Jump to content

வடக்கு தமிழ் மக்களுக்கு, மல்வத்து பீடாதிபதி கடும் எச்சரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
முல்லைத்தீவு நீராவியடி ஆலய விவகாரத்தில் பௌத்த பிக்குமார்கள் செய்ததை நியாயப்படுத்தியிருக்கும் பௌத்த மக்களின் பெருந்தலைமைத்துவங்களில் ஒன்றான மல்வத்துப்பீடம், தெற்கு சிங்கள பௌத்த மக்களை மீண்டும் கலவரத் திசைக்கு திருப்புகின்ற முயற்சியிலிருந்து வடக்கு மக்கள் விலகிக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
ஆட்சியாளர்கள் இந்த விவகாரத்தில் தலையீடு செய்து நிலைமையை தணிக்க முயற்சிக்காவிட்டால் மீண்டும் ஸ்ரீலங்கா நாட்டில் இரத்தம் சிந்தப்படுவதையோ, மக்கள் சட்டத்தைக் கையில் எடுப்பதையோ தடுக்க முடியாது என்றும் மல்வத்துப்பீடம் கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கின்றது. முல்லைத்தீவு நீராவியடி ஆலய விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவையும் மீறிச் செயற்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகள், தலைமை விகாரையின் பிக்கு ஒருவரது உடலை தகனம் செய்ய நடவடிக்கை எடுத்திருந்தனர்.
 
இதனால் அங்கு பெரும் பதற்றநிலை ஏற்பட்டதோடு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த நிலையிலும் நீதிமன்ற தடையுத்தரவை மீறிச் செயற்படும் பிக்குமார்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கத் தவறினர். பிக்குமார்களின் இந்த செயற்பாட்டைக் கண்டித்து முல்லைத்தீவு மற்றும் ஏனைய தாயகப் பகுதிகளில் வேலை நிறுத்தமும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக வவுனியா மனித உரிமைகள் ஆணைக் குழுவிலும் நேற்றைய தினம் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் முல்லைத்தீவு நாயாறு பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவங்கள் குறித்து இன்றைய தினம் மல்வத்துப்பீட துணைநாயக்கர் திம்புல்கும்புரே ஸ்ரீ சரணங்கர விமலதம்மாபிதான தேரர் கருத்து வெளியிட்டிருக்கின்றார். தமிழ் மக்களின் இந்த செயற்பாடுகளை வன்மையாகக் கண்டித்து அவர் கடுமையான எச்சரிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
 
அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது,
 
‘புத்தசாசனத்தில் பிக்குமார்கள் என்பவர்கள் மிகவும் கருணையாகவும், அன்பாகவும் பொறுமையாகவும் செயற்படுகின்ற பிரிவினர்களாவர். கருணையின் சாசனம் என்றே இதனை புத்தசாசனம் கூறுகிறது. இப்படிப்பட்டவர்கள் தடிகளில், பொல்லுகளிலும், கத்திகளிலும் தாக்கக்கூடியவர்கள் அல்லர். இவர்கள் மிகவும் சமாதானமாக சட்டத்தை மதித்து செயற்படுபவர்களாகிய இவர்களில் யாராவது ஒருவர் மரணமடைந்தால் அவரது புகழுடல் தகனம் செய்யப்படும்.
 
யாழ்ப்பாணம் குருநகர் விகாரையில் இது இடம்பெற்றது. 2000 ஆண்டுகளுக்கு முன் இந்த விகாரை ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்தப் பகுதியை சிலர் கபளீகரம் செய்து கோவில்களை அமைத்து புராதன இடமாக அந்த தலத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படுகின்றனர். அப்படி செய்து தான் சட்டத்தை எடுத்துக்கொண்டு வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
 
அப்படியொரு சட்டம் இருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. வடக்கில் சட்டத்தரணிகள் வீதியில் போராட்டம், சட்டத்தை மீறிய பிக்குகளை கைது செய்ய வலியுறுத்து, தமிழரின் நிலத்தில் சிங்களக் குடியிருப்பு, விகாரைகளுக்கு அனுமதியில்லை, விகாரையானது கோவில் சம்பிரதாயங்களுக்கு பாதிப்பு என்று வடக்கிலுள்ள தமிழ் மக்கள் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றனர்.
 
இந்த நாடு, ஸ்ரீலங்கா, வடக்கு என்று புறம்பான நாடு இங்கு இல்லை. சட்டம் அனைவருக்கும் சமமானது. அப்படியிருந்தால் தான் நாடு சட்டரீதியான சிறந்த ஆட்சியை செய்ய முடியும். இந்த சட்டத்தை மாற்றியமைத்து அவர்களுக்கு தேவையான வகையில் சட்டத்தை கையிலெடுத்து செயற்படுகின்றனர். திருகோணமலையில் பிக்கு சொரூபமொன்று சேதமாக்கப்பட்டு, கீழே தள்ளிவிடப்பட்டு அழிக்கப்பட்டிருப்பதை பத்திரிகையில் கண்டேன். இப்படி சம்பவங்கள் இடம்பெறுகையில் எமது ஆட்சியாளர்கள் பதிலளிக்காமல் மௌனம் காத்துவருகின்றனர்.
 
இதனை எமக்கு பொறுமையாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது. முன்னரும் இதுபோன்ற சம்பவங்கள் அண்மையில் இடம்பெற்றன. ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் இவ்வாறு மௌனம் காத்து வந்தால் சட்டத்தை மக்களே கையிலெடுப்பார்கள். இதுதான் நடக்கும். ஆகவே ஆளுங்கட்சி, முப்படையினர், பொலிஸார் என்ற வகையில் சரியான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். பௌத்த தேரர்களுக்கு தாக்குதல், இடையூறுகளை ஏற்படுத்தும் போது திருப்பியடிக்க மாட்டார்கள்.
 
ஆனாலும் அமைதிகாக்கும் பௌத்த மக்கள் பொறுமையாக இருக்கமாட்டார்கள். அதனால் இது மிகப்பெரிய அழிவாகவும் கலவரமாகவும் ஆகிவிடும். இந்த நிலைமையை கருத்திற்கொண்டு ஆட்சியாளர்கள் செயற்பட வேண்டும். நான் ஒட்டுமொத்த பிக்குமார்களுக்காகவும் பேசுகின்றேன். மீண்டும் ஒருமுறை இந்த நாட்டை இரத்த ஆறாக மாற்றிவிட வேண்டாம்.
 
கட்டியிருக்கும் நாய்களை அவிழ்த்துவிட்டு ஐயோ கடிக்கிறதே என்று அலறுவதில் அர்த்தமில்லை. ஆகவே புத்திமிக்க யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மக்கள் சிந்தித்துப் பாருங்கள். அகிம்சையாக மக்களை குழப்பிவிட்டு மனங்களில் கோபத்தை ஏற்படுத்தி இந்த நாட்டை இரத்தம் சிந்துகின்ற நாடாக மாற்றவா முயற்சிக்கின்றீர்கள்? ஆட்சியாளர்கள் அச்சமின்றி சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்த நாட்டு மக்கள் மறுமடியும் சட்டத்தைக் கையிலெடுத்துவிடுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்கா சிங்கள ஆமுத்துறுவினால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதற்கு முதல் பிரதமராக இருந்தவர் சேர் ஜோன் கொத்தலாவலை, கொத்தலாவலைய அரசியலிலிருந்து அகற்றவேண்டுமென்பதற்காக பண்டா சிங்கள ஆமுத்துறுமாருடன் கைகோர்த்து அவர்களை அரசியலுக்கு நேரடியாகவே அழைத்துவந்தார் அதற்கு முன்பு பாங்ஸ்சாலைகளில் மாத்திரமே இருந்துகொண்டு உள்ளூரில் அரசியல்செய்துகொண்டிருந்த ஆமுத்துறுமார் தெருவில் இறங்கி அரசியல்செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். 

கடைசியில் ஆமுத்துறு ஒருவராலேயே பண்டா கொல்லப்பட்டார்.

அப்போது ஜோன் கொத்தலாவலை சொன்ன வார்த்தை என்னவெனில்

"நான் கட்டி வைத்திருந்த நாய்களை அவிள்த்துவிட்டதன் விளைவை இப்போ அவர்கள் அனுபவிக்கிறார்கள்" என்பதாகும்

இன்று இச்சொற்பதம் தமிழர்களுக்கு எதிராகத் திருப்பப்பட்டு சாதாரண உரிமைக்காகவும் வாழ்வாதரத்துக்காகவும் போராடும் தமிழர்கள் அனைவரும் நாய்கள் என இந்த ஆமுத்துறு கூறுகிறார்.

இது சுமந்திரன் சம்பந்தன் வகையறாக்கள் தூக்கிப்பிடிக்கும் நல்லிணக்க அரசாங்கத்தில் நடக்கின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  பௌத்த  துறவி  பேசுகின்ற பேச்சா  இது??

நீ  உண்மையான  பௌத்தனாக  இருந்தால் நான்  துவக்கெடுத்திருக்கவே தேவையல்லை-தலைவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

ஒரு  பௌத்த  துறவி  பேசுகின்ற பேச்சா  இது??

நீ  உண்மையான  பௌத்தனாக  இருந்தால் நான்  துவக்கெடுத்திருக்கவே தேவையல்லை-தலைவர்

"ஜே ஆர் ஜெயவர்த்தனா ஒரு உண்மையான பெளத்தனாக இருந்திருந்தால் நான் துப்பாக்கியைத் தூக்கியிருக்கவேண்டியிருந்திருக்காது"

தமிழீழத் தேசியத்தலைவர் 
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்.

Link to comment
Share on other sites

மதமும் மத குருமாரும்  அரசியலில் எங்கெல்லாம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ அந்த நாடுகளில் மக்கள் அமைதியான வாழ்வை இழப்பர். ஶ்ரீலங்காவில் பௌத்த தீவிரவாதம் , இந்தியாவில் இந்து தீவிரவாதம், அரபுநாடுகளில் முஸ்லீம் தீவிரவாதம் அந்த நாடுகளில் உள்ள மக்களின் அமைதியான வாழ்வை அலங்கோலப்படுத்துகிறது. கிறிஸ்தவ மத மேலாண்மை இருந்த காலங்களில் மேற்கு நாடுகளிலும் இதே நிலைமையே இருந்தது. வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட ஐரோப்பியநாடுகள் மதத்தை அரசியலில் மேலாண்மை செய்வதை அகற்றிய பின்பே அந்நாடுகள் முன்னேறறம் அடைந்தன. 

Link to comment
Share on other sites

6 hours ago, tulpen said:

மதமும் மத குருமாரும்  அரசியலில் எங்கெல்லாம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ அந்த நாடுகளில் மக்கள் அமைதியான வாழ்வை இழப்பர்

முற்றிலும் உண்மை . இன்னொருவிடயம். ஐரோப்பியர்  மறுமலர்ச்சி காலத்தை அவர்கள் கடந்து வந்தவர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பிக்குகளையும்,  சிங்கள அரசியல் வாதிகளையும்...  
இப்போ... குறை சொல்லி, ஒரு பிரயோசனமும் இல்லை.

புத்த  பிக்குவால்.... கொல்லப் பட்டவர்,  பண்டார நாயக்கா  எனும் பிரதமர்.
அதன், இரத்தம் காய முதல்... உலகின்  முதல் பெண் பிரதராமராக, 
குசினிக்குள் நின்ற,   அவரின்  மனைவி,  சிறீமாவோ  வருகின்றார்.
அதற்குப் பிறகு... 50 ஆண்டுகளாக  தமிழனுக்கு,  போராட்டம் தான்.

இதை... தட்டிக் கேட்ட,  புலிகளையும்.... காட்டிக் கொடுத்து,
இன்பம் காணும், இனம் எம் இனம்.

சம்பந்தன், சுமந்திரன்.... போன்ற  கீழ்த்தரமான அரசியல் வாதிகளை, 
தமிழ் மக்கள், தேர்ந்தெடுத்ததால்....  எமது வாழ்வு,
உய்ய.. முடியாத நிலைமைக்கு போய் விட்டது. 😥

Link to comment
Share on other sites

ஸ்ரீலங்காவில் உள்ள சிங்கள-பௌத்த பிக்குகளில் 90% க்கு அதிகமானவர்கள் காடையர்களும் கயவர்களும் தான். அதனால் தான் அவர்களால் இனமதவெறி கொண்ட சிங்கள-பௌத்த பயங்கரவாதத்தை முன்னெடுப்பதைத் தவிர வேறொன்றையும் செய்ய வக்கில்லாமல் உள்ளார்கள்.

ஸ்ரீலங்காவில் உள்ள சிங்கள-பௌத்த இனமதவெறிப் பயங்கரவாதங்களின் தலைமைப் பீடங்களில் தற்போதுள்ள மலவத்தை பீட பிக்குகள் மிகமிக மோசமான பயங்கரவாதிகளாக உள்ளதை அவர்களின் கடந்த 2 வருட அறிக்கைகள் தெளிவாக காட்டுகின்றன.

ஸ்ரீலங்காவில் உள்ள இந்த சிங்கள-பௌத்த பயங்கரவாதக் கும்பல்கள் முற்றுமுழுதாக இல்லாதொழிக்கப்படும் வரை இங்கு அமைதி, நீதி, தர்மம் நிலைக்க எள்ளளவும் சந்தர்ப்பம் இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.