Jump to content

புதிய அரசியல் யாப்பு குறித்து உத்தரவாதம் தருபவருக்கே எமது ஆதரவு - த.தே.கூ.


Recommended Posts

IMAGE-MIX.png
 

(ஆர்.யசி)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தமிழ் மக்களுடனும் புலம்பெயர் தமிழர்களுடனும் பேசியே தீர்மானிப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். 

sampanthan.jpg

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தவிர்ந்து பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரை ஆதரிக்கும் என வினவிய வேளையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் முதலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பற்றி சிந்தித்து தீர்வுகளை வழங்கும் வாக்குறுதிகளை முன்வைக்க வேண்டும். 

அடுத்த  ஜனாதிபதியாக வரவுள்ளவர் யாராக இருந்தாலும் அவர் தமிழ் மக்களின் நீண்டகால  இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்கியேயாகவேண்டும். 

புதிய அரசியல் அமைப்பு ஒன்றினை  கொண்டுவருவதன் மூலமே தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வுகளை பெற்றுக்கொள்ள  முடியும். எனவே இது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தி உத்தரவாதம் வழங்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்றும் கூறினார்.

https://www.virakesari.lk/article/65705

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ampanai said:
IMAGE-MIX.pngஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தமிழ் மக்களுடனும் புலம்பெயர் தமிழர்களுடனும் பேசியே தீர்மானிப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். 

 

roflphotos-dot-com-photo-comments-20190713104359.jpg

சம்பந்தன்....  மீண்டும்,  எமது  காதிலை  "பூ"  வைக்க கிளம்பி விட்டார். 

Link to comment
Share on other sites

சிங்களக் கட்சிகள் எதற்கும் ஆதரவளிப்பதால் எந்தப் பயனுமில்லை என்பது பலதடவைகள் நிரூபிக்கப்பட்ட ஒன்று.

தமிழர்களுக்கு சமஸ்டி அடிப்படையிலான உள்ளக சுயநிர்ணய உரிமைகளுடன் கூடிய தீர்வு என்று நம்பிக்கையான சர்வதேச பங்களிப்புடன் எழுத்துமூல உத்தரவாதத்தை தராத எவருக்கும் தமிழ்க் கட்சிகள் ஆதரவளிப்பதில் எந்தவொரு பிரயோசனம் இல்லை.

தமிழர்களுக்கு சமஸ்டி அடிப்படையிலான உள்ளக சுயநிர்ணய உரிமைகளுடன் கூடிய தீர்வு என்று பகிரங்கமாக அறிவிக்க வக்கில்லாமல் நானே ஜனாதிபதி வேட்பாளர் என்று முண்டியடித்து அலைந்து திரிந்த சிங்கள இனமதவெறி சஜித் பிரேமதாசவுக்கோ, மிலேச்ச பயங்கரவாதியும் போர்க்குற்றவாளியுமான கோட்டபாய ராஜபக்சவுக்கோ தமிழர்கள் வாக்களிப்பதில் எந்தப் பயனுமில்லை. இந்த இரண்டு இனமதவெறியர்களில் ஒருவர் மற்றவரைவிட சிறந்தவர் என்பது கடைந்தெடுத்த அரசியல் மூடர்களின் கருத்தாகவே இருக்கும்.

தமிழின படுகொலைகளுக்கு துணைபோன கொலைரார்களின் கும்பலான ஈபிடிபி போன்ற சில எடுபிடிகள், ஒட்டுண்ணிகள், கைக்கூலிகள் ஏற்கனவே சிங்கள-பௌத்த படுகொலைகாரர்களுடன் கைகுலுக்க முண்டியடித்து வருவதை காணலாம். அந்த வரிசையில் இணைய சம்மந்தனும் சுமந்திரனும் மாவையும் சரவணபவனும் ஆவலோடு காத்திருப்பது தெரிந்ததே.    

எனவே, ஈழத் தமிழர்களின் நலன்களில் உண்மையான அக்கறை உள்ள அனைத்து தமிழ் கட்சிகளும் கூடிப்பேசி பொதுவான ஒரு நிலைப்பாட்டை எடுப்பது தான் இப்போதைய சூழலில் தமிழரின் பலத்தை அதிகரிக்கும்.

பல்வேறு தமிழ் கட்சிகளிலுள்ள சுயநலவாதிகள், எடுபிடிகள், ஒட்டுண்ணிகள், கைக்கூலிகள் இதற்கு ஒத்துவரவில்லை என்றால் ஈழத் தமிழர்களின் நலன்களில் உண்மையான அக்கறை உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் காலம் தாமதிக்காது கூடிப்பேசி பொதுவான ஒரு நிலைப்பாட்டை எடுப்பது தான் இப்போதைய சூழலில் உள்ள சிறந்த வழியாகத் தெரிகிறது.

 

Link to comment
Share on other sites

10 hours ago, ampanai said:

புதிய அரசியல் அமைப்பு ஒன்றினை  கொண்டுவருவதன் மூலமே தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வுகளை பெற்றுக்கொள்ள  முடியும். எனவே இது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தி உத்தரவாதம் வழங்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்றும் கூறினார்.

71 வருடங்களாக ஏமாற்றி வருகிறோம் அப்படியும் எங்களை நம்புறாங்களே!! 🤔

rajapakse1_18209.jpg

Link to comment
Share on other sites

தமிழ் மக்களை பொறுத்தவரை வாக்களித்தும் பிரயோசனம் இருக்கவில்லை (1994 ஜனாதிபதித் தேர்தல்- சந்திரிகா)

வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்தும் பிரயோசனம் இருக்கவில்லை (2005 ஜனாதிபதி தேர்தல்- மகிந்தா) 

வழிநடத்தும் அரசியல்  பிரதிநிதிகளின் பலமும் அந்த பலத்தை திறமையாக பயன்படுத்தும் அவர்களின் ராஜதந்திரத்திலும் தான் எல்லாமே உள்ளது. எமது சக்திக்கு மீறிய ஒரு  பாரத்தை நினைத்துப் பார்க்க முடியாத தியாகங்கள் புரிந்து  தூக்கி ஒரு பலத்தை உருவாக்கிய எம்மால் அதை சரிவர முறையான உயரத்தில் தற்காலிகமாக  fix பண்ணி சற்று ஓய்வெடுத்து  புதிய Energie பெற்று மீண்டும்  உத்வேகத்துடன் தொடந்து தூக்கும் வழிமுறை தெரியாமல்,  அதன் உடனடிக்  கனதியை புரியாமல்,  மேலும் தலைக்கு மேல் தூக்கபுறப்பட்டு  பாரம் தாங்க முடியாமல் balance தவறி  வீழ்ந்தவர்கள் நாம். இன்றைய நிலையில் சிங்கள அரசை கையாள்வது இலகுவான காரியம் அல்ல என்பது தான் யதார்த்தம். 

இன்றய நிலையில் புதிய தலைமுறையினர் புதிய உத்திகளை உபயோகித்தே சிங்கள அரசை கையாள முடியும். புதிய தலைமுறை என்று கூறும் போது பழைய தலைமுறையின் தோல்வியடைந்த உத்திகளை தமது மண்டைக்குள் முழுமையாக save செய்து வைத்திருந்து தன்னை update செய்யாமல் இருக்கும்  இளையோரைப் பற்றி நான் இங்கு குறிப்பிட வில்லை. 

Link to comment
Share on other sites

On 9/27/2019 at 7:50 PM, போல் said:

தமிழர்களுக்கு சமஸ்டி அடிப்படையிலான உள்ளக சுயநிர்ணய உரிமைகளுடன் கூடிய தீர்வு என்று நம்பிக்கையான சர்வதேச பங்களிப்புடன் எழுத்துமூல உத்தரவாதத்தை தராத எவருக்கும் தமிழ்க் கட்சிகள் ஆதரவளிப்பதில் எந்தவொரு பிரயோசனம் இல்லை.

"நம்பிக்கையான சர்வதேச பங்களிப்பு" என்ற ஒன்று இல்லை. இதுவும் பலமுறை முயன்று பலனளிக்காத முறை.

20 hours ago, tulpen said:

இன்றய நிலையில் புதிய தலைமுறையினர் புதிய உத்திகளை உபயோகித்தே சிங்கள அரசை கையாள முடியும். புதிய தலைமுறை என்று கூறும் போது பழைய தலைமுறையின் தோல்வியடைந்த உத்திகளை தமது மண்டைக்குள் முழுமையாக save செய்து வைத்திருந்து தன்னை update செய்யாமல் இருக்கும்  இளையோரைப் பற்றி நான் இங்கு குறிப்பிட வில்லை. 

"புதிய உத்திகளை உபயோகித்தே சிங்கள அரசை கையாள முடியும்"இதுவே சரியான அணுகுமுறை. அதற்கு நீங்கள் உதாரணங்கள் தந்திருக்கலாம். சில உதாரணங்கள்:

1. புலம்பெயர்ந்த தமிழர்கள் பல நாடுகளில் நன்கு வேரூன்றி இருக்கிறார்கள். இந்த நாடுகளில் வணிக சங்கங்களை வைத்து இருக்கிறார்கள். இந்த சங்ககங்களின் சர்வதேச அமைப்பு ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் தாயகத்தில் வாழும் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு, பொருளாதார உரிமைகளை உள்ளடக்கிய அதிகார பரவலாக்கல் வழங்கப்படும் பட்சத்தில் பெரும் முதலீடுகளை தமிழ் மற்றும் சிங்கள பிரதேசங்களில் செய்யும் திட்டத்தை முன்வைத்து பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சிறந்த சம்பளத்தில் வேலை வழங்கும் சாத்தியத்தை காட்டி பேரம் பேச முடியும். 

நாடு கடந்த தமிழீழ அரசு இப்படியான ஒரு ஆரம்ப முயற்சியை செய்து அது சரி வரவில்லை என்று தெரிகிறது. ஆனால் அது தமிழீழம் பற்றியது ஆகையால் ஸ்ரீ லங்கா அரசுடன் பேரம் பேச பயனற்றது.

2. தமிழ் மக்களின் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள அமைப்புகள், இலங்கையில் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளான அரசியல்வாதிகளுக்கு சர்வதேச கருத்தரங்குகள், அபிவிருத்திக்கான சர்வதேச சுற்று பயணம் ஆகியவற்றை பல முறை ஏற்பாடு செய்வது பற்றிய திட்டத்தை முன்வைத்து, இதனால் பயன்பெற உள்ள அரசியல்வாதிகளை அடையாளம் கண்டு அவர்களுடன் தாயகத்தில் வாழும் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு, பொருளாதார உரிமைகளை பெறுவது பற்றி பேரம் பேச முடியும். சர்வதேச பயணங்கள், வணிக வருமான சாத்தியங்கள், தமது பிள்ளைகளுக்கு சர்வதேச நாடுகளில் மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு இலங்கை அரசியல்வாதிகள் ஆர்வம் கொண்டு, அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவர். இவற்றை பகிரங்கப்படுத்தாமல் செய்ய வேண்டும். 

அமெரிக்காவில் இவ்வாறன செயற்பாடுகளை lobbying என்று அழைப்பர். இங்கு இது சட்டரீதியான வணிகம். ஆனால், சட்டவிரோதமாக போகும் சாத்தியம் நிறைய உள்ள ஒரு தொழில்துறை. மற்ற சில  நாடுகளில் இவற்றை "லஞ்சம்" என்பர். இலங்கையில் இதுதான் அரசியல். 

Link to comment
Share on other sites

தமிழிழ ஆயுதப் போராட்டம் வெற்றியை அடையமுடியாது போனதற்கு சிங்களவனின் வீரமோ, அறிவோ அல்லது இந்தியனின் அனுசரனையோ காரணமில்லை. நாங்களும் தமிழரென்று போராடவெளிக்கிட்ட சில இயக்கங்களும் அவற்றிற்கு ஆதரவுகொடுத்த மக்களுமே முதன்மையான காரணமாகும். 

வெற்றியை நேர்வழியில் அல்லது குறுக்குவழியில் பெற்றாலும் அதனைப் பாராட்டுவதே இன்றைய உலக நியதி, அதற்குள் இருக்கும் கேடுகெட்ட செயற்பாடுகளை எல்லாம் வெற்றி என்ற ஒளி மறைத்துவிடும். ஆனால் தோல்லியடைந்தால் அந்தத் தோல்விக்குள் இருக்கும் நேர்மை, நியாயங்கள் எல்லாம் தூக்கியெறிப்பட்டு. தவறுகள்மட்டுமே பெரிதாக படம்போட்டு காட்டப்படும். ஈழத்தமிழரின் ஆயுதப் போராட்டத் தோல்வியையும் ஈனர்கள் இன்று அந்த நிலைக்குத்தான் கொண்டுவந்துள்ளனர். இத்தகய ஈனர்கள் தங்களை மாற்றிக்கொள்ளாது தாங்களும் தமிழர்கள் என்று இருக்கும்வரையில் எத்தனை தலைமுறைகள் சென்றாலும் ஈழத்தமிழர் விடுதலை கானல்நீரே. 😟 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அவசர படாதீா்கள்..! ஜனாதிபதி தோ்தல் தொடா்பாக தீா்மானம் எதனையும் நாங்கள் எடுக்கவில்லை..!

Sumanthiran.jpg

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், தமிழ்தேசியக்கூட்டமைப்பு எவ்வித தீர்மானங்களையும் இதுவரை எடுக்கவில்லை என யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அனைத்து வேட்பாளர்களுடனும் பேசிய பிற்பாடே அதுதொடர்பில் ஒரு தீர்மானத்தை எடுக்கமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு - குமுழமுனைப் பகுதியில், 29.09.2019 இன்று

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்தாய்வுக்கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சுமந்திரனிடம், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்ளவிக்கே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாம் பங்கொடுக்கின்ற நிழ்வுகளில், அமைச்சர்கள் வருகின்றபோது அவர்களுக்கு நன்றி செலுத்தி பேசுவது வழக்கம்.

வேறொரு நிவாரணத்திற்கு ஒரு அமைச்சர் வந்தால், அவர்களையும் நன்றி செலுத்தி பேசுவது வழக்கம். அந்த விதத்தில், சில பொதுவான நல்லகருத்துக்கள் சில வேளைகளில் சொல்லப்பட்டிருக்கலாம்.

ஆனால் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக கட்சி எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை. யாரை ஆதரிப்பதென்றோ, எவரயாவது ஆதரிக்கவேண்டும் என்றுகூட, நாங்கள் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை.

நாங்கள் எல்லா வேட்பாளர்களுடனும், அவர்கள் விரும்பினால், பேச்சுவார்த்தை நடாத்துவதென தீர்மானித்திருக்கின்றோம்.

அப்படி சிலசில பேச்சுவாரத்தைகள் நடைபெறுகின்றன. ஆகையினாலே அவ்வாறான பேச்சுக்கள முடிவடைந்த பின்பு, அவர்களும் பகிரங்கமான நிலைப்பாடுகளை அவதானித்து ஒரு தீர்மானத்தை எடுப்போம்.

இதுவரையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எந்த தீர்மானங்களும் எட்டப்படவில்லை. என்றார்.

https://jaffnazone.com/news/13726

Link to comment
Share on other sites

59 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஆனால் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக கட்சி எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை. யாரை ஆதரிப்பதென்றோ, எவரயாவது ஆதரிக்கவேண்டும் என்றுகூட, நாங்கள் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை.

நாங்கள் முடிவெடுக்கப் பிந்தினால்.... சனாதிபதித் தேர்தல் பிற்போடப்படும். அந்த நம்பிக்கை எங்களுக்கு உண்டு.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/28/2019 at 9:51 AM, tulpen said:

தமிழ் மக்களை பொறுத்தவரை வாக்களித்தும் பிரயோசனம் இருக்கவில்லை (1994 ஜனாதிபதித் தேர்தல்- சந்திரிகா)

வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்தும் பிரயோசனம் இருக்கவில்லை (2005 ஜனாதிபதி தேர்தல்- மகிந்தா) 

வழிநடத்தும் அரசியல்  பிரதிநிதிகளின் பலமும் அந்த பலத்தை திறமையாக பயன்படுத்தும் அவர்களின் ராஜதந்திரத்திலும் தான் எல்லாமே உள்ளது. எமது சக்திக்கு மீறிய ஒரு  பாரத்தை நினைத்துப் பார்க்க முடியாத தியாகங்கள் புரிந்து  தூக்கி ஒரு பலத்தை உருவாக்கிய எம்மால் அதை சரிவர முறையான உயரத்தில் தற்காலிகமாக  fix பண்ணி சற்று ஓய்வெடுத்து  புதிய Energie பெற்று மீண்டும்  உத்வேகத்துடன் தொடந்து தூக்கும் வழிமுறை தெரியாமல்,  அதன் உடனடிக்  கனதியை புரியாமல்,  மேலும் தலைக்கு மேல் தூக்கபுறப்பட்டு  பாரம் தாங்க முடியாமல் balance தவறி  வீழ்ந்தவர்கள் நாம். இன்றைய நிலையில் சிங்கள அரசை கையாள்வது இலகுவான காரியம் அல்ல என்பது தான் யதார்த்தம். 

இன்றய நிலையில் புதிய தலைமுறையினர் புதிய உத்திகளை உபயோகித்தே சிங்கள அரசை கையாள முடியும். புதிய தலைமுறை என்று கூறும் போது பழைய தலைமுறையின் தோல்வியடைந்த உத்திகளை தமது மண்டைக்குள் முழுமையாக save செய்து வைத்திருந்து தன்னை update செய்யாமல் இருக்கும்  இளையோரைப் பற்றி நான் இங்கு குறிப்பிட வில்லை. 

 

4 hours ago, Jude said:

"நம்பிக்கையான சர்வதேச பங்களிப்பு" என்ற ஒன்று இல்லை. இதுவும் பலமுறை முயன்று பலனளிக்காத முறை.

"புதிய உத்திகளை உபயோகித்தே சிங்கள அரசை கையாள முடியும்"இதுவே சரியான அணுகுமுறை. அதற்கு நீங்கள் உதாரணங்கள் தந்திருக்கலாம். சில உதாரணங்கள்:

1. புலம்பெயர்ந்த தமிழர்கள் பல நாடுகளில் நன்கு வேரூன்றி இருக்கிறார்கள். இந்த நாடுகளில் வணிக சங்கங்களை வைத்து இருக்கிறார்கள். இந்த சங்ககங்களின் சர்வதேச அமைப்பு ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் தாயகத்தில் வாழும் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு, பொருளாதார உரிமைகளை உள்ளடக்கிய அதிகார பரவலாக்கல் வழங்கப்படும் பட்சத்தில் பெரும் முதலீடுகளை தமிழ் மற்றும் சிங்கள பிரதேசங்களில் செய்யும் திட்டத்தை முன்வைத்து பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சிறந்த சம்பளத்தில் வேலை வழங்கும் சாத்தியத்தை காட்டி பேரம் பேச முடியும். 

நாடு கடந்த தமிழீழ அரசு இப்படியான ஒரு ஆரம்ப முயற்சியை செய்து அது சரி வரவில்லை என்று தெரிகிறது. ஆனால் அது தமிழீழம் பற்றியது ஆகையால் ஸ்ரீ லங்கா அரசுடன் பேரம் பேச பயனற்றது.

2. தமிழ் மக்களின் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள அமைப்புகள், இலங்கையில் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளான அரசியல்வாதிகளுக்கு சர்வதேச கருத்தரங்குகள், அபிவிருத்திக்கான சர்வதேச சுற்று பயணம் ஆகியவற்றை பல முறை ஏற்பாடு செய்வது பற்றிய திட்டத்தை முன்வைத்து, இதனால் பயன்பெற உள்ள அரசியல்வாதிகளை அடையாளம் கண்டு அவர்களுடன் தாயகத்தில் வாழும் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு, பொருளாதார உரிமைகளை பெறுவது பற்றி பேரம் பேச முடியும். சர்வதேச பயணங்கள், வணிக வருமான சாத்தியங்கள், தமது பிள்ளைகளுக்கு சர்வதேச நாடுகளில் மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு இலங்கை அரசியல்வாதிகள் ஆர்வம் கொண்டு, அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவர். இவற்றை பகிரங்கப்படுத்தாமல் செய்ய வேண்டும். 

அமெரிக்காவில் இவ்வாறன செயற்பாடுகளை lobbying என்று அழைப்பர். இங்கு இது சட்டரீதியான வணிகம். ஆனால், சட்டவிரோதமாக போகும் சாத்தியம் நிறைய உள்ள ஒரு தொழில்துறை. மற்ற சில  நாடுகளில் இவற்றை "லஞ்சம்" என்பர். இலங்கையில் இதுதான் அரசியல். 

உங்கள் இருவர் கருத்திலும் நான் ஓரளவுக்கு உடன் படுகிறேன்.

காலம் காலமாக நம்மை ஏமாற்றி வரும் சிங்கள தலைமைகள் இந்த எலக்சன் வென்றதும் எமக்கு ஒரு கெளரவமான தீர்வை தரப்போவதில்லை. 

ஆனால் அதுக்காக நாம் தீர்வுக்கு முயற்சிக்காமலும் இருக்க முடியாது.

என்னை பொறுத்த வரை இப்போ இந்த தேர்தலில் எம்மக்கள் முன் உள்ள கேள்விகள் இவை. 

1. தமிழர்கள் குறுகிய கால நோக்கில் ஒப்பீட்டளவில் நிம்மதியாக வாழ யார் வெல்லவேண்டும்?

2. நீண்டகால நோக்கில் யாரை இலகுவாக நெருக்கி நாம் எமது உரிமைகளை முன் நகர்த்தலாம்?

கேள்வி 1 க்கான விடை இலகுவானது.

திலீபன், முள்ளிவாய்க்கால், மாவீரர் நாள் நினைவை அஞ்சலிக்க விட்டமை, காணிகள் கணிசமாக மீளளிக்கப்பட்டமை, ராணுவ பிரசன்னம், தலையீடு குறைந்தமை என்று, 2005-2015 ஐ விட, 2015-2019 இல் ஒப்பீட்டளவில் தமிழர்கள் நிம்மதியாக வாழ்ந்தார்கள் என்பதே நான் கருதுவது.

இந்த அடிபடையில் கோட்ட வைவிட சஜித் வந்தால் பரவாயில்லை என நான் நினக்கிறேன். 

கேள்வி 2 க்கான விடை சற்றே சிக்கலானது.

சஜித், ஆட்சி ஏறினால், தமிழ் முஸ்லீம் வாக்குகள்தான் அவர் வெற்றியை தீர்மானித்திருக்கும். அடுத்த முறையும் இதுவே அவருக்கு தேவைப்படும். எனவே அவரை நெருக்கி ஒரு தீர்வை நோக்கித் தள்ளலாம். ஆனால் மறுவளமாக தீர்வை முன்வைக்காமல், மேலும் சிங்கள வாக்குகளை கவரும் நடவடிக்கையில் அவர் இறங்கக்கூடும்.

சஜித்தை யுத்த குற்றச்சாட்டு மூலம் தனிப்பட்டு நெருக்க முடியாது.

கோட்ட என்றால் - போர்குற்றசாட்டை வைத்து நெருக்கலாம் என்பது பேச்சளவில் சரியே. ஆனால் இத்தனை வருடமாக ஆளை என்ன செய்ய முடிந்தது. அமேரிக்கா, சிங்கபூர் என கோட்ட சுற்றி வந்தும்?

கோட்ட மீளவந்தால் என்ன தீர்வு என்பதில் ஒன்றுமே சொல்லவில்லை (சஜித் ஐக்கிய இலங்கைக்குள் அதிக உட்சபச்ச அதிகாரபகிர்வு என்கிறார்). கோட்டவின் நிலைப்பாடு, தீர்வா? கிலோ என்ன விலை? என்பதாகவே இருக்கிறது.

கூட்டமைப்பு ஏலவே சஜித்தை சந்தித்து விட்டார்கள். இப்போ இப்படி அறிக்கை விடுவது, அடுத்து வரப்போகும் சஜித்தை ஆதரிக்கும் அறிக்கைக்கான தயார்படுத்தலே.

ஆனால் கூட்டமைப்பை தாண்டி, நீண்ட. குறுகியகால நலனை, ஒவ்வொரு தமிழ் வாகாளரும் சீர்தூக்கிப் பாக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

காலத்துக்கு அவசியமான விவாதம்!

யாழ்களம் ஒரு நிபுணர் குழுவை அமைச்சு "ஓரளவு நல்ல" அரசியல்வாதிகளை இணைச்சு தமிழினத்தின் இருப்பை தக்க வைக்க உதவலாம் என்டு எனக்கு தோணுது.

பூனைக்கு மணியை கட்டுவது யார் என்ட பிரச்சினை தமிழருக்கு இருக்கிற பெரிய ஈகோ பிரச்சினைகளில் ஒன்று.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.