Jump to content

இந்த 6 பொருட்களும் இனி அழிந்து போகலாம் - உங்களுக்கு தெரியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
தண்ணீர் குழாய்படத்தின் காப்புரிமை Getty Images

நாம் குடிநீர் பஞ்சம், எண்ணெய் தட்டுப்பாடு, அல்லது தேனீக்கள் அழிகிறது என்று கேள்விப்படுகிறோம் ஆனால் அதைத் தவிர சில பொருட்களும் அழிந்துவருகிறது. அல்லது நாம் சில பொருட்களைத் தவறாக நிர்வகிப்பதால் அது நமது வாழ்வை பெரிதும் பாதித்து வருகிறது.

 

அவ்வாறான 6 விஷயங்கள் இதோ இங்கே

1.சுற்று வட்டப் பாதையில் இடமில்லை

சுற்றுவட்டப் பாதை

2019 ஆண்டில் சுமார் 5 லட்சம் பொருட்கள் பூமியை சுற்றுகின்றன.

 

அதில் வெறும் 2000 பொருட்கள் மட்டுமே செயல்படுகின்றன. அதில் சில செயற்கைக்கோள்கள் நாம் தொலைத்தொடர்பு, ஜிபிஎஸ் மற்றும் பிடித்தமான படங்களைப் பார்ப்பதற்கும் பயன்படுகிறது.

அதைத் தவிரப் பிற பொருட்கள் எல்லாம் ராக்கெட் ஏவுதலால் வந்த குப்பைகள்

அதனால் என்ன பிரச்சனை? அந்த 5 லட்சம் பொருட்கள் என்பது நம்மால் கண்டுபிடித்து கூற முடிந்த பொருட்கள்; கண்டுபிடிக்க முடியாமல் பல இருக்கலாம்.

தொழில்நுட்பம் வளர்ச்சியடைய வளர்ச்சியடைய சுற்று வட்டப் பாதையில் ஏதேனும் செலுத்துவதற்கு எளிதானதாகவே உள்ளது.

இது நமக்கு ஒரு நல்ல செய்தியாகத் தெரியலாம் ஆனால் அங்குப் பூமிக்கு மேல் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களுக்கு எந்த போக்குவரத்து கட்டுப்பாடும் இல்லை. அவற்றைச் சுத்தம் செய்வதற்கான எந்த ஒரு வசதியும் இல்லை.

எனவே இந்த பொருட்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டால், நாம் மேப் பார்ப்பதற்கும், தொலைத் தொடர்பு வசதிகளுக்கும், வானிலையை தெரிந்து கொள்வதும் பாதிக்கப்படலாம்.

இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியில் நாம் இருக்கிறோம் ஆனால் தற்போது வரை இதற்கு எந்த தீர்வும் இல்லை.

2.மணல்

மணல்படத்தின் காப்புரிமை Getty Images

இங்கு நீங்கள் ஒரு குழப்பத்தில் ஆழக்கூடும், நமது கடற்கரைகள் மற்றும் பாலை வனங்களில் மணல் கொட்டிக் கிடக்கும்போது அது எப்படித் தீர்ந்துபோகும் என்று தோன்றலாம்.

மணலை நாம் அதிகப்படியாக சுரண்டுகிறோம்.

இயற்கை முறையாக மணல் உற்பத்தி ஆகும் விகிதத்தைக் காட்டிலும் அதனை நாம் பயன்படுத்தும் விகிதம் அதிக அளவில் இருப்பதாக ஐ.நாவின் அறிக்கை கூறுகிறது.

மணல் அழிந்து போனால் அது நமது சுற்றுச்சூழல் அமைப்பைப் பெரிதும் அது. அதிகப்படியாக மணலை பயன்படுத்துவதைக் கண்காணிக்கச் சர்வதேச அளவில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

3. ஹீலியம்

ஹீலியம்படத்தின் காப்புரிமை Getty Images

நாம் சில விழாக்களில் ஹீலியம் நிரப்பிய பலன்களைப் பறக்கவிட்டிருப்போம். ஆனால் அது குறித்து நாம் என்றாவது கவலைப் பட்டிருக்கிறோமா?

ஹீலியமும் நாம் பூமியை தோண்டி கிடைக்கக்கூடிய ஒரு வளம். ஆனால் நம்மிடம் உள்ள இருப்பு சில தசாப்தங்களுக்கு வரும் அளவுக்குத்தான் உள்ளது.

சில நிபுணர்கள் வெறும் 30-50 ஆண்டுகளில் ஹீலியம் தட்டுப்பாடு ஏற்படலாம் என்கின்றனர்.

ஹீலியம் வெறும் பலூன்களை மட்டுமே நிரப்பப் பயன்படுவது அல்ல. ஹீலியம் மருத்துவ ரீதியாகவும் பயன்படுகிறது. எம்ஆர்ஐ ஸ்கேன்கள் பயன்படுவதற்கான காந்தத்தைக் குளிர்ச்சியாக வைக்கவும் இந்த ஹீலியம் பயன்படுகிறது.

எனவே புற்றுநோயை கண்டறிவதிலும், மூளை மற்றும் முதுகுத் தண்டு காயங்களுக்குமான சிகிச்சையிலும் ஹீலியம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

4.வாழைப்பழங்கள்

வாழைப்பழம்படத்தின் காப்புரிமை Getty Images

தற்போது பெருமளவில் நாம் வியாபாரத்திற்காகப் பயன்படுத்தப்படும் வாழைப்பழத்துக்குப் பூஞ்சையால் ஏற்படக்கூடிய பனாமா நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது நாம் `கேவண்டிஷ்` என்ற ரக வாழைப்பழத்தை உண்டு வருகிறோம். பனாமா நோய் வாழைமரங்களில் விரைவாகப் பரவக்கூடிய தன்மை கொண்டது

1950ஆம் ஆண்டு பனாமா நோயால் ஏறக்குறைய அனைத்து வாழை மரங்களும் அழியும் நிலைக்கு சென்றன.

தற்போது பூஞ்சையைத் தாங்கும் பயிரை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர்.

5.மண்

இரண்டு விவசாயிகள்படத்தின் காப்புரிமை Getty Images

மரம் செடிகளுக்குத் தேவையான சத்துக்களை மண் தான் வழங்குகிறது.

கடந்த 150 வருடங்களில், உலகின் மண்வளம் பாதியளவு குறைந்துவிட்டது என்கிறது டபள்யு டபள்யு எஃப் என்ற அரசு சாரா நிறுவனம். ஆனால் ஒரு இன்ச் மண் உருவாக 500 வருடங்களாகும்.

மண் அரிப்பு, தீவிர விவசாயம், மரங்களை அழிப்பது, உலக வெப்பமாதல், ஆகிய அனைத்தும் மண்வளம் குறைவதற்கான காரணங்கள். இந்த மண் வளத்தை நம்பிதான் சர்வதேச உணவு உற்பத்தி இருக்கிறது.

6.பாஸ்பரஸ்

இதை முதலில் கேட்கும்போது பாஸ்பரஸ் என்பது நமது அன்றாட வாழ்வில் அதிகம் தேவைப்படாத ஒன்றாக தோன்றலாம்.

இது உயிரியல் தொடர்பாக மட்டும் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. விவசாயத்துக்கு தேவையாக பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கவும் இந்த பாஸ்பரஸ் தேவைப்படுகிறது. அதற்கு மாற்று இல்லை.

பாஸ்பரஸ்படத்தின் காப்புரிமை Getty Images

தாவரம் மற்றும் விலங்குகளின் கழிவு மூலம் இவை மண்ணுக்குள் மீண்டும் செல்வதற்கு பதிலாக, விவசாயப் பொருட்களின் மூலம் நகரத்திற்குள் செல்கிறது நாம் அதை கழுவி சாக்கடைக்குள் விடுகிறோம்.

https://www.bbc.com/tamil/global-49832370

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனித வாழ்விற்கு,  முக்கியமான விவசாயத்தை.... அழிக்க வேண்டும் என்று,
அரசியல் வாதிகள்... விடாப் பிடியாக,  பெரிய பண முதலாளி நிறுவனங்களுடன், 
கை..  கோர்த்து நிற்கும் போது, சாதாரண மனிதன் என்ன செய்ய முடியும்.

அதற்காக... அவர்கள் தயாரிக்க  இருக்கும்... பிளாஸ்ரிக் அரிசி, பிளாஸ்ரிக் முட்டையை...
"சுவிங்கம்"  மாதிரி... சாப்பிட்டு, பழக்கப் படுத்திக்  கொள்ள வேண்டி வரும் போல் உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.