Jump to content

வெல்லப் போவது யாரு? இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

என்னது தாடி பாதி வெள்ளையா? எங்கை படத்தை போடுங்கோ பாப்பம்? :cool:

என்னை நீயறிவாய், உன்னை அன்றியாரறிவார் 😂

Link to comment
Share on other sites

  • Replies 204
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலவரம்

1. இதுவரை 9 சுயேட்சைகளும், 4 கட்சி வேட்பாளர்களும் கட்டுப்பணம் கட்டியுள்ளனர். இன்று ஜேவிபியின் அனுர குமார திஸ்சாநாயக்கவும் கட்டுப்பணம் கட்டினார்.

2. சகல தகமைகளையும் சரிபார்த்த பின்னே கோட்டாவை வேட்பாளராக்கினோம் என கொழும்பில் ஒரு கூட்டத்தில் கூறினார் மகிந்த. 

3. சுக கோட்டாவை ஆதரிக்குமா? இன்று சுகவின் நிபந்தனைகள் SLPPக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் சுகவின் அழகியவண்ண. சுகவுடன் கூட்டணி அமைக்க தேவைபடும் நடவடிக்கைகள் சகலதையும் எடுப்போம் என்கிறார் பசில்.

4. மைத்திரி சஜித் இடையே இன்று ஒரு சந்திப்புக்கு ஏற்பாடாகியுள்ளதாய் சொல்கிறது ஒரு கொழும்பு இணைய ஊடகம்.

4. கோட்டாவின் குடியுரிமை வழக்கால், ராஜபக்சேக்கள் தடுமாறுவதாயும், கோட்டா வெளிநாடு போகத் தலைப்படுவதாயும், சாமல் அடுத்த தெரிவாக அமையலாம் என்கிறது இன்னொரு இணைய ஊடகம். கோட்டாவின் இரட்டை குடியுரிமை வழங்கிய கோப்பு காணாமல் போயுள்ளதுடன், அவரின் இரட்டை குடியுரிமை இலக்கமான 15305 இன்னொருவரின் பெயரில் பதிவாகி உள்ளதாயும் சொல்கிறது இந்த இணையம். இதே வேளை சிங்கப்பூரில் சிகிச்சை என்பதாக கூறி முடக்கப்பட்ட கடவுசீட்டை தரும்படி நீதிமன்றில் கோட்டா தரப்பு கேட்டுள்ளதாம். கோட்டாவின் இலங்கை குடியுரிமை செல்லாது என அறிவிக்கும் பட்சத்தில், அமெரிக்க குடியுரிமையையும் துறந்து விட்ட கோட்டா, நாடற்றவர் ஆகும் வாய்ப்புளது (stateless). இதனால் விசயம் இறுக முன்னர் நாட்டை விட்டு வெளியேற முயல்கிறாரா கோட்டா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/28/2019 at 6:00 PM, goshan_che said:

நன்றியும் வாழ்துக்களும் மீரா.

மிஸ்டர் 10% பசில் அல்லவா?

கோட்ட மிஸ்டர் வைட் வான்?

Mr.10% கோதாவிற்குள் வரலாம் என பட்சி ஒன்று சொல்லிச்சு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

Mr.10% கோதாவிற்குள் வரலாம் என பட்சி ஒன்று சொல்லிச்சு...

ம்ம்ம்...ஜூட்டும் முதலில் சாமல் என்ற போது எனக்கு பிடிபடவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலவரம்

1. கோட்டாவின் குடியுரிமை வழக்கு ஆரம்பமாகி நடக்கிறது. வாதிகள் கோட்டாவின் இரட்டை குடியுரிமை மந்திரி சபை இல்லாத நேரத்தில், ஒரு மந்திரி கைஒப்பம் இன்றி நடந்துளது ஆகவே, இது செல்லாது என வாதிட்டனர். அரச தரப்பு சட்டவாளர் நாயகம் - மந்திரி ஒப்பம் இல்லாவிடினும் ஜனாதிபதி ஒப்பம் இடலாம் என வாதிட்டனர். வழக்கு நாளையும் தொடர்கிறது.

2. முன்னாள் கட்டாருக்கான தூதர் லியனகேயும் போட்டியில் குதிக்கிறார். இதுவரை மொத்தம் 20 பேர் கட்டுபணம் செலுத்தியுள்ளனர். விபரம் கீழே.

3. சஜித்-மைதிரி இடையான பேச்சுகள் வெறும் நிகழ்கால அரசியல் பற்றி மட்டுமேயாம். சொல்கிறனர் சஜித்தும், சுகவின் செயளாலர் தயாசிறி ஜெயசேகரவும்.

4. பசில்-மைதிரி இடையே விரைவில் மீண்டும் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடாகியுள்ளதாம்.

5. நீண்டநாள் இடதுசாரி அத்தாஉட செனவிரட்ன, முன்னாள் யுஎன்பி பிரதி அமைச்சர் எக்கநாயாக்க ஆகியோர் சஜித்தை ஆதரிக்கிறனர். முன்னாள் அமைச்சர் நாவின்ன, முன்னாள் யுஎன்பி செயளாலர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் ஏலவே சஜித்தை ஆதரிக்கின்றமை தெரிந்ததே.

6. ஒரே மேடையில் விவாதம். சஜித், அனுர தயார். கோட்ட தயாரில்லை.

இதுவரை கட்டுப்பணம் செலுத்தியோர்

  1. Ketagoda Gamage Jayantha Perera (Independent)
  2. Siripala Amarasinghe (Independent)
  3. Ajantha Wijesinghe (Socialist Party of Sri Lanka)
  4. Aparekke Punnananda Thera (Independent)
  5. Welisarage Saman Prasanna Perera (Our Power of People Party)
  6. Nandasena Gotabaya Rajapaksa (Sri Lanka Podujana Peramuna)
  7. Ariyawansa Dissanayake (Democratic United National Front)
  8. Sirithunga Jayasuriya (United Socialist Party)
  9. Warnakulasuriya Milroy Sergius Fernando (Independent)
  10. Bedde Gamage Nandimithra (Nawa Sama Samaja Party)
  11. Nambunama Nanayakkara Akmeemana Palliyaguruge Vajirapani Wijesiriwardene (Socialist Equality Party)
  12. Sarath Manamendra (Nawa Sihala Urumaya)
  13. Pallewatta Gamaralalage Rohan Pallewatte (Jathika Sangwardhena Peramuna)
  14. Anura Kumara Dissanayake (National People’s Movement)
  15. Chandrasekara Herath Hitihamy Koralalage Samansiri Herath (Independent)
  16. Sarath Vijithakumara Keerthiratne (Independent)
  17. Polgampala Ralalage Chaminda Anuruddha (Independent)
  18. Samaraweera Weeravanni (Independent)
  19. Ashoka Wadigamangawa (Independent)
  20. A.S.P. Liyanage (Sri Lanka Labour Party)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  Ähnliches Foto  Bildergebnis für சுமந்திரன்

இன்றைய நிலவரத்தை... ரசித்து,  வாசித்தேன்... கோசான். :grin:

அந்த... 20 பேரில், சுமந்திரன்  அண்ணையும், 
கட்டுப் பணத்தை செலுத்தியிருப்பாரோ....பார்த்தேன்.... காணவில்லை.  😎

சிங்களவர்களுக்கு என்றே... வாழும்,
சுமந்திரன் போட்டியிட்டால்...  100 % வீத வெற்றி, சுமந்திரனுக்கே.  🤬

இதன் மூலம், தமிழர் ஒருவர்...  அதுவும்  நம்ம, சுமந்திரன்....
ஸ்ரீலங்காவில், முதன் முதலாக ஜனாதிபதியாக கூடிய வாய்ப்பு, பிரகாசமாக  உள்ளது.  🤩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

  Ähnliches Foto  Bildergebnis für சுமந்திரன்

இன்றைய நிலவரத்தை... ரசித்து,  வாசித்தேன்... கோசான். :grin:

அந்த... 20 பேரில், சுமந்திரன்  அண்ணையும், 
கட்டுப் பணத்தை செலுத்தியிருப்பாரோ....பார்த்தேன்.... காணவில்லை.  😎

சிங்களவர்களுக்கு என்றே... வாழும்,
சுமந்திரன் போட்டியிட்டால்...  100 % வீத வெற்றி, சுமந்திரனுக்கே.  🤬

இதன் மூலம், தமிழர் ஒருவர்...  அதுவும்  நம்ம, சுமந்திரன்....
ஸ்ரீலங்காவில், முதன் முதலாக ஜனாதிபதியாக கூடிய வாய்ப்பு, பிரகாசமாக  உள்ளது.  🤩

அதுக்கு பேர அப்புஹாமிகே சுமந்திர எண்டு மாற்றவேண்டும் அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலவரம்

1. இன்று முடியும் என எதிர்பார்க்கப்பட்ட கோட்ட வழக்கு முடியவில்லை. நாளையும் தொடர்கிறது. ஜனாதிபதி இரெட்டை குடியுரிமை பத்திரத்தில் கையெழுத்து போடுவது ஏற்புடையதா என்பதை ஒட்டியே வாத, பிரதிவாதங்கள் நடக்கிறன.  

2. சிங்கப்பூர் செல்ல கோட்டவின் கடவுச்சீட்டை மீளளித்தது நீதிமன்றம்.

3. தீர்ப்பு எப்படியும் அமையலாம் என்பதால், நாடு முழுவதும் பொலீசார் உசார் நிலையில்.

4. சுக-பொதுபெரமுன கூட்டு தொடர்ந்தும் இழுபறியில். அமரவீர கூட்டு அமைந்தமாதிரித்தான் என்கிறார். அப்படி  கூட்டு அமைந்தால், சுகவினை காக்க சுயேட்சையாக தானே களம் இறங்குவேன் என்கிறார் வெல்கம( ஒரு காலத்தில் மகிந்தவின் விசுவாசி).

தற்போது கோட்ட-சுக தலைவர்கள் இடையே மந்திராலோசனை தொடர்கிறது.

5.யுஎன்பி மாநாட்டில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் சஜித். இதன் ரூபவாகினி நேரடி ஒளிபரப்பை இடையில் நிறுத்தியது தேர்தல்கள் ஆணையம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலவரம்

1. குடியுரிமை வழக்கில் கோட்ட வெற்றி. அவசரப்பட்டு சாமல் கட்டிய காசு வீண். இங்கேயும் போட்டியாளர்கள் சிலர் பதிலை மாற்றவேண்டியுள்ளது.

2. சஜித்சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

3. ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு செல்லுபடியாகாது என அறிவிக்குமாறு உச்சநீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலவரம்

1. இதுவரை 31 நபர்கள் கட்டுப்பணம் கட்டியுள்ளனர். இதில் முன்னாள் ஈரோஸ், பின்னாள் முகா பிரமுகரும் நம் பொயட் எனும் கவிஞர் ஜெயபாலனின் சகாவுமாகிய பசீர் சேகுதாவூதும் ஒருவர். கிழக்கு முஸ்லிம் வாக்குகளை பிரித்து, கோட்டவுக்கு உதவி செய்கிறாரா பசீர் காக்கா? கூடவே ஹிஸ்புலாவும், அசாத்சாலியும் இறங்குவதாக அறிவித்துளனர். முஸ்லீம்கள் இந்த வலையில் வீழ்வார்களா (கிழக்கில் யார் வெல்லுவார் எனும் கேள்வி இப்போ அவ்வளவு சுலபமில்லை).

2. நாளை நண்பகல் 12 மணியுடன் கட்டுப்பணம் செலுத்துவது முடிவுக்கு வருகிறது.

3.சுக - யாருக்கு ஆதரவு? இன்னமும் தெளிவில்லை. கோட்ட ஆதரவு திலான் பெரேரா, எஸ் பி திசாநாயக்க, யாப்பாவிற்கு கட்சி ஒழுக்க மீறலுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுளது.

4. புதிய வேலைவாய்புகளை வழங்காது மனோ கணேசனை தடுத்தது தேர்தல்கள் ஆணையம்.

Link to comment
Share on other sites

Quote

சுக - யாருக்கு ஆதரவு? இன்னமும் தெளிவில்லை. 

கோத்தாவுடன் இணைய(ஆதரவு) இருப்பதாகவும் இரு கட்சிகளின் சின்னத்தை தவிர்த்து கதிரை சின்னத்தில் போட்டியிட இருப்பதாகவும் ஒரு வானொலி செய்தி கூறுகிறது.(ஆதரவு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/5/2019 at 10:04 PM, nunavilan said:

கோத்தாவுடன் இணைய(ஆதரவு) இருப்பதாகவும் இரு கட்சிகளின் சின்னத்தை தவிர்த்து கதிரை சின்னத்தில் போட்டியிட இருப்பதாகவும் ஒரு வானொலி செய்தி கூறுகிறது.(ஆதரவு)

நன்றி நுணா.

இன்றைய நிலவரம்

1. சுக வின் நிலைப்பாடு பற்றி ஒன்றுக்கொன்று முரண்பட்ட தகவல்களே வருகிறன. சுக மத்திய குழு கூட்டம் முடிந்து விட்டது. ஜனாதிபதிக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை மத்திய குழு கொடுத்ததாக தெரிகிறது. நாளை உத்யோக பூர்வ அறிவிப்பை ஜனாதிபதியோ, ஊடக பேச்சாளரோ அறிவிக்க கூடுமாம்.

2. ரத்ன தேரோ கோட்டவுக்கு ஆதரவு.

3. சிவாஜிலிங்கம் தேர்தலில் குதித்தார். 

4. கட்டுப்பணம் கட்ட கெடு முடிந்தது. 41 குதிரைகள் பந்தயத்தில். 

5. நாளை வேட்புமனுத்தாக்கல் தினம். அப்போதும் கோட்டவின் குடியுரிமை பற்றிய ஆட்சேபம் தேர்தல்கள் திணைகளத்திடம் சமர்பிக்கப்படலாமாம்.

 

Link to comment
Share on other sites

தேசிய காங்கிரஸ் கோத்தாவுக்கு ஆதரவளிக்கும் என அதன் தலைவர் அதாவுல்லா கூறியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா அதிபர் தேர்தலில் நின்றாள், கொத்தவே அதிபராக வருவதற்கு அதிக வாய்ப்புகள்.

சிங்களவர்களில் கோத்தாவை விரும்பாதவர்கள், ராஜபக்சே ஆட்சியில் முன்பு பாதிக்கப்பட்டவர்களும், அத்தகைய ஆட்சியை விரும்பத்தவர்களும். இவர்கலில் பெரும்பாலானோர் மேல்தட்டு, முதலித்துய்வ வர்க்கத்தினர், மிக குறைந்த வீதம் சிங்கள சனத் தொகையில்.

வெகு சிறிய அளவு சிங்களவர்களை விட, ஈழத்து தமிழர்கள் இலங்கைத் தீவின் பூர்விக குடிகள் அல்ல என்பதிலும், உரிமைகள் இருக்கக்கூடாது என்பதிலும் சிங்களவர்கள் உறுதியாக உள்ளார்கள்.   

இன்னமும் நான் அறிவது, பிஜேபி புதிய (சிங்கள) அதிபர் வரவை எதிர்பார்த்திருப்பதாக, பிஜேபி இன் சிந்தனையான இலங்கை தீவு இந்துவாக இருந்தது, அதில் இப்பொது பெரும் பகுதியினர் பௌத்தர்களாக மாறி உள்ளனர், எனவே இந்து பெரும்பான்மை பிரதேசமும் (state, and not State), பௌத்த பெரும்பான்மை பிரதேசமும் இருக்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக.

பார்ப்போம்.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/6/2019 at 11:03 PM, Lara said:

தேசிய காங்கிரஸ் கோத்தாவுக்கு ஆதரவளிக்கும் என அதன் தலைவர் அதாவுல்லா கூறியுள்ளார்.

நன்றி லாரா.

 

On 10/7/2019 at 11:24 AM, Kadancha said:

கோத்தா அதிபர் தேர்தலில் நின்றாள், கொத்தவே அதிபராக வருவதற்கு அதிக வாய்ப்புகள்.

சிங்களவர்களில் கோத்தாவை விரும்பாதவர்கள், ராஜபக்சே ஆட்சியில் முன்பு பாதிக்கப்பட்டவர்களும், அத்தகைய ஆட்சியை விரும்பத்தவர்களும். இவர்கலில் பெரும்பாலானோர் மேல்தட்டு, முதலித்துய்வ வர்க்கத்தினர், மிக குறைந்த வீதம் சிங்கள சனத் தொகையில்.

வெகு சிறிய அளவு சிங்களவர்களை விட, ஈழத்து தமிழர்கள் இலங்கைத் தீவின் பூர்விக குடிகள் அல்ல என்பதிலும், உரிமைகள் இருக்கக்கூடாது என்பதிலும் சிங்களவர்கள் உறுதியாக உள்ளார்கள்.   

இன்னமும் நான் அறிவது, பிஜேபி புதிய (சிங்கள) அதிபர் வரவை எதிர்பார்த்திருப்பதாக, பிஜேபி இன் சிந்தனையான இலங்கை தீவு இந்துவாக இருந்தது, அதில் இப்பொது பெரும் பகுதியினர் பௌத்தர்களாக மாறி உள்ளனர், எனவே இந்து பெரும்பான்மை பிரதேசமும் (state, and not State), பௌத்த பெரும்பான்மை பிரதேசமும் இருக்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக.

பார்ப்போம்.    

ம்ம்ம்...என்னை பொறுத்தவரை இந்தியாவுக்கு இருவரும் ஒன்றுதான். வென்றபின் இருவரையும் ஈசியாக டீல் பண்ணலாம் என்றே நினைப்பார்கள். 

அப்படியே போட்டியில் கலந்து கொள்ளவும் மறந்து விடாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய நிலவரம்

கோஷான் யாழ்களம் வாசித்தபடியே நித்திரை ஆகி விட்டார் 😂

இன்றைய நிலவரம்

1. நேற்று 35 பேர் வேட்புமனுதாக்கல். இதுவே இறுதி வேட்பாளர் எண்ணிக்கை. வாக்குச்சீட்டு இரெண்டடிக்கு நீளுமாம். முன்பணம் கட்டி ஆனால் வேட்புமனு தாக்கல் செய்யாத 6 பேரின் பணமும் மீளளிக்கப்படுமாம்( சாமல் பணம் சேப்வ்). வேட்புமனு தாக்கல் செய்தால், 12.5% க்கு மேலே எடுத்தால் மட்டுமே பணம் மீளளிக்கப்படுமாம் (சிவாஜியின் பணம் அம்பேல்).

2. அனுர குமார திசநாயக்கவுக்கு திசைகாட்டி சின்னம்.

3.கபே அமைப்பு 7500 தேர்தல் கண்காணிபாளரை நியமிக்கிறது.

4. யாரை ஆதரிப்பது என்ற சு.க.வின் முடிவு நாளை தெரியுமாம்.( இதை இப்படியே நாளைக்கும் கொப்பி பேஸ்ட் பண்ணலாம் 😂). கோட்ட வைதான் ஆதரிப்போம், SLPPயை அல்ல என்கிறார் சு.க.வின் செயளலர் ஜெயசேகர.

5.இன்று அனுராதபுரத்தில் கோட்டாவின் முதல் தேர்தல் கூட்டம். மன்னன் கோட்ட அபயவின் தலைநகரமும் அனுராதபுரமே. நாளை காலிமுகத்திடலில் வரலாற்றில் இதுவரை இல்லாத கூட்டத்தை கூட்டுவோம் என்கிறது யுஎன்பி. 

6. அடுத்த வெள்ளி நடைபெறவுள்ள எல்பிட்டிய உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்தது.

 

Link to comment
Share on other sites

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சஜித்தை ஆதரிக்க தீர்மானித்துள்ளதாக நேற்று கூறியிருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna-Podujana-Peramuna-Stickers-2.jpg

Jaffna-Podujana-Peramuna-Stickers-4.jpg

தேர்தல் என்றால்... பிரச்சாரம், சுவரொட்டிகள்.... இருந்தால் தான்,  தமாசாக இருக்கும். :grin:
அந்த வகையில்... எனது கண்ணில் பட் ட சுவரொட்டி ஒன்றை இணைத்துள்ளேன்.
நீங்களும்... இவற்றை எங்காவது கண்டால், கிழித்து எறியாமல்...  இங்கு வந்து ஒட்டி விடுங்களேன்.🤩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிஜேபி நிலைப்பாடு என்று  சொல்லியவர்களுக்கு, பிஜேபி இன்  எந்த மட்டத்தில் விடயங்களை கொண்டு செல்ல முடியும் என்பது எனக்குத் தெரியாது.

அவர்கள்  பிஜேபி மூத்த தலைமைத்துவம் மற்றும் தலைவர்கள் என்றே சொன்னார்கள்.

ஆயினும், நான் அவர்களுக்கு சொல்லியது, பிஜேபி மற்றும் கிந்தியா  ஈழத்து தமிழர் பிரச்னையில் தீவிரமாகவும், நேர்மையானதாகவும் இருப்பின்

1) ஓர் காலக் கெடு சிங்களத்திற்கு  பகிரங்கமாக விதிக்க வேண்டும்.

2) அந்தக் காலக் கெடுவிற்குள், பிஜேபி சொல்லிய இந்து பெரும்பான்மை பிரதேசம், பௌத்த பெரும்பாண்மை பிரதேசம் என்பதை சிங்களம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை பகிரங்கமாக சிங்களத்துக்கு வலியுறுத்த வேண்டும்.

3) சிங்களம் செய்யாவிட்டால்,  சிங்களத்துக்கான விளைவுகளோ, மற்றும்  கிந்தியாவின் அடுத்த நடவடிக்கைளோ என்பது பகிரங்கமாக இருக்க வேண்டும்.

4) 13 மற்றும் 13 இற்கு மேல்  என்பது அடிப்படை எனில், பிஜேபி மற்றும் கிந்தியா தமிழரின் முதுகில் சவாரி செய்யவே என்பதால், வேறு, அழுத்தம் திருத்தமான, பகிரங்கமான அடிப்படையாக இருக்க வேண்டும்   


இவற்றை கிந்தியா மற்றும் பிஜேபி பகிரங்கமாக கையில் எடுக்காவிடில், கிந்தியவையோ அல்லது பிஜேபியையோ ஈழத்து தமிழர் ஒருவரும் கருத்தில், சிங்களம் கூட கருத்தில் எடுக்கமாட்டார்கள்.

ஈழத்து தமிழர் தம் முதுகில் கிந்தியாவை அல்லது வேறு எவரோ தம் முதுகில் சவாரி செய்ய விடமாட்டார்கள்.  


இப்படி சொல்லும்படி நான் அவர்களிடம் கூறியுளேன்.

அவர்களால் பிஜேபி மூத்த தலைமைத்துவம் மற்றும் தலைவர்கள் இடம் கொண்டு செல்லப்பட முடியுமா அல்லது முடியாதா என்பது எனக்குத் தெரியாது.

 

12 hours ago, goshan_che said:

அப்படியே போட்டியில் கலந்து கொள்ளவும் மறந்து விடாதீர்கள்.

????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kadancha said:

இந்த பிஜேபி நிலைப்பாடு என்று  சொல்லியவர்களுக்கு, பிஜேபி இன்  எந்த மட்டத்தில் விடயங்களை கொண்டு செல்ல முடியும் என்பது எனக்குத் தெரியாது.

அவர்கள்  பிஜேபி மூத்த தலைமைத்துவம் மற்றும் தலைவர்கள் என்றே சொன்னார்கள்.

ஆயினும், நான் அவர்களுக்கு சொல்லியது, பிஜேபி மற்றும் கிந்தியா  ஈழத்து தமிழர் பிரச்னையில் தீவிரமாகவும், நேர்மையானதாகவும் இருப்பின்

1) ஓர் காலக் கெடு சிங்களத்திற்கு  பகிரங்கமாக விதிக்க வேண்டும்.

2) அந்தக் காலக் கெடுவிற்குள், பிஜேபி சொல்லிய இந்து பெரும்பான்மை பிரதேசம், பௌத்த பெரும்பாண்மை பிரதேசம் என்பதை சிங்களம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை பகிரங்கமாக சிங்களத்துக்கு வலியுறுத்த வேண்டும்.

3) சிங்களம் செய்யாவிட்டால்,  சிங்களத்துக்கான விளைவுகளோ, மற்றும்  கிந்தியாவின் அடுத்த நடவடிக்கைளோ என்பது பகிரங்கமாக இருக்க வேண்டும்.

4) 13 மற்றும் 13 இற்கு மேல்  என்பது அடிப்படை எனில், பிஜேபி மற்றும் கிந்தியா தமிழரின் முதுகில் சவாரி செய்யவே என்பதால், வேறு, அழுத்தம் திருத்தமான, பகிரங்கமான அடிப்படையாக இருக்க வேண்டும்   


இவற்றை கிந்தியா மற்றும் பிஜேபி பகிரங்கமாக கையில் எடுக்காவிடில், கிந்தியவையோ அல்லது பிஜேபியையோ ஈழத்து தமிழர் ஒருவரும் கருத்தில், சிங்களம் கூட கருத்தில் எடுக்கமாட்டார்கள்.

ஈழத்து தமிழர் தம் முதுகில் கிந்தியாவை அல்லது வேறு எவரோ தம் முதுகில் சவாரி செய்ய விடமாட்டார்கள்.  


இப்படி சொல்லும்படி நான் அவர்களிடம் கூறியுளேன்.

அவர்களால் பிஜேபி மூத்த தலைமைத்துவம் மற்றும் தலைவர்கள் இடம் கொண்டு செல்லப்பட முடியுமா அல்லது முடியாதா என்பது எனக்குத் தெரியாது.

 

????

1. சரியாகத்தான் நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். பார்ப்போம். நல்லது நடந்தால் அதைவிட சந்தோசம் வேறில்லை.

2. இந்த திரியில் வரும் ஜனாதிபதித் தேர்தலை யார் வெல்லுவார் என்ற ஒரு போட்டியை நடத்துகிரேன். திரியின் 1 பக்கத்தில் விபரங்கள் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலவரம்

1. சு.க ஒருமாதிரியாக கோட்டவை ஆதரிப்பதாக முடிவு எடுத்துளது. மைத்திரி நடுநிலையாம். மைத்திரியுடன் சேர்ந்து 2015 இல் மகிந்தவை எதிர்த்தவரும், ராஜபக்சேக்கள் பழி தீர்பார்கள், யுஎன்பியில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்ட துமிந்த திசாநாயக்க, கோட்டாவின் மேடையில், அருகே அமர்ந்து வாக்கு சேகரித்தார்.

பொய்வழக்கில் உள்ள ஆயுதப்படையிரை விடுவிப்பதாயும், விவசாயகடனை தள்ளுபடி செய்வதாயும், இலவச உரம் தருவதாயும் கோட்ட உறுதி மொழிந்தார்.

2. முன்னாள் மகிந்த விசுவாசி, இன்நாள் விமர்சகர் வெல்கம யாருக்கும் ஆதரவு இல்லையாம்.

3.இப்போதே 46 தேர்தல் விதி மீறல் முறைப்பாடுகள் ஆணையத்திடம் சமர்பிப்பு.

4. கோட்ட சம்பந்தமாக இன்னொரு தடவை கோட்டுக்கு போவேன் என்கிறார், முதலில் வழக்கு போட்ட தேநுவர.

5. கோட்ட, பசில், மகிந்தவுடன் மிக விரைவில் சந்திப்பு என்கிறார் சுமந்திரன். சஜித்தோடும் பேசுகிறார்களாம். யாழ் களத்தில் கொடுக்க பட்ட அட்வைசை வாசித்தர்களோ என்னமோ😂

Link to comment
Share on other sites

நீங்கள் அரசியலை கணிப்பதில் ஒரு அசகாய சூரரா? 
இல்லை(சுத்த சூனியம்)

டிரம்பின் வெற்றிஇ பிரெக்சிட் இப்படி எதிர்பார்ப்புக்கு மாறாக வந்த முடிவுகள் பலதை அசால்டாக முன்பே கணித்தவரா?
இல்லை

1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50மூ வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).
இல்லை

2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).
கோட்டபாய ராஜபக்ச

3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

கோட்டபாய ராஜபக்ச

4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச

5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச

6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

இல்லை

 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச(ஜேவிபிக்கு வாக்கு அளிப்பவர்கள் இரண்டாம் தெரிவாக சஜித்தை தெரிவு
செய்ய வாய்ப்பு உள்ளது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, zuma said:

நீங்கள் அரசியலை கணிப்பதில் ஒரு அசகாய சூரரா? 
இல்லை(சுத்த சூனியம்)

டிரம்பின் வெற்றிஇ பிரெக்சிட் இப்படி எதிர்பார்ப்புக்கு மாறாக வந்த முடிவுகள் பலதை அசால்டாக முன்பே கணித்தவரா?
இல்லை

1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50மூ வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).
இல்லை

2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).
கோட்டபாய ராஜபக்ச

3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

கோட்டபாய ராஜபக்ச

4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச

5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச

6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

இல்லை

 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச(ஜேவிபிக்கு வாக்கு அளிப்பவர்கள் இரண்டாம் தெரிவாக சஜித்தை தெரிவு
செய்ய வாய்ப்பு உள்ளது)

நன்றி சூமா. ஜேவிபி வாக்காளர் பழைய கறலில் சஜித்தை புறக்கணிக்க கூடுமா?

தவிரவும் இடதுசாரிகளுக்கு யுஎன்பி என்றால் சிம்ம சொப்பனமாச்சே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலவரம்

1. காலிமுகத்திடலில் சஜித்தின் முதலாவது கூட்டத்தில் பெரும் திரளான மக்கள். 2 லட்சம் வரை இருக்குமாம். கோட்டாவின் அனுராதபுரக் கூட்டத்தில் 40 000 பேர்தானாம். கிளி மகேந்திரனின் மகராஜா தொலைக்காட்சி நிறுவனம் வெளிப்படையாக சஜித்துக்கு ஆதரவாக இறங்கி ஆடுகிறார்கள். ஹிரு கோட்டவுக்கு.

2. தேசியபாதுகாப்பு பொன்சேக்கா வசம் ஒப்படைக்க படும் என்கிறார் சஜித். நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்பி, வளர்ந்த நாடாக மாற்றுவேன். சம்பள உயர்வு அளிப்பேன். போதைவஸ்து கடத்துபவருக்கு கடும் தண்டனை அளிப்பேன் என்கிறார் சஜித்.

3. சிகிச்சைக்காக கோட்டா சிங்கப்பூர் பயணம்.

4. சு.க + பொது ஜன பெரமுன ஒப்பந்தம் கைச்சாத்து.

5. சஜித்தின் வெற்றியின் பின்பும் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடரும் என்கிறார் ரணில்.

6.எல்பிட்டிய உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி.

7. முழு வேட்பாளர் பட்டியல் கீழே.

  1. சஜித் பிரேமதாச – ஐக்கிய தேசியக் கட்சி
  2. கோத்தாபய ராஜபக்ச – சிறிலங்கா பொதுஜன பெரமுன
  3. அனுரகுமார திசநாயக்க – தேசிய மக்கள் சக்தி
  4. றொகான் பல்லேவத்த – ஜாதிக சங்வர்த்தன பெரமுன
  5. மில்றோய் பெர்னான்டோ – சுயேட்சை
  6. ஜெனரல் மகேஸ் சேனநாயக்க – தேசிய மக்கள் இயக்கம்
  7. சிறிபால அமரசிங்க – சுயேட்சை
  8. சரத் மனமேந்திர – நவ சிங்கள உறுமய
  9. சமரவீர வீரவன்னி – சுயேட்சை
  10. சமன் பிரசன்ன பெரேரா – எமது மக்கள் சக்தி கட்சி
  11. அனுருத்த பொல்கம்பொல – சுயேட்சை
  12. ஏஎஸ்பி லியனகே – சிறிலங்கா தொழிலாளர் கட்சி
  13. ஜயந்த கேதாகொட – சுயேட்சை
  14. துமிந்த நாகமுவ – முன்னிலை சோசலிசக் கட்சி
  15. அஜந்தா பெரெரா – சிறிலங்கா சோசலிச கட்சி
  16. சமன்சிறி ஹேரத் – சுயேட்சை
  17. அசோக வடிகமங்காவ – சுயேட்சை
  18. ஆரியவன்ச திசநாயக்க – ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி
  19. வஜிரபானி விஜேசிறிவர்த்தன – சோசலிச சமத்துவக் கட்சி
  20. பத்தேகமகே நந்திமித்ர – நவ சம சமாஜ கட்சி
  21. வண. அபரகே புண்ணானந்த தேரர் – சுயேட்சை
  22. பியசிறி விஜேநாயக்க – சுயேட்சை
  23. அனுர டி சொய்சா- ஜனநாயக தேசிய இயக்கம்
  24. ரஜீவ விஜேசிங்க – சுயேட்சை
  25. வண. பத்தரமுல்லே சீலாரத்ன தேரர் – ஜனசத பெரமுன
  26. இலியாஸ் இத்ரூஸ் முகமட்- சுயேட்சை
  27. அஜந்த டி சொய்சா – ருகுணு மக்கள் முன்னணி
  28. விஜித குமார கீர்த்திரத்ன – சுயேட்சை
  29. எம்.கே.சிவாஜிலிங்கம் – சுயேட்சை
  30. எம்எல்ஏஎம். ஹிஸ்புல்லா – சுயேட்சை
  31. பிரியந்த எதிரிசிங்க – ஒக்கம வசியோ ஒக்கம ரஜவரு சவிதானய
  32. நாமல் ராஜபக்ச – தேசியங்களின் ஒற்றுமை இயக்கம்
  33. அகமட் ஹசன் முகமட் அலவி – சுயேட்சை
  34. குணபால திஸ்ஸகுட்டியாராச்சி – சுயேட்சை
  35. சுப்ரமணியம் குணரத்தினம் – எமது தேசிய முன்னணி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிழை திருத்தம்

இந்த தேர்தலில் வெல்லும் வேட்பாளர் நவம்பர் 17 அன்றே பதவியேற்பார். ஜனவரி 2020 யில் அல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.