Jump to content

காணாமல் ஆக்கப்பட்டோர் என்றொரு இனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் என்றொரு இனம்

tamil_2009_vavuniya_kathikamr_refugees.j

ஈழத் தமிழர்களின் இன விடுதலைப் போராட்டத்தை சிதைக்க நினைத்த சிங்கள அரசு அவர்களுக்கு இனப் பேரழிவை உண்டு பண்ணி, வரலாறு முழுதும் மீள முடியாத இனமாக ஆக்க நினைத்தது. ஈழப் போரின் இறுதியில் சிறிதும், தயக்கமின்றி ஈழத் தமிழ் இனத்தை வேட்டையாடியது சிங்கள அரசு. அதற்கான உலகின் இடமளிப்புத்தான் சரணடைந்தவர்களும்  கையளிக்கப்பட்டவர்களும் காணாமல் போய் விட்டனர் என்று கைவிரிக்கும் பெரும் தைரியத்தை சிங்கள அரசுக்கு கொடுத்தது.  இது ஈழத் தமிழ் இனத்தையே காணாமல் ஆக்கும் தைரியத்தையும் கொடுத்திருக்கிறது.

இலங்கேஸ்வரன் என்பது இலங்கையை ஆண்ட தமிழ் மன்னர்களுக்கு சூட்டப்படும் பெயர் என்று வரலாற்று பத்தி எழுத்தாளர் கலாநிதி த. ஜீவராசா எழுதியிருந்தார். அந்த அடிப்படையில்தான் இராவணனை இலங்கேஸ்வரன் என்கிறோம். கம்பராமாயணமும் அப்படிச் சித்திரிக்கிறது. ஒரு காலத்தில் இலங்கேஸ்வரர்களாக ஈழத்தை ஆண்ட தமிழினம் பின்னர், சிறுபான்மை இனமானது. இலங்கையில் இரண்டு சம அந்தஸ்துள்ள நாடுகள் அமையக் கூடிய சூழல் பிரித்தானிய வெளியேற்றத்தின்போது ஏற்பட்டபோதும் நல்லிணக்கம் பேசி அவ் வாய்ப்பு தவறவிடப்பட்டது.

வடக்கு கிழக்கு சிறுபான்மை தமிழர்கள் ஆக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்கள், இன்றைக்கு வடக்கு தமிழர்கள் என்கின்ற அளவில் கிழக்கின் சிங்கள மற்றும் இஸ்லாமியவாதக் குடியேற்ற சூழல்கள் தள்ள முற்படுகின்றன. தமிழீழமே இன்றைக்கு சுருங்கிப் போயிருப்பதைப் போன்றதொரு தோற்றம் ஏற்படுத்தப்படுகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் தமிழீழம் குறித்துப் பேசும் ஒரு சிங்களப் பேரினவாதிகூட வடக்கு கிழக்கிற்கு அதிகாரம் தரமாட்டோம் என்று சொல்லுவார். இன்று வடக்கிற்கு அதிகாரத்தை தர ஒருபோதும் இடமிளிக்கோம் என்று பேசப் பார்க்கிறார்.Maithripala-Sirisena-295x300.jpg

தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் இருந்த பெரும்பாலான நிலங்கள் இன்று காணாமல் ஆக்கப்பட்டுவிட்டன. எமது தலைமைகள் ஆளும் சிங்கள அரசைக் காப்பாற்றுகின்றன. மைத்திரிபால சிறிசேனவை ஆட்சியில் அமர்த்தினோம். அவரது ஆட்சியைத் தொடர்ந்து பாதுகாக்க உதவுகிறோம். சர்வதேசத்தை துணைக்கு அழைத்துவிட்டு, அதன் பிடியிலிருந்து தப்பவும் நாமே உதவிக் கொண்டிருக்கிறோம். மைத்திரியுடன் ரணிலுக்கு முரண்பாடு. ரணிலை நாம் காப்பாற்றுகிறோம். ரணில் அரசு இன்றைக்குத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால்தான் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

ஒருபுறத்தில் தமிழ் தலைமைகளின் ஆதரவைப் பெற்றுக் கொண்டு மறுபுறத்தில் தமிழர்களின் உரிமைகளையும் பண்பாட்டு அம்மசங்களையும் திருடும், காணாமல் ஆக்கும் வேலையை சிங்கள அரசும் அதன் தலைவரும், பிரதமரும் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த நாளின் பெரும் சூத்திரதாரிகளும் இந்த நாளின் எதிரிகளுமே இலங்கை ஆட்சியாளர்களைப் போன்றவர்கள்தான். மணலாறு என்ற ஈழத் தமிழர்களின் பிரதேசத்தைக் காணாமல் ஆக்கி, வெலி ஓயா உருவாக்கப்பட்டது. இத்தகைய செயல்களுக்காகவே ஈழத் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடும் சூழலே ஏற்பட்டது.

ஆனால், இன்றைக்கு வந்து இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆமையன் குளம் என்ற தமிழ் குளத்தைக் காணாமல் ஆக்கிவிட்டு, அதை சிங்களக் குளமாக்கி திறந்து வைத்துச் செல்கிறார். ஈழ இன விடுதலைக்கான போராட்டம் இலங்கைத் தீவில் நடந்தது. அதனைச் சிதைக்க தமிழ் இன அழிப்பை சிங்கள அரசு மேற்கொண்டது. இவ்வளவு நடந்த பின்னரும், வவுனியா ஒதியமலையை அண்டிய பகுதியில் நாளும் பொழுதும் ஒரு சிங்களக் குடி குடியேறிக் கொண்டிருக்கின்றது. யாரோ ஒரு பிக்கு வந்து புத்தர் சிலையுடன் குடி ஊன்றிக் கொண்டிருக்கிறார்.

செம்மலையில் இந்து ஆலய வளாகத்தை அடாத்தாகப் பிடித்து, பௌத்த சிங்களப் பிக்கு பாரிய புத்தர் சிலை கட்டி விகாரை அமைக்கிறார். வடக்கு கிழக்கில் ஆயிரம் இடங்களில் புத்தர் சிலைகளை அமைக்க ஜனாதிபதி சிறிசேனதான் திட்டம் தீட்டியவர். இதனால்தான் கன்னியாவில் பாரிய நெருக்கடி உருவாகியது. அங்குள்ள இந்து ஆலய நிலத்தில், விகாரை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நீதிமன்றத்தால் அந்த முயற்சி தடுக்கப்பட்டாலும் அரசாணைப்படியும் அதிகாரபூர்வமற்ற முறையிலும் குடியேற்ற முயற்சிகள் வேறு இடங்களில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஒன்று மாத்திரம் நன்றாகப் புலப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் ராணுவத்தை நோக்கிச் சென்று சரணடைந்தவர்கள் மாத்திரம் காணாமல் ஆக்கப்படவில்லை. போர் முடிவுக்கு வந்த பின்னர், அருட்தந்தை பிரான்சிஸ் அடிகளாருடன் கையளிக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான போராளிகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் மாத்திரம் காணாமல் ஆக்கப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடிய உறவுகளும் காணாமல் ஆக்கப்படுகிறார்கள். மெல்ல மெல்ல அவர்களும் இந்த மண்ணுக்குள் காணாமல் தொலைக்கப்படுகிறார்கள்.

ரணிலும் மைத்திரியும் முரண்படுகின்றனர். ரணிலும் மகிந்தவும் முரண்படுகின்றனர். மைத்திரியும் கோத்தாவும் முரண்டுகின்றனர். ஆனால் இவர்கள் யாரும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் வாய் திறப்பதில்லை. சிங்கள ராணுவத்தின், சிங்கள அரசுகளின் இனப்படுகொலைக் குற்றங்களைப் பாதுகாப்பதில் மிக கச்சிதமாக, மிக ஒற்றுமையாக செயற்பட்டு வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், தந்தையர்கள் போராடுவது பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. துளியும் குற்றமில்லை.

அவர்கள் இதைத்தான் எண்ணுகின்றனர் போலும். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடுகின்ற தாய் – தந்தையர்களும் மெல்ல மெல்ல காணாமல் ஆகிப் போவார்கள். அப்போது கேள்வி எழுப்ப எவரும் இருக்க மாட்டார்கள் என்று. இதே விசயத்தைதான் எல்லா இடத்திலும் சிங்கள அரசு பிரயோகிக்கிறது. நாம் நிலத்தின் அதிகாரத்தைக் கேட்கிறோம். அவர்கள் தொடர்ந்து நிலத்தைக் காணாமல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். நாம் நமது கடலைக் கோருகிறோம். அவர்கள் கடலைக் காணாமல் ஆக்குகிறார்கள். நாம் நமது காட்டைக் கோருகிறோம் அவர்கள் காட்டை காணாமல் ஆக்குகிறார்கள். அவர்கள் எல்லாவற்றையும் காணாமல் ஆக்குவதைத்தான் தீர்வாகக் கொண்டுள்ளனர்.

இப்போது நாங்கள் ஆலயத்திற்குப் பெரிதாகச் செல்வதில்லை. நல்ல தருணம். அவர்கள் ஆலயங்களைக் காணாமல் ஆக்கி புத்த விகாரைகளைக் கட்டுகிறார்கள். நாம் பண்பாட்டு உணர்வு உரிமையை மறந்துவிடுகிறோம். அவர்கள் அதனையும் காணாமல் ஆக்குகிறார்கள். எங்களை பக்கத்தில் வைத்திருந்தபடி, எங்களைத் துணையாக்கிக் கொண்டே எங்களைக் காணாமல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு ஒன்றுபட்ட இலங்கையைப் பேசிக் கொண்டு ஈழ விடுதலைப் போராட்டத்தைக் காணாமல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதே நிலைமை தொடர்ந்தால், எதிர்வரும் காலத்தில் இந்த நாளில் ஒட்டுமொத்தமாகக் காணாமல் போனோர் என்றொரு இனமாக ஈழத் தமிழரையும் நினைவுகூர வேண்டிய நிலை வரும். இதே நிலை தொடர்ந்தால் ஈழம் என்றொரு காணாமல்போன நிலத்தையும் நினைவுகூர வேண்டி வரும். காணாமல் போன ஒரு தாயின் வலியை உணர்தலும் அதற்காய் இயங்குதலும்தான் இந்த நிலையை இல்லாமல் செய்யும் முதல் புள்ளியாய் இருக்கும்.

 

https://uyirmmai.com/article/காணாமல்-ஆக்கப்பட்டோர்-என/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.