Jump to content

வெல்லப் போவது யாரு? இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அரசியலை கணிப்பதில் ஒரு அசகாய சூரரா? 


டிரம்பின் வெற்றி, பிரெக்சிட் இப்படி எதிர்பார்ப்புக்கு மாறாக வந்த முடிவுகள் பலதை அசால்டாக முன்பே கணித்தவரா?


உங்கள் அரசியல் தூர திருஸ்டியை தமிழ் கூறு நல்லுலகுடன் பகிர (படம் காட்ட😂) ஒரு அரிய சந்தர்பம் வாய்துள்ளது!


இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16ம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முடிவுகள் எப்படி இருக்கும்?

பதிலை அளியுங்கள், புகழை அள்ளுங்கள்!


* பதில்கள் ஐக்கியரச்சிய நேரம் 14/11/2019, 23:59 ற்கு முன்னர் தரப்பட வேண்டும்.
+ சர்ச்சை எழுமிடத்து நடத்துபவரின் தீர்ப்பே இறுதியானது
.
———————————————————————
1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).


2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).


3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).


4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).


5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).


6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  


 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).


எல்லோருக்கும் வாழ்துக்கள் 💐💐💐.

Link to comment
Share on other sites

  • Replies 204
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

14/11/2019, 23:59   க்கு முதல் நான் களத்திலை இறங்குவன்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னமும் யார்யார் வேட்பாளர்கள் என்று தெரியவில்லை.எனவே பொறுத்திருக்க வேண்டியிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Men Dancing GIF

ஆஹா... நல்ல போட்டி. :grin:

இன்னும்.... ஆறு கிழமை இருக்கு. தேர்தல் பிரச்சார  வியூகங்களை  அவதானித்து, 
நானும் போட்டியில் இந்த இணைந்து கொள்கின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியின் நாயகமே, முதல்ல யார் யார் எங்கெங்கு போட்டியிடுகின்றார்கள் என்று அறியத் தாருங்கள்.(அவர்களின் படங்கள் முக்கியம்).எமக்கு யாழைத் தவிர வேறெங்கும் கிளைகள் கிடையாது அதுதான்.......!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

14/11/2019, 23:59   க்கு முதல் நான் களத்திலை இறங்குவன்.:cool:

கட்டாயம் அண்ணை. விளையாட்டுல தேவைப்படுறது போல அரசியல்ல உங்களுக்கு நண்டு, சிண்டுகளின் உதவி தேவைப்படாது 😂. இறங்கி விளையாடுங்கோ.

8 hours ago, ஈழப்பிரியன் said:

இன்னமும் யார்யார் வேட்பாளர்கள் என்று தெரியவில்லை.எனவே பொறுத்திருக்க வேண்டியிருக்கு.

இப்போதைக்கு கோட்ட அபய ராஜபக்ச, அனுரகுமார திசாநாயக்க, சஜித் பிரேமதாச ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில சுயேட்சைகளும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். சுதந்திர கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதும் தொழிலதிபர் தம்மிக பெரேரா போட்டியிடுவாரா என்பதும் இன்னும் முடிவாகவில்லை.

வேட்பாளர் கட்டுப்பணம் செலுத்தும் இறுதிநாளின் பின், இங்கே இறுதி வேட்பாளர் பட்டியலை இணைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

Men Dancing GIF

ஆஹா... நல்ல போட்டி. :grin:

இன்னும்.... ஆறு கிழமை இருக்கு. தேர்தல் பிரச்சார  வியூகங்களை  அவதானித்து, 
நானும் போட்டியில் இந்த இணைந்து கொள்கின்றேன். :)

நன்றி சிறி அண்ணா,

அரசியலில் 1 கிழமையே ஒரு நீண்ட காலம் என்பார்கள். 6 கிழமைக்குள் என்னவும் நடக்கலாம். எனவே அவர்களின் வியூகங்களை பார்த்து, சரியான தருணத்தில், சரியான வியூகத்தோடு களமிறங்குங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

போட்டியின் நாயகமே, முதல்ல யார் யார் எங்கெங்கு போட்டியிடுகின்றார்கள் என்று அறியத் தாருங்கள்.(அவர்களின் படங்கள் முக்கியம்).எமக்கு யாழைத் தவிர வேறெங்கும் கிளைகள் கிடையாது அதுதான்.......!  🤔

நிச்சயம் அண்ணா.

படங்கள் மட்டுமல்லாது, அவர்களின் சுய விபரக் குறிப்புகளையும் இணைப்பதாக உத்தேசம். 

ஜனாதிபதி தேர்தல் முறை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் கூட சில தகவல்களை பகிர இருக்கிறேன்.

ஜனாதிபதிக்கான தேர்தலில் நாடு முழுவது ஒரே தேர்தல் அலகாக கருதப்படும். தொகுதி அடிப்படையிலோ, மாவட்ட அடிப்படையிலோ அல்லாமல், ஒட்டு மொத்த வாக்குகளில் யார் அதிகம் பெறுகிறார்கள் என்பதின் அடிப்படையிலேயே இங்கே வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.

ஆனால் குறித்த மாவட்ங்களில் யார் அதிகம் வாக்குகளை பெற்றார்கள் என்பதை வைத்து, இனக்குழுக்கள் யாரை ஆதரித்தார்கள் என்ற முடிவுக்கு வரலாம். குறிப்பாக யாழ், வன்னி, மட்டகளப்பு மாவடங்கள் எல்லாம் ஒருவரை ஆதரித்தால்- அந்த வேட்பாளரை தமிழ் வாக்காளர் மற்றயவரை விட விரும்பியதாக ஒரு எடுகோளை எடுக்கலாம்.

விருப்ப குறிகளை இட்டுச் சென்றுள்ள நிழலி, துல்பன், நந்தன், நுணா ஆகியோரும் இன்னும் பலரும் பங்குகொண்டு போட்டியை கலகலப்பாக வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

 

விருப்ப குறிகளை இட்டுச் சென்றுள்ள நிழலி, துல்பன், நந்தன், ஐநா ஆகியோரும் இன்னும் பலரும் பங்குகொண்டு போட்டியை கலகலப்பாக வேண்டுகிறேன்.

அதென்ன நிழலி, துல்பன், நந்தன் .....நானும் உங்களுக்கு குத்தினானான் முடியல்ல , ஆனாலும் குத்தாமல் விடமாட்டன், பொறுத்திருங்கோ.....!   💪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

விருப்ப குறிகளை இட்டுச் சென்றுள்ள நிழலி, துல்பன், நந்தன், ஐநா ஆகியோரும் இன்னும் பலரும் பங்குகொண்டு போட்டியை கலகலப்பாக வேண்டுகிறேன்.

எல்லாம் சரி   உதாரப்பா ஐநா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வாறன்  ராசா

ஆனால்  எனது  விருப்பங்கள்  தான்  முன்னிற்குமே தவிர  நிஐம்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, suvy said:

அதென்ன நிழலி, துல்பன், நந்தன் .....நானும் உங்களுக்கு குத்தினானான் முடியல்ல , ஆனாலும் குத்தாமல் விடமாட்டன், பொறுத்திருங்கோ.....!   💪

அண்ணா,

நீங்கள் முன்பே கருத்து, எழுதி கலந்து கொள்வதாக கூறியதால் உங்களை சேர்கவில்லை. 

29 minutes ago, குமாரசாமி said:

எல்லாம் சரி   உதாரப்பா ஐநா?

😂 அது நம்ம நைனா, நுணா. ஓட்டோகரெக்ட், ஐநா ஆக்கிவிட்டது.

15 minutes ago, விசுகு said:

நானும் வாறன்  ராசா

ஆனால்  எனது  விருப்பங்கள்  தான்  முன்னிற்குமே தவிர  நிஐம்??

நீங்கள் இல்லாமலா.

இப்படியான போட்டிகளில் இதற்கு ஒரு உத்தியை கடைப்பிடிபேன். 

நிஜத்தின் அடிப்படையில் தெரிவுகளை இடுவேன்.

என் தெரிவுப் படிநடந்தால் - என் கணிப்பு வென்றது எனும் சந்தோசம்.

என் விருப்பபடி நடந்தால் - நான் விரும்பியது நடந்தது என்ற சந்தோசம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

நீங்கள் இல்லாமலா.

இப்படியான போட்டிகளில் இதற்கு ஒரு உத்தியை கடைப்பிடிபேன். 

நிஜத்தின் அடிப்படையில் தெரிவுகளை இடுவேன்.

என் தெரிவுப் படிநடந்தால் - என் கணிப்பு வென்றது எனும் சந்தோசம்.

என் விருப்பபடி நடந்தால் - நான் விரும்பியது நடந்தது என்ற சந்தோசம்.

 

இலங்கையில்

தமிழரின்  விருப்பங்கள்  நிறைவேற   வாய்ப்பே  இல்லை  ராசா

பௌத்த  விகாரைகளை யார்  அதிகம்   அமைப்பார்கள்  என்ற  போட்டி  தொடங்கியுள்ளநிலையில்

அதற்கான  வாக்குறுதிகள்  வெளிவரத்தொடங்கியுள்ளநிலையில்

சிங்கள   பௌத்தர்களின் விருப்பங்கள்  மட்டுமே நிஐமாகும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, விசுகு said:

இலங்கையில்

தமிழரின்  விருப்பங்கள்  நிறைவேற   வாய்ப்பே  இல்லை  ராசா

பௌத்த  விகாரைகளை யார்  அதிகம்   அமைப்பார்கள்  என்ற  போட்டி  தொடங்கியுள்ளநிலையில்

அதற்கான  வாக்குறுதிகள்  வெளிவரத்தொடங்கியுள்ளநிலையில்

சிங்கள   பௌத்தர்களின் விருப்பங்கள்  மட்டுமே நிஐமாகும்

அதுதான் 48 இல் இருந்து நடக்குதே அண்ணை. எந்த தேர்தலிலும் இதற்கு முடிவுவராது 😳

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

வேட்பாளர் கட்டுப்பணம் செலுத்தும் இறுதிநாளின் பின், இங்கே இறுதி வேட்பாளர் பட்டியலை இணைக்கிறேன்.

அது மட்டும் முக்கியமல்ல.யார் யாரோடு கூட்டணி வைக்குது என்பதும் முக்கியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ஈழப்பிரியன் said:

அது மட்டும் முக்கியமல்ல.யார் யாரோடு கூட்டணி வைக்குது என்பதும் முக்கியம்.

உண்மைதான். கள நிலவரங்கள் பற்றி டெய்லி அப்டேட் ஒன்று போடுகிறேன்.

Link to comment
Share on other sites

16 hours ago, goshan_che said:

நீங்கள் அரசியலை கணிப்பதில் ஒரு அசகாய சூரரா?  இல்லை😀


டிரம்பின் வெற்றி, பிரெக்சிட் இப்படி எதிர்பார்ப்புக்கு மாறாக வந்த முடிவுகள் பலதை அசால்டாக முன்பே கணித்தவரா?  இல்லை😀

----------------------------------------------------------------------------------------------------------------------------------
1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).   ஆம்.


2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்). சஜீத் பிரேமதாச


3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

கோத்தபாய ராஜபக்ச


4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச


5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச


6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).

இல்லை  


 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச
எல்லோருக்கும் வாழ்துக்கள் 💐💐💐.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, tulpen said:

 

முதல் ஆளாக களத்தில் கெத்தாக குதித்துள்ள துல்பெனுக்கு நன்றியும் வாழ்துக்களும்.

உங்களை போலவே நானும் பிரெக்சிட், டிரம்ப் இரெண்டிலும் தோற்கும் குதிரையை தெரிவு செய்தேன் 😂.

இந்த முறை பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

தேர்தலுக்கு 45 நாட்களுக்கு முன்னரே இந்த பதில்களை எழுதுகின்றேன். கடைசி வாரத்தில் என் பதில்கள் சிலவற்றை மாற்ற வேண்டி வரும். இன்னொரு தடவையும் பதில் கொடுக்க முடியுமா?


1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).

இம்முறை முன்முனைப் போட்டி அல்லது நால்முனைப் போட்டி (சுதந்திரக் கட்சியும் தேர்தலில் வேட்பாளர் நிறுத்தினால் ) என்பதால் எவரும் 50 வீதத்தினை பெற முடியாது. ஜேவிபிக்கு கிடைக்கும் வாக்குகள் எல்லாவற்றையும் குழப்பிவிடும்


2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).

கோத்தா


3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

கண்டிப்பாக கோத்தா (அதென்ன முதலாம் சுற்று எனும் கேள்வி? 50 வீதம் கிடைக்காமையால் இரண்டாம் விருப்பு வாக்கு அடிப்படையில் தெரிவு என்பதை கருத்தில் கொண்டா கேட்கின்றீர்கள்?)


4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித்


5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித்


6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

50 வீதம் கிடைக்கமையல் உச்ச நீதிமன்றத்தினை நாடுவார்களா எனத் தெரியாது. ஆனால் இரண்டாம் விருப்பு பெற்றவர் என்பதை தேர்தல் ஆணையம் / தேர்தல் கமிஷன் தீர்மானிக்கலாம்

கேள்விக்கு பதில்: வாய்ப்புகள் இல்லை

 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

இன்றிருக்கும் நிலையில் கோத்தா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா இறங்குவாரா இல்லையா என்பதே உறுதியாகத் தெரியவில்லை..அதற்குள் கோத்தாவை கோர்த்து விட்டால் கோவிந்தாதான்.....!   🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:
6 hours ago, goshan_che said:

விருப்ப குறிகளை இட்டுச் சென்றுள்ள நிழலி, துல்பன், நந்தன், ஐநா ஆகியோரும் இன்னும் பலரும் பங்குகொண்டு போட்டியை கலகலப்பாக வேண்டுகிறேன்.

அதென்ன நிழலி, துல்பன், நந்தன் .....நானும் உங்களுக்கு குத்தினானான் முடியல்ல , ஆனாலும் குத்தாமல் விடமாட்டன், பொறுத்திருங்கோ...

நானும் தான் குத்தியிருந்தேன்.

 

16 minutes ago, நிழலி said:

தேர்தலுக்கு 45 நாட்களுக்கு முன்னரே இந்த பதில்களை எழுதுகின்றேன். கடைசி வாரத்தில் என் பதில்கள் சிலவற்றை மாற்ற வேண்டி வரும். இன்னொரு தடவையும் பதில் கொடுக்க முடியுமா?

எப்படி மாற்றுவீர்கள் என்பதை காதுக்குள் சொல்லவும்.
ராணுவ ரகசியமாக பாதுகாப்பேன்.
ஒருவேளை மட்டு என்ற துணிவோ?

Link to comment
Share on other sites

9 minutes ago, ஈழப்பிரியன் said:

எப்படி மாற்றுவீர்கள் என்பதை காதுக்குள் சொல்லவும்.
ராணுவ ரகசியமாக பாதுகாப்பேன்.
ஒருவேளை மட்டு என்ற துணிவோ?

எடிட் செய்வன் என்று கூறவில்லை. இன்னொரு பதிலை தரமுடியுமா என்று குறிப்பிட்டு கேட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, நிழலி said:

தேர்தலுக்கு 45 நாட்களுக்கு முன்னரே இந்த பதில்களை எழுதுகின்றேன். கடைசி வாரத்தில் என் பதில்கள் சிலவற்றை மாற்ற வேண்டி வரும். இன்னொரு தடவையும் பதில் கொடுக்க முடியுமா?


1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).

இம்முறை முன்முனைப் போட்டி அல்லது நால்முனைப் போட்டி (சுதந்திரக் கட்சியும் தேர்தலில் வேட்பாளர் நிறுத்தினால் ) என்பதால் எவரும் 50 வீதத்தினை பெற முடியாது. ஜேவிபிக்கு கிடைக்கும் வாக்குகள் எல்லாவற்றையும் குழப்பிவிடும்


2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).

கோத்தா


3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

கண்டிப்பாக கோத்தா (அதென்ன முதலாம் சுற்று எனும் கேள்வி? 50 வீதம் கிடைக்காமையால் இரண்டாம் விருப்பு வாக்கு அடிப்படையில் தெரிவு என்பதை கருத்தில் கொண்டா கேட்கின்றீர்கள்?)


4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித்


5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித்


6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

50 வீதம் கிடைக்கமையல் உச்ச நீதிமன்றத்தினை நாடுவார்களா எனத் தெரியாது. ஆனால் இரண்டாம் விருப்பு பெற்றவர் என்பதை தேர்தல் ஆணையம் / தேர்தல் கமிஷன் தீர்மானிக்கலாம்

கேள்விக்கு பதில்: வாய்ப்புகள் இல்லை

 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

இன்றிருக்கும் நிலையில் கோத்தா

 

பங்கெடுத்தமைக்கு நன்றி நிழலி,

1. இதுவரை இதை பற்றி நான் சிந்திக்கவில்லை. ஆனால் போட்டியின் சுவாரசியம் கருதி, பின்வரும் விதியை அமைக்கிறேன். ஒரு தடவை பதில் அளித்த போட்டியாளர்,  கட் அவுட் நேரத்துக்கு முன்னதாக, மேலும் ஒரு பதிவின் மூலம் விடைகளை திருத்தி சமர்பிக்கலாம். கட் அவுட் நேரம் கடைசியாக  பதிந்த பதிவில் உள்ள பதில்களே கணக்கில் எடுக்கப்படும். ஒரு போட்டியாளர் இரு தடவைக்கு மேல் பதிலளிக்க முடியாது.

2. ஆம், அம்பாந்தோட்டை ராஜபக்சக்களின் கோட்டை, ஆனால் சஜித் 90 களில் இருந்தே அங்கு அரசியல் செய்கிறார். எனவே, மற்றைய இடங்களை விட, இங்கே சஜித்துக்கு 1ம் வாக்கு போடுபவர்கள், கோட்ட வுக்கு 2ம் வாக்கையும், கோட்டாவுக்கு 1ம் வாக்கை போட்டு, சஜித்துக்கு 2ம் வாக்கை போட வாய்ப்புகள் கூட. எனவே அம்பாந்தோட்டை மக்களின் 1ம் தெரிவு யார் என்பதை அறியவே கேள்வி அப்படி அமைக்கப்பட்டது. அம்பாந்தோட்டையில் கோட்ட தான் என அடித்து சொல்லும் அளவுக்கு இருக்குமா? தெரியவில்லை.

 

27 minutes ago, suvy said:

கோத்தா இறங்குவாரா இல்லையா என்பதே உறுதியாகத் தெரியவில்லை..அதற்குள் கோத்தாவை கோர்த்து விட்டால் கோவிந்தாதான்.....!   🤔

கோட்ட தான் தாமரையின் வேட்பாளர் என மகிந்த அறிவித்துவிட்டார். ஆனால் இரட்டை குடியுரிமையுடன் இருந்து முன்னைய தேர்தல்களில் வாக்களித்தார் என்ற வழக்கில் கோத்தா சிக்கினால் - மாற்று வேட்பாளரை தேர்தலுக்கு முன் மகிந்த போடும் படியோ, அல்லது தேர்தலின் பின், கோட்ட வென்றால், கோட்டாவின் அபேட்சகம் செல்லாது என்று உச்ச நீதி மன்றை நாடும் நிலையோ ஏற்படலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஈழப்பிரியன் said:

நானும் தான் குத்தியிருந்தேன்.

 

எப்படி மாற்றுவீர்கள் என்பதை காதுக்குள் சொல்லவும்.
ராணுவ ரகசியமாக பாதுகாப்பேன்.
ஒருவேளை மட்டு என்ற துணிவோ?

மன்னிக்க வேண்டும் ஈழப்பிரியன் அண்ணா,

விருப்ப குறியிட்டு விட்டு, போட்டியில் பங்களிக்கிறேன் என சொல்லாதவர்களைத்தான் அந்த பதிவில் குறிப்பிட்டேன். நீங்களும் சுவி அண்ணாவும் பதில் எழுதியதால்- போட்டியில் கலந்து கொள்வீர்கள் என assume பண்ணிவிட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

நன்றி சிறி அண்ணா,

அரசியலில் 1 கிழமையே ஒரு நீண்ட காலம் என்பார்கள். 6 கிழமைக்குள் என்னவும் நடக்கலாம். எனவே அவர்களின் வியூகங்களை பார்த்து, சரியான தருணத்தில், சரியான வியூகத்தோடு களமிறங்குங்கள்.

Ähnliches Foto

உண்மைதான்... கோசான்,
மகிந்த... ஜனாதிபதியாக  இருந்த போது,   அவருக்கு ஆதரவாக நடித்த  மைத்திரி... 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா.. அழைப்பின் பேரில்,  
அவர்  வீட்டிற்கு, தோசை சாப்பிடப் போய்...
மைத்திரி.... ஜனாதிபதியாக வந்த, விடயங்களையும்....  நாம், மறக்கவில்லை.

(அப்போ...தாயார்  ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா, சகோதரர் அனுரா ஆகியோர்...  
உயிருடன் இருந்திருக்கிறார்கள் என நினைக்கின்றேன்.  உறுதியாக தெரியவில்லை)

அந்த நேரம்... மகிந்தவுக்கு, மைத்திரி... கொடுத்த அதிர்ச்சியை போல்...
இன்னும்... நடக்க சந்தர்ப்பம் இருக்கு. 

தமிழன்... கண்டு பிடித்த தோசையில், எதிர்பாராத மாற்றங்கள் எல்லாம் நடந்திருக்கு.  :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.