Jump to content

கூட்டமைப்பு செய்தவைகளை கூட எமது அமைச்சர்கள் செய்யவில்லை


Recommended Posts

Monday, September 23, 2019 - 12:02pm

 

அரசாங்கத்தில் பதவிகள் வகித்தும் பங்காளிகளாக இருந்தும் முஸ்லிம் சமூகம் முகம் கொடுக்கின்ற பழைய பிரச்சினைகளுக்கும் புதிய நெருக்கடிகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை நீடிப்பதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்று எதிர்க்கட்சியில் அமர்ந்து அரசாங்கத்திற்கு அழுத்தும் கொடுத்தும் ஆதரவளித்தும் செயலாற்றுவது குறித்து முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளும் முஸ்லிம் சமூகமும் சிந்திக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம். ஸுஹைர் தெரிவித்துள்ளார்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்தரப்பு ஆசனத்தில் அமர்ந்து தமிழ் சமூகத்திற்கு ஆற்றியுள்ள சேவைகளில் ஒரு பங்கைக்கூட ஆளுங்கட்சி அமைச்சர்களாக பதவி வகித்து சமூகத்திற்கு ஆற்றியதாகத் தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  

அவர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, ‘நெருக்கடிகள் அதிகரித்து கொண்டு செல்கின்ற அதேநேரம், இருந்துவரும் பிரச்சினைகளும் தீர்க்கப்படாது தொடர்ந்து கொண்டிருப்பதும் கவலை தரும் விடயங்களாக உள்ளன.  

இலங்கை உள் விவகாரங்களில் முஸ்லிம் விரோத நாடுகளின் தலையீடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. 

குறிப்பாக 21/4 தாக்குதல் தொடர்பிலான புலனாய்வு நடவடிக்கைகளில் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகள் நேரடியாக ஈடுபடுவதைக் காணமுடிகின்றது. ஆனால் இந்த நாடுகள் தலையீடு செய்த எந்தவொரு நாட்டிலும் இவ்வாறான பிரச்சினைகள் தீர்ந்ததாக இல்லை. மாறாக அந்நாடுகளில் பிரச்சினைகள் அதிகரித்து பூதாகாரப்படுத்தப்பட்டுள்ளன. இவர்கள் தலையீடு செய்த நாடுகள் பெரும் பாரிய அழிவுகளுக்கும் சேதங்களுக்கும் உள்ளாகியுள்ளன. அந்நாடுகளின் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட பெரும்பகுதியினர் கடல்கடந்து ஒடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இவர்களில் எண்ணற்றோர் இடம்பெயர்ந்த படகுகள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இவை சரித்திரமல்ல துக்ககரமான பயங்கர சமகால நிகழ்வுகள்.  

இங்கு இடம்பெறும் விசாரணைகளில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகளால் முஸ்லிம்களின் பிரச்சினைகள் அதிகரிப்பது மிகவும் தெளிவாகத் தெரிகின்றது. 21/04 தாக்குதல் சம்பவம் தொடர்பிலான பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வந்து விட்டோம் என்ற அரசாங்கத்தின் உயர் மட்ட அறிவிப்பைத் தொடர்ந்து திருப்தியடைந்த முஸ்லிம்கள், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நாளுக்கு நாள் முஸ்லிம்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவதை சமூகம் அச்சத்துடன் அவதானித்துக் கொண்டிருக்கின்றது.  

உதாரணமாக ஸ்ரீ லங்கா ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் கைது செய்யப்பட்டுள்ளமை முஸ்லிம்களை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. தீவிரவாதத்தைக் கடுமையாக எதிர்த்தவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர். அப்படியிருக்ககையில் அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூலமோ அரசாங்கத்தின் மூலமோ இதுவரையும் எந்தவொரு காரணமும் முன்வைக்கப்படவில்லை.  

இது போன்ற கைதுகளின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் செயற்படுகின்றன எனப் பரவலாக நம்பப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் இந்நாட்டில் பல மடங்கு தீவிரப்படுத்தப்படலாம் என்ற வதந்திகளும் முஸ்லிம்கள் மத்தியில் பரவிக் கொண்டிருக்கின்றது. 

இவ்வாறான நிலையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தம் பதவிகளை அண்மையில் மீண்டும் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் முஸ்லிம் சமூகம் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளும் நெருக்கடிகளும் தீர்க்கப்பட்டதாகவோ குறைந்ததாகவோ இல்லை. முஸ்லிம் அரசியலும் சமய, சமூக அமைப்புக்களும் பெரிதும் பாதிப்படையலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இயக்க ரீதியாக இயங்குவதும் பிரச்சினையாகும் நிலைமை உருவாகும் என்ற அச்சமும் நிலவுகின்றது.  

வெளிநாட்டு முஸ்லிம் விரோத சக்திகள், எதுவித கட்டுப்பாடுகளும் இன்றி இங்கு செயற்பட அரசாங்கம் இடமளித்திருப்பது இவற்றுக்கு முக்கிய காரணமாக அமையும். இது கவலைக்குரிய நிலைமையாகும். கண்களுக்கு தென்படாத இரும்பு சங்கிலிகளைக் கொண்டு முஸ்லிம்களை சுற்றி வளைப்பதில் சர்வதேச இஸ்லாமிய விரோத சக்திகள் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படுகின்றது. இவற்றை அரசிலிருந்து கொண்டு தீர்க்க முடியாத நிலைமையை முஸ்லிம் சமூகத்தினால் காணமுடிகின்றது.  

தற்போது முக்கிய தேர்தலொன்றை முன்னோக்கி இருக்கும் நிலையில் சகல கட்சிகளுடனும் சுதந்திரமாகப் பேசி முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கக்கூடிய வாக்குறுதிகளை தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கி கொள்வது மிகவும் அவசியத் தேவையாக உள்ளது. பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளின் தீர்வுகள் இவற்றில் முக்கியத்துவம் பெறுவது அவசியம். அவசர காலச்சட்டம் நீக்கப்பட்டுள்ள போதிலும் முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் இன்னும் தீர்க்கப்படாத ஒன்றாகவே உள்ளது. மத்ரஸா கல்வி, வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் தாமதம் என்றபடி பலவித பிரச்சினைகளுக்கு முஸ்லிம்கள் முகம் கொடுத்த வண்ணமுள்ளனர்.   தமிழ் சமூகத்தினர் முன்னர் முகம் கொடுத்த பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் இருந்து பெருமளவு விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் முன்பு தமிழ் சமூகத்தினர் முகம் கொடுத்தது போன்ற பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைக்கு முஸ்லிம் சமூகம் தற்போது முகம் கொடுக்கத் தொடங்கியுள்ளது. தமிழ் அரசியல் தலைமைகளின் பின்னால் இந்தியா மற்றும் மேற்கத்தைய நாடுகள் மிகவும் ஆதரவாகவும் விழிப்பாகவும் செயலாற்றிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதே சக்திகள் உலகளாவிய ரீதியாக முஸ்லிம்களை எதிரிகளாக நோக்குகின்றன. இங்கும் எதுவித தங்குதடையுமின்றி செயலாற்றிக் கொண்டிருக்கின்றன. ஆனால் நாம் எதுவுமே அறியாத பாலகர்கள் போன்று இருக்கின்றோம். தமிழ் மக்களின் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாதுள்ள போதிலும் அச்சமூகத்திற்காக பாரியளவு சேவைகளை த. தே. கூ பெற்றுக்கொடுத்துள்ளது. இதனை அக்கட்சி எவ்வாறு செய்கின்றது என்பது தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம்களும் ஒரு தரம் சிந்தித்து பார்க்க வேண்டும்.  

இலங்கையில் நடைமுறையில் இருப்பது விகிதாசாரத் தேர்தலாகும். இத்தேர்தல் முறைமைப்படி எந்தவொரு கட்சியும் பாராளுமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையைப் பெறுவது கஷ்டமான காரியமாகும். அதனால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கும், நம்பிக்கையில்லாப் பிரேரணை, சட்ட மூலங்கள், பிரேரணைகள், விவாதங்களை நிறைவேற்றுவதற்கும் ஆளும் கட்சிக்கு மேலதிகமாக ஏனைய எதிர்த்தரப்பு கட்சிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமானது. 

அந்த அடிப்படையில் தான் த. தே. கூட்டமைப்பு அமைச்சு பதவிகளைப் பெற்றுக்கொள்ளாத நிலையில், ஒவ்வொரு வாக்கெடுப்பின் போதும் தம் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை முன்வைத்து தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் பேரம்பேசுதல்களை மேற்கொண்டு ஆளும் தரப்புக்கு ஆதரவாக வாக்களித்து தம் சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றி வைக்கின்றது.   ஆனால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளைப் பெற்றுக்கொண்டதும் அதற்கு மேலதிகமாக முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு எந்தவொரு தீர்வையையும் அரசாங்கம் செய்யாத நிலையே நீடிக்கின்றது. தேர்தல் முன்னோக்கி உள்ளதால் பிரதேச மட்டத்தில் ஏதோ உதவிகளை செய்யும் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளதைக் காணுகின்றோம். ஆனால் முஸ்லிம்களின் தேசிய மட்டத்திலான சமூகம் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றது.

இது ஆரோக்கியமான நிலைமை அல்ல. சமூகத்தின் பிரச்சினைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் அமைச்சு பதவிகளைக் கொண்டு தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியாவிட்டால் அப்பதவிகளால் சமூகத்திற்கு எந்த நன்மையுமே கிடைக்கப்போவதில்லை.  

https://www.thinakaran.lk/2019/09/23/அரசியல்/40803/கூட்டமைப்பு-செய்தவைகளை-கூட-எமது-அமைச்சர்கள்-செய்யவில்லை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாசிபருப்பில் ஒரு இனிப்பான அல்வா .........!  👍
    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.