Jump to content

காணாமல் ஆக்கப்பட்டோர் என்றொரு இனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் என்றொரு இனம்

tamil_2009_vavuniya_kathikamr_refugees.j

ஈழத் தமிழர்களின் இன விடுதலைப் போராட்டத்தை சிதைக்க நினைத்த சிங்கள அரசு அவர்களுக்கு இனப் பேரழிவை உண்டு பண்ணி, வரலாறு முழுதும் மீள முடியாத இனமாக ஆக்க நினைத்தது. ஈழப் போரின் இறுதியில் சிறிதும், தயக்கமின்றி ஈழத் தமிழ் இனத்தை வேட்டையாடியது சிங்கள அரசு. அதற்கான உலகின் இடமளிப்புத்தான் சரணடைந்தவர்களும்  கையளிக்கப்பட்டவர்களும் காணாமல் போய் விட்டனர் என்று கைவிரிக்கும் பெரும் தைரியத்தை சிங்கள அரசுக்கு கொடுத்தது.  இது ஈழத் தமிழ் இனத்தையே காணாமல் ஆக்கும் தைரியத்தையும் கொடுத்திருக்கிறது.

இலங்கேஸ்வரன் என்பது இலங்கையை ஆண்ட தமிழ் மன்னர்களுக்கு சூட்டப்படும் பெயர் என்று வரலாற்று பத்தி எழுத்தாளர் கலாநிதி த. ஜீவராசா எழுதியிருந்தார். அந்த அடிப்படையில்தான் இராவணனை இலங்கேஸ்வரன் என்கிறோம். கம்பராமாயணமும் அப்படிச் சித்திரிக்கிறது. ஒரு காலத்தில் இலங்கேஸ்வரர்களாக ஈழத்தை ஆண்ட தமிழினம் பின்னர், சிறுபான்மை இனமானது. இலங்கையில் இரண்டு சம அந்தஸ்துள்ள நாடுகள் அமையக் கூடிய சூழல் பிரித்தானிய வெளியேற்றத்தின்போது ஏற்பட்டபோதும் நல்லிணக்கம் பேசி அவ் வாய்ப்பு தவறவிடப்பட்டது.

வடக்கு கிழக்கு சிறுபான்மை தமிழர்கள் ஆக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்கள், இன்றைக்கு வடக்கு தமிழர்கள் என்கின்ற அளவில் கிழக்கின் சிங்கள மற்றும் இஸ்லாமியவாதக் குடியேற்ற சூழல்கள் தள்ள முற்படுகின்றன. தமிழீழமே இன்றைக்கு சுருங்கிப் போயிருப்பதைப் போன்றதொரு தோற்றம் ஏற்படுத்தப்படுகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் தமிழீழம் குறித்துப் பேசும் ஒரு சிங்களப் பேரினவாதிகூட வடக்கு கிழக்கிற்கு அதிகாரம் தரமாட்டோம் என்று சொல்லுவார். இன்று வடக்கிற்கு அதிகாரத்தை தர ஒருபோதும் இடமிளிக்கோம் என்று பேசப் பார்க்கிறார்.Maithripala-Sirisena-295x300.jpg

தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் இருந்த பெரும்பாலான நிலங்கள் இன்று காணாமல் ஆக்கப்பட்டுவிட்டன. எமது தலைமைகள் ஆளும் சிங்கள அரசைக் காப்பாற்றுகின்றன. மைத்திரிபால சிறிசேனவை ஆட்சியில் அமர்த்தினோம். அவரது ஆட்சியைத் தொடர்ந்து பாதுகாக்க உதவுகிறோம். சர்வதேசத்தை துணைக்கு அழைத்துவிட்டு, அதன் பிடியிலிருந்து தப்பவும் நாமே உதவிக் கொண்டிருக்கிறோம். மைத்திரியுடன் ரணிலுக்கு முரண்பாடு. ரணிலை நாம் காப்பாற்றுகிறோம். ரணில் அரசு இன்றைக்குத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால்தான் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

ஒருபுறத்தில் தமிழ் தலைமைகளின் ஆதரவைப் பெற்றுக் கொண்டு மறுபுறத்தில் தமிழர்களின் உரிமைகளையும் பண்பாட்டு அம்மசங்களையும் திருடும், காணாமல் ஆக்கும் வேலையை சிங்கள அரசும் அதன் தலைவரும், பிரதமரும் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த நாளின் பெரும் சூத்திரதாரிகளும் இந்த நாளின் எதிரிகளுமே இலங்கை ஆட்சியாளர்களைப் போன்றவர்கள்தான். மணலாறு என்ற ஈழத் தமிழர்களின் பிரதேசத்தைக் காணாமல் ஆக்கி, வெலி ஓயா உருவாக்கப்பட்டது. இத்தகைய செயல்களுக்காகவே ஈழத் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடும் சூழலே ஏற்பட்டது.

ஆனால், இன்றைக்கு வந்து இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆமையன் குளம் என்ற தமிழ் குளத்தைக் காணாமல் ஆக்கிவிட்டு, அதை சிங்களக் குளமாக்கி திறந்து வைத்துச் செல்கிறார். ஈழ இன விடுதலைக்கான போராட்டம் இலங்கைத் தீவில் நடந்தது. அதனைச் சிதைக்க தமிழ் இன அழிப்பை சிங்கள அரசு மேற்கொண்டது. இவ்வளவு நடந்த பின்னரும், வவுனியா ஒதியமலையை அண்டிய பகுதியில் நாளும் பொழுதும் ஒரு சிங்களக் குடி குடியேறிக் கொண்டிருக்கின்றது. யாரோ ஒரு பிக்கு வந்து புத்தர் சிலையுடன் குடி ஊன்றிக் கொண்டிருக்கிறார்.

செம்மலையில் இந்து ஆலய வளாகத்தை அடாத்தாகப் பிடித்து, பௌத்த சிங்களப் பிக்கு பாரிய புத்தர் சிலை கட்டி விகாரை அமைக்கிறார். வடக்கு கிழக்கில் ஆயிரம் இடங்களில் புத்தர் சிலைகளை அமைக்க ஜனாதிபதி சிறிசேனதான் திட்டம் தீட்டியவர். இதனால்தான் கன்னியாவில் பாரிய நெருக்கடி உருவாகியது. அங்குள்ள இந்து ஆலய நிலத்தில், விகாரை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நீதிமன்றத்தால் அந்த முயற்சி தடுக்கப்பட்டாலும் அரசாணைப்படியும் அதிகாரபூர்வமற்ற முறையிலும் குடியேற்ற முயற்சிகள் வேறு இடங்களில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஒன்று மாத்திரம் நன்றாகப் புலப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் ராணுவத்தை நோக்கிச் சென்று சரணடைந்தவர்கள் மாத்திரம் காணாமல் ஆக்கப்படவில்லை. போர் முடிவுக்கு வந்த பின்னர், அருட்தந்தை பிரான்சிஸ் அடிகளாருடன் கையளிக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான போராளிகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் மாத்திரம் காணாமல் ஆக்கப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடிய உறவுகளும் காணாமல் ஆக்கப்படுகிறார்கள். மெல்ல மெல்ல அவர்களும் இந்த மண்ணுக்குள் காணாமல் தொலைக்கப்படுகிறார்கள்.

ரணிலும் மைத்திரியும் முரண்படுகின்றனர். ரணிலும் மகிந்தவும் முரண்படுகின்றனர். மைத்திரியும் கோத்தாவும் முரண்டுகின்றனர். ஆனால் இவர்கள் யாரும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் வாய் திறப்பதில்லை. சிங்கள ராணுவத்தின், சிங்கள அரசுகளின் இனப்படுகொலைக் குற்றங்களைப் பாதுகாப்பதில் மிக கச்சிதமாக, மிக ஒற்றுமையாக செயற்பட்டு வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், தந்தையர்கள் போராடுவது பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. துளியும் குற்றமில்லை.

அவர்கள் இதைத்தான் எண்ணுகின்றனர் போலும். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடுகின்ற தாய் – தந்தையர்களும் மெல்ல மெல்ல காணாமல் ஆகிப் போவார்கள். அப்போது கேள்வி எழுப்ப எவரும் இருக்க மாட்டார்கள் என்று. இதே விசயத்தைதான் எல்லா இடத்திலும் சிங்கள அரசு பிரயோகிக்கிறது. நாம் நிலத்தின் அதிகாரத்தைக் கேட்கிறோம். அவர்கள் தொடர்ந்து நிலத்தைக் காணாமல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். நாம் நமது கடலைக் கோருகிறோம். அவர்கள் கடலைக் காணாமல் ஆக்குகிறார்கள். நாம் நமது காட்டைக் கோருகிறோம் அவர்கள் காட்டை காணாமல் ஆக்குகிறார்கள். அவர்கள் எல்லாவற்றையும் காணாமல் ஆக்குவதைத்தான் தீர்வாகக் கொண்டுள்ளனர்.

இப்போது நாங்கள் ஆலயத்திற்குப் பெரிதாகச் செல்வதில்லை. நல்ல தருணம். அவர்கள் ஆலயங்களைக் காணாமல் ஆக்கி புத்த விகாரைகளைக் கட்டுகிறார்கள். நாம் பண்பாட்டு உணர்வு உரிமையை மறந்துவிடுகிறோம். அவர்கள் அதனையும் காணாமல் ஆக்குகிறார்கள். எங்களை பக்கத்தில் வைத்திருந்தபடி, எங்களைத் துணையாக்கிக் கொண்டே எங்களைக் காணாமல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு ஒன்றுபட்ட இலங்கையைப் பேசிக் கொண்டு ஈழ விடுதலைப் போராட்டத்தைக் காணாமல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதே நிலைமை தொடர்ந்தால், எதிர்வரும் காலத்தில் இந்த நாளில் ஒட்டுமொத்தமாகக் காணாமல் போனோர் என்றொரு இனமாக ஈழத் தமிழரையும் நினைவுகூர வேண்டிய நிலை வரும். இதே நிலை தொடர்ந்தால் ஈழம் என்றொரு காணாமல்போன நிலத்தையும் நினைவுகூர வேண்டி வரும். காணாமல் போன ஒரு தாயின் வலியை உணர்தலும் அதற்காய் இயங்குதலும்தான் இந்த நிலையை இல்லாமல் செய்யும் முதல் புள்ளியாய் இருக்கும்.

 

https://uyirmmai.com/article/காணாமல்-ஆக்கப்பட்டோர்-என/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது.
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்) அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)
    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.