Jump to content

வெல்லப் போவது யாரு? இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

என்னது தாடி பாதி வெள்ளையா? எங்கை படத்தை போடுங்கோ பாப்பம்? :cool:

என்னை நீயறிவாய், உன்னை அன்றியாரறிவார் 😂

Link to comment
Share on other sites

  • Replies 204
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலவரம்

1. இதுவரை 9 சுயேட்சைகளும், 4 கட்சி வேட்பாளர்களும் கட்டுப்பணம் கட்டியுள்ளனர். இன்று ஜேவிபியின் அனுர குமார திஸ்சாநாயக்கவும் கட்டுப்பணம் கட்டினார்.

2. சகல தகமைகளையும் சரிபார்த்த பின்னே கோட்டாவை வேட்பாளராக்கினோம் என கொழும்பில் ஒரு கூட்டத்தில் கூறினார் மகிந்த. 

3. சுக கோட்டாவை ஆதரிக்குமா? இன்று சுகவின் நிபந்தனைகள் SLPPக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் சுகவின் அழகியவண்ண. சுகவுடன் கூட்டணி அமைக்க தேவைபடும் நடவடிக்கைகள் சகலதையும் எடுப்போம் என்கிறார் பசில்.

4. மைத்திரி சஜித் இடையே இன்று ஒரு சந்திப்புக்கு ஏற்பாடாகியுள்ளதாய் சொல்கிறது ஒரு கொழும்பு இணைய ஊடகம்.

4. கோட்டாவின் குடியுரிமை வழக்கால், ராஜபக்சேக்கள் தடுமாறுவதாயும், கோட்டா வெளிநாடு போகத் தலைப்படுவதாயும், சாமல் அடுத்த தெரிவாக அமையலாம் என்கிறது இன்னொரு இணைய ஊடகம். கோட்டாவின் இரட்டை குடியுரிமை வழங்கிய கோப்பு காணாமல் போயுள்ளதுடன், அவரின் இரட்டை குடியுரிமை இலக்கமான 15305 இன்னொருவரின் பெயரில் பதிவாகி உள்ளதாயும் சொல்கிறது இந்த இணையம். இதே வேளை சிங்கப்பூரில் சிகிச்சை என்பதாக கூறி முடக்கப்பட்ட கடவுசீட்டை தரும்படி நீதிமன்றில் கோட்டா தரப்பு கேட்டுள்ளதாம். கோட்டாவின் இலங்கை குடியுரிமை செல்லாது என அறிவிக்கும் பட்சத்தில், அமெரிக்க குடியுரிமையையும் துறந்து விட்ட கோட்டா, நாடற்றவர் ஆகும் வாய்ப்புளது (stateless). இதனால் விசயம் இறுக முன்னர் நாட்டை விட்டு வெளியேற முயல்கிறாரா கோட்டா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/28/2019 at 6:00 PM, goshan_che said:

நன்றியும் வாழ்துக்களும் மீரா.

மிஸ்டர் 10% பசில் அல்லவா?

கோட்ட மிஸ்டர் வைட் வான்?

Mr.10% கோதாவிற்குள் வரலாம் என பட்சி ஒன்று சொல்லிச்சு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

Mr.10% கோதாவிற்குள் வரலாம் என பட்சி ஒன்று சொல்லிச்சு...

ம்ம்ம்...ஜூட்டும் முதலில் சாமல் என்ற போது எனக்கு பிடிபடவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலவரம்

1. கோட்டாவின் குடியுரிமை வழக்கு ஆரம்பமாகி நடக்கிறது. வாதிகள் கோட்டாவின் இரட்டை குடியுரிமை மந்திரி சபை இல்லாத நேரத்தில், ஒரு மந்திரி கைஒப்பம் இன்றி நடந்துளது ஆகவே, இது செல்லாது என வாதிட்டனர். அரச தரப்பு சட்டவாளர் நாயகம் - மந்திரி ஒப்பம் இல்லாவிடினும் ஜனாதிபதி ஒப்பம் இடலாம் என வாதிட்டனர். வழக்கு நாளையும் தொடர்கிறது.

2. முன்னாள் கட்டாருக்கான தூதர் லியனகேயும் போட்டியில் குதிக்கிறார். இதுவரை மொத்தம் 20 பேர் கட்டுபணம் செலுத்தியுள்ளனர். விபரம் கீழே.

3. சஜித்-மைதிரி இடையான பேச்சுகள் வெறும் நிகழ்கால அரசியல் பற்றி மட்டுமேயாம். சொல்கிறனர் சஜித்தும், சுகவின் செயளாலர் தயாசிறி ஜெயசேகரவும்.

4. பசில்-மைதிரி இடையே விரைவில் மீண்டும் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடாகியுள்ளதாம்.

5. நீண்டநாள் இடதுசாரி அத்தாஉட செனவிரட்ன, முன்னாள் யுஎன்பி பிரதி அமைச்சர் எக்கநாயாக்க ஆகியோர் சஜித்தை ஆதரிக்கிறனர். முன்னாள் அமைச்சர் நாவின்ன, முன்னாள் யுஎன்பி செயளாலர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் ஏலவே சஜித்தை ஆதரிக்கின்றமை தெரிந்ததே.

6. ஒரே மேடையில் விவாதம். சஜித், அனுர தயார். கோட்ட தயாரில்லை.

இதுவரை கட்டுப்பணம் செலுத்தியோர்

  1. Ketagoda Gamage Jayantha Perera (Independent)
  2. Siripala Amarasinghe (Independent)
  3. Ajantha Wijesinghe (Socialist Party of Sri Lanka)
  4. Aparekke Punnananda Thera (Independent)
  5. Welisarage Saman Prasanna Perera (Our Power of People Party)
  6. Nandasena Gotabaya Rajapaksa (Sri Lanka Podujana Peramuna)
  7. Ariyawansa Dissanayake (Democratic United National Front)
  8. Sirithunga Jayasuriya (United Socialist Party)
  9. Warnakulasuriya Milroy Sergius Fernando (Independent)
  10. Bedde Gamage Nandimithra (Nawa Sama Samaja Party)
  11. Nambunama Nanayakkara Akmeemana Palliyaguruge Vajirapani Wijesiriwardene (Socialist Equality Party)
  12. Sarath Manamendra (Nawa Sihala Urumaya)
  13. Pallewatta Gamaralalage Rohan Pallewatte (Jathika Sangwardhena Peramuna)
  14. Anura Kumara Dissanayake (National People’s Movement)
  15. Chandrasekara Herath Hitihamy Koralalage Samansiri Herath (Independent)
  16. Sarath Vijithakumara Keerthiratne (Independent)
  17. Polgampala Ralalage Chaminda Anuruddha (Independent)
  18. Samaraweera Weeravanni (Independent)
  19. Ashoka Wadigamangawa (Independent)
  20. A.S.P. Liyanage (Sri Lanka Labour Party)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  Ähnliches Foto  Bildergebnis für சுமந்திரன்

இன்றைய நிலவரத்தை... ரசித்து,  வாசித்தேன்... கோசான். :grin:

அந்த... 20 பேரில், சுமந்திரன்  அண்ணையும், 
கட்டுப் பணத்தை செலுத்தியிருப்பாரோ....பார்த்தேன்.... காணவில்லை.  😎

சிங்களவர்களுக்கு என்றே... வாழும்,
சுமந்திரன் போட்டியிட்டால்...  100 % வீத வெற்றி, சுமந்திரனுக்கே.  🤬

இதன் மூலம், தமிழர் ஒருவர்...  அதுவும்  நம்ம, சுமந்திரன்....
ஸ்ரீலங்காவில், முதன் முதலாக ஜனாதிபதியாக கூடிய வாய்ப்பு, பிரகாசமாக  உள்ளது.  🤩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

  Ähnliches Foto  Bildergebnis für சுமந்திரன்

இன்றைய நிலவரத்தை... ரசித்து,  வாசித்தேன்... கோசான். :grin:

அந்த... 20 பேரில், சுமந்திரன்  அண்ணையும், 
கட்டுப் பணத்தை செலுத்தியிருப்பாரோ....பார்த்தேன்.... காணவில்லை.  😎

சிங்களவர்களுக்கு என்றே... வாழும்,
சுமந்திரன் போட்டியிட்டால்...  100 % வீத வெற்றி, சுமந்திரனுக்கே.  🤬

இதன் மூலம், தமிழர் ஒருவர்...  அதுவும்  நம்ம, சுமந்திரன்....
ஸ்ரீலங்காவில், முதன் முதலாக ஜனாதிபதியாக கூடிய வாய்ப்பு, பிரகாசமாக  உள்ளது.  🤩

அதுக்கு பேர அப்புஹாமிகே சுமந்திர எண்டு மாற்றவேண்டும் அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலவரம்

1. இன்று முடியும் என எதிர்பார்க்கப்பட்ட கோட்ட வழக்கு முடியவில்லை. நாளையும் தொடர்கிறது. ஜனாதிபதி இரெட்டை குடியுரிமை பத்திரத்தில் கையெழுத்து போடுவது ஏற்புடையதா என்பதை ஒட்டியே வாத, பிரதிவாதங்கள் நடக்கிறன.  

2. சிங்கப்பூர் செல்ல கோட்டவின் கடவுச்சீட்டை மீளளித்தது நீதிமன்றம்.

3. தீர்ப்பு எப்படியும் அமையலாம் என்பதால், நாடு முழுவதும் பொலீசார் உசார் நிலையில்.

4. சுக-பொதுபெரமுன கூட்டு தொடர்ந்தும் இழுபறியில். அமரவீர கூட்டு அமைந்தமாதிரித்தான் என்கிறார். அப்படி  கூட்டு அமைந்தால், சுகவினை காக்க சுயேட்சையாக தானே களம் இறங்குவேன் என்கிறார் வெல்கம( ஒரு காலத்தில் மகிந்தவின் விசுவாசி).

தற்போது கோட்ட-சுக தலைவர்கள் இடையே மந்திராலோசனை தொடர்கிறது.

5.யுஎன்பி மாநாட்டில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் சஜித். இதன் ரூபவாகினி நேரடி ஒளிபரப்பை இடையில் நிறுத்தியது தேர்தல்கள் ஆணையம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலவரம்

1. குடியுரிமை வழக்கில் கோட்ட வெற்றி. அவசரப்பட்டு சாமல் கட்டிய காசு வீண். இங்கேயும் போட்டியாளர்கள் சிலர் பதிலை மாற்றவேண்டியுள்ளது.

2. சஜித்சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

3. ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு செல்லுபடியாகாது என அறிவிக்குமாறு உச்சநீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலவரம்

1. இதுவரை 31 நபர்கள் கட்டுப்பணம் கட்டியுள்ளனர். இதில் முன்னாள் ஈரோஸ், பின்னாள் முகா பிரமுகரும் நம் பொயட் எனும் கவிஞர் ஜெயபாலனின் சகாவுமாகிய பசீர் சேகுதாவூதும் ஒருவர். கிழக்கு முஸ்லிம் வாக்குகளை பிரித்து, கோட்டவுக்கு உதவி செய்கிறாரா பசீர் காக்கா? கூடவே ஹிஸ்புலாவும், அசாத்சாலியும் இறங்குவதாக அறிவித்துளனர். முஸ்லீம்கள் இந்த வலையில் வீழ்வார்களா (கிழக்கில் யார் வெல்லுவார் எனும் கேள்வி இப்போ அவ்வளவு சுலபமில்லை).

2. நாளை நண்பகல் 12 மணியுடன் கட்டுப்பணம் செலுத்துவது முடிவுக்கு வருகிறது.

3.சுக - யாருக்கு ஆதரவு? இன்னமும் தெளிவில்லை. கோட்ட ஆதரவு திலான் பெரேரா, எஸ் பி திசாநாயக்க, யாப்பாவிற்கு கட்சி ஒழுக்க மீறலுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுளது.

4. புதிய வேலைவாய்புகளை வழங்காது மனோ கணேசனை தடுத்தது தேர்தல்கள் ஆணையம்.

Link to comment
Share on other sites

Quote

சுக - யாருக்கு ஆதரவு? இன்னமும் தெளிவில்லை. 

கோத்தாவுடன் இணைய(ஆதரவு) இருப்பதாகவும் இரு கட்சிகளின் சின்னத்தை தவிர்த்து கதிரை சின்னத்தில் போட்டியிட இருப்பதாகவும் ஒரு வானொலி செய்தி கூறுகிறது.(ஆதரவு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/5/2019 at 10:04 PM, nunavilan said:

கோத்தாவுடன் இணைய(ஆதரவு) இருப்பதாகவும் இரு கட்சிகளின் சின்னத்தை தவிர்த்து கதிரை சின்னத்தில் போட்டியிட இருப்பதாகவும் ஒரு வானொலி செய்தி கூறுகிறது.(ஆதரவு)

நன்றி நுணா.

இன்றைய நிலவரம்

1. சுக வின் நிலைப்பாடு பற்றி ஒன்றுக்கொன்று முரண்பட்ட தகவல்களே வருகிறன. சுக மத்திய குழு கூட்டம் முடிந்து விட்டது. ஜனாதிபதிக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை மத்திய குழு கொடுத்ததாக தெரிகிறது. நாளை உத்யோக பூர்வ அறிவிப்பை ஜனாதிபதியோ, ஊடக பேச்சாளரோ அறிவிக்க கூடுமாம்.

2. ரத்ன தேரோ கோட்டவுக்கு ஆதரவு.

3. சிவாஜிலிங்கம் தேர்தலில் குதித்தார். 

4. கட்டுப்பணம் கட்ட கெடு முடிந்தது. 41 குதிரைகள் பந்தயத்தில். 

5. நாளை வேட்புமனுத்தாக்கல் தினம். அப்போதும் கோட்டவின் குடியுரிமை பற்றிய ஆட்சேபம் தேர்தல்கள் திணைகளத்திடம் சமர்பிக்கப்படலாமாம்.

 

Link to comment
Share on other sites

தேசிய காங்கிரஸ் கோத்தாவுக்கு ஆதரவளிக்கும் என அதன் தலைவர் அதாவுல்லா கூறியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா அதிபர் தேர்தலில் நின்றாள், கொத்தவே அதிபராக வருவதற்கு அதிக வாய்ப்புகள்.

சிங்களவர்களில் கோத்தாவை விரும்பாதவர்கள், ராஜபக்சே ஆட்சியில் முன்பு பாதிக்கப்பட்டவர்களும், அத்தகைய ஆட்சியை விரும்பத்தவர்களும். இவர்கலில் பெரும்பாலானோர் மேல்தட்டு, முதலித்துய்வ வர்க்கத்தினர், மிக குறைந்த வீதம் சிங்கள சனத் தொகையில்.

வெகு சிறிய அளவு சிங்களவர்களை விட, ஈழத்து தமிழர்கள் இலங்கைத் தீவின் பூர்விக குடிகள் அல்ல என்பதிலும், உரிமைகள் இருக்கக்கூடாது என்பதிலும் சிங்களவர்கள் உறுதியாக உள்ளார்கள்.   

இன்னமும் நான் அறிவது, பிஜேபி புதிய (சிங்கள) அதிபர் வரவை எதிர்பார்த்திருப்பதாக, பிஜேபி இன் சிந்தனையான இலங்கை தீவு இந்துவாக இருந்தது, அதில் இப்பொது பெரும் பகுதியினர் பௌத்தர்களாக மாறி உள்ளனர், எனவே இந்து பெரும்பான்மை பிரதேசமும் (state, and not State), பௌத்த பெரும்பான்மை பிரதேசமும் இருக்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக.

பார்ப்போம்.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/6/2019 at 11:03 PM, Lara said:

தேசிய காங்கிரஸ் கோத்தாவுக்கு ஆதரவளிக்கும் என அதன் தலைவர் அதாவுல்லா கூறியுள்ளார்.

நன்றி லாரா.

 

On 10/7/2019 at 11:24 AM, Kadancha said:

கோத்தா அதிபர் தேர்தலில் நின்றாள், கொத்தவே அதிபராக வருவதற்கு அதிக வாய்ப்புகள்.

சிங்களவர்களில் கோத்தாவை விரும்பாதவர்கள், ராஜபக்சே ஆட்சியில் முன்பு பாதிக்கப்பட்டவர்களும், அத்தகைய ஆட்சியை விரும்பத்தவர்களும். இவர்கலில் பெரும்பாலானோர் மேல்தட்டு, முதலித்துய்வ வர்க்கத்தினர், மிக குறைந்த வீதம் சிங்கள சனத் தொகையில்.

வெகு சிறிய அளவு சிங்களவர்களை விட, ஈழத்து தமிழர்கள் இலங்கைத் தீவின் பூர்விக குடிகள் அல்ல என்பதிலும், உரிமைகள் இருக்கக்கூடாது என்பதிலும் சிங்களவர்கள் உறுதியாக உள்ளார்கள்.   

இன்னமும் நான் அறிவது, பிஜேபி புதிய (சிங்கள) அதிபர் வரவை எதிர்பார்த்திருப்பதாக, பிஜேபி இன் சிந்தனையான இலங்கை தீவு இந்துவாக இருந்தது, அதில் இப்பொது பெரும் பகுதியினர் பௌத்தர்களாக மாறி உள்ளனர், எனவே இந்து பெரும்பான்மை பிரதேசமும் (state, and not State), பௌத்த பெரும்பான்மை பிரதேசமும் இருக்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக.

பார்ப்போம்.    

ம்ம்ம்...என்னை பொறுத்தவரை இந்தியாவுக்கு இருவரும் ஒன்றுதான். வென்றபின் இருவரையும் ஈசியாக டீல் பண்ணலாம் என்றே நினைப்பார்கள். 

அப்படியே போட்டியில் கலந்து கொள்ளவும் மறந்து விடாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய நிலவரம்

கோஷான் யாழ்களம் வாசித்தபடியே நித்திரை ஆகி விட்டார் 😂

இன்றைய நிலவரம்

1. நேற்று 35 பேர் வேட்புமனுதாக்கல். இதுவே இறுதி வேட்பாளர் எண்ணிக்கை. வாக்குச்சீட்டு இரெண்டடிக்கு நீளுமாம். முன்பணம் கட்டி ஆனால் வேட்புமனு தாக்கல் செய்யாத 6 பேரின் பணமும் மீளளிக்கப்படுமாம்( சாமல் பணம் சேப்வ்). வேட்புமனு தாக்கல் செய்தால், 12.5% க்கு மேலே எடுத்தால் மட்டுமே பணம் மீளளிக்கப்படுமாம் (சிவாஜியின் பணம் அம்பேல்).

2. அனுர குமார திசநாயக்கவுக்கு திசைகாட்டி சின்னம்.

3.கபே அமைப்பு 7500 தேர்தல் கண்காணிபாளரை நியமிக்கிறது.

4. யாரை ஆதரிப்பது என்ற சு.க.வின் முடிவு நாளை தெரியுமாம்.( இதை இப்படியே நாளைக்கும் கொப்பி பேஸ்ட் பண்ணலாம் 😂). கோட்ட வைதான் ஆதரிப்போம், SLPPயை அல்ல என்கிறார் சு.க.வின் செயளலர் ஜெயசேகர.

5.இன்று அனுராதபுரத்தில் கோட்டாவின் முதல் தேர்தல் கூட்டம். மன்னன் கோட்ட அபயவின் தலைநகரமும் அனுராதபுரமே. நாளை காலிமுகத்திடலில் வரலாற்றில் இதுவரை இல்லாத கூட்டத்தை கூட்டுவோம் என்கிறது யுஎன்பி. 

6. அடுத்த வெள்ளி நடைபெறவுள்ள எல்பிட்டிய உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்தது.

 

Link to comment
Share on other sites

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சஜித்தை ஆதரிக்க தீர்மானித்துள்ளதாக நேற்று கூறியிருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna-Podujana-Peramuna-Stickers-2.jpg

Jaffna-Podujana-Peramuna-Stickers-4.jpg

தேர்தல் என்றால்... பிரச்சாரம், சுவரொட்டிகள்.... இருந்தால் தான்,  தமாசாக இருக்கும். :grin:
அந்த வகையில்... எனது கண்ணில் பட் ட சுவரொட்டி ஒன்றை இணைத்துள்ளேன்.
நீங்களும்... இவற்றை எங்காவது கண்டால், கிழித்து எறியாமல்...  இங்கு வந்து ஒட்டி விடுங்களேன்.🤩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிஜேபி நிலைப்பாடு என்று  சொல்லியவர்களுக்கு, பிஜேபி இன்  எந்த மட்டத்தில் விடயங்களை கொண்டு செல்ல முடியும் என்பது எனக்குத் தெரியாது.

அவர்கள்  பிஜேபி மூத்த தலைமைத்துவம் மற்றும் தலைவர்கள் என்றே சொன்னார்கள்.

ஆயினும், நான் அவர்களுக்கு சொல்லியது, பிஜேபி மற்றும் கிந்தியா  ஈழத்து தமிழர் பிரச்னையில் தீவிரமாகவும், நேர்மையானதாகவும் இருப்பின்

1) ஓர் காலக் கெடு சிங்களத்திற்கு  பகிரங்கமாக விதிக்க வேண்டும்.

2) அந்தக் காலக் கெடுவிற்குள், பிஜேபி சொல்லிய இந்து பெரும்பான்மை பிரதேசம், பௌத்த பெரும்பாண்மை பிரதேசம் என்பதை சிங்களம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை பகிரங்கமாக சிங்களத்துக்கு வலியுறுத்த வேண்டும்.

3) சிங்களம் செய்யாவிட்டால்,  சிங்களத்துக்கான விளைவுகளோ, மற்றும்  கிந்தியாவின் அடுத்த நடவடிக்கைளோ என்பது பகிரங்கமாக இருக்க வேண்டும்.

4) 13 மற்றும் 13 இற்கு மேல்  என்பது அடிப்படை எனில், பிஜேபி மற்றும் கிந்தியா தமிழரின் முதுகில் சவாரி செய்யவே என்பதால், வேறு, அழுத்தம் திருத்தமான, பகிரங்கமான அடிப்படையாக இருக்க வேண்டும்   


இவற்றை கிந்தியா மற்றும் பிஜேபி பகிரங்கமாக கையில் எடுக்காவிடில், கிந்தியவையோ அல்லது பிஜேபியையோ ஈழத்து தமிழர் ஒருவரும் கருத்தில், சிங்களம் கூட கருத்தில் எடுக்கமாட்டார்கள்.

ஈழத்து தமிழர் தம் முதுகில் கிந்தியாவை அல்லது வேறு எவரோ தம் முதுகில் சவாரி செய்ய விடமாட்டார்கள்.  


இப்படி சொல்லும்படி நான் அவர்களிடம் கூறியுளேன்.

அவர்களால் பிஜேபி மூத்த தலைமைத்துவம் மற்றும் தலைவர்கள் இடம் கொண்டு செல்லப்பட முடியுமா அல்லது முடியாதா என்பது எனக்குத் தெரியாது.

 

12 hours ago, goshan_che said:

அப்படியே போட்டியில் கலந்து கொள்ளவும் மறந்து விடாதீர்கள்.

????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kadancha said:

இந்த பிஜேபி நிலைப்பாடு என்று  சொல்லியவர்களுக்கு, பிஜேபி இன்  எந்த மட்டத்தில் விடயங்களை கொண்டு செல்ல முடியும் என்பது எனக்குத் தெரியாது.

அவர்கள்  பிஜேபி மூத்த தலைமைத்துவம் மற்றும் தலைவர்கள் என்றே சொன்னார்கள்.

ஆயினும், நான் அவர்களுக்கு சொல்லியது, பிஜேபி மற்றும் கிந்தியா  ஈழத்து தமிழர் பிரச்னையில் தீவிரமாகவும், நேர்மையானதாகவும் இருப்பின்

1) ஓர் காலக் கெடு சிங்களத்திற்கு  பகிரங்கமாக விதிக்க வேண்டும்.

2) அந்தக் காலக் கெடுவிற்குள், பிஜேபி சொல்லிய இந்து பெரும்பான்மை பிரதேசம், பௌத்த பெரும்பாண்மை பிரதேசம் என்பதை சிங்களம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை பகிரங்கமாக சிங்களத்துக்கு வலியுறுத்த வேண்டும்.

3) சிங்களம் செய்யாவிட்டால்,  சிங்களத்துக்கான விளைவுகளோ, மற்றும்  கிந்தியாவின் அடுத்த நடவடிக்கைளோ என்பது பகிரங்கமாக இருக்க வேண்டும்.

4) 13 மற்றும் 13 இற்கு மேல்  என்பது அடிப்படை எனில், பிஜேபி மற்றும் கிந்தியா தமிழரின் முதுகில் சவாரி செய்யவே என்பதால், வேறு, அழுத்தம் திருத்தமான, பகிரங்கமான அடிப்படையாக இருக்க வேண்டும்   


இவற்றை கிந்தியா மற்றும் பிஜேபி பகிரங்கமாக கையில் எடுக்காவிடில், கிந்தியவையோ அல்லது பிஜேபியையோ ஈழத்து தமிழர் ஒருவரும் கருத்தில், சிங்களம் கூட கருத்தில் எடுக்கமாட்டார்கள்.

ஈழத்து தமிழர் தம் முதுகில் கிந்தியாவை அல்லது வேறு எவரோ தம் முதுகில் சவாரி செய்ய விடமாட்டார்கள்.  


இப்படி சொல்லும்படி நான் அவர்களிடம் கூறியுளேன்.

அவர்களால் பிஜேபி மூத்த தலைமைத்துவம் மற்றும் தலைவர்கள் இடம் கொண்டு செல்லப்பட முடியுமா அல்லது முடியாதா என்பது எனக்குத் தெரியாது.

 

????

1. சரியாகத்தான் நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். பார்ப்போம். நல்லது நடந்தால் அதைவிட சந்தோசம் வேறில்லை.

2. இந்த திரியில் வரும் ஜனாதிபதித் தேர்தலை யார் வெல்லுவார் என்ற ஒரு போட்டியை நடத்துகிரேன். திரியின் 1 பக்கத்தில் விபரங்கள் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலவரம்

1. சு.க ஒருமாதிரியாக கோட்டவை ஆதரிப்பதாக முடிவு எடுத்துளது. மைத்திரி நடுநிலையாம். மைத்திரியுடன் சேர்ந்து 2015 இல் மகிந்தவை எதிர்த்தவரும், ராஜபக்சேக்கள் பழி தீர்பார்கள், யுஎன்பியில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்ட துமிந்த திசாநாயக்க, கோட்டாவின் மேடையில், அருகே அமர்ந்து வாக்கு சேகரித்தார்.

பொய்வழக்கில் உள்ள ஆயுதப்படையிரை விடுவிப்பதாயும், விவசாயகடனை தள்ளுபடி செய்வதாயும், இலவச உரம் தருவதாயும் கோட்ட உறுதி மொழிந்தார்.

2. முன்னாள் மகிந்த விசுவாசி, இன்நாள் விமர்சகர் வெல்கம யாருக்கும் ஆதரவு இல்லையாம்.

3.இப்போதே 46 தேர்தல் விதி மீறல் முறைப்பாடுகள் ஆணையத்திடம் சமர்பிப்பு.

4. கோட்ட சம்பந்தமாக இன்னொரு தடவை கோட்டுக்கு போவேன் என்கிறார், முதலில் வழக்கு போட்ட தேநுவர.

5. கோட்ட, பசில், மகிந்தவுடன் மிக விரைவில் சந்திப்பு என்கிறார் சுமந்திரன். சஜித்தோடும் பேசுகிறார்களாம். யாழ் களத்தில் கொடுக்க பட்ட அட்வைசை வாசித்தர்களோ என்னமோ😂

Link to comment
Share on other sites

நீங்கள் அரசியலை கணிப்பதில் ஒரு அசகாய சூரரா? 
இல்லை(சுத்த சூனியம்)

டிரம்பின் வெற்றிஇ பிரெக்சிட் இப்படி எதிர்பார்ப்புக்கு மாறாக வந்த முடிவுகள் பலதை அசால்டாக முன்பே கணித்தவரா?
இல்லை

1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50மூ வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).
இல்லை

2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).
கோட்டபாய ராஜபக்ச

3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

கோட்டபாய ராஜபக்ச

4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச

5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச

6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

இல்லை

 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச(ஜேவிபிக்கு வாக்கு அளிப்பவர்கள் இரண்டாம் தெரிவாக சஜித்தை தெரிவு
செய்ய வாய்ப்பு உள்ளது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, zuma said:

நீங்கள் அரசியலை கணிப்பதில் ஒரு அசகாய சூரரா? 
இல்லை(சுத்த சூனியம்)

டிரம்பின் வெற்றிஇ பிரெக்சிட் இப்படி எதிர்பார்ப்புக்கு மாறாக வந்த முடிவுகள் பலதை அசால்டாக முன்பே கணித்தவரா?
இல்லை

1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50மூ வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).
இல்லை

2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).
கோட்டபாய ராஜபக்ச

3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

கோட்டபாய ராஜபக்ச

4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச

5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச

6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

இல்லை

 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச(ஜேவிபிக்கு வாக்கு அளிப்பவர்கள் இரண்டாம் தெரிவாக சஜித்தை தெரிவு
செய்ய வாய்ப்பு உள்ளது)

நன்றி சூமா. ஜேவிபி வாக்காளர் பழைய கறலில் சஜித்தை புறக்கணிக்க கூடுமா?

தவிரவும் இடதுசாரிகளுக்கு யுஎன்பி என்றால் சிம்ம சொப்பனமாச்சே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலவரம்

1. காலிமுகத்திடலில் சஜித்தின் முதலாவது கூட்டத்தில் பெரும் திரளான மக்கள். 2 லட்சம் வரை இருக்குமாம். கோட்டாவின் அனுராதபுரக் கூட்டத்தில் 40 000 பேர்தானாம். கிளி மகேந்திரனின் மகராஜா தொலைக்காட்சி நிறுவனம் வெளிப்படையாக சஜித்துக்கு ஆதரவாக இறங்கி ஆடுகிறார்கள். ஹிரு கோட்டவுக்கு.

2. தேசியபாதுகாப்பு பொன்சேக்கா வசம் ஒப்படைக்க படும் என்கிறார் சஜித். நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்பி, வளர்ந்த நாடாக மாற்றுவேன். சம்பள உயர்வு அளிப்பேன். போதைவஸ்து கடத்துபவருக்கு கடும் தண்டனை அளிப்பேன் என்கிறார் சஜித்.

3. சிகிச்சைக்காக கோட்டா சிங்கப்பூர் பயணம்.

4. சு.க + பொது ஜன பெரமுன ஒப்பந்தம் கைச்சாத்து.

5. சஜித்தின் வெற்றியின் பின்பும் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடரும் என்கிறார் ரணில்.

6.எல்பிட்டிய உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி.

7. முழு வேட்பாளர் பட்டியல் கீழே.

  1. சஜித் பிரேமதாச – ஐக்கிய தேசியக் கட்சி
  2. கோத்தாபய ராஜபக்ச – சிறிலங்கா பொதுஜன பெரமுன
  3. அனுரகுமார திசநாயக்க – தேசிய மக்கள் சக்தி
  4. றொகான் பல்லேவத்த – ஜாதிக சங்வர்த்தன பெரமுன
  5. மில்றோய் பெர்னான்டோ – சுயேட்சை
  6. ஜெனரல் மகேஸ் சேனநாயக்க – தேசிய மக்கள் இயக்கம்
  7. சிறிபால அமரசிங்க – சுயேட்சை
  8. சரத் மனமேந்திர – நவ சிங்கள உறுமய
  9. சமரவீர வீரவன்னி – சுயேட்சை
  10. சமன் பிரசன்ன பெரேரா – எமது மக்கள் சக்தி கட்சி
  11. அனுருத்த பொல்கம்பொல – சுயேட்சை
  12. ஏஎஸ்பி லியனகே – சிறிலங்கா தொழிலாளர் கட்சி
  13. ஜயந்த கேதாகொட – சுயேட்சை
  14. துமிந்த நாகமுவ – முன்னிலை சோசலிசக் கட்சி
  15. அஜந்தா பெரெரா – சிறிலங்கா சோசலிச கட்சி
  16. சமன்சிறி ஹேரத் – சுயேட்சை
  17. அசோக வடிகமங்காவ – சுயேட்சை
  18. ஆரியவன்ச திசநாயக்க – ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி
  19. வஜிரபானி விஜேசிறிவர்த்தன – சோசலிச சமத்துவக் கட்சி
  20. பத்தேகமகே நந்திமித்ர – நவ சம சமாஜ கட்சி
  21. வண. அபரகே புண்ணானந்த தேரர் – சுயேட்சை
  22. பியசிறி விஜேநாயக்க – சுயேட்சை
  23. அனுர டி சொய்சா- ஜனநாயக தேசிய இயக்கம்
  24. ரஜீவ விஜேசிங்க – சுயேட்சை
  25. வண. பத்தரமுல்லே சீலாரத்ன தேரர் – ஜனசத பெரமுன
  26. இலியாஸ் இத்ரூஸ் முகமட்- சுயேட்சை
  27. அஜந்த டி சொய்சா – ருகுணு மக்கள் முன்னணி
  28. விஜித குமார கீர்த்திரத்ன – சுயேட்சை
  29. எம்.கே.சிவாஜிலிங்கம் – சுயேட்சை
  30. எம்எல்ஏஎம். ஹிஸ்புல்லா – சுயேட்சை
  31. பிரியந்த எதிரிசிங்க – ஒக்கம வசியோ ஒக்கம ரஜவரு சவிதானய
  32. நாமல் ராஜபக்ச – தேசியங்களின் ஒற்றுமை இயக்கம்
  33. அகமட் ஹசன் முகமட் அலவி – சுயேட்சை
  34. குணபால திஸ்ஸகுட்டியாராச்சி – சுயேட்சை
  35. சுப்ரமணியம் குணரத்தினம் – எமது தேசிய முன்னணி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிழை திருத்தம்

இந்த தேர்தலில் வெல்லும் வேட்பாளர் நவம்பர் 17 அன்றே பதவியேற்பார். ஜனவரி 2020 யில் அல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.