Jump to content

ககன்யான் திட்டதிற்கு தீவிராமாக செயற்பட்டு வருகிறோம் – சிவன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Istro-Sivan.jpg

ககன்யான் திட்டதிற்கு தீவிராமாக செயற்பட்டு வருகிறோம் – சிவன்

பிரதமர் அறிவித்த ககன்யான் திட்டப்படி, விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்துவதில் இஸ்ரோ தீவிரமாக செயற்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் நேற்று (வியாழக்கிழமை) விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  “சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் மிக நன்றாக செயல்பட்டு வருகிறது. விக்ரம் லேண்டரிடம் இருந்து நாங்கள் சமிக்ஞை எதையும் பெறவில்லை.

விக்ரம் லேண்டர் தரை இறங்குவதில் ஏற்பட்ட பிரச்சினைக்கு காரணம் என்ன என்பதை கண்டறிவதற்கு தேசிய அளவில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை கிடைத்த பிறகு எதிர்காலத்தில் என்ன செய்வது என்பது குறித்து நாங்கள் பணியாற்றுவோம்.  இனி வரும் காலங்களில் தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

ககன்யான் திட்டம், 3 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி அவர்களை மீண்டும் பத்திரமாக இங்கு கொண்டு வந்து சேர்ப்பதாகும். இதற்காக வீரர்கள் தேர்வு செய்து, ரஷியாவில் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

http://athavannews.com/ககன்யான்-திட்டதிற்கு-தீவ/

Link to comment
Share on other sites

இப்படியே செவ்வாய்க்கிரகத்திற்கும் சனிக்கிரகத்திற்கும் விண்கலங்களை அனுப்ப இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் செவ்வாய் தோசம் எப்படி உருவாகிறது என்பதையும் ஏழரைச்சனி எப்படி உற்பத்தியாகிறது என்பதையும் துல்லியமாக  கண்டறிந்து  டிகிற்றல் கதிர் வீச்சு மூலம் அதை செயலிழக்க செய்து உலகில் வாழும் மக்களை காப்பாற்ற முடியும்.😂 செய்வார்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, tulpen said:

இப்படியே செவ்வாய்க்கிரகத்திற்கும் சனிக்கிரகத்திற்கும் விண்கலங்களை அனுப்ப இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் செவ்வாய் தோசம் எப்படி உருவாகிறது என்பதையும் ஏழரைச்சனி எப்படி உற்பத்தியாகிறது என்பதையும் துல்லியமாக  கண்டறிந்து  டிகிற்றல் கதிர் வீச்சு மூலம் அதை செயலிழக்க செய்து உலகில் வாழும் மக்களை காப்பாற்ற முடியும்.😂 செய்வார்களா? 

நீங்கள் இலகுவாகச் சொல்லி விட்டீர்கள்...துல்பன்!

அவர்கள் அங்கு போனால்....முதலில்...சனி பகவானைத்தான் தேடுவார்கள்..!

அதற்கு அடுத்ததாக.....இருபத்து நாலு கரட் தங்கம் தேடுவார்கள்...!

அவர்களது  தேடல்....அவரவர்.....அறிவைப் பொறுத்தே அமையும்....!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kushoi.png

டிஸ்கி:
விளம்பர நோக்கிற்காக இணைக்கபடவில்லை..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.