Jump to content

‘விதி ஒரு கதவை மூடினால் நம்பிக்கை மற்றொரு கதவைத் திறக்கும்’


Recommended Posts

 

Niraj David

‘விதி ஒரு கதவை மூடினால் நம்பிக்கை மற்றொரு கதவைத் திறக்கும்’ என்பதை தன் வாழ்க்கையின் ஊடாக நிரூபித்துக்கொண்டிருக்கும் ஒரு போராளியை அண்மையில் தரிசித்தது மனநிறைவைத் தந்தது.
முள்ளிவாய்க்கால் ஒரு இனத்தின் நம்பிக்கைகள் அத்தனைக்குமே முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக எம்மில் பலர் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், அந்தப் பெரிய அலையில் எதிர்நீச்சல் போட்டு போராடி இன்று வெற்றியின் உச்சம் தொட்டு நிற்கின்ற குயிலின்பன்(சுரேஷ்) பலருக்கும் ஒரு உன்னத உதாரணம்.
யாழ்பாணம், கோப்பாயில் குயிலின்பனின் crafttary என்ற கைப்பணித் தொழிற்சாலையில் நான் நின்ற அந்த கனப்பொழுது, எதையோ சாதித்துவிட்டதான திருப்தியை ஆனந்தக்கண்ணீருடன் நான் உணர்ந்து நின்ற ஒரு முக்கிய தருணம்.
சர்வதேச தரத்திலான கைவினைப் பொருட்கள், தமிழ் மன்னர்களில் பெயர்களிலான தொழில் கூடங்கள், அழகு தமிழில் அறிவித்தல் பலகைகள்;, தான் கற்றதை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்கும் பயிற்சிக்கூடங்கள்.. இவற்றின் நடுவே அன்று நான் பார்த்த அதே தாழ்மையுடன் அந்தக் குயிலின்பன்.
எந்தச் சூழலுக்குள்ளும் தன்னைத் தகவமைத்துக்கொண்டு வாழப் பயிற்றப்பட்டவன்தான் ஒரு போராளி என்ற யதார்த்தத்தை உலகுக்கு விளக்கியபடி சிரித்துக்கொண்டு நிற்கும் குயிலின்பன் பலருக்கு ஒரு நல்ல உதாரணம்.
எமக்காக அற்பணிக்க முன்வந்த யாரையும் நாம் தலைகுனியவிடக்கூடாது என்று கங்கணம் கட்டியபடி, குயிலின்பன் போன்ற பலருக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கும்;; கரனுக்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.
(யாழ்ப்பாணம் செல்றும் உறவுகள் முடிந்தால் ஒருதரம் கோப்பாயில் உள்ள crafttary தொழிற்சாலைக்கும் சென்று வாருங்கள்: ஒரு போராளியின் ஓர்மத்தைக் கண்ணாரக் கண்டு ரசிக்கலாம்)

70888675_10220790901906285_8603501199687

70655696_10220790899746231_1767587459887

71181934_10220790898466199_8517860123035

70778029_10220790892146041_5307418558001

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.
ஆனாலும் ஆங்கிலத்தில் பெயர் வைத்தது கொஞ்சம் நெருடலாக உள்ளது.

ஒருவேளை வெளிநாட்டினரைக் கவரவோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை ....பாராட்டுக்கள் குயின்பன் & கரண்.பொதுவாக தென்னிலங்கை பக்கம்தான் இதுபோன்ற கடைகள் இருக்கும்.....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனைக்குள்ளும்...தென்னைக்குள்ளும்...புதைந்திருக்கும்....பாரிய பொருளாதாரத்தின்...ஒரு பகுதியை வெளிக்காட்டியுள்ளீர்கள்...!

அதனை ஏன் ஆதித்தமிழன் 'கற்பகதரு' என்றழைத்தான் என்று இப்போது தான் புரிகின்றது.!

வாழ்த்துக்களும்....பாராட்டுக்களும்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊருக்கு போயிருந்த பொழுது இந்த கைப்பணி வளாகத்திற்கு சென்றிருந்தேன்.. அழகான கைவினைப்பொருட்களை சிரட்டையில் செய்கிறார்கள். இவர்களது விற்பனை நிலையம் நல்லூர் கோவிலின் முன்வீதியிலும் உள்ளது.

இவர்களை ஊக்குவிக்க வேண்டியது எங்களின் கடமையும் ஆகும்.

“வாணிப உலகம்”பகுதியில் இதைப்பற்றி ஒரு சிறிய அறிமுகம் எழுதியிருந்தேன்..

——————————————————————

Crafttary - கைப்பணி வளாகம்..

By பிரபா சிதம்பரநாதன்,  July 24 in வாணிப உலகம்

2-E12-DC39-8-EF4-4-D68-9-C8-F-05-EB96-E9

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தமுறை கட்டாயம் போவேன். 

இதை முடிந்தளவு வட்ஸாப் இதர செயலிகளிலும் பகிருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

70778029_10220790892146041_5307418558001

இந்த படத்தில் நிற்கும் இருவர் அலுவலகத்துக்கு போறவர்கள் போல கை முட்ட சட்டை போட்டு சப்பாத்துடன் நிற்கிறார்கள்.
அது தவறில்லை.ஆனாலும் எப்படி இவர்களால் தாங்க முடியுது?

2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நான் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊருக்கு போயிருந்த பொழுது இந்த கைப்பணி வளாகத்திற்கு சென்றிருந்தேன்.. அழகான கைவினைப்பொருட்களை சிரட்டையில் செய்கிறார்கள். இவர்களது விற்பனை நிலையம் நல்லூர் கோவிலின் முன்வீதியிலும் உள்ளது.

இவர்களை ஊக்குவிக்க வேண்டியது எங்களின் கடமையும் ஆகும்.

“வாணிப உலகம்”பகுதியில் இதைப்பற்றி ஒரு சிறிய அறிமுகம் எழுதியிருந்தேன்..

——————————————————————

Crafttary - கைப்பணி வளாகம்..

By பிரபா சிதம்பரநாதன்,  July 24 in வாணிப உலகம்

2-E12-DC39-8-EF4-4-D68-9-C8-F-05-EB96-E9

உங்கள் இணைப்பையும் முன்னர் பார்த்திருந்தேன்.இணைப்புக்கு நன்றி.

அடுத்த வருடம் பேரப்பிள்ளைகள் புதிதாகப் பிறக்கவில்லை என்றால் போகும் எண்ணம்.போனால் நிச்சயம் போவேன்.

நுணாவுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, goshan_che said:

அடுத்தமுறை கட்டாயம் போவேன். 

இதை முடிந்தளவு வட்ஸாப் இதர செயலிகளிலும் பகிருங்கள்.

உண்மைதான்.. 

அதே போல கீழே உள்ளவாறு மரத்திலோ இல்லை சிரட்டையிலோ “ அ, ஆ “ எழுத்துக்களுடன் தமிழ் சொற்களையும் சேர்த்து சுட்டிகள் போல செய்து முன்பள்ளி மாணவர்களுக்கு தமிழை கற்றுக்கொடுக்கும் ஒரு வித்தியாசமான வழியாக இருக்கும்.. 

இவர்களிடம் கேட்டால் செய்து தருவார்கள். இதே போல இல்லாவிட்டாலும் கூட, ஓரளவிற்கு இதே போல செய்யக்கூடும்

8-F37-A70-E-B0-C3-4-C14-9360-BFC9-CEB6-D

 

7-DBAF711-59-A1-4073-94-E7-700-FF91-F278

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஈழப்பிரியன் said:

70778029_10220790892146041_5307418558001

இந்த படத்தில் நிற்கும் இருவர் அலுவலகத்துக்கு போறவர்கள் போல கை முட்ட சட்டை போட்டு சப்பாத்துடன் நிற்கிறார்கள்.
அது தவறில்லை.ஆனாலும் எப்படி இவர்களால் தாங்க முடியுது?

உங்கள் இணைப்பையும் முன்னர் பார்த்திருந்தேன்.இணைப்புக்கு நன்றி.

அடுத்த வருடம் பேரப்பிள்ளைகள் புதிதாகப் பிறக்கவில்லை என்றால் போகும் எண்ணம்.போனால் நிச்சயம் போவேன்.

நுணாவுக்கும் நன்றி.

நடுவில் நிற்பவர் ஐபிசி நிராஜ் டேவிட்.

குயிலின்பன் முன்னாள் அரசியல்துறை துணைப்பொறுபாளர் அல்லவா? கறுப்பு டீ சேர்ட்டில் நிற்பவர் அவராக இருக்க கூடும். முன்பு சீருடையில் படங்கள் கண்டுள்ளேன் இப்போ மட்டுக்கட்ட முடியவில்லை இடது புறம் முழுகைச் சட்டையில் நிற்பவர் யாரெனத் தெரியவில்லை.

நாங்களும் பள்ளிகூடம் போகும் நாளில் முழுக் கழுசான், முழுகைச்சட்டை, சப்பாத்து எல்லாம் போட்டுத்தானே போனோம்?

இப்போ இங்கே பழகிவிட்டு, மீள அங்கே போகும் போதுதான் கஸ்டமாக இருக்கிறது. அவர்களுக்கு பழகி இருக்கும். 

ஆனால் நிராஜ் இங்கே இருந்து போனவர்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நடுவில் நிற்பவர் ஐபிசி நிராஜ் டேவிட்.

குயிலின்பன் முன்னாள் அரசியல்துறை துணைப்பொறுபாளர் அல்லவா? கறுப்பு டீ சேர்ட்டில் நிற்பவர் அவராக இருக்க கூடும். முன்பு சீருடையில் படங்கள் கண்டுள்ளேன் இப்போ மட்டுக்கட்ட முடியவில்லை இடது புறம் முழுகைச் சட்டையில் நிற்பவர் யாரெனத் தெரியவில்லை.

நாங்களும் பள்ளிகூடம் போகும் நாளில் முழுக் கழுசான், முழுகைச்சட்டை, சப்பாத்து எல்லாம் போட்டுத்தானே போனோம்?

இப்போ இங்கே பழகிவிட்டு, மீள அங்கே போகும் போதுதான் கஸ்டமாக இருக்கிறது. அவர்களுக்கு பழகி இருக்கும். 

ஆனால் நிராஜ் இங்கே இருந்து போனவர்தான்.

விளக்கத்திற்கு நன்றி கோசான்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

விலைதான் ரொம்ப ரொம்ப  அதிகம். வெள்ளைகளுக்கும் விலை அதிகமே.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

விலைதான் ரொம்ப ரொம்ப  அதிகம். வெள்ளைகளுக்கும் விலை அதிகமே”

பொருட்கள் தரமாக இருந்தால் ஓரளவிற்கு விலையை கொடுக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து. அதுமட்டுமல்ல, சுரேஷ் அவர்களுடன் கதைத்த பொழுது.. சிரட்டைகளை கூட பணம் கொடுத்தே வாங்கி இந்த கைவினைப்பொருட்களை தயாரிப்பதாக கூறினார்.

அத்துடன்.. வேலை செய்யபவர்களுக்கான் சம்பளம், வங்கிக்கடன், மற்றும் இயந்திரங்களைப் பாராமரிப்பதற்கான செலவுகள் என பல்வேறு செலவுகளையும் சமாளிக்க விலையை கொஞ்சம் அதிகமாக வைத்திருக்கலாம்.

அத்தோடு இவர்களை ஊக்குவிக்க வேண்டுமானால் விலையை பார்க்காமல் வாங்குவது ஒன்று. மற்றவர்களுக்கு இவர்களைப்பற்றி விளம்பரம் செய்வது இரண்டாவது. 

லக்சலவின் தரம் இதற்கு இப்பொழுது வரமாட்டாது ஆனால் இது எங்களில் ஒருவரது முயற்சி என்பதால் ஊக்குவிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.