Jump to content

வில்லன் ஆன ஸ்மார்ட் டிவி: பொதுமக்கள் உஷார்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘மனைவியின் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா ?!

மனைவியின் நிர்வாண வீடியோ காட்சிகளை வெளிநாட்டில் வசிக்கும் கணவனின் செல்போனுக்கு அனுப்பிய வில்லன் யாரென்று தெரிந்து கொள்ள செய்தியை முழுமையாக படியுங்கள்.

Bildergebnis für smart tv gif

 
Updated on : 25 September 2019, 10:37 AM

கோழிக்கோட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்து திரும்பிய அந்த இளைஞரின் மொபைல் போனுக்கு தினந்தோறும் அவர் மனைவி உடைமாற்றும் நிர்வாண வீடியோ காட்சிகள் வந்து கொண்டிருந்தன.

இதனால் திடுக்கிட்டுப் போன அவர் உடனே கோழிக்கோடு திரும்பினார். அவர் மனைவியிடமும், குடும்பத்தினரிடமும் இதைப்பற்றிக் கூறினார். அவர்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர். தங்களது வீட்டு படுக்கையறையில் யாரோ ஒருவர் ரகசிய கேமராவை ஒளித்து வைத்திருப்பதாக சந்தேகம் கொண்டு போலிஸில் புகார் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் அந்த வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடினர். படுக்கையறையில் ஒரு இடம் விடாமல் சோதித்துப் பார்த்தனர். பின்னர் காட்சிகளின் திசையை போலிஸார் சோதனை செய்தனர். சைபர் குற்றப் பிரிவு அதிகாரிகளின் உதவியுடன் வில்லனை கண்டுபிடித்தனர்.

வெளிநாட்டில் இருந்து வாங்கி வரப்பட்ட ஸ்மார்ட் டி.வியே அந்த வில்லன் என்பது அனைவருக்கும் தெரியவந்தபோது அதிர்ச்சியடைந்தனர். ஸ்மார்ட் டி.வி மூலம் தனது வெளிநாட்டு கணவருடன், அவருடைய மனைவி பேசுவது வழக்கம். இருவரும் வீடியோ மூலம் தினந்தோறும் பல மணிநேரம் பேசுவார்கள். அதன்பிறகு டி.வியில் வேறு சேனல்களை பார்க்கத் தொடங்கி விடுவார்.

‘மனைவியின் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா ?!
 

ஆனால், ஆன்லைன் சர்வர் தொடர்ந்து வேலைசெய்து வரும்நிலையில் கேமரா இணைப்பு துண்டிக்கப்படாமல் தொடர்ந்து இயங்கி வீட்டின் படுக்கையறைக் காட்சிகளை அந்த இளைஞருக்கு அனுப்பி வந்துள்ளது. இவ்வாறாகத்தான் மனைவியின் நிர்வாண காட்சிகள் வெளியாகி உள்ளன.

ஸ்மார்ட் டி.வி போன்ற நவீன சாதனங்கள் இயக்கப்பட்ட பிறகு, இணைய இணைப்புகளைத் துண்டிக்க வேண்டும். இல்லாவிட்டால் இதுபோன்ற விளைவுகள் ஏற்படும். இப்படிதான் பல அந்தரங்க ரகசியங்கள் வெளியாகின்றன. இதுபோன்ற சாதனங்களை கையாளும்போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று சைபர் கிரைம் போலிஸார் எச்சரித்துள்ளனர்.

படுக்கையறையில் ஸ்மார்ட் டிவி பயன்படுத்துபவர்களே உஷார்! உஷார்!!

https://www.kalaignarseithigal.com

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோ ப்ளீஸ் 
எனது நன்பன் ஒருவன் எப்படி சொன்னாலும் இந்த செய்தியை 
நம்புகிறான் இல்லை .... அவனுக்கு ஆதாரமாக காட்டுவதுக்காக 
ஒரு இரண்டு வீடியோ என்றாலும் போடமுடியுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவை பற்றி வேறு  திரிகளில் நான் பல தடவை எழுதி இருக்கிறேன் 
இப்போதைய நிலையில் ஸ்மார்ட் டிவி களை இலவசமாக கொடுத்தாமலே 
தயாரிக்கும் கொம்பனிகளுக்கு ஒரு நஷ்ட்டமும் இல்லை.
உங்களின் டேட்டாவை சேமிப்பதன் மூலம் பல ஆயிரம் டொலர்கள் சம்பாதிக்கிறார்கள். 

5ஜி டெக்னோலஜி வரும்போது நிலைமை எப்படி இருக்கும் என்றே சொல்ல முடியாது 
எங்களை போன்ற அப்பாவிகளுக்கு இதில் ஒரு நஷ்ட்டமும் இப்போதைக்கு இல்லை என்று எண்ணுகிறேன் 
களவு கிளவு செய்கிறவர்களுக்கு இனி பிரச்சனைதான்.
ஆக கூடி இப்படி நிர்வாண வீடியோவை போடுவினம் ..... அப்படியாவது யாரும் இளம் பெண் பிரசுகள் பார்த்து 
காதல் கீதல் வந்தால் ... நல்லதுதானே. நாமும் மணம்முடித்து கரை சேரலாம்.

எனக்கு தெரிந்த நண்பர்கள் தோம்சன் ரியூட்டர் ருக்கு வேலை செய்கிறார்கள் அவர்கள் இப்போ 
ஓரு  பாரிய ப்ராஜெக்ட் ஒன்று செய்துகொண்டு இருக்கிறார்கள். 
போலீசோ கோர்டோ உங்கள் பெயரை தட்டினால் ........ நீங்கள் பிறந்ததில் இருந்து இப்போது வரை நடந்த 
அனைத்தையும் ஓரிடத்தில் வைத்திருந்து எடுத்துவிடும். சிறிய தவறுகளில் இருந்து வங்கி கொள்ளை மட்டும் இருக்கும். தவிர உங்கள் சோசல் மீடியா போக்கு எப்படி? என்பதில் இருந்து இருக்கும்.

நல்ல வேளை நெடுக்கர் கலியாணம் கட்டி ஓதுங்கிவிட்டார்  இல்லாட்டில் அவர் பெண்களை திட்டி எழுதும் 
எல்லாவற்றையும் சேகரித்து வைத்து மீ டுவில் உள்ளே போட்டிருப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

வீடியோ ப்ளீஸ் 
எனது நன்பன் ஒருவன் எப்படி சொன்னாலும் இந்த செய்தியை 
நம்புகிறான் இல்லை .... அவனுக்கு ஆதாரமாக காட்டுவதுக்காக 
ஒரு இரண்டு வீடியோ என்றாலும் போடமுடியுமா? 

எனக்கென்னவோ நண்பனுக்கு காட்டுவதற்காக மட்டும்  வீடியோ கேட்பதாக படவில்லை 😆😆😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்மார்ட் ரிவியை விடவும் விவகாரமான பொருட்கள் இப்போது எங்கள் வீடுகளில் இருக்கின்றன: கூகிள் அசிஸ்டன்டும் அமேசனின் அலெக்சாவும். வீட்டுக்கு ஒரு குறிப்பிட்ட தளபாடம் வாங்குவது பற்றி அலெக்சா இருக்கும் பகுதியில் அமர்ந்திருந்து பேசிக் கொண்டிருந்தோம். இணையத்தேடல் எதுவுமே செய்திருக்கவில்லை. அடுத்த நாள் இணையத்திற்குப் போனால் அந்தத் தளபாடங்கள் பற்றிய விளம்பரங்கள் சேர்ந்து வருகின்றன. எங்கள் உரையாடல்கள் அலெக்சாவின் wake word இல்லாமலே பதிவாகி சந்தைப் படுத்தலுக்குப் பயன்படுகிறதா அல்லது மாறி நாம் அலெக்சா wake word  ஐ ஒத்த சொல்லொன்றைப் பயன்படுத்தியதால் நடந்ததா தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, அக்னியஷ்த்ரா said:

எனக்கென்னவோ நண்பனுக்கு காட்டுவதற்காக மட்டும்  வீடியோ கேட்பதாக படவில்லை 😆😆😆

நண்பருக்கு  மட்டும்  என்று அவர் சொல்லவே  இல்லையே?

முதல்ல   அவர் பார்த்து  விட்டுத்தானே  நண்பருக்கு  காட்டுவார்

நல்ல  மனுசன்  தான்

ஆனால் 

இந்த  மாதிரி  விடையம் என்றால்   எங்களைப்போல

பக்குவாக  கேட்கத்தெரியவில்லை🤣

 

Link to comment
Share on other sites

இதனால் தான் என் லப்டப் எல்லாவற்றிலும் கமரா மீது ஒரு ஸ்டிக்கரை ஒட்டி வைத்து இருக்கின்றேன். அத்துடன் கமரா மூலம் மூஞ்சியை காட்டிக் கொண்டு மற்றவர்களுடன் உரையாடுவதும் மிக மிக குறைவு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.