Jump to content

வெல்லப் போவது யாரு? இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜெ . ஆருக்கு பின் நரித்தனத்தில்  நான் வியக்கும் ஒரே ஆள்  ரணில் .....இந்தப் போட்டியிலும் நான் அந்தாளைத்தான் நம்புகின்றேன்.....எப்படியும் கையில் ஒரு துருப்புச் சீட்டு வைத்திருக்கும் மனிசன் ......!  😄

Link to comment
Share on other sites

  • Replies 204
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழ் சிறி said:

Ähnliches Foto

உண்மைதான்... கோசான்,
மகிந்த... ஜனாதிபதியாக  இருந்த போது,   அவருக்கு ஆதரவாக நடித்த  மைத்திரி... 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா.. அழைப்பின் பேரில்,  
அவர்  வீட்டிற்கு, தோசை சாப்பிடப் போய்...
மைத்திரி.... ஜனாதிபதியாக வந்த, விடயங்களையும்....  நாம், மறக்கவில்லை.

(அப்போ...தாயார்  ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா, சகோதரர் அனுரா ஆகியோர்...  
உயிருடன் இருந்திருக்கிறார்கள் என நினைக்கின்றேன்.  உறுதியாக தெரியவில்லை)

அந்த நேரம்... மகிந்தவுக்கு, மைத்திரி... கொடுத்த அதிர்ச்சியை போல்...
இன்னும்... நடக்க சந்தர்ப்பம் இருக்கு. 

தமிழன்... கண்டு பிடித்த தோசையில், எதிர்பாராத மாற்றங்கள் எல்லாம் நடந்திருக்கு.  :grin:

அண்ணை,

தோசையை பார்க்க வாயூறுது. ஆனால் சம்பலை காணேல்ல? எனக்கு சம்பல் இல்லாமல் தோசை சாப்பிட ஏலாது.

கனபேர் மச்ச கறியோட தோசை, இட்லி சாப்பிடுவினம். எனக்கு தோசை, இட்லி எண்டால் சம்பல், சட்னி மட்டும்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலவரம்

1. கோட்ட அபயவின் இரெட்டை குடியுரிமை பற்றிய சகல ஆவணங்களையும் சி.ஐ.டி வசம் ஒப்படைக்குமாறு, கொழும்பு மஜிஸ்றேட் குடிவரவு திணைக்களத்துக்கு உத்தரவு.

2. யானை சின்னத்தில் அன்றி, அன்னப்பறவை சின்னத்திலே போட்டியிடவே வாய்ப்புக்கள் அதிகம் -சஜித்

3. பிணை முறி, பிரதமரின் எதிர்காலம் தொடர்பில் சஜித்தின் நிலைப்பாடு என்ன? -ஜேவிபி

4. தொடரும் ரயில், ஆசிரியர், அரச அதிகாரிகள் வேலை நிறுத்தம். நடப்பு அரசாங்கம் மீது மக்கள் அதிருப்தி.

5. எல்பிட்டிய உள்ளாட்சி சபைக்கான தபால் மூல வாக்கெடுப்பு நிறைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

இப்போதைக்கு கோட்ட அபய ராஜபக்ச, அனுரகுமார திசாநாயக்க, சஜித் பிரேமதாச ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்

கோசான் இது நாள்வரை கோத்தபாயா என அழைத்தவரை கோத்த அபய என அழைக்க இது யாரடா புது ஆள் என முழுச வேண்டியிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

கோசான் இது நாள்வரை கோத்தபாயா என அழைத்தவரை கோத்த அபய என அழைக்க இது யாரடா புது ஆள் என முழுச வேண்டியிருக்கு.

அதானே... ஈழப் பிரியன்,
கோத்தா  வேறை,  அபய  வேறை... ஆள், 
எண்டு... நானும்,  முழுசிக் 🐽  கொண்டு, நிண்ட வேளை..  காப்பாற்றி விட்டீர்கள்.  :grin:

பிற் குறிப்பு: கோசான் அவர்களே... 
எங்கள் மண்டையை...  கண்ட படி, காய வைக்காதீர்கள். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, தமிழ் சிறி said:

அதானே... ஈழப் பிரியன்,
கோத்தா  வேறை,  அபய  வேறை... ஆள், 
எண்டு... நானும்,  முழுசிக் 🐽  கொண்டு, நிண்ட வேளை..  காப்பாற்றி விட்டீர்கள்.  :grin:

பிற் குறிப்பு: கோசான் அவர்களே... 
எங்கள் மண்டையை...  கண்ட படி, காய வைக்காதீர்கள். 😎

உண்மை தான் சிறி.
போட்டி நடாத்துபவர் பிழையான தகவல்கள் பெயர்களை வழங்கக் கூடாது.

அதில்லை கோசான் இந்த திரிக்குள் இரண்டு மாதம் அகப்பட்டுப் போனார் என நினைக்க சிரிப்பாக இருக்கு.

Link to comment
Share on other sites

22 hours ago, goshan_che said:

1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).

இல்லை


2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).

கோத்தா


3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

கோத்தா


4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித்


5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித்


6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

இல்லை


 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

கோத்தா
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

ஜெ . ஆருக்கு பின் நரித்தனத்தில்  நான் வியக்கும் ஒரே ஆள்  ரணில் .....இந்தப் போட்டியிலும் நான் அந்தாளைத்தான் நம்புகின்றேன்.....எப்படியும் கையில் ஒரு துருப்புச் சீட்டு வைத்திருக்கும் மனிசன் ......!  😄

ஜே ஆர் தனக்கு பிறகு தன் கொவிகம சாதியின் காமினி அல்லது அத்துலத் முதலி வரவேண்டும் என விரும்பினார். ஆனால் பிரேமதாச ஜே ஆரின் மீது பல நெருக்குவாரங்களை பிரயோகித்து வேட்பாளர் ஆகி வெண்டார்.

இப்போ 2 மாதமாக யார் யுன் என் பி வேட்பாளர் என பெரும் இழுபறி. ரணில் தானே என்றார். சஜித் தானே என்றார். கரு இடையால நான் பொது வேட்பாளர் என்றார். ஆனால் சஜித் ஒவ்வொரு மாவட்டமாக கூட்டம் போட்டு, கூட்டணி கட்சிகளையும் தேத்தி, ரணிலை தானே வேட்பாளர் என அறிவிக்குமாறு நெருக்கி, கட்சியை உடைக்கும் அளவுக்குள் போய் ஓம்பட வைத்துவிட்டார்.

ஆனால் ரணில்தான் தொடர்ந்தும் யுஎன்பி தலைவர். பிரதமர்.

சஜித் ஜனாதிபதியானால், ரெண்டுக்கும் ஆப்பு இறுகலாம். எனவே ரணிலின் நரி மூளை கோட்ட அபயவுக்கு ஆதரவாக வேலை செய்யக்கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

உண்மை தான் சிறி.
போட்டி நடாத்துபவர் பிழையான தகவல்கள் பெயர்களை வழங்கக் கூடாது.

அதில்லை கோசான் இந்த திரிக்குள் இரண்டு மாதம் அகப்பட்டுப் போனார் என நினைக்க சிரிப்பாக இருக்கு.

ஓஹோ....  ஈழப் பிரியன்ஸ், 
நீங்கள்... மூன்று  மாதம், நடத்திய...  கிரிக்கெட்  போட்டியை, நினைத்து...
நானும்... கொடுப்புக்குள், சிரித்துக் கொண்டு இருந்தேன், ஐயா.  🤩

யாழ். களத்தில், போட்டி நடத்தும் போது...
கேள்வி கேட்பவர்கள் ஏராளம், அதற்கு எல்லாம் பதில் தேடி பிடிப்பதற்கிடையில்...
இருக்கிற முடியும்,  நரைத்து விடும். :grin:

வில்லங்கம் பிடித்த வேலை, என்றாலும்... துணிந்து இறங்குபவர்களை...
ஊக்கம் கொடுத்து, கைதூக்கி... விட வேண்டும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

கோசான் இது நாள்வரை கோத்தபாயா என அழைத்தவரை கோத்த அபய என அழைக்க இது யாரடா புது ஆள் என முழுச வேண்டியிருக்கு.

 

1 hour ago, தமிழ் சிறி said:

அதானே... ஈழப் பிரியன்,
கோத்தா  வேறை,  அபய  வேறை... ஆள், 
எண்டு... நானும்,  முழுசிக் 🐽  கொண்டு, நிண்ட வேளை..  காப்பாற்றி விட்டீர்கள்.  :grin:

பிற் குறிப்பு: கோசான் அவர்களே... 
எங்கள் மண்டையை...  கண்ட படி, காய வைக்காதீர்கள். 😎

யார் நானா மண்டை காய வைக்கிறன்?

2ம் மாச முடிவில் என் மண்டை, மண்டை ஓடாகாமல் இருந்தால் புண்ணியம் 😂.

ஆங்கிலத்தில் Got-Abhaya வை சேர்த்து எழுதுவார்கள். அதை தமிழ் நாவினால் வாசிக்கும் போது. கோத்தபாய ஆகிவிடுகிறது. கோட்-அபய என்பதே சரியான உச்சரிப்பு.  

ஒரிஜினல் கோட் அபய ஒரு மன்னன். மின்னேரிய குளத்தை கட்டிய மஹாசேனனின் தந்தை.

27 minutes ago, Lara said:

 

நன்றி லாரா. வெற்றி பெற வாழ்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

ஜே ஆர் தனக்கு பிறகு தன் கொவிகம சாதியின் காமினி அல்லது அத்துலத் முதலி வரவேண்டும் என விரும்பினார். ஆனால் பிரேமதாச ஜே ஆரின் மீது பல நெருக்குவாரங்களை பிரயோகித்து வேட்பாளர் ஆகி வெண்டார்.

இப்போ 2 மாதமாக யார் யுன் என் பி வேட்பாளர் என பெரும் இழுபறி. ரணில் தானே என்றார். சஜித் தானே என்றார். கரு இடையால நான் பொது வேட்பாளர் என்றார். ஆனால் சஜித் ஒவ்வொரு மாவட்டமாக கூட்டம் போட்டு, கூட்டணி கட்சிகளையும் தேத்தி, ரணிலை தானே வேட்பாளர் என அறிவிக்குமாறு நெருக்கி, கட்சியை உடைக்கும் அளவுக்குள் போய் ஓம்பட வைத்துவிட்டார்.

ஆனால் ரணில்தான் தொடர்ந்தும் யுஎன்பி தலைவர். பிரதமர்.

சஜித் ஜனாதிபதியானால், ரெண்டுக்கும் ஆப்பு இறுகலாம். எனவே ரணிலின் நரி மூளை கோட்ட அபயவுக்கு ஆதரவாக வேலை செய்யக்கூடும்.

Bildergebnis für அஜித்

Ähnliches Foto

சஜித்தின்..  போராட்ட உணர்வை,  பாராட்டியே... ஆக வேண்டும். :)
அவர், அஜித்தின்.. படங்களை பார்த்தும், இந்த உணர்வு வந்திருக்கலாம்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக கிண்ணப் போட்டி எல்லாம் பெரிய கொண்டிராக்ட். ஒவ்வொரு நாளும் போட்டி நடக்க, நடக்க அப்டேட் கொடுக்கோணும். 

இது அப்படியில்லை. 7 கேள்வி. முடிவு ஒரே நாளில் தெரிந்து விடும். 

ஆனாலும் எனக்கு டை செலவு வைக்க ஒரு கூட்டம் ரெடி போலவும் படுகிறது 😂.

தாடி இப்பவே பாதி வெள்ளை, பாதி கறுப்பு. இன்னும் ஒரு தலை முடியும் நரைகேல்ல. 2 மாசத்தில தெரியும் 😂

32 minutes ago, தமிழ் சிறி said:

ஓஹோ....  ஈழப் பிரியன்ஸ், 
நீங்கள்... மூன்று  மாதம், நடத்திய...  கிரிக்கெட்  போட்டியை, நினைத்து...
நானும்... கொடுப்புக்குள், சிரித்துக் கொண்டு இருந்தேன், ஐயா.  🤩

யாழ். களத்தில், போட்டி நடத்தும் போது...
கேள்வி கேட்பவர்கள் ஏராளம், அதற்கு எல்லாம் பதில் தேடி பிடிப்பதற்கிடையில்...
இருக்கிற முடியும்,  நரைத்து விடும். :grin:

வில்லங்கம் பிடித்த வேலை, என்றாலும்... துணிந்து இறங்குபவர்களை...
ஊக்கம் கொடுத்து, கைதூக்கி... விட வேண்டும். :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/26/2019 at 10:42 PM, goshan_che said:

 

1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).

 இல்லை
2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).

 Mr.10%
3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

 Mr.10%
4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

 சஜித்
5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

 சஜித்
6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

 இல்லை
 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

 Mr.10%

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).

இல்லை


2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).

கோத்தா


3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

 கோத்தா


4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித்


5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித்


6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

 இல்லை

 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

சஜித்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

 

நன்றியும் வாழ்துக்களும் மீரா.

மிஸ்டர் 10% பசில் அல்லவா?

கோட்ட மிஸ்டர் வைட் வான்?

1 hour ago, விசுகு said:

1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).

இல்லை


2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).

கோத்தா


3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

 கோத்தா


4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித்


5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித்


6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

 இல்லை

 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

சஜித்

நன்றியும் வாழ்துக்களும் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/26/2019 at 10:42 PM, goshan_che said:

நீங்கள் அரசியலை கணிப்பதில் ஒரு அசகாய சூரரா? 

ஆம்😎

 

1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).

ஆம்


2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).

கோத்தபாய


3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

கோத்தபாய


4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித்


5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

கோத்தபாய

அம்மானும் பாதி முஸ்லிம்களும் முழுச்சிங்களவர்களும் கோத்தா பக்கம்தானே!


6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

இல்லை


 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

கோத்தபாய

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/26/2019 at 11:42 PM, goshan_che said:

நீங்கள் அரசியலை கணிப்பதில் ஒரு அசகாய சூரரா? 

--- ஆம்.  அதிலென்ன சந்தேகம்.



* பதில்கள் ஐக்கியரச்சிய நேரம் 14/11/2019, 23:59 ற்கு முன்னர் தரப்பட வேண்டும்.
+ சர்ச்சை எழுமிடத்து நடத்துபவரின் தீர்ப்பே இறுதியானது
.
———————————————————————
1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).

--- இல்லை.


2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).

கோத்தபாயா.


3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

---  சஜித்.


4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

--- சஜித். 


5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

----  சஜித்.


6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

----  ஆம்.


 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

---- சஜித்.


எல்லோருக்கும் வாழ்துக்கள் 💐💐💐.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலவரம்

***********************

பிந்திய செய்தி

கோட்ட அபயவின் இலங்கை குடியுரிமை இழப்பு, அமெரிக்க குடியுரிமை ஏற்பு, பின் இழப்பு, இறுதியாக இலங்கை குடியுரிமை மீளேற்பு - இவற்றில் பல குளறுபடிகள் நடந்துள்ளதாயும் - சட்டப்படி கோட்ட அபய இப்போ இலங்கை பிரசையே அல்ல - என அறிவிக்கும் படி கோரி ஒரு வழக்கு இன்று இலங்கை மேன்முறையீட்டு நீதி மன்றில் சமர்பிக்கப் பட்டுள்ளதாக கொழும்பு இணைய ஊடகம் ஒன்று எழுதியுள்ளது. இப்படி நேரடியாக மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு போக முடியும் போல எனக்கு தெரியவில்லை. பார்க்கலாம்.

**********************

1. SLPP யின் கோட்ட அபயவுக்கு SLFP ஆதரவளிப்பது தொடர்பான கூட்டம் இன்று மைத்திரி, பசில், மகிந்த, கோட்ட அபய  இடையே இன்று நண்பகல் 12.30 தொடங்கி ஒரு மணத்தியாலம் நடந்தது. கூட்டு அணியின் சின்னம் தாமரை மொட்டு இல்லாமல் வேறேதுமாக அமைய வேண்டும் என மைத்திரி கோருகிறார். இல்லை மொட்டுத்தான் என்கிறார்கள் ராஜபக்சேக்கள். ஜனாதிபதி தேர்தலில் மொட்டு, பாராளுமன்றத்தேர்தலில் வேறு சின்னம் என ராஜபக்சேக்கள் இந்த கூட்டத்தில் மைத்திரியிடம் கூறியதாக தெரிகிறது. சுக வின் முடிவு, திங்கட்கிழமை அவர்களின் மத்திய குழு கூட்டத்தின் பின் அறிவிக்கப்படும்.

2. 2018 அரசியல் குழப்பத்தின் போது மகிந்த பக்கம் தாவிய நாவின்ன எம்பி இப்போது சஜித்தை நோக்கி பாய்ந்துள்ளார். இவர் பெரிய வாக்கை கவரும் நபர் ஒன்றும் இல்லை எனிலும், இப்படியானவர்கள் பொதுவில் வெல்லும் பக்கத்தை நோக்கி திரும்பகூடியவர்கள் என்பதால் இந்த பாய்ச்சல் அரசியலில் காற்று எந்த பக்கம் வீசுகிறது என்பதை கணிக்க உதவலாம். துமிந்த திசாநாயக்க உட்பட்ட மேலும் சில சுக அமைச்சர்கள் ஐதேகவில் இணைவார்கள் எனவும் பேசப்பசுகிறது.

3.மாத்தறை கிரிந்த பகுதியில் முஸ்லிம்கள் சிங்களவர் இடையே பதற்றம். இந்நிலை முஸ்லிம்கள் சிலர் சஜித் ஆதரவு பதாதைகள் வைத்தமையால் ஏற்பட்டதாக தெரிகிறது.

4. சஜித்தின் தெரிவால், ஜயம்பதி விக்ரமரட்னவின் ஐக்கிய இடதுசாரி முண்ணனி ஐக்கிய தேசிய கூட்டில் இருந்து விலகி ஜேவிபியுடன் இணைகிறது. 

5. அமைச்சுகள், அலரி மாளிகையை தேர்தலுக்கு பயன்படுத்த வேண்டாம் என ரணில் உத்தரவு. சஜித்தின் காலை வரும் முயற்சியா? தெரியவில்லை.

6. முன்னாள் அமைச்சர் மில்ரோய் பெர்ணாண்டோ சுயேற்சையாக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தினார்.

7. அண்மையில் ஓய்வு பெற்ற இராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்க தேசிய மக்கள் இயக்கம் எனும் கூட்டமைப்பால் வேட்பாளராக நிறுத்தப்படுகிறாராம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, கிருபன் said:

 

நன்றியும் வாழ்துக்களும் கிருபன்ஜி.

கருணாவின் சொல்லை இப்போ அவரே மதிப்பாரோ தெரியாது - ஆனால் வியாழேந்திரனின் முடிவு மட்டு-அம்பாறை தமிழ் வாக்குகளை கணிசமாக பாதிக்கலாம்.

கிழக்கு முஸ்லீம்கள் இந்த முறை ராஜபக்சேகளுடன் இல்லை என்றே படுகிறது.

முஸ்லீம் வாக்கை சஜித்துக்கு போகாமல் தடுக்க ஹிஸ்புல்லாவே இறங்க கூடும் எனவும் பேச்சு அடிபடுகிறது.

ஆனால் ஊர்வாதத்தில் நம்மை வென்றவர்கள் அவர்கள். எனவே காத்தன்குடிக்கு வெளியே ஹிஸ்புல்லா வாக்கை பெரிதாக பிரிப்பார் என நான் நினைக்கவில்லை.

14 minutes ago, suvy said:

 

நன்றியும் வாழ்துக்களும் அண்ணா.

வழமையான உங்கள் பாணியில் தனி ஆவர்த்தனம் வாசித்துள்ளிர்கள்.

இந்த high stakes strategy பலனளிக்குமா? நவம்பர் 17ம் திகதி பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

நீங்கள் அரசியலை கணிப்பதில் ஒரு அசகாய சூரரா? 

 இல்லை. தமிழீழம் தப்பி பிழைக்கும் என்று அழிந்த பிறகும் நம்பிய முட்டாள்களில் நானும் ஒருவன்.


———————————————————————
1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).

ஆம்


2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச
3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

சாமல் ராஜபக்ச
4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச
5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச
6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

இல்லை
 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ma-sumanthiran.jpg

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவது குறித்து பரிசீலிப்பாரா சுமந்திரன்?

இலங்கை சோஷலிசக் குடியரசின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதற்கு இன்னும் 48 நாட்களே உள்ளன.

இந்த தேர்தலில் மூன்று குறிப்பிடத்தக்க வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். அவர்கள் கணிசமான வாக்குகளைப் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ஷ 40 + சதவீத வாக்குகளையும், சஜித் பிரேமதாச 40 + சதவீத வாக்குகளையும் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தோடு கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஜே.வி.பி பெற்ற 711,000 வாக்குகளை அடிப்படையாக கொண்டு அனுர குமார திசாநாயக்க 5% வாக்குகளை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்கூறிய மூன்று வேட்பாளர்களும் தற்போதைய சூழ்நிலையில், எவரும் 50% க்கும் அதிகமாக வாக்குகளை பெறுவது என்பது மிக கடினமான சூழ்நிலை என்பதால், இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக, இரண்டாவது விருப்பத் தெரிவு முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரண்டாவது விருப்பத் தெரிவுகளின் எண்ணிக்கையின் போது, முதல் இரண்டு வேட்பாளர்கள் அடுத்த சுற்றுக்கு செல்வார்கள். தோல்வியுற்ற அனைத்து வேட்பாளர்களின் இரண்டாவது விருப்பங்களும் கணக்கிடப்படும், பின்னர் முதல் இரண்டு வேட்பாளர்களின் மொத்தத்தில் சேர்க்கப்படும்.

பின்னர் அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் வெற்றி பெறுவார். வாக்களிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 50% க்கும் குறைவாக இருந்தாலும், இரண்டாவது விருப்பத்தெரிவுகளின்படி ஒரு வேட்பாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

ஜே.வி.பி. வருகை.

கடந்த 1999 ஆம் ஆண்டுக்கு பின்னர் மக்கள் விடுதலை முன்னணி நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறது. அந்த தேர்தலில் அவர்கள் 344,000 வாக்குகளுடன் 4% வாக்குகளை பெற்றுக்கொண்டனர்.

2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் நாடுமுழுவதுமாக 775,000 வாக்குகளுடன் 5.75% வாக்குகளை பெற்றது. எனவே ஜே.வி.பி இந்த முறை இன்னும் புது உத்வேகத்துடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக முக்கிய அரசியல் கட்சிகள் மீது வாக்காளர்களுக்கு அக்கறையின்மை மற்றும் அதிருப்தி இருப்பதாகத் தோன்றும் ஒரு தனித்துவமான சூழலில் தேசிய மக்கள் சக்தி என்ற அமைப்பின் ஊடாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க போட்டியிடுகிறார். எனவே இந்தத் தேர்தல் அவர்களுக்கு தங்கள் பலத்தைக் காட்ட ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியுள்ளது.

ஐ.தே.க. மற்றும் பெரமுன

இந்த இரண்டு பெரிய கட்சிகளும் நாட்டின் சிங்கள பௌத்த பெரும்பான்மையினரை ஈர்க்கும் வேட்பாளர்களை கொண்டுள்ளனர்.

சஜித் பிரேமதாச (52) மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ (70) இருவரும் குடும்ப அரசியலை மையமாகக் கொண்டுள்ளனர்.

இந்த வேட்பாளர்களில் ஒருவர் நிச்சயமாக அடுத்த ஜனாதிபதியாக வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் அது இலகுவான விடயம் இல்லை என்பதுடன் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எம்.ஏ.சுமந்திரன்

கொழும்பின் றோயல் கல்லூரியில் கற்ற 55 வயதுடைய எம். ஏ. சுமந்திரன் ஒரு தமிழ் மெதடிஸ்ட் கிறிஸ்தவர் ஆவார். அவர் தேவாலயங்களுக்குள் குறிப்பிடத்தக்க பதவிகளை வகித்துள்ளார். மேலும் தொழில் ரீதியாக வழக்கறிஞராக இருக்கும் அவர் ஒரு ஜனாதிபதி சட்டத்தரணி ஆவார்.

சமீபத்தில் அரசியல் நெருக்கடியின் போது நாடாளுமன்றம் சட்டவிரோதமாக கலைக்கப்பட்டது தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கும் முக்கிய வழக்கறிஞராகவும் அவர் செயற்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளராக இருக்கும் எம்.ஏ.சுமந்திரன், தேர்தலில் போட்டியிட தீர்மானித்தால் அவர் தனது சொந்த அரசியல் கட்சியின் மூலமே 10% வாக்குகளைப் பெற முடியும்.

ஆனாலும் பௌத்த பெரும்பான்மையை கொண்ட நாட்டில் தமிழ் பிரதி நிதி ஒருவரினால் இரண்டு முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்காத பிற சிறுபான்மை குழுக்களிடமிருந்து வாக்குகளை சுமந்திரனால் பெற முடியுமா?

அவ்வாறு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு அவருக்கு மக்கள் வாக்களித்தால் அந்த வாக்குகள் வீண்போகாது. ஏனென்றால் மற்ற முக்கிய வேட்பாளர்களில் ஒருவருக்கு இரண்டாவது விருப்பம் கொடுக்க முடியும்.

குறிப்பாக சுமந்திரனுக்கு வாக்களிக்கும் வாக்காளரின் இரண்டாவது விருப்பத் தெரிவு சஜித் பிரேமதாச என்றால் அது அவரது வெற்றிக்கு வழிவகுக்கும் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

சுமந்திரன், ஒருவருக்கொருவர் தாக்கும் மற்ற முக்கிய வேட்பாளர்களைப் போன்று அல்லாமல், நேர்மறையான மற்றும் தூய்மையான பிரச்சாரத்தை நடத்தினால் அவருக்கு சிவில் சமூகத்தின் ஆதரவு கிடைக்கும்.

அந்தவகையில் அரசியலமைப்பை வலுப்படுத்தும் மற்றும் சிவில் உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் இலங்கையை ஒன்றிணைக்கக் கூடிய தமிழ் வேட்பாளராக அவர் போட்டியிட்டால் 20% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அரசியலில் புதியதொரு மாற்றத்தடை ஏற்படுத்த முடியும் என்ற கருத்து அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் நிலவுகின்றது.

http://athavannews.com/ஜனாதிபதி-தேர்தலில்-களமி-3/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Jude said:

நீங்கள் அரசியலை கணிப்பதில் ஒரு அசகாய சூரரா? 

 இல்லை. தமிழீழம் தப்பி பிழைக்கும் என்று அழிந்த பிறகும் நம்பிய முட்டாள்களில் நானும் ஒருவன்.


———————————————————————
1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).

ஆம்


2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச
3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

சாமல் ராஜபக்ச
4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச
5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச
6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

இல்லை
 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச

நன்றியும் வாழ்துக்களும் ஜூட்.

சாமல் போட்டியிலேயே இல்லையே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலவரம்

1. கோட்ட அபயவின் இலங்கை குடியுரிமை தொடர்பான வழக்கு மேல்நீமன்றில் தொடரப்பட்டது உறுதியாகியுள்ளது.

2. SLPP யின் கோட்ட அபயவுக்கு SLFP ஆதரவளிப்பது தொடர்பான குழப்பம் நீடிக்கிறது. மைத்திரி குருநாகலவில் இன்று நடந்த கூட்டத்தில் தாமரைமொட்டு சின்னத்தில் கோட்டா போட்டியிட்டால் சுக அவரை ஆதரிக்காது எனப் பொருள்பட பேசியுள்ளார். மேலும் பொலன்நறுவவில் இடம்பெற்ற கூட்டத்தில் தான் அரசியலில் இருந்து ஓய்வுபெறப் போவதில்லை எனவும் டிசம்பருக்கு பின் நாட்டுக்கும் பொலன்நறுவைக்காயும் புதிய செயல்களில் ஈடுபடுவேன் என்றும் கூறியுள்ளார்.

3. சஜித்தின் வேண்டுகோளின் படி, ரணிலின் அனுமதியோடு யூஎன்பி யின் செயளாலர் காரியவசம், சுக வின் செயலாளர் ஜெயசேகரவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். சுக, சஜித்தை ஆதரிக்குமா?

4. அண்மையில் ஓய்வு பெற்ற இராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்க தேசிய மக்கள் இயக்கம் எனும் கூட்டமைப்பால் வேட்பாளராக இன்று சுகததாச உள்ளரங்கில் நடந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரால் கோட்டாவுக்கே அதிகம் பாதிப்பு என்கிறனர் நோக்கர்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலவரம்:

1. கோட்ட அபயவின் குடியுரிமை வழக்கு எதிர்வரும் புதன் கிழமை 3 மேல்நீதிமன்ற நீதிபதிகள் முன் விசாரிக்கப்படும். இன்று கொழும்பில் நடந்த கூட்டத்தில் தனது ஆவணங்கள் எல்லாம் சரியாகவே உள்ளதாக கூறினார் கோட்ட. கோட்ட அபயவை நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்தால், முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் கப்ராள் அவர் இடத்தை நிரப்பக்கூடுமாம்.

2. தேர்தலில் தாக்கம் செலுத்தக்கூடும் எனக் கருதப்பட்ட மாற்றுவலு முன்னாள் இராணுவத்தினரின் போராட்டம் முடிவுக்கு வந்துளது.

3. சு.க வின் இன்றைய மத்தியகுழு கூட்டம் யாரை ஆதரிப்பது என்ற முடிவை எட்டாமலே முடிந்தது. அடுத்த கூட்டம் அக்டோபர் 8இல். 

4. எது எவ்வாறாயினும் தனது ஆதரவு கோட்டவுக்கே என்கிறார் மூத்த சுக உறுப்பினர் நிமால் சிறிபால டி சில்வா.

5. தொழிலதிபர் ரொஹான் பெல்வத்தை கட்டுப் பணம் செலுத்தினார்.

6. கூட்டமைப்பு ஒன்றில் வேட்பாளரை நிறுத்தும் அல்லது தேர்தலை பகிஸ்கரிக்கும் என்கிறார் சிவாஜிலிங்கம்.

7. சஜித் உறுதி மொழிகள் தராவிடின், தமிழர்கள் தேர்தலை பகிஸ்கரித்து அதனால்  கோட்ட வெல்லுவதால் தமிழர்கு குந்தகம் இல்லை, அனுகூலமே என்கிறார் சி.வி. விக்னேஸ்வரன்.

8. ஆனால் ஆங்கிலத்தில் வெளியிட்ட இன்னோர் அறிக்கையில் - சஜித்தின் தேர்வை வரவேற்றுள்ளார் விக்கி http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=211378

9. சஜித், ரணிலை சந்தித்த சம்பந்தர் - தீர்வுதிட்டம் பற்றி ஐதேக வெளிபடையாக அறிவிக்க வேண்டும் என கோரியதாக கூறப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/27/2019 at 11:04 PM, goshan_che said:

தாடி இப்பவே பாதி வெள்ளை, பாதி கறுப்பு. இன்னும் ஒரு தலை முடியும் நரைகேல்ல. 2 மாசத்தில தெரியும் 😂

என்னது தாடி பாதி வெள்ளையா? எங்கை படத்தை போடுங்கோ பாப்பம்? :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.