Jump to content

மூக்குடைபட்ட ‘எழுக தமிழ்’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மூக்குடைபட்ட ‘எழுக தமிழ்’

கே. சஞ்சயன் / 2019 செப்டெம்பர் 23 திங்கட்கிழமை, மு.ப. 11:48 

image_ad26991802.jpgதமிழ் மக்கள் எதிர்கொள்ளும் ஆறு முக்கிய பிரச்சினைகளை முன்வைத்து, சர்வதேச கவனத்தை ஈர்க்கும் நோக்கில், யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (16) ‘எழுக தமிழ்’ நிகழ்வு நடத்தப்பட்டு இருக்கிறது.   

மூன்றாவது தடவையாக, நடந்திருக்கிறது இந்த நிகழ்வு.   
தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய பங்காளியாக இருந்த, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, முதல் இரண்டு தடவைகளும், இந்த நிகழ்வை ஒழுங்கமைப்பதில், முதுகெலும்பாக இருந்தது.   

அப்போது, ‘எழுக தமிழ்’ நிகழ்வைத் தமக்கு எதிரான பேரணியாகப் பார்த்து, அதைத் தோற்கடிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயன்றது. ஆனால், இந்தமுறை நிலைமை தலைகீழாக மாறியிருந்தது.   

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவையை விட்டு வெளியே வந்து, ‘எழுக தமிழ்’ நிகழ்வைத் தோற்கடிக்க, முனைப்பாகப் பிரசாரங்களில் ஈடுபட்டது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனை பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.   

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான டெலோ, இம்முறை ‘எழுக தமிழ்’ நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்ததாயினும், அதன் முக்கிய தலைவர்கள் எவரும், நேரடியாகப் பங்கேற்கவில்லை.   

‘எழுக தமிழ்’ கோரிக்கைகள் நியாயமானவை என்று ஏற்றுக் கொண்ட, ஆனால், ‘எழுக தமிழ்’ நிகழ்வுக்கு ஆதரவளிக்காத, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், கூட்டத்தோடு கூட்டமாக பேரணியில் தமது ஆதரவாளர்களுடன் பங்கேற்றிருந்தார். ஆனால், ‘எழுக தமிழ்’ கூட்டத்தில் பங்கேற்கவில்லை.   

இந்த நிகழ்வு ஒழுங்கமைப்பு முறைகளைப் பார்த்தபோது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இல்லாத குறையை, அப்பட்டமாக உணர முடிந்தது என்றே கூறலாம்.   

தமிழ் தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்தவரையில், இந்தப் பேரணி வெற்றி பெற்றுவிட்டால், அது தமக்கான பாதிப்பாக அமையும் என்று உணர்ந்திருந்தது.   

முதல் இரண்டு பேரணிகளின் போதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவ்வாறு தான் பார்த்தது.   
ஏனென்றால், அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டே, மாற்றுத் தலைமையைத் தோற்றுவிக்கும் கலகக்காரராக சி.வி. விக்னேஸ்வரன் மாறியிருந்தார்.   

சி.வி.விக்னேஸ்வரனின் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் அணி திரண்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு, அவரது பக்கம், ஆதரவாளர்கள் சாய்ந்து விட்டனர் என்ற கருத்து, உருவாகி விடும் என்ற பதற்றம் அப்போது, கூட்டமைப்பின் தலைவர்கள் பலருக்கு ஏற்பட்டிருந்தது.   

இப்போது அந்தப் பதற்றம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வந்திருந்தது.   
முதல் இரண்டு, ‘எழுக தமிழ்’ நிகழ்வுகளையும் வெற்றிகரமாக நடத்துவதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கணிசமான பங்களிப்பைச் செய்திருந்தது.   

அதன் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வீழ்த்தலாம் என்று வியூகம் வகுத்திருந்தது, தமிழ் தேசிய மக்கள் முன்னணி.   

ஆனால், தான் வெட்டிய குழியிலேயே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இப்போது வீழ்ந்திருக்கிறது.   

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இல்லாமலேயே விக்னேஸ்வரன், தனது பலத்தைக் காட்டி விட்டார் என்ற நிலை வந்து விடக்கூடாது என்றே அவர்கள் பயந்தனர்.   

அதனால் தான், இந்த ‘எழுக தமிழ்’ நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூச, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முற்பட்டது. அதற்கு எதிரான பிரசாரங்களையும் மேற்கொண்டது.   

ஆனாலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அச்சம் கொள்ளும் அளவுக்கு, இந்தப் பேரணி இருக்கவில்லை என்பதே உண்மை.   

அவ்வாறாயின், தமிழ் மக்கள் பேரவை எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லையா என்ற கேள்வியை எழுப்பலாம். நிச்சயமாக, அதுதான் உண்மை.   

image_ac321be327.jpg‘எழுக தமிழ்’ நிகழ்வுக்கு முதல் நாள், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்திருந்த தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், 15 ஆயிரம் மக்களை, இந்தப் பேரணியில் எதிர்பார்ப்பதாகக் கூறியிருந்தார்.   

ஆனால், அந்த எதிர்பார்ப்பை ‘எழுக தமிழ்’ பேரணி நிறைவேற்றவில்லை என்பது கசப்பான உண்மை.   

இது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு இனிப்பான செய்தியாக இருக்கக் கூடும். தாங்கள் இல்லாமல், சி.வி. விக்னேஸ்வரனால் எதையும் சாதிக்க முடியாது என்ற உண்மை, உணர்த்தப்பட்டு விட்டது என்று அவர்கள் கருதக் கூடும்.   

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்தவரை, சி.வி. விக்னேஸ்வரன் இப்போதும் கூட, அவர்களது எதிரியல்ல; அவர் தோற்க வேண்டும் என்ற ஆசையும் இல்லை.   

ஆனால், அவர் கூட்டு வைத்திருக்கின்றவர்களிடம் இருந்து விலகித் தம்முடன் தனியாக வந்து சேர வேண்டும் என்பதே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்பார்ப்பு.   

எனவே, இந்தப் பேரணி பெரியளவில் வெற்றிகரமாக அமைந்திருந்தால், அது சி.வி. விக்னேஸ்வரனின் அரசியலைப் பலப்படுத்தியிருக்கும். அவர் தன் வழியில், துணிச்சலுடன் நடக்கும் தைரியத்தைக் கொடுத்திருக்கும்.   

அது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்பார்ப்புக்குப் பாதகமானதாக அமைந்திருக்கும். ஆனால், நடந்திருக்கும் விடயங்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குச் சாதகமானதாகவே தெரிகிறது.   

சி.வி.விக்னேஸ்வரன் தனித்துச் செயற்பட்டு, மிகப்பெரிய ஆதரவைத் திரட்டிக் கொள்வது சாத்தியமில்லை என்பது உறுதியாகியிருக்கிறது,   

‘எழுக தமிழ்’ பேரணியோ, சி.வி.விக்னேஸ்வரனோ, யாழ்ப்பாணத்தைக் கடந்து, வெளியே பெரிதாகத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் இல்லை என்பது, மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.   

இங்கு ஆச்சரியமான விடயம் என்னவென்றால், இந்தப் பேரணிக்கு ஆதரவு தெரிவித்திருந்த ஈ.பி.ஆர்.எல். எவ்வும், டெலோவும் பலம்வாய்ந்தவையாக இருப்பதாகச் சொல்லப்படும் மன்னாரிலும், வவுனியாவிலும், முழு அடைப்புப் போராட்டத்துக்கான அழைப்பு, தோல்வி கண்டிருக்கிறது.   

இந்த நிகழ்வுக்குத் திரட்டப்பட்ட கூட்டம், சி.வி. விக்னேஸ்வரனின் அரசியல் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக கூடிய கூட்டம் அல்ல. அரசியல் சார்பின்றி அனைவரையும் பங்கேற்குமாறே, அழைப்பு விடுக்கப்பட்டது.   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூடக் கலந்து கொண்டார். எனவே, அவர் சி.வி. விக்னேஸ்வரனின் அணியைப் பலப்படுத்துவார் என்று கற்பனை பண்ண முடியாது.   

இந்த ‘எழுக தமிழ்’ நிகழ்வில் அதிகளவான மக்கள் பங்கேற்கவில்லை என்பதை வைத்து, பிரமாண்டமான ஒரு கூட்டத்தைக் காட்ட சி.வி.விக்னேஸ்வரன் தவறியிருக்கிறார். இது அவரைப் போட்டியாக நினைக்கின்ற தரப்புகளுக்கு, ஆறுதலை அளிக்கக் கூடும்.   

அதேவேளை, சி.வி. விக்னேஸ்வரனுக்கும் தனது அரசியல் எதிர்காலம் தொடர்பான, மீள் பரிசீலனைகளை மேற்கொள்வதற்கும் இந்த நிகழ்வு, ஒரு காரணியாக அமையக் கூடும்.  ஏனென்றால், அவரது அரசியல் வியூகத்துக்கு, இது ஒரு முக்கியமான நிகழ்வாக இருக்கும்.   

எதிர்காலத்தில் எத்தனை அரசியல் கூட்டணியை, வியூகத்தை உருவாக்க வேண்டும் என்ற தெளிவு அவருக்கு உருவாகக் கூடும்.  ஆனால், இந்த ‘எழுக தமிழ்’ நிகழ்வு, தமிழ் மக்களுக்கு எதைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது என்றுதான் முக்கியமாகப் பார்க்க வேண்டும்.  ஏனென்றால், இது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு கோரி, அவற்றை வெளிப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட நிகழ்வாகும்.   

அந்த இலக்கை, இந்த நிகழ்வு எட்டியதா என்ற கேள்விக்கு, நிச்சயமாக இல்லை என்றே பதிலளிக்க வேண்டும்.  ஏனென்றால், அவ்வாறு அழுத்தம் கொடுக்கக் கூடிய திரட்சியை இந்த நிகழ்வு அடையவில்லை.   

இது ஏற்பாட்டுக் குறைபாடா, தவறான புரிதலா, அரசியல் ஈடுபாடு இன்மையா, இங்கு முன்வைக்கப்பட்டவை எவையும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் இல்லையா? இவை விரிவாக ஆராயப்பட வேண்டியவை.   

அந்த ஆய்வுகளின் அடிப்படையில் தான், அடுத்த கட்டம் நகர்த்தப்பட வேண்டுமே தவிர, அரசியல் நோக்கங்களை அடைவதற்காக, அடுத்தடுத்த கட்டங்களிலும் நகர்த்தப்பட்டால், மீண்டும் மீண்டும் மூக்குடைபட்டுக் கொள்ளவே வழிவகுக்கும்.  

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மூக்குடைபட்ட-எழுக-தமிழ்/91-239093

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுக தமிழின் தோல்வி, ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் மூக்குடைவு என்பதே உண்மை.

இந்த தோல்வியை கஜே கோஸ்டி தமது வெற்றியாக கொண்டாடுவது அருவருக்கத்தக்கது.

“எனக்கு மூக்கு போனாலும் எதிரிக்கு சகுனப் பிழை” எனும் பொன்னம்பலத்தின் அரசியல் தொடர்சியே இது.

இவர்களுக்கு கூட்டமைப்பு எவ்வளவோ பரவாயில்லை.

Link to comment
Share on other sites

தமிழீழ விடுதலைப் போராட்டம் கற்றுத்தந்த பாடங்களில் ஒன்று மக்கள் செயற்பாடுகள்பற்றியது. போராட்டத்தில் வெற்றியை எதிர்பார்த்த பல குடும்பங்கள், தங்கள் பிள்ளைகளை அதில் ஈடுபடவிடாமல் பாதுகாப்பான இடங்களுக்கு அல்லது வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு போராட்டத்திற்கு வேண்டிய பங்களிப்பை செய்தனர். அதுபோலவே எழுக தமிழின் நிகழ்வில் கலந்துகொள்ளாது இருந்தாலும் அதன் வெற்றியை எதிர்நோக்கி இருந்ததை, ஊரில் தொடர்புகொண்டபோதும், ஊடகச் செய்திகள் மூலமாகவும் அறியமுடிந்தது. எழுக தமிழ் வெற்றிபெற்றிருந்தால் அது ஏற்பாட்டாளர்களுக்கு வெற்றிதான். தோல்வியுற்றால், யாரால் தோல்வி ஏற்பட்டது என்பதை மக்கள் நோக்கத்தான் செய்வார்கள், தோல்விக்குக் காரணமானவர்களை கருணா போன்றவர்களின் இடத்தில் வைத்துப்பார்க்கத் தயங்கமாட்டார்கள். இதுவும் ஏற்பாட்டாளர்களுக்கே சாதகமாக அமையும்.  

Link to comment
Share on other sites

தமிழ் மக்களின் மூக்கு என்றோ உடைந்து இன்று தலை போகும் நிலை.

இதில் அவரை இல்லை இவரை குற்றம் சாட்டுவது என்பது இனத்தின் பலவீனத்தை மேலும் பலவீனமாக்குகின்றது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

எழுக தமிழின் தோல்வி, ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் மூக்குடைவு என்பதே உண்மை.

இந்த தோல்வியை கஜே கோஸ்டி தமது வெற்றியாக கொண்டாடுவது அருவருக்கத்தக்கது.

“எனக்கு மூக்கு போனாலும் எதிரிக்கு சகுனப் பிழை” எனும் பொன்னம்பலத்தின் அரசியல் தொடர்சியே இது.

இவர்களுக்கு கூட்டமைப்பு எவ்வளவோ பரவாயில்லை.

ஏனைய தமிழ்கட்சி/அமைப்புகளின் தோல்வி கூட்டமைப்புக்குத்தான் வலு சேர்க்கும். அதை  தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கூத்தமைப்பு குத்தியாட்டம் போடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பலவீனமான இனம்.. அரசியல் அதிகாரங்கள் இழந்து நிற்கும் இனம்.. ஆளும் உரிமையை சொந்த நிலத்தில் இழந்து நிற்கும் இனம் தனக்குள் மூக்குடைபடுவதே.. கடந்த 2009 மே க்குப் பின்னான எங்கள் அதி புத்தி சீவி அரசியலாக பரினமித்துள்ளது. 

இந்த இனத்தின் இந்த அவலத்தை அன்றே உணர்ந்து தான் தமிழீழ தேசிய தலைவர்.. ஏக பிரதிநிதித்துவக் கொள்கையோடு பேச்சுக்குச் சென்றார்.

அதனை சனநாயகம் அற்ற செயல் என்று வரிந்து கட்டியோர்.. இன்று இப்படி ஆளுக்காள்.. மூக்குடைத்து மக்களுக்கு ஏற்படுத்திய ஒரு நன்மையாவது இருக்கா. கிடையாது.

மாறாக சிங்கள பெளத்த பேரினவாதத்தினதும்.. இஸ்லாமிய அடிப்படைவாத மதப் பயங்கரவாதத்தினதும் ஆக்கிரமிப்புக்குள் அநியாயங்களுக்குள் எம் மக்களை மண்ணை சிறைப்படுத்தியது தான் கண்ட மிச்சம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.