Jump to content

சுகப்பிரசவ - சிசேரியன் குழந்தைள் உடல்களில் மாறுபட்ட பாக்டீரியாக்கள் - ஆச்சரிய ஆய்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுகப்பிரசவ - சிசேரியன் குழந்தைள் உடல்களில் மாறுபட்ட பாக்டீரியாக்கள் - ஆச்சரிய ஆய்வு

ஜேம்ஸ் கல்லாகர்பிபிசி
சுகப்பிரசவம் மற்றும் சிசேரியன்: குழந்தையின் பாக்டீரியா நிலையில் வித்தியாசம்

சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு நம்ப முடியாத வகையில், சுகப்பிரசவக் குழந்தைகளைவிட குடல்களில் பாக்டீரியாக்களின் நிலையில் மாறுபாடு காணப்படுகிறது என்று இந்தத் துறையில் நடந்துள்ள மிகப் பெரிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

நுண்ணுயிரிகள் பற்றிக் கண்டறியப் பட்டுள்ள இந்த முதல்நிலைத் தகவல்கள் நோய்த் தடுப்பு மண்டலத்தில் ``சமன்படுத்தும்'' காரணிகளாக அமையக் கூடும் என்று பிரிட்டன் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சிசேரியன் மூலம் பிறந்த குழந்தைகள் வாழ்வின் பிற்காலத்தில் ஏன் சில ஆரோக்கியக் குறைபாடுகளுக்கு ஆளாகிறார்கள் என்பதற்கான காரணத்தை விளக்குவதற்கு இந்தத் தகவல்கள் உதவக்கூடும் என்கிறார்கள்.

பெண் குறி திரவங்களை பஞ்சினால் எடுத்து குழந்தையின் மீது பூசும் செயலில் ஈடுபடக் கூடாது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

குடல் பாக்டீரியாக்கள் எந்த அளவுக்கு முக்கியமானவை?

மனித உடல் என்ற அமைப்பு முழுமையாக மனித செல்களை மட்டுமே கொண்டு இயங்குவதல்ல. மாறாக மனித உடலின் செல்களில் பாதியளவு பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சைகள் போன்ற நுண்ணுயிரிகளால் ஆனது.

அவற்றில் பெரும்பாலானவை நமது குடலில் வாழ்கின்றன. தொகுப்பாக அவை மைக்ரோபயோம் என்ற நுண்ணுயிரிகளின் தொகுப்பு என்று குறிப்பிடப்படுகின்றன.

ஒவ்வாமை, உடல் பருமன், பெருங்குடல் அழற்சி நோய், பார்க்கின்சன் எனப்படும் நரம்பியல் கோளாறுகளுடன் தொடர்புடையதாகவும், புற்றுநோய் மருந்துகள் செயல்படுமா என்பதுடன் தொடர்புள்ளதாகவும், மன அழுத்தம் மற்றும் மனச்சிதைவுக்கான நோய்களுக்கான மருந்துகள் பலன் தருமா என்பதுடன் தொடர்புள்ளதாகவும் இந்த மைக்ரோபயோம் உள்ளது.

பர்மிங்ஹாம் பல்கலைக்கழகமும், வெல்கம் சாங்கர் இன்ஸ்டிடியூட், யு.சி.எல். அமைப்பும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன. கிருமிகள் இல்லாத தாயின் கருவறையில் இருந்து கிருமிகள் நிறைந்த உலகிற்கு வந்தவுடன், இந்த மைக்ரோபயோம் எப்படி உருவாகிறது என்பதை இந்த ஆய்வு கவனித்தது.

சுமார் 600 குழந்தைகளின் முதல் ஒரு மாத காலத்துக்கான இடுப்புத் துணிகள் பரிசோதனைக்காக எடுத்துக்கொள்ளப் பட்டன. சில குழந்தைகளின் ஓராண்டு காலம் வரையிலான மலம் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது.

சுகப்பிரசவத்தில் பிறந்த பெரும்பாலான குழந்தைகளுக்கு, தங்களுடைய தாயிடம் இருந்து ஆரம்பநிலை பாக்டீரியாக்கள் கிடைக்கின்றன என்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்தது. Nature என்ற இதழில் இதன் முடிவுகள் வெளியாயின.

சுகப்பிரசவம் மற்றும் சிசேரியன்: குழந்தையின் பாக்டீரியா நிலையில் வித்தியாசம்

ஆனால் சிசேரியன் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையில் காணப்படும் கிளெப்ஸியெல்லா மற்றும் சூடோமோனாஸ் போன்ற கிருமிகள் அதிக அளவில் இருப்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்தது.

``ஆரோக்கியத்தை பாதிக்கும் கிருமிகள் எந்த அளவுக்கு இதில் இருக்கின்றன என்பது எனக்கு ஆச்சரியம் தருவதாகவும், அச்சம் தருவதாகவும் இருந்தது'' என்று வெல்கம் சாங்கர் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த டாக்டர் ட்ரெவர் லாவ்லே பிபிசியிடம் தெரிவித்தார்.

``மொத்த மைக்ரோபயோமில் அது 30 சதவீதம் வரை இருக்கலாம்.''

``ஆனால், மனித உடலுக்கு ஏற்ற உயிரிச்சூழலை பிறப்பின் போதே எப்படி ஏற்படுத்துவது என்ற, அற்புதமான தகவல் தொகுப்பு நமக்கு கிடைத்திருக்கிறது என்பது நமக்கு மகிழ்ச்சி தரும் தகவலாக உள்ளது'' என்று அவர் கூறுகிறார்.

மைக்ரோபயோம்

  • நீங்கள் மனித உடலுக்கு சொந்தமான உயிரணுக்களைவிட, பிற நுண்ணுயிரிகள் அதிகம் கொண்டவராக இருக்கிறீர்கள் - உங்கள் உடலில் உள்ள அனைத்து செல்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், 43 சதவீதம் மட்டுமே மனித செல்களாக இருக்கும்.
  • மீதி நமது மைக்ரோபயோமாக இருக்கும். அது பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சைகள் மற்றும் ஒற்றை செல்களைக் கொண்ட ஆர்ச்சியா கிருமிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
  • மனிதனின் மரபணுத் தொகுப்பு - மானிடருக்கான மரபணு தகவல்கள் கொண்ட முழு தொகுப்பு - என்பது மரபணுக்கள் என கூறப்படும் 20,000 தகவல்களைக் கொண்டதாக இருக்கிறது.
  • ஆனால் நமது மைக்ரோபயோமில் உள்ள இந்த அனைத்து மரபணுக்கள் எண்ணிக்கையை ஒன்றாகக் கணக்கிட்டால் இரண்டு மில்லியன் முதல் 20 மில்லியன் நுண்ணுயிரி மரபணுக்கள் வரும்.
  • நமது மைக்ரோபயோம் என்பது, நம்முடைய `இரண்டாவது மரபணுத் தொகுப்பு' என்றும் கருதப்படுகிறது.

இது குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதிக்குமா?

சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு டைப் -1 சர்க்கரை நோய், ஒவ்வாமைகள் மற்றும் ஆஸ்துமா போன்ற சில குறைபாடுகள் வருவதற்கு அதிக ஆபத்துகள் உள்ளன என்பது ஏற்கெனவே தெரிந்த விஷயம்.

கோளாறான நோய்த் தடுப்பு மண்டலம் - நோய்த் தாக்குதலுக்கு எதிராக உடலின் தற்காப்பு மண்டலம் பாதித்தால்- அவை அனைத்திலுமே ஒரு பங்கு வகிக்கும்.

சுகப்பிரசவம் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும், சிசேரியன் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும் இடையிலான வித்தியாசம் காலப்போக்கில் மாறிவந்து, அவர்களின் முதலாவது பிறந்த நாளுக்கு அவை சமநிலையை எட்டுகின்றன.

சுகப்பிரசவம் மற்றும் சிசேரியன்: குழந்தையின் பாக்டீரியா நிலையில் வித்தியாசம்

எனவே, நமது உடலில் முதலில் நுழைந்து ஆதிக்கம் பெறும் கிருமிகள்தான், நமக்கு நல்லவர் யார், கெட்டவர் யார் என்பதை நம் நோய்த் தடுப்பு மண்டலத்துக்குப் பயிற்சி தருவதற்கு உதவி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பது இந்தத் துறையில் செல்வாக்கு பெற்ற கருத்தாக இருக்கிறது.

``குழந்தை பிறக்கும் தருணம் ஒரு வகையில் ``சமன்பாட்டு'' நிலையை நிர்ணயிக்கும் தருணமாக இருக்கும் என்பது கருதுகோளாக உள்ளது. அதுதான் எதிர்கால வாழ்வில் நோய்த் தடுப்பு மண்டலத்தின் செயல்பாட்டை நிர்ணயிப்பதாக உள்ளது என கருதப்படுகிறது'' என்று யு.சி.எல். ஆராய்ச்சியாளர் டாக்டர் நிகெல் பீல்டு கூறுகிறார்.

குழந்தை பயோம் ஆய்வுத் திட்டத்தில் - என்ற இந்த ஆய்வு குழந்தைப் பருவத்தில் இருந்து குழந்தைகளைக் கண்காணிக்கும்போது இன்னும் தெளிவான தகவல்கள் கிடைக்கலாம்.

குழந்தையின் மைக்ரோபயோமியை வேறு எப்படி நீங்கள் மாற்றலாம்?

குழந்தையின் மைக்ரோபயோமில், அதன் பிறப்பு நேரத்துக்கு முக்கியப் பங்கு உள்ளது. ஆனால் நுண்ணுயிர்க் கொல்லிகள் எனப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகள் சாப்பிடுவது, குழந்தைக்கு தாய்ப்பால் தரப்படுகிறதா இல்லையா என்பது போன்ற விஷயங்களும் நமது நுண்ணுயிரி மற்றும் மனித செல்களுக்கு இடையிலான உணர்ச்சிபூர்வமான உறவில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

இந்தத் துறையில் முன்பு நடந்த ஆய்வுகளின் மூலம் கிடைத்த முடிவுகளைத் தொடர்ந்து, சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு, தாயின் பிறப்புறுப்பில் இருந்து திரவத்தை எடுத்து அதன் முகத்திலும், வாயிலும் தடவும் `வெஜைனல் சீடிங்' என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இருந்தபோதிலும், சுகப்பிரசவத்தில் பிறக்கிற குழந்தைகள், சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளைவிட ஒன்றும் அதிகமான பெண் பிறப்புறுப்பு பாக்டீரியாக்களைப் பெறுவதில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

மாறாக, பிரசவ வலி நேரத்தில் தாயின் மலக்கழிவின் மீது படுவதன் மூலம் அம்மாவிடம் இருந்து குழந்தைக்கு இந்த பாக்டீரியாக்கள் பரவுகின்றன.

தாயின் பிறப்புறுப்பு திரவத்தை எடுத்து குழந்தையின் முகம், வாயில் தடவும் போது, தாயின் பிறப்புறுப்பில் இருந்து ஜி.பி.எஸ். எனப்படும் கிருமியின் தாக்குதலுக்கு ஆளாகும் ஆபத்தும் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். (இது குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு பலவித கேடுகளை உருவாக்கலாம்.)

சுகப்பிரசவம் மற்றும் சிசேரியன்: குழந்தையின் பாக்டீரியா நிலையில் வித்தியாசம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

எதிர்காலத்தில் சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு, நல்ல பாக்டீரியாக்களின் கலவை ஏதாவது பிறந்தவுடனே தரப்படலாம், அதன் மூலம் நுண்ணுயிரிகள் நிறைந்த உலகில் அதன் பயணத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல வழி ஏற்படுவதாக இருக்கலாம்.

``இந்தக் கிருமிகள் நமக்காக உருவாக்கப்பட்டவை, நாம் அவற்றுக்காக உருவாக்கப் பட்டிருக்கிறோம்'' என்கிறார் டாக்டர் லாவ்லே.

``என்னுடைய முக்கியமான ஆர்வம் என்னவெனில் - தாயிடம் இருந்து குழந்தைக்கு கடத்தப்படும் கிருமிகள் எவை என்பது பற்றியது தான். இது தற்செயலாக நடப்பது அல்ல. இந்தக் கிருமிகள் மனிதர்களின் வாழ்வில் ஆழமான தொடர்பு கொண்டுள்ளன.''

``இதைத்தான் நாம் புரிந்து கொண்டு பாதுகாத்திட வேண்டும் - தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் இந்த வகை ரத்த பந்தத்தைப் பாதுகாக்க வேண்டும்.''

கர்ப்பிணிகள் என்ன செய்ய வேண்டும்?

இப்போது கண்டறியப்பட்ட விஷயங்கள் தடம் பதிப்பவையாக உள்ளன என்றாலும், பெண்கள் சிசேரியன் மூலம் பிரசவம் பார்த்துக் கொள்வதைத் தடுப்பதாக இது இருந்துவிடக் கூடாது என்று மகப்பேறு மருத்துவர்களுக்கான ராயல் கல்லூரி துணைத் தலைவர் டாக்டர் ஆலிசன் ரைட் கூறியுள்ளார்.

``பல சமயங்களில் சிசேரியன் என்பது உயிரைக் காக்கும் சிகிச்சையாக உள்ளது. பெண்ணுக்கும் அவருடைய குழந்தைக்கும் சரியான சிகிச்சையாக உள்ளது'' என்று அவர் கூறுகிறார்.

``பிறந்த நிலையில் உள்ள குழந்தைகளின் உடலில் மைக்ரோபயோம் என்ன பங்காற்றுகிறது என்பதும், என்ன அம்சங்களில் அது மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதும் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. எனவே, பெண்கள் சிசேரியன் செய்து கொள்ள மறுக்கும் நிலையை இந்த ஆய்வு முடிவு ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை'' என்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/science-49787343

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவெல்லாம் இன்ன தேதியில் எனக்கு பிள்ளை பிறக்கவேணுமெண்டு டாக்குத்தரிட்டை சொல்லி ஒப்பிரேசன் செய்து பிள்ளையை பெத்தெடுக்கினமாம். :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.