயது மகன் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காஸ்மீரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுவர்கள்- பிபிசி அதிர்ச்சி தகவல்- தந்தையை விடுவிப்பதற்காக 14 வயது மகன் கைது

இந்திய அரசாங்கம் காஸ்மீரில் பெருமளவு சிறுவர்களை கைதுசெய்து  தடுத்துவைத்துள்ளது என தனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

காஸ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியதன் காரணமாகவும் அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதன் காரணமாகவும்  காஸ்மீரின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதாக பிபிசி தெரிவித்துள்ளது.

இந்திய அரசாங்கத்திற்கு எதிரான உணர்வுகளை கட்டுப்படுத்துவதற்காக சிறுவர்களையும் இளைஞர்களையும் அதிகாரிகள் கைதுசெய்கின்றனர் என காஸ்மீரில் பல பகுதிகளில் பொதுமக்கள் தெரிவித்தனர் என பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நபர் ஒருவர் தான் தனது 16 வயது மகனுடன் சேர்த்து தடுத்துவைக்கப்பட்டதாக தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ள பிபிசி அவர்கள் இந்திய பாதுகாப்பு படையினரால்  பழிவாங்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக முகத்தை மூடியபடி கருத்து தெரிவித்தனர் என குறிப்பிட்டுள்ளது.

kashmir_augu_7.jpg

இராணுவத்தினர் தங்களை கைதுசெய்து காவல்துறையினரிடம் கையளித்தனர் அவர்கள் எங்களை ஆறு நாட்கள் தடுத்து வைத்திருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் சுதந்திரம் கோருகின்றீர்கள் கற்களால் எங்களை தாக்குகின்றீர்கள் என தெரிவித்து அவர்கள் எங்களை தாக்கினர் என தந்தையும் மகனும் தெரிவித்துள்ளனர்.

பிள்ளைகள் சித்திரவதை செய்யப்படுவதை பார்க்க விரும்பாததால் நான் மரணிக்கவேண்டும் என விரும்பினேன் என தந்தை தெரிவித்துள்ளார்.

ஆனால் என்னால் என்ன செய்ய முடியும் நான் வலுவற்றவனாக அதிகாரமற்றவனாக காணப்பட்டேன் என தெரிவித்துள்ள தந்தை பின்னர் நாங்கள் அப்பாவிகள் என தெரிவித்து எங்களை விடுதலை செய்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

அங்கு நடந்தவைகளால் நான் இன்னமும் அச்சத்தின் பிடியி;ல் சிக்கியுள்ளேள் இரவில் நான் அச்சமடைகின்றேன் வீட்டிற்குள்ளேயே இருக்கின்றேன் வெளியில் செல்வதில்லை என மகன் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

என்னால் இரவில் உணவு உண்ணவோ உறங்கவோ முடியவில்லை அவர்கள் மீண்டும் வந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் இருக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

காஸ்மீரின் 17 ற்கும் மேற்பட்ட குடும்பத்தவாகள் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்தனர் என பிபிசி தெரிவித்துள்ளது.’

சிறுவர்கள் கல்எறியும் போராட்டங்களில் ஈடுபடுவது வழமை என தெரிவித்துள்ள பிபிசி அதேவேளை இந்த விவகாரத்தை எவ்வாறு கையாளவேண்டும் என சட்டங்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.

ஆண்களும் இளைஞர்களும் சிறுவர்களும் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் இதற்கான எந்த காரணங்களையும் எந்த நியாயப்பாட்டினையும் முன்வைக்காது அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என  மிர் உர்பி என்ற சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

குடும்பத்தவர்கள் அவர்களை சந்திப்பதற்கான அனுமதி கூட வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளாh.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தவர்களிற்கு சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன, உலகின் அனைத்து மக்களிற்கும் பொதுவான மனித உரிமைகள் காஸ்மீரில் முற்றாக மறுக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தனது 14 வயது மகன் காவல்துறையினரால் தடுத்துவைத்துள்ளனர் என பெண்மணியொருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளாh.

இரவில் வந்து எனது கணவரை கைதுசெய்தனர் பின்னர் எனது கணவரை விடுதலை செய்வதற்காக எனது மகனை தருமாறு கேட்டு தடுத்து வைத்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

தனது மகனை காவல்நிலையத்தில் பார்த்ததாக தந்தை தெரிவித்துள்ளார்.

kashmir_1.jpg

நான் எனது மகனை பார்க்க சென்றவேளை அவன் கதறிஅழ தொடங்கிவிட்டான் நான் எந்த குற்றமும் செய்யவில்லை கல் எறியவில்லை ஏன் அவர்கள் என்னை கைதுசெய்தனர் என அவன் கதறினான் என தந்தை தெரிவித்துள்ளார்.

தங்கள் பிள்ளைகளிற்கும் இந்த கதி நேரலாம் என காஸ்மீரில் பலர் அச்சத்துடன் உள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளிப்பதற்கு காவல்துறையினர் மறுத்துவிட்டனர் எனவும் குற்றச்சாட்டுகளை சுமத்தியவர்களின் விபரங்களை வெளியிட்டால் விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என இந்திய இராணுவத்தினர் தெரிவித்தனர் எனவும் பிபிசி தெரிவித்துள்ளது.

 

https://www.virakesari.lk/article/65350

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • எனக்கு யாழில் இரெண்டு பேர் பத்த வச்சிடுவினமோ எண்டு பயமா கிடக்கு🤣
    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால். இப்ப GOAT ல பிசி🤣.  பிகு நான் விஜை ஆதரவாளனோ பிரச்சாரகரோ இல்லை. ஒரு போதும் ஆக போவதில்லை. ஆனால் நம்ம மருமகன். சினிமாவில் பிழைக்க முடியாமல் போனபின் கட்சி தொடங்காமல் - நினைத்து பார்க்க முடியாத பணம் கொட்டும் வியாபாரத்தை விட்டு விட்டு வருகிறார். திரிசாவோ, நயனோ நாசம் பண்ணி விட்டார் என பொதுவெளிக்கு வரவில்லை🤣. இன்னும் கள்ளன் என நினைக்கும்படி எதுவும் மாட்டவில்லை. ஆகவே இப்போதைக்கு இவருக்கு benefit of the doubt ஐ கொடுக்கலாம்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.