Jump to content

சில ஞாபகங்கள் 3


pri

Recommended Posts

ஒரு காலத்தில் ஊரெல்லாம் சண்டியர்கள் இருந்தார்கள்.
அவர்கள் அநியாயமாகவும் சிலசமயம் தப்பித்தவறி நியாயமாகவும் நடந்தார்கள்.
பருத்தித்துறையில் சம்மந்தன் பெயர்போன சண்டியன்.
சம்மந்தனை கண்டதோ பேசியதோ கிடையாது.
அவரின் அடிதடிகள் பற்றிய கதைகளை எனக்கு முன்னம் பிறந்தவர் சொல்ல கேட்டிருக்கிறேன்.
சண்டியன்  சம்மந்தனுக்கு வம்புக்கு ஆள் கிடைக்காத நேரத்தில் பொலிஸ்காரரை கண்டால் அவர்கள் தொப்பி பறிபோகும்.
இந்த கரைச்சலால் சம்மந்தன் உலாவுகிற தெருக்களில் பொலிஸ்காரர் தனியே நடமாடுவது கிடையாது.
வயதான சம்மந்தன் இப்போது மொன்றியலில் இருப்பதாக கேள்வி.
ஊருக்குள் இயக்கங்கள் தலை தூக்க சண்டியர்கள் காணாமல் போனார்கள்.
இரண்டு தாக்குதல்களுக்கு இடையில் வருகிற இடைவெளியில் சண்டியர்கள் மின்கம்பங்களில் தொங்கினார்கள்.
இப்படியாக ஊருக்குள் சண்டியர்களும் கோழிக்கள்ளர்களும் இல்லாமல் போனார்கள்.
இவை  ஊருக்குள் சண்டியர்கள் இல்லாமல் போன பிற்பாடு நடந்த சம்பவங்கள் .
 
ஆதித்தனை சின்ன வயதிலிருந்து தெரியும்.
திருநாவுக்கரசு மாஸ்டரின் சி. எம். ஈயில் ஒன்றாக படித்திருக்கிறேன்.
படிப்பில் பெரிய நாட்டம் கிடையாது.
யாருக்கும் சின்ன பயமும் கிடையாது.
இருந்தாலும் தப்பாமல் எல்லா வகுப்புக்கும் வருவான்.
கூடவே ஒரு கொப்பி மாத்திரம் இருக்கும்.
எல்லா பாடங்களையும் ஒரே கொப்பியில் எழுதுவான்.
விரும்பினால் படி பாணியில் பாடம் எடுக்கிறவர் குறிப்புகள் கொப்பிக்கும் வராது.
 
திருநாவுக்கரசு மாஸ்டருக்கு வெளியில் ஏதேனும் பிரச்சினை என்றால் வகுப்புக்குள் தெரியும்.
யாருக்கேனும் குத்துமதிப்பாக அடி விழும்.
குத்துமதிப்பாக விழுகிற அடி எப்போதும் ஆதித்தனையே போய் சேரும்.
அடுத்த கணமே அவனுக்கு அது மறந்து போகும்.
பழையபடி வம்பும் சேட்டையும் தொடரும்.
அதுதான் ஆதித்தன்.
 
பாடம் இல்லாத பொழுதுகளில் பந்தோடு முன்னால் இருக்கிற திக்கமுனைக்குள் இருப்போம்.
இரண்டாக பிரிந்து கால் பந்து விளையாடுவது வழமை.  
ஆதித்தன் பந்துக்கு உதைப்பதை விட பந்தோடு வருகிறவர் காலுக்கு உதைப்பது அதிகம்.
இந்த சிக்கலால் நான் எப்போதூம் அந்த பக்கத்துக்கே விளையாடுவதுண்டு.
விளையாட்டு சிலசமயம் சண்டையாக மாறும்.
ஆதித்தனுக்கு சரி பிழை கிடையாது.
தன்பக்கம் விளையாடுபவர் சொல்லவது சரி என்பதே எப்போதும்  அவன் நம்பிக்கை. அவர்களுக்காக கடைசிவரை சண்டை போடுவான்.
 
ஒன்பதாம் வகுப்போ அல்லது பத்தாம் வகுப்போ என்று சரியாக ஞாபகமில்லை.
எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு ஒரு நாள்  இயக்கத்துக்கு போனான்.
லாலா அவனை இந்தியாவுக்கு வள்ளத்தில் ஏற்றி அனுப்பினார்.
அதற்கு பிறகு நீண்ட நாட்கள் காணகிடைக்க
இல்லை .
பயிற்சியையும் இயக்கத்தையும் பாதியில் விட்டு இந்தியாவில் திரிவதாக கண்டவர்கள் சொன்னார்கள்.
 
பிறகு வந்த நாட்களில்
அவனை சுற்றியிருக்கிற மனிதர்களும் அவர்கள் சஞ்சரிக்கிற உலகமும் வேறாக இருந்தது.  
 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மூன்று தடவைகள் வரை பிறகு  அவனை  சந்தித்திருபபேன் .
 
முதலாவதாக மீண்டும் சந்திக்கிறபோது இந்திய இராணுவம் இலங்கையில் இருந்தது. எங்களோடு படித்த சிலர் அப்போது மிக தீவிரமாக இயக்கத்தில் இயங்கினார்கள்.
அவர்களுக்கு உணவு கொடுக்கவோ உதவிசெய்யவோ பெரும்பாலன தீவிர ஆதரவாளர்கள்  பயந்தார்கள். தயங்கினார்கள். சித்தப்பாவையும் மற்ற இயக்க  நண்பர்களையும்  சைக்கிலில் ஏற்றி இறக்குவதை ஒரு தொழில் போல ஆதித்தன்  செய்தான்.
 
இரண்டாவதாக சந்திக்க கிடைத்தபோது யுத்த நிறுத்தம் அமுலில் இருந்தது.
 
பருத்தித்துறையில் இருந்த பொலிஸ்காரர்கள் ஊருக்குள் ஆயுதம் இல்லாமல் திரிந்தார்கள்.
அவர்களின் நடமாட்டத்தை இல்லாமல் செய்ய இயக்கம் விரும்பியது. யுத்த நிறுத்தம் அவர்களின் கைகளை கட்டிப்போட்டிருந்தது.
பொதுமக்களின் பெயரில் ஊருக்குள் திரிகிற பொலிஸ்காரர்களின் மண்டைகளை ஆதித்தன்  உடைத்தான்.
ஏறத்தாள பொலிஸின் நடமாட்டம் ஊருக்குள்  முற்றாக இல்லாமல் போனது.
 
மூன்றாவது முறை காண்கிறபோது  குட்டி சண்டியனாக மாறியிருந்தான்.
பருதித்துறையில் இருந்து கொழும்புக்கு போகிற எல்லா பஸ்களுக்கான பற்றுச்சீட்டுக்களையும் அவனிடமிருந்தே பெறவேண்டியிருந்தது . ஒவ்வொரு ரிக்கறிலிருந்தும் ஐந்து ரூபாய் அவன் கைக்கு வந்தது. கையில் காசும் அவனை சுற்றி நாலு ஐந்து பேரும் எப்போதும் இருந்தார்கள். அவர்கள் கண்கள் எப்போதும்  சிவந்து இருந்தன. கள்ளு வாடையும் கசிந்தது.
 
ஒரு நாள்  வெளிச்சம் மறைகிற பின்னேர வேளையொன்றில் சூசையின் பஜிரோ ரிக்கற் விற்கும் இடத்திற்கு வந்தது. சூசையோடு சித்தப்பாவும் இன்னும் நான்கு இளைஞர்களும் உள்ளே போனார்கள்.
ஆதித்தனையும் சகாக்களையும் கீழே போட்டு உதைத்தார்கள். அவர்களுடைய முகங்கள் வீங்கின. இரத்தம் கசிந்தது. இடுப்பில் இருந்த சூசையின்  கை துப்பாக்கி ஆதித்தன் தலையை தொட்டது .
  24 மணித்தியாலத்தில் ஊரைவிட்டு போகும்படி சூசையின் கட்டளை சொன்னது . இனி ஊரில் கண்டால் சுடுவேன் என்று சொல்லி விட்டு அவர்கள் போனார்கள்.
அதற்கு பிறகு ஆதித்தனை ஊரில் கண்டதில்லை.
 
இவையெல்லாம் நடந்து நீணட காலம் கடந்தாயிற்று.
அண்மையில் ஆதித்தன் இறந்து போனதாக சொன்னார்கள். எப்படி என்ன ஆனது என்று தெரியாது என்றும் சொன்னார்கள்.
 
மனித வாழ்கையும் அது இயங்குகிற சூத்திரமும் இப்போதும் கூட  சரியாக புரியாதிருக்கிறது.
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 9/25/2019 at 2:23 AM, pri said:

சண்டியன்  சம்மந்தனுக்கு வம்புக்கு ஆள் கிடைக்காத நேரத்தில் பொலிஸ்காரரை கண்டால் அவர்கள் தொப்பி பறிபோகும்.

Pri, சம்பந்தன் காலத்தில் வாழ்ந்திருக்ககிறேன். நீங்கள் குறிப்பிடுவது மிகையானது. அது உங்கள் தவறல்ல. நீங்கள் கேட்டதைத்தான் எழுதியிருக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறீர்கள்.

யாழ் களத்தின் 20வது ஆண்டுப் பதிவில் ‘கடன் வாங்கி களியாட்டம்’ என்ற பத்தியை எழுதியிருக்கிறேன். அன்றைய சண்டியர்கள் அதில் இருக்கிறார்கள். நேரம் இருந்தால் பாருங்கள்.

 

Link to comment
Share on other sites

கருத்துக்கும் இணைப்புக்கும் நன்றி கவி அருணாச்சலம் அண்ணா .
நல்லதொரு உங்கள் பதிவை வாசிக்க கிடைத்தது சந்தோசம் .
சம்பந்தன் பற்றிய எங்கள் காலத்து  பிம்பம் முற்றிலும் வேறாக இருக்கிறது .

உதாரணத்துக்கு இந்த பதிவுக்கு Hartley whatsup group இல் வந்த பின்னூட்டம் ஒன்றை அப்படியே  இணைக்கிறேன் .

"ஆதித்தனும் நானும் அயலவர்கள்: அவன் குடும்பமும் என் குடும்பமும் மிகவும் நெருக்கம். அவன் கல்லோடை அப்பாவின் பேரன். சித்தி விநாயகர் வித்தியாலயம்தான் எங்கள் school.
நீ கூறியது போல் அடிப்படையில் மிகவும் ஒரு நல்ல குணங்கள் கொண்ட பெடியன். பெட்டை சேட்டை, கப்பம் கேட்பது எதுவும் அவன் செய்தது கிடையாது. அவன் ஒரு சண்டியன்; மூளைக்கு முன் கை முந்தும். நண்பர்களுக்காக அடிபடுவான்.
அவன் ஆமிக்காரனிடம் ஆட்டையை போட்ட சைக்கிள்தான் (பச்சை Asia) நானும் வினாயமும் கறுப்ப paint அடிச்சு ஓடியது  .  நான் ஊரை விட்டு வரும்வரை தினமும் campus க்கும் ஊருக்கும் ஓடின்னான்.
அவன் heart attack வந்து இறந்தது தெரியும். Wife பிள்ளயள் கிளிநொச்சியில் உள்ளார்கள்.

சம்பந்தன் அண்ணா கப்பம் வாங்குவார்; பெண்களை சகோதரி போல பார்ப்பார். பெட்டை சேட்டை செய்வோருக்கு அவரை கண்டாலே பயம் அவ்வளவு அடி விழும்.
இன்னும் நிறைய இருக்கு. நான் உன்னை சந்திக்கும் போது சொல்லுறன்.
கிருஷ்ணா."
 

Link to comment
Share on other sites

எம் ஊரில் சித்திரன் சோதியன் என்ற சகோதரர்கள் இருந்தார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, pri said:

சம்பந்தன் அண்ணா கப்பம் வாங்குவார்; பெண்களை சகோதரி போல பார்ப்பார். பெட்டை சேட்டை செய்வோருக்கு அவரை கண்டாலே பயம் அவ்வளவு அடி விழும்.

Pri,  உண்மையில் சம்பந்தன் ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர். சில கூடாத சேர்க்கைகள் அவரது வாழ்க்கையை மாற்றி விட்டது. ஒரு தடவை பொலிசார் பருத்தித்துறை நகரில் இருந்து  அவரை அடித்தடித்து (அதுவும் அவர் ஒவ்வொரு காலடி எடுத்து வைக்கும் போது காலின் பின்னுக்கு அடிப்பார்கள்)பொலீஸ் நிலையத்துக்கு   அழைத்துச்சென்றதைப் பார்த்திருக்கிறேன்.  

நீங்கள் குறிப்பிட்டது போல் பெண்கள் சேட்டைகள் அவரிடம் இருக்கவில்லை. அவரது முகத்தைக் பார்க்கும் போது ‘சண்டியர்’ என்ற பயம் வராது. அவரது முகம் சாந்தமாகவே இருக்கும்.  அவர்வெ ளிநாட்டுக்குப் பயணிக்கும் முன்னர் குற்றச் செயல் ஒன்றில் ஈடுபட்டு  முஸ்தாபா என்ற பெயரில் மட்டக்களப்பில் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டிருந்தார் என்று கேள்விப்பட்டிக்கிறேன்.

ஆதித்தன் பின்னாளில் வந்தவராக இருக்கலாம். எனக்கு அவரைத் தெரியவில்லை

5 hours ago, விவசாயி விக் said:

எம் ஊரில் சித்திரன் சோதியன் என்ற சகோதரர்கள் இருந்தார்கள். 

நீங்கள் பருத்தித்துறையிலும் விவசாயம் செய்தீர்களா விக்?

Link to comment
Share on other sites

7 hours ago, Kavi arunasalam said:

 

நீங்கள் பருத்தித்துறையிலும் விவசாயம் செய்தீர்களா விக்?

இல்லை.  ஆனால் பக்கது ஊர் அடிகடி வருவேன்.  

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றி கவி அருணாச்சலம் அண்ணா  மற்றும் விவசாயி விக் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.